< Yesaia 50 >

1 Sɛɛ na Awurade se: “Ɛhe na awaregyae ho adansedi nhoma, nea migyinaa so gyaa no kwan no wɔ? Anaa sɛ mʼadefirifo mu hena na metɔn wo maa no? Wo bɔne nti na wɔtɔn wo; Wʼamumɔyɛ nti na wɔpam wo na.
யெகோவா சொல்கிறார்: நான் உங்கள் தாயை அனுப்பிவிட்டபோது, அவளுக்குக் கொடுத்த தள்ளுதற்சீட்டு எங்கே? அல்லது எனக்குக் கடன் கொடுத்த எவனுக்கு உங்களை நான் விற்றுப்போட்டேன்? இதோ, உங்கள் அக்கிரமங்களின்காரணமாக நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் பாதகங்களின்காரணமாக உங்களுடைய தாய் அனுப்பிவிடப்பட்டாள்.
2 Mebae no, adɛn nti na na obiara nni hɔ? Mefrɛe no, adɛn nti na obiara annye so? Na me nsa yɛ tia dodo sɛ ebegye wo ana? Minni ahoɔden a mede begye wo ana? Mede mʼanimka kɛkɛ no ma po yow, medan nsubɔnten nweatam mu mpataa porɔw esiane nsu a wonnya nti na osukɔm kum wɔn.
நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற்போனதென்ன? நான் கூப்பிட்டபோது மறுமொழி கொடுக்க ஒருவனும் இல்லாமற்போனதென்ன? மீட்கமுடியாதபடிக்கு என் கரம் குறுகிவிட்டதோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ? இதோ, என் கடிந்துகொள்ளுதலினாலே கடலை வற்றச்செய்து, நதிகளை வெட்டாந்தரையாக்கிப்போடுகிறேன்; அவைகளிலுள்ள மீன் தண்ணீரில்லாமல் தாகத்தால் செத்து நாற்றமெடுக்கின்றது.
3 Mede sum fura ɔsoro na mema atweaatam yɛ ne nkataho.”
நான் வானங்களுக்குக் காரிருளை உடுத்தி, சணலாடையால் அவைகளின் மூடுதிரையாக்குகிறேன்.
4 Asafo Awurade ama me nkyerɛkyerɛ tɛkrɛma sɛ ɛnka asɛm a ɛhyɛ ɔbrɛfo den. Onyan me anɔpa biara, na obue mʼaso ma mitie sɛ obi a ɔregye nkyerɛkyerɛ.
இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்கிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.
5 Otumfo Awurade abue mʼaso na menyɛɛ otuatewfo ɛ; na mensan mʼakyi ɛ.
யெகோவாவாகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை.
6 Mede mʼakyi maa wɔn a wɔboro me, ne mʼafono maa wɔn a wotutu mʼabogyesɛ. Mamfa mʼanim anhintaw wɔn fɛwdi ne ntasu ho.
அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடையையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்திற்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை.
7 Esiane sɛ, Asafo Awurade boa me nti, wɔrengu mʼanim ase. Enti na mayɛ mʼanim sɛ ɔtwɛrebo, na minim sɛ mʼanim rengu ase.
யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படுவதில்லை; நான் வெட்கப்பட்டுப் போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன்.
8 Nea obu me bem no abɛn. Enti hena na ɔbɛbɔ me kwaadu? Ɔmma yenhyia mu! Hena na ɔbɔ me sobo? Ma ɔnka nsi mʼanim!
என்னை நீதிமானாக்குகிறவர் அருகிலிருக்கிறார்; என்னுடன் வழக்காடுகிறவன் யார்? ஏகமாக நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும்.
9 Asafo Awurade na ɔboa me. Hena ne nea obebu me fɔ? Wɔn nyinaa bɛtetew sɛ atade; nnwewemmoa bɛwe wɔn.
இதோ, யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லோரும் ஒரு ஆடையைப்போலப் பழையதாகிப் போவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.
10 Mo mu hena na osuro Awurade, na odi ne somfo asɛm so? Ma nea ɔnam sum mu nea onni hann no, onnye Awurade din nni na ɔmfa ne ho nto ne Nyankopɔn so.
௧0உங்களில் எவன் யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் யெகோவாவுடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்வானாக.
11 Na afei, mo a mososɔ ogya nyinaa na moyɛ ogyatɛn ma mo ho, monkɔ, nkɔnantew mo gya hann no, ne ogyatɛn a wɔasɔ ano no mu. Eyi ne nea mubenya afi me nsa mu; mobɛdeda fam wɔ ɔyaw mu.
௧௧இதோ, நெருப்பைக் கொளுத்தி, நெருப்புப்பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும், உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலும், நீங்கள் மூட்டின அக்கினிஜூவாலையிலும் நடவுங்கள்; வேதனையில் கிடப்பீர்கள்; என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும்.

< Yesaia 50 >