< Nnwom 103 >

1 Dawid de. Me kra, kamfo Awurade; na me mu ade nyinaa nkamfo ne din kronkron no.
தாவீதின் பாடல். என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைப் போற்று.
2 Me kra, kamfo Awurade, na mma wo werɛ mmfi ne nneyɛe pa nyinaa,
என் ஆத்துமாவே, யெகோவாவுக்கு நன்றிசொல்; அவர் செய்த எல்லா நன்மைகளையும் மறவாதே.
3 ɔno na ɔde wo mfomso nyinaa kyɛ wo na ɔsa wo nyarewa nyinaa,
அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன்னுடைய நோய்களையெல்லாம் குணமாக்கி,
4 ogye wo nkwa fi ɔda mu, na ɔde adɔe ne mmɔborɔhunu bɔ wo abotiri,
உன்னுடைய உயிரை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
5 ɔde nnepa ma wo sɛ wʼapɛde, na wo mmerantebere yɛ foforo sɛ ɔkɔre.
நன்மையினால் உன்னுடைய வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமமாக உன்னுடைய வயது திரும்ப இளவயது போலாகிறது.
6 Awurade yɛ adetrenee, na obu wɔn a wɔhyɛ wɔn so nyinaa atɛntrenee.
ஒடுக்கப்படுகிற அனைவருக்கும், யெகோவா நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.
7 Ɔkyerɛɛ Mose nʼakwan, na ɔmaa Israelfo huu ne nneyɛe.
அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது செயல்களை இஸ்ரவேல் சந்ததிக்கும் தெரியப்படுத்தினார்.
8 Mmɔborɔhunufo ne ɔdomfo ne Awurade, ne bo kyɛ fuw na nʼadɔe dɔɔso.
யெகோவா உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.
9 Ɔrenkɔ so mmɔ sobo, na ɔrennya yɛn ho menasepɔw nkosi daa;
அவர் எப்பொழுதும் கடிந்துகொள்வதில்லை; என்றைக்கும் கோபமாக இருப்பதில்லை.
10 Ɔnhwɛ yɛn bɔne ne yɛn nni sɛnea ɛfata na ontua yɛn nnebɔne so ka sɛnea ɛte.
௧0அவர் நம்முடைய பாவங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.
11 Na sɛnea ɔsoro ne asase ntam ware no, saa ara na nʼadɔe so wɔ wɔn a wosuro no no so.
௧௧பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாக இருக்கிறது.
12 Sɛnea apuei ne atɔe ntam ware no, saa ara na wama yɛn ne yɛn mmarato ntam kwan aware.
௧௨மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாக அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்.
13 Sɛnea agya yam hyehyew no wɔ ne mma ho no, saa ara na Awurade yam hyehye no ma wɔn a wosuro no no;
௧௩தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, யெகோவா தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
14 na onim sɛnea wɔyɛɛ yɛn, ɔkae se yɛyɛ mfutuma.
௧௪நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.
15 Ɔdesani de, ne nna te sɛ sare, ɔyɛ frɔmfrɔm sɛ nwura mu nhwiren;
௧௫மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது; வெளியின் பூவைப்போல் பூக்கிறான்.
16 sɛ mframa bɔ fa ne so a, na onni hɔ, na ne sibea nkae no bio.
௧௬காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போனது; அது இருந்த இடமும் இனி அதை அறியாது.
17 Nanso efi mmeresanten kosi nnasanten Awurade adɔe wɔ wɔn a wosuro no so, na ne trenee wɔ wɔn mma mma so,
௧௭யெகோவாவுடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் ஆதிகாலம் முதற்கொண்டு என்றென்றைக்கும் உள்ளது.
18 wɔn a wodi nʼapam no so na wɔkae di ne mmara so.
௧௮அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.
19 Awurade asi nʼahengua wɔ ɔsoro, na nʼahenni di ade nyinaa so.
௧௯யெகோவா வானங்களில் தமது சிங்காசனத்தை நிறுவியிருக்கிறார்; அவருடைய ராஜரிகம் எல்லாவற்றையும் ஆளுகிறது.
20 Monkamfo Awurade, mo a moyɛ nʼabɔfo, mo atumfo a moyɛ nʼahyɛde, mo a mutie nʼasɛm.
௨0யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த வல்லமையுள்ளவர்களாகிய அவருடைய தூதர்களே, அவரைத் துதியுங்கள்.
21 Monkamfo Awurade, ɔsoro asafo nyinaa, nʼasomfo a moyɛ nʼapɛde.
௨௧யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரர்களாக இருக்கிற அவருடைய எல்லா சேனைகளே, அவரைப் போற்றுங்கள்.
22 Monkamfo Awurade, ne nnwuma nyinaa; nea ɛwɔ nʼahenni mu nyinaa. Me kra, kamfo Awurade!
௨௨யெகோவா ஆளுகிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய எல்லா படைப்புகளே, அவரைப் போற்றுங்கள்; என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று.

< Nnwom 103 >