< Hiob 33 >
1 “Na afei, Hiob, tie me nsɛm; yɛ aso ma biribiara a mɛka.
“யோபுவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும்; நான் சொல்வதைக் கவனியும்.
2 Merebebue mʼano; me nsɛm aba me tɛkrɛma so.
இப்பொழுது நான் பேசப் போகிறேன்; என் வார்த்தைகள் என் நாவின் நுனியில் இருக்கின்றன.
3 Me nsɛm fi koma a ɛteɛ mu; na mʼano de ahonim pa ka nea minim.
என் வார்த்தைகள் நேர்மையான இருதயத்திலிருந்து வெளிவருகின்றன; நான் அறிந்தவற்றை என் உதடுகள் உண்மையாய்ப் பேசுகின்றன.
4 Onyankopɔn Honhom na abɔ me; Otumfo no home ma me nkwa.
இறைவனின் ஆவியானவரே என்னைப் படைத்தார்; எல்லாம் வல்லவரின் சுவாசமே எனக்கு உயிரைத் தருகிறது.
5 Sɛ wubetumi a, ma me mmuae; siesie wo ho, na ka si mʼanim.
உம்மால் முடியுமானால் எனக்குப் பதில் கூறும்; என்னோடு வாதாட உம்மை ஆயத்தப்படுத்தும்.
6 Wo ne me nyinaa yɛ pɛ wɔ Onyankopɔn anim; me nso wɔbɔɔ me fii dɔte mu.
இறைவனுக்கு முன்பாக நானும் உம்மைப் போன்றவன்தான்; நானும் மண்ணிலிருந்தே உருவாக்கப்பட்டேன்.
7 Ɛnsɛ sɛ wusuro me, na ɛnsɛ sɛ me nsa yɛ den wɔ wo so.
என்னைப்பற்றிய பயத்தினால் நீர் கலங்க வேண்டியதில்லை, என் கையும் உம்மேல் பாரமாயிருக்காது.
8 “Nanso woaka ama mate, mete saa nsɛm no, na wokae se,
“என் காது கேட்க நீ பேசியிருக்கிறாய்; நான் கேட்க, உன் வார்த்தைகளினாலேயே இப்படிக் கூறினாய்:
9 ‘Meyɛ kronkron na minni bɔne; me ho tew na afɔdi biara nni me ho.
‘நான் தூய்மையானவன், குற்றமற்றவன், நான் சுத்தமானவன், பாவமற்றவன்.
10 Nanso Onyankopɔn anya me ho mfomso wafa me sɛ ne tamfo.
இருந்தும் இறைவன் என்னிடம் குற்றம் கண்டிருக்கிறார்; என்னைத் தம் பகைவனாக எண்ணுகிறார்.
11 Ɔde me nan hyɛ mpokyerɛ mu; na nʼani wɔ mʼakwan nyinaa so.’
அவர் என் கால்களை விலங்குகளில் மாட்டுகிறார்; என் வழிகளையெல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்.’
12 “Nanso meka mekyerɛ wo se, eyi mu de woayɛ mfomso, efisɛ Onyankopɔn so sen ɔdesani.
“ஆனால் நான் உமக்குச் சொல்கிறேன், இதில் நீர் சொன்னது சரியல்ல, ஏனெனில் இறைவன் மனிதனைவிட மிகவும் பெரியவர்.
13 Na adɛn nti na wunwiinwii hyɛ no sɛ ommua onipa nsɛm biara ana?
அவர் மனிதனுடைய கேள்விகள் எதற்குமே பதிலளிக்கவில்லை என நீர் ஏன் முறையிடுகிறீர்?
14 Nanso Onyankopɔn kasa wɔ akwan ahorow so, na ebia nnipa nte.
மனிதர்கள் புரிந்துகொள்ளாவிட்டாலும், இறைவன் ஒருவிதமாகவும், இன்னொரு விதமாகவும் பேசுகிறார்.
15 Ɔkasa wɔ daeso ne anadwo anisoadehu mu, bere a nna afa nnipa na wɔada hatee wɔ wɔn mpa so no,
மனிதர் படுத்திருக்கையில், ஆழ்ந்த நித்திரையிலும், கனவிலும், இரவு தரிசனத்திலும் அவர் பேசுகிறார்.
16 otumi kasa gu wɔn asom na ɔde kɔkɔbɔ yi wɔn hu,
அவர் மனிதர்களின் காதுகளில் பேசி, தம்முடைய எச்சரிப்புகளினால் அவர்களைத் திகிலூட்டக்கூடும்.
17 sɛ ɔbɛdan onipa afi nneyɛe bɔne ho na watwe no afi ahantan ho,
பிழை செய்வதிலிருந்து மனிதரை விலக்கவும், தற்பெருமையை தடுக்கவுமே இவ்வாறு செய்கிறார்.
18 sɛ ɔmma ne kra nkɔ amoa mu na ɔnhwere ne nkwa wɔ afoa ano.
மனிதருடைய ஆத்துமா பிரேதக்குழியில் விழாதபடியும், அவர்களுடைய உயிர் வாளால் அழியாதபடியும் காப்பாற்றுகிறார்.
19 Anaasɛ wotumi de mpa so yaw twe onipa aso nnompe mu yaw a ennyae da,
“அல்லது மனிதர்கள் தங்கள் எலும்புகளில் உண்டான தொடர்ச்சியான நோவுடன் படுக்கையிலேயே தண்டிக்கப்படக் கூடும்.
20 kosi sɛ ne kɔn nnɔ aduan na ne kra nso po aduan a ɛyɛ akɔnnɔ pa ara;
அப்பொழுது அவர்களுடைய உள்ளம் உணவையும், சுவையான உணவையும் வெறுக்கிறது.
21 ɔfɔn yɛ basaa, na ne nnompe a anka ɛho akata no, ho da hɔ.
அவர்களுடைய சதை முழுவதும் அழிந்து, முன்பு மறைந்திருந்த எலும்புகள் வெளியே தெரிகின்றன.
22 Ne kra bɛn ɔda, na ne nkwa bɛn owu abɔfo.
அவர்களுடைய ஆத்துமா பிரேதக் குழியையும், அவர்களுடைய உயிர் மரண தூதுவர்களையும் நெருங்குகிறது.
23 “Nanso sɛ ɔbɔfo bi wɔ nʼafa sɛ odimafo a, ɛyɛ apem mu baako, na ɔbɛkyerɛ no nea eye ma no,
ஆனாலும் ஆயிரத்தில் ஒருவனான தூதன் ஒருவன் அவர்கள் பக்கத்திலிருந்து, அவர்களுக்காகப் பரிந்துபேசி, அவர்களுக்கு சரியானவற்றைச் சொல்லிக்கொடுத்து,
24 obehu no mmɔbɔ na waka se, ‘Munnyaa no na wankɔ ɔda mu; na manya mpatade ama no,’
அவர்களுக்குக் கிருபைகாட்டி, ‘நான் அவர்களுக்கு மீட்கும் பொருளைக் கண்டுபிடித்தேன். ஆகவே இவர்களைக் குழிக்குள் போவதிலிருந்து தப்பவிடும்’ என்று சொல்வானாகில்,
25 afei ne were yɛ foforo sɛ abofra; na esi ne dedaw mu yɛ sɛ mmerantebere mu de.
அவர்களின் உடல் குழந்தையின் உடலைப்போல் புதிதாகும், அவர்கள் வாலிப நாட்களில் இருந்ததுபோல் மாற்றப்படுவார்கள்.
26 Ɔbɔ Onyankopɔn mpae na onya adom fi ne hɔ, ohu Onyankopɔn anim na ɔde ahosɛpɛw teɛ mu; na Onyankopɔn gye no bio sɛ ɔtreneeni.
அப்பொழுது அவர்கள் இறைவனை நோக்கி மன்றாடி, அவரிடமிருந்து தயவு பெறுகிறார்கள்; அவர்கள் இறைவனுடைய முகத்தைக் கண்டு மகிழ்வார்கள், இறைவன் அவர்களுடைய நீதியின் நிலையிலேயே திரும்பவும் வைக்கிறார்.
27 Afei ɔba nnipa mu bɛka se, ‘Meyɛɛ bɔne na mekyeaa nea ɛteɛ, nanso mannya nea ɛfata me.
அவர்கள் மற்றவர்களைப் பார்த்து: ‘நான் பாவம் செய்து, நியாயத்தைப் புரட்டினேன், செய்ததற்குத் தகுந்த தண்டனையை நான் பெறவில்லை.
28 Ogyee me kra na wamma no ankɔ ɔda mu, enti mɛtena ase na madi hann no mu dɛ.’
பிரேதக் குழிக்குள் போகாமல் என் ஆத்துமாவை இறைவனே மீட்டுக்கொண்டார்; நானும் ஒளியை அனுபவித்து சந்தோஷமாய் வாழ்வேன்.’
29 “Onyankopɔn yɛ eyinom nyinaa ma onipa, mprenu ne ne mprɛnsa so,
“இறைவன் இவற்றையெல்லாம் மனிதருக்கு இரண்டு முறைகள், ஏன், மூன்று முறைகள் திரும்பத் திரும்பச் செய்கிறார்.
30 sɛnea ne kra renkɔ ɔda mu, na nkwa hann no ahyerɛn ne so.
குழியிலிருந்த அவர்களுடைய ஆத்துமாவை, வாழ்வின் ஒளியால் பிரகாசிக்கச் செய்கிறார்.
31 “Yɛ aso, Hiob, na tie me; yɛ dinn na menkasa.
“யோபுவே, நான் சொல்வதைக் கவனமாய்க் கேளும்; மவுனமாய் இரும், நான் பேசுவேன்.
32 Na sɛ wowɔ biribi ka a, bua me; kasa, na mepɛ sɛ wobu wo bem.
அதின்பின் ஏதாவது சொல்ல இருந்தால் எனக்குப் பதில் கூறும்; தயங்காமல் பேசும், உம்மை நீதிமானாக நிரூபிக்க நான் விரும்புகிறேன்.
33 Sɛ ɛnte saa nso a, ɛno de tie me. Yɛ dinn na mɛkyerɛ wo nyansa.”
அப்படியில்லாவிட்டால், மவுனமாய் இருந்து நான் சொல்வதைக் கேளும். நான் உமக்கு ஞானத்தைப் போதிப்பேன்.”