< Mmebusɛm 5 >

1 Me ba, yɛ aso ma me nyansa; tie me nhumu nsɛm no yiye,
என் மகனே, என் ஞானத்தைக் கவனத்தில்கொள், எனது புத்திமதிகளை மிகக் கவனமாகக் கேள்.
2 sɛnea ɛbɛma woahwɛ yiye, na wʼano akora nimdeɛ.
அப்பொழுது அறிவுடைமையுடன் நடந்துகொள்வாய்; உன் உதடுகள் அறிவைப் பாதுகாக்கும்.
3 Efisɛ ɔbea aguaman ano sosɔ ɛwo, na ne kasa yɛ fɔmm sen ngo;
ஏனெனில் விபசாரியின் உதடுகள் தேனைச் சிந்தும், அவளுடைய பேச்சு எண்ணெயைவிட மிருதுவாயிருக்கும்;
4 nanso awiei no, ɛyɛ nwen sen bɔnwoma, ɛyɛ nam sɛ afoa anofanu.
ஆனால் முடிவோ, அவள் வேம்பைப்போல் கசப்பாயும், இருபக்கமும் கூர்மையுள்ள வாளைப்போலவும் இருப்பாள்.
5 Nʼanan kɔ owu mu; nʼanammɔntutu kɔ ɔda mu tee. (Sheol h7585)
அவளுடைய பாதங்கள் மரணத்திற்குச் செல்கின்றன; அவள் காலடிகளோ நேரே பாதாளத்திற்கு வழிநடத்துகின்றன. (Sheol h7585)
6 Onsusuw ɔkwan a ɛkɔ nkwa mu ho; nʼakwan yɛ kɔntɔnkye, nanso onnim.
அவளோ வாழ்வின் வழியைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை, அவளுடைய பாதைகள் கோணலானவை, அவள் அதை அறியாதிருக்கிறாள்.
7 Enti afei, me mma, muntie me; Monntwe mo ho mmfi nea meka ho.
ஆகவே என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் சொல்வதைவிட்டு விலகவேண்டாம்.
8 Ɔkwan a ɛmmɛn no no na momfa so; mommmɛn ne fi pon ano,
அவளுக்குத் தூரமான வழியில் நடங்கள், அவளுடைய வீட்டின் வாசலையும் மிதிக்கவேண்டாம்.
9 anyɛ saa a, mode mo ahoɔden bɛma afoforo na mode mo mfe ama otirimɔdenfo,
இல்லையென்றால், உங்களுடைய கனத்தை மற்றவர்களிடமும் உங்களுடைய வாழ்நாட்களை கொடூரர்களிடமும் இழந்துவிடுவீர்கள்;
10 anyɛ saa a, ahɔho bɛfom mo ahonyade na mo brɛ de ahonya akɔ afoforo fi.
வேறுநாட்டைச் சேர்ந்தவர் உங்கள் செல்வத்தை அனுபவிப்பார்கள், உங்களுடைய கடும் உழைப்பு இன்னொருவனின் வீட்டைச் செல்வச் சிறப்பாக்கும்.
11 Mo nkwanna akyi, mubesi apini, bere a mo honam ne mo nipadua asa no.
உங்களுடைய வாழ்க்கையின் முடிவில், உங்கள் தசையும் உடலும் நலியும்போது வேதனையால் புலம்புவீர்கள்.
12 Na moaka se, “Na mikyi ahohyɛso! Me koma ampɛ nteɛso!
அப்பொழுது நீங்கள், “ஐயோ, நான் அறிவுரையை வெறுத்தேனே, திருத்தத்தை எனது இருதயம் அலட்சியம் செய்ததே!
13 Manyɛ osetie amma mʼakyerɛkyerɛfo na mantie me kwankyerɛfo asɛm.
நான் எனக்கு போதித்தவர்களுக்குக் கீழ்ப்படியவில்லையே, எனக்கு அறிவுரை சொன்னவர்களுக்கு செவிகொடுக்கவில்லையே.
14 Madu ɔsɛe ano wɔ asafo no nyinaa mu.”
நான் இறைவனின் மக்கள் கூட்டத்தில் தீராத பிரச்சனைக்குள்ளாகி விட்டேனே” என்று சொல்வீர்கள்.
15 Nom nsu fi wʼankasa ahina mu, nsu a ɛteɛ fi wʼankasa abura mu.
நீ உனது சொந்தக் கிணற்றின் தண்ணீரையே குடி, நீ உனது சொந்த நீரூற்றிலிருந்தே தண்ணீரைப் பருகு.
16 So ɛsɛ sɛ wʼasuti yiri fa mmɔnten so na wo nsuwa kokɔ ɔman aguabɔbea ana?
உனது ஊற்றுகள் வீதிகளில் வழிந்தோட வேண்டுமோ? உனது நீரோடைகள் பொது இடங்களில் ஓடவேண்டுமோ?
17 Ma ɛnyɛ wo nko ara de, a wo ne ahɔho nkyɛ da.
அவை உன்னுடையவைகளாக மட்டுமே இருக்கட்டும், அவற்றை அறியாதவருடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
18 Nhyira nka wʼasubura na wʼani nnye wo mmrantebere mu yere ho.
உனது ஊற்று ஆசீர்வதிக்கப்படுவதாக, நீ உனது வாலிப காலத்தின் மனைவியுடன் மகிழ்ந்திருப்பாயாக.
19 Ɔte sɛ ɔtwe bere dɔfo, ɔwansan nuonyamfo; ma ne nufu nsɔ wʼani daa na ne dɔ nkyekyere wo.
அவள் உனக்கு அன்பான பெண்மான் போலவும் அழகியமான் போலவும் இருப்பாளாக, அவளுடைய மார்பகங்களே எந்நாளும் உன்னைத் திருப்தியாக்கட்டும்; அவளுடைய அன்பினால் நீ எப்பொழுதும் கவரப்படுவாயாக.
20 Me ba, adɛn nti na woma ɔbea aguaman kyekyere wo? Adɛn nti na woda ɔbarima foforo bi yere kokom?
என் மகனே, ஒரு விபசாரியினால் நீ ஏன் கவரப்படவேண்டும்? இன்னொருவனின் மனைவியின் மார்பை நீ ஏன் தழுவவேண்டும்?
21 Awurade hu onipa akwan nyinaa, na ɔhwehwɛ ne nyinaa mu.
மனிதரின் வழிகள் எல்லாம் யெகோவாவுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கின்றன, அவர்களுடைய பாதைகளை எல்லாம் அவர் ஆராய்ந்து பார்க்கிறார்.
22 Omumɔyɛfo nnebɔne sum no afiri; na ne bɔne ahama kyekyere no papee.
கொடியவர்கள் தம்முடைய தீயசெயல்களாலே அகப்படுகிறார்கள்; அவர்களுடைய பாவக்கயிறுகள் அவர்களை இறுக்கிக் கட்டுகின்றன.
23 Wobewu, esiane ahohyɛso a wonni nti, na wɔayera, esiane wɔn agyennyentwisɛm nti.
அவர்கள் நற்கட்டுப்பாடு இல்லாததினால் சாவார்கள், அவர்களுடைய மூடத்தனத்தின் மிகுதியினால் வழிவிலகிப் போவார்கள்.

< Mmebusɛm 5 >