< Hiob 22 >

1 Na Temanni Elifas buae se,
அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக:
2 “Onyankopɔn benya onipa so mfaso ana? Mpo onyansafo so bɛba no mfaso ana?
“ஒரு மனிதன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் நன்மையாக இருக்கிறதினால் தேவனுக்கு நன்மையாக இருப்பானோ?
3 Sɛ woyɛ ɔtreneeni a, anigye bɛn na Otumfo no benya? Sɛ wʼakwan ho nni asɛm a, mfaso bɛn na obenya?
நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது அவருக்கு ஆதாயமாயிருக்குமோ?
4 “Wo kronkronyɛ nti na ɔka wʼanim na ɔbɔ wo kwaadu ana?
அவர் உமக்குப் பயந்து உம்முடன் வழக்காடி, உம்முடன் நியாயத்திற்கு வருவாரோ?
5 Ɛnyɛ wʼamumɔyɛ na ɛso? Ɛnyɛ wo bɔne na ɛdɔɔso dodo?
உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாக இருக்கிறதல்லவோ?
6 Wopɛɛ bammɔ fii wo nuanom nkyɛn a emfi hwee so; wopaa nnipa ho ntama ma wɔdaa adagyaw.
காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி, ஏழைகளின் ஆடைகளைப் பறித்துக்கொண்டீர்.
7 Woamma abrɛfo nsu annom na wode aduan kamee nea ɔkɔm de no,
மிகுந்த தாகமுள்ளவனுக்கு தண்ணீர் கொடுக்காமலும், பசித்தவனுக்கு ஆகாரம் கொடுக்காமலும் போனீர்.
8 nanso na woyɛ obi a ɔwɔ tumi, wɔ nsase, onuonyamfo a ɔte so.
பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிருக்கிறது; கனவான் அதில் குடியேறினான்.
9 Wopam akunafo ma wɔkɔɔ nsapan na womaa ayisaa nso ahoɔden sae.
விதவைகளை வெறுமையாக அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் கைகள் முறிக்கப்பட்டது.
10 Ɛno nti na mfiri atwa wo ho ahyia, na amanehunu a ɛba ntɛm so bɔ wo hu yi,
௧0ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; திடீரென்று உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கச் செய்கிறது.
11 ɛno nti na sum kabii aduru a wunhu ade, na asorɔkye akata wo so yi.
௧௧நீர் பார்க்க முடியாமலிருக்க இருள் வந்தது, பெருவெள்ளம் உம்மை மூடுகிறது.
12 “So Onyankopɔn nni ɔsoro akyirikyiri ana? Hwɛ sɛnea ɔsoro akyirikyiri nsoromma korɔn!
௧௨தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.
13 Nanso woka se, ‘Dɛn na Onyankopɔn nim? Sum yi mu na obu atɛn ana?
௧௩நீர்: தேவன் எப்படி அறிவார், இருளுக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?
14 Omununkum kabii akata nʼanim nti onhu yɛn bere a ɔnenam ɔsoro kontonkurowi mu.’
௧௪அவர் பார்க்காமலிருக்க மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; வானமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.
15 So wobɛkɔ so afa ɔkwan dedaw a abɔnefo anantew so no so ana?
௧௫அக்கிரம மனிதர்கள் ஆரம்பகாலத்தில் நடந்த பாதையை கவனித்துப் பார்த்தீரோ?
16 Wɔpraa wɔn kɔe ansa na wɔn bere reso, na nsuyiri hohoroo wɔn fapem.
௧௬காலம் வருமுன்னே அவர்கள் இறந்துபோனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
17 Na wɔka kyerɛɛ Onyankopɔn se, ‘Gyaa yɛn! Dɛn na Otumfo betumi ayɛ yɛn?’
௧௭தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.
18 Nanso ɛyɛ ɔno na ɔde nnepa hyɛɛ wɔn afi mu, nti metwe me ho fi amumɔyɛfo afotu ho.
௧௮ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
19 Atreneefo hu wɔn asehwe ma wɔn ani gye; na wɔn a wɔn ho nni asɛm serew wɔn ka se,
௧௯எங்கள் நிலைமை அழியாமல், அவர்களுக்கு மீதியானதையோ நெருப்பு எரித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
20 ‘Wɔasɛe yɛn atamfo, na ogya ahyew wɔn agyapade.’
௨0குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான்.
21 “Fa wo ho ma Onyankopɔn na nya asomdwoe wɔ ne mu; saa ɔkwan yi so na yiyedi bɛfa ayɛ wo kyɛfa.
௨௧நீர் அவருடன் பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மைவரும்.
22 Tie akwankyerɛ a efi nʼanom, na fa ne nsɛm sie wo koma mu.
௨௨அவர் வாயிலிருந்து பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
23 Sɛ wosan kɔ Otumfo no nkyɛn a obegye wo ato mu bio: sɛ wuyi amumɔyɛsɛm fi wo ntamadan mu
௨௩நீர் சர்வவல்லமையுள்ள தேவனிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அநீதியை உமது கூடாரத்திற்குத் தூரமாக்குவீர்.
24 na wotow wo sika mpɔw gu mfutuma mu ne Ofir sikakɔkɔɔ gu abotan a ɛwɔ abon mu no so a,
௨௪அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர்.
25 ɛno de Otumfo bɛyɛ wo sikakɔkɔɔ ɔbɛyɛ dwetɛ ankasa ama wo.
௨௫அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சுத்தவெள்ளியுமாயிருப்பார்.
26 Afei nokware wubenya anigye wɔ Otumfo mu na wobɛpagyaw wʼani akyerɛ Onyankopɔn.
௨௬அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.
27 Wobɛbɔ no mpae, na obetie wo, na wubedi wo bɔhyɛ so.
௨௭நீர் அவரை நோக்கி விண்ணப்பம்செய்ய, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.
28 Nea woyɛ wʼadwene sɛ wobɛyɛ no bɛba mu, na hann bɛtɔ wʼakwan so.
௨௮நீர் ஒரு காரியத்தை தீர்மானித்தால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.
29 Sɛ nnipa hwe ase na woka se, ‘Ma wɔn so!’ a, obegye wɔn a wɔahwe ase no nkwa.
௨௯மனிதர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் காப்பாற்றப்படுவார்கள்.
30 Obegye abɔnefo mpo, ɔnam wo nsa a ɛho nni fi so begye wɔn.”
௩0குற்றமில்லாதவனையுங்கூட விடுவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினால் அவன் விடுவிக்கப்படுவான்” என்றான்.

< Hiob 22 >