< Hiob 30 >

1 “Nanso mprempren wɔserew me, nnipa a manyin sen wɔn, na wɔn agyanom mfata sɛ wɔne me nguan ho akraman tena.
“ஆனால் இப்பொழுதோ என்னைவிட இளவயதுள்ளவர்கள் என்னைக் கேலி செய்கிறார்கள்; அவர்களுடைய தந்தையரை, நான் என் மந்தையைக் காக்கும் நாய்களுடன் வைக்ககூடாது என எண்ணினேன்.
2 Mfaso bɛn na wɔn nsa mu ahoɔden wɔ ma me, bere a wɔn ahoɔden afi wɔn mu?
அவர்கள் கைகளின் வல்லமையால் எனக்கு என்ன பயன்? அவர்கள் வலிமைதான் இல்லாமல் போயிற்றே!
3 Ohia ne ɔkɔm ama wɔn ho atetew, wɔnantew asase kesee ne asase bonin so anadwo.
அவர்கள் பசியினாலும், பஞ்சத்தினாலும் நலிந்து, இரவிலே வெறுமையான வறண்ட நிலத்தில் அலைந்து திரிந்தார்கள்.
4 Wɔboaboaa nkyenhaban ano wɔ nkyɛkyerɛ mu, na wɔde sare so nnua ntin yɛɛ wɔn aduan.
அவர்கள் புதர்ச்செடிகளில் இருந்து உவர்ப்புப் பூண்டுகளைச் சேர்த்தார்கள்; காட்டுச்செடிகளின் கிழங்குகளே அவர்களுக்கு ஆகாரம்.
5 Wɔn mfɛfo pam wɔn fii wɔn mu, na wohuroo wɔn sɛ akorɔmfo.
கள்வர்களைச் சத்தமிட்டுத் துரத்துவதுபோல், அவர்கள் தங்கள் மக்களிலிருந்து துரத்தப்பட்டார்கள்.
6 Wɔhyɛɛ wɔn ma wɔtenaa suka a emu awo, abotan ne fam ntokuru mu,
அவர்கள் காய்ந்த நீரோடைகளின் தரையிலும், கற்பாறைகளுக்கிடையிலும், நிலத்தின் பொந்துகளிலும் குடியிருக்க வேண்டியதாயிருந்தது.
7 wosuu sɛ mfurum wɔ wuram na wɔfofɔree so wɔ ɔdɔtɔ ase.
புதர்களுக்குள்ளிருந்து கதறி, முட்செடிகளின் கீழ் ஒதுங்கினார்கள்.
8 Kuw a wɔmfra na wonni din, wɔpam wɔn fii asase no so.
அவர்கள் இழிவானவர்களும், நற்பெயரற்றவர்களுமாக நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டார்கள்.
9 “Na nnɛ yi wɔn mmabarima de dwom bɔ me akutia; mayɛ abusude wɔ wɔn mu.
“இளைஞர்கள் பாடல்களினாலும், பழமொழியினாலும், என்னை கேலி செய்கிறார்கள்.
10 Wokyi me na wontwiw mmɛn me; wɔmmfɛre sɛ wɔtete ntasu gu mʼanim.
அவர்கள் என்னை அருவருத்து எனக்குத் தூரமாய் விலகிக்கொள்கிறார்கள்; அவர்கள் என் முகத்தில் துப்புவதற்கும் தயங்கவில்லை.
11 Afei a Onyankopɔn abubu me tadua na ɔde amanehunu aba me so yi, wɔyɛ nea wɔpɛ wɔ mʼanim.
ஏனெனில் இறைவன் என் வில்லின் நாணை அறுத்து என்னைச் சிறுமைப்படுத்தியதால், அவர்கள் என்முன் அடக்கமற்றவர்களாய் இருக்கிறார்கள்.
12 Abusuakuw no tow hyɛ me so wɔ me nifa so; wosum mʼanan mfiri, na wosisi mpie tia me.
வலதுபுறத்தில் வாலிபர் எழும்பி, என்னைத் தாக்குகிறார்கள்; என் பாதங்கள் தவறி விழச்செய்கிறார்கள், எனக்கு விரோதமாக அழிவின் பாதைகளை அமைக்கிறார்கள்.
13 Wosisiw mʼakwan; na wonya me sɛe me na obiara mmoa me.
அவர்கள் என் வழியைக் கெடுக்கிறார்கள்; ஒருவருடைய உதவியுமின்றி என்னை அழிப்பதில் வெற்றி கொள்கிறார்கள்.
14 Wɔba te sɛ nea wofi ntokuru a ano abae mu; wɔnam mmubui no mu munumunum ba.
அவர்கள் பெரிய வழியை உண்டாக்கி, இடிந்தவைகளுக்கு இடையில் புரண்டு வருகிறார்கள்.
15 Ahunahuna ma me ho dwiriw me; mʼanuonyam atu kɔ sɛnea mframa abɔ agu, me bammɔ atu ayera sɛ omununkum.
பயங்கரங்கள் என்னை மேற்கொள்கின்றன; காற்று அடித்துக்கொண்டு போவதுபோல், என் மேன்மை போய்விட்டது, என் பாதுகாப்பும் மேகத்தைப்போல் இல்லாமல் போகிறது.
16 “Na mprempren, me nkwa resa; na amanehununna akyekyere me.
“இப்பொழுது என் ஆத்துமா தளர்ந்து வற்றிப்போனது; துன்ப நாட்கள் என்னைப் பிடித்துக்கொண்டது.
17 Anadwo wowɔ me nnompe mu; ɔyaw a ɛwe me no nnyae.
இரவு என் எலும்புகளை உருவக் குத்துகிறது; என் நரம்புவலி ஒருபோதும் ஓயாது இருக்கிறது.
18 Onyankopɔn fi ne tumi mu yɛ sɛ adurade ma me; omia me te sɛ mʼatade kɔn.
இறைவன் தமது பெரிதான வல்லமையினால் உடையைப்போல் என்னை மூடுகிறார்; உடையின் கழுத்துப் பட்டையைப்போல் என் நோய் என்னைச் சுற்றிக்கொண்டது.
19 Ɔtow me kyene dontori mu na ɔma me yɛ sɛ mfutuma ne nsõ.
அவர் என்னைச் சேற்றில் தள்ளுகிறார், நான் தூசியாயும் சாம்பலுமானேன்.
20 “Onyankopɔn, misu mefrɛ wo, nanso wummua me. Mesɔre gyina, nanso wohwɛ me kɛkɛ.
“இறைவனே, உம்மை நோக்கி கூப்பிடுகிறேன், நீர் பதில் கொடுக்காமலிருக்கிறீர்; நான் உமக்கு முன்பாக நிற்கிறேன், நீரோ ஒன்றும் செய்யாமலிருக்கிறீர்.
21 Woba me so anibere so; wode wʼabasa mu tumi tow hyɛ me so.
கொடூரமாய் என் பக்கம் திரும்புகிறீர்; உமது கரத்தின் வல்லமையால் என்னைத் தாக்குகிறீர்.
22 Wuhwim me na wode mframa pia me; wudenkyidenkyi me wɔ ahum mu.
என்னைப் பிடுங்கி காற்றுக்கு முன்பாகப் பறக்க விடுகிறீர்; புயலிலே என்னைச் சுழற்றுகிறீர்.
23 Minim sɛ wode me bɛkɔ owu mu, faako a woahyɛ ama ateasefo nyinaa no.
நீர் என்னைச் சாவுக்குள்ளாக்குவீர் என்பது எனக்குத் தெரியும், உயிருள்ளோர் யாவருக்கும் நியமிக்கப்பட்ட இடம் அதுவே.
24 “Ampa ara obiara mfa ne nsa nka onipa a ɔrebrɛ bere a ɔresu pɛ mmoa wɔ nʼamanehunu mu.
“மனமுடைந்தவன் தன் உதவிக்காக அழும்போது, யாரும் உதவிசெய்வதில்லை.
25 Mansu amma wɔn a wɔwɔ ɔhaw mu ana? Me kra werɛ anhow amma ahiafo ana?
கஷ்டப்படுகிறவர்களுக்காக நான் அழவில்லையோ? ஏழைக்காக என் உள்ளம் வருந்தியதில்லையோ?
26 Nanso bere a mʼani da papa so no, bɔne bae; bere a mepɛɛ hann no sum na edurui.
அப்படியிருந்தும், நான் நல்லதை எதிர்பார்த்தபோது, தீமையே வந்தது; நான் ஒளிக்குக் காத்திருந்தபோது இருளே வந்தது.
27 Me yafunu mu a ɛwowɔ me no nnyae da; na nna a amanehunu wɔ mu da mʼanim.
என் உள்ளக் குமுறல்கள் ஒருபோதும் ஒயவில்லை; துன்பநாட்களே என்னை எதிர்நோக்குகின்றன.
28 Menenam a mabiri, nanso ɛnyɛ sɛ owia na ahyew me; migyina aguabɔbea na misu pɛ mmoa.
நான் வெயில் படாதிருந்தும் கறுகறுத்துத் திரிகிறேன்; கூட்டத்தில் நான் எழும்பி உதவிக்காகக் கதறுகிறேன்.
29 Madan nnompo nuabarima, me ne mpatu na ɛbɔ.
நான் நரிகளுக்குச் சகோதரனும், ஆந்தைகளுக்குக் கூட்டாளியுமானேன்.
30 Me honam ani biri na ehuanhuan; atiridii ama me ho adɔ.
என் தோல் கறுத்துப்போயிற்று; என் உடல் காய்ச்சலால் எரிகிறது.
31 Me sanku bɔ kwadwom, na mʼatɛntɛbɛn ma agyaadwotwa nnyigyei.
என் யாழ் புலம்பலையும், என் புல்லாங்குழல் அழுகையின் ஒசையையே எழுப்புகிறது.

< Hiob 30 >