< Yesaia 42 >

1 “Me somfo a mahyɛ no den ni, nea mayi no na ɔsɔ mʼani; mede me Honhom begu no so na ɔde atɛntrenee bɛbrɛ aman no.
இதோ, நான் ஆதரிக்கிற என் ஊழியக்காரன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரச்செய்தேன்; அவர் அந்நியமக்களுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.
2 Ɔrenteɛ mu anaa ɔremma ne nne so. Ɔremma ne nne so wɔ mmɔnten so.
அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கச்செய்யவுமாட்டார்.
3 Demmire a ayɛ mmerɛw no, ɔremmu mu. Kanea ntamabamma a ɛnnɛw yiye no, ɔrennum. Nokware mu na ɔbɛda trenee adi;
அவர் நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.
4 ɔrenhinhim na ɔrempa abaw kosi sɛ ɔde trenee bɛba asase so. Ne mmara so na amanaman no de wɔn ani bɛto.”
அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்தும்வரை தடுமாறுவதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்திற்குத் தீவுகள் காத்திருக்கும்.
5 Sɛɛ na Onyankopɔn, Awurade no se, nea ɔbɔɔ ɔsoro na ɔtrɛw mu, nea ɔtwee asase mu ne nea efi mu nyinaa, nea ɔma wɔn a wɔte so home, na ɔma wɔn a wɔnantew so no nkwa:
வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற மக்களுக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்கிறதாவது:
6 “Me, Awurade, mafrɛ wo trenee mu; meso wo nsa. Mɛhwɛ wo so na mede wo ayɛ apam ama nkurɔfo no ne kanea ama amanamanmufo,
நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும்,
7 na woabue ani a afura, na woayi nneduafo afi afiase na woagye wɔn a wɔda afiase amoa mu, wɔn a wɔte sum kabii mu no.
கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப் பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை மக்களுக்கு உடன்படிக்கையாகவும் தேசங்களுக்கு ஒளியாகவும் வைக்கிறேன்.
8 “Mene Awurade; me din ne no! Meremfa mʼanuonyam mma obi anaa mʼayeyi mma ahoni.
நான் யெகோவா, இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை சிலைகளுக்கும் கொடுக்கமாட்டேன்.
9 Hwɛ, nneɛma dedaw no asisi, na nneɛma foforo no mepae mu ka; ansa na ɛbɛba mu no, meka kyerɛ mo.”
ஆரம்பகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்கிறேன்.
10 Monto dwom foforo mma Awurade! Nʼayeyi mfi asase ano, mo a mokɔ po so ne nea ɛwo mu nyinaa, mo asupɔw ne wɔn a wɔtete so nyinaa.
௧0கடலில் பயணம்செய்கிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே, அவைகளின் குடிகளே, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.
11 Ma nweatam ne so nkurow mma wɔn nne so; ma atenae a Kedar te so no nsɛpɛw wɔn ho. Ma nnipa a wɔwɔ Sela nto nnwom nnye wɔn ani; ma wɔnteɛ mu mfi mmepɔw no atifi!
௧௧வனாந்திரமும், அதின் ஊர்களும், கேதாரியர்கள் குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடுவதாக; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, மலைகளின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக.
12 Ma wɔnhyɛ Awurade anuonyam; na wɔmpae mu nka nʼayeyi no wɔ asupɔw no so.
௧௨யெகோவாவுக்கு மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக.
13 Awurade bepue aba sɛ ɔkatakyi, te sɛ ɔkofo no, ɔbɛhyɛ ne mmɔdemmɔ mu den; ɔde nteɛmu bɛyɛ ɔkofo nkanyan na obedi nʼatamfo so nkonim.
௧௩யெகோவா பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, போர்வீரனைப்போல் வைராக்கியமடைந்து, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய எதிரிகளை மேற்கொள்ளுவார்.
14 “Mayɛ komm akyɛ, mayɛ dinn na mahyɛ me ho so. Nanso afei, te sɛ ɔbea a ɔrewo no, meteɛ mu, mehome a ensi so na mehome afrɛ so.
௧௪நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்.
15 Mɛsɛe mmepɔw ne nkoko no na mahyew so afifide nyinaa. Mɛdan nsubɔnten ama ayɛ asupɔw, na mama atare ayoyow.
௧௫நான் மலைகளையும் குன்றுகளையும் பாழாக்கி, அவைகளிலுள்ள தாவரங்களையெல்லாம் வாடச்செய்து, ஆறுகளைத் திட்டுகளாக்கி, ஏரிகளை வற்றிப்போகச்செய்வேன்.
16 Medi anifuraefo anim afa akwan a wonnim so so, akwan a wonnim so papa so na mɛkyerɛ wɔn kwan. Mɛma sum no ayɛ hann wɔ wɔn anim, na mayɛ mmeae a ɛyɛ abonkyiabonkyi no trontrom. Eyinom ne nneɛma a mɛyɛ; merennyaw wɔn mu.
௧௬குருடர்களை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச்செய்து, அவர்களைக் கைவிடாமலிருப்பேன்.
17 Na wɔn a wɔde wɔn ho to ahoni so, na wɔka kyerɛ nsɛsode se, ‘Moyɛ yɛn anyame’ no, wɔbɛpam wɔn wɔ animguase mu.”
௧௭சித்திரவேலையான சிலைகளை நம்பி, வார்ப்பிக்கப்பட்ட உருவங்களை நோக்கி: நீங்கள் எங்கள் தெய்வங்கள் என்று சொல்கிறவர்கள் பின்னடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்.
18 “Tie, wo ɔsotifo; hwɛ, wo onifuraefo na hu!
௧௮செவிடர்களே, கேளுங்கள்; குருடர்களே, நீங்கள் காணும்படி நோக்கிப்பாருங்கள்.
19 Hena ne onifuraefo sɛ me somfo, na ɔyɛ ɔsotifo sɛ ɔbɔfo a mesoma no? Hena na nʼani afura sɛ nea ɔde ne werɛ ahyɛ me mu, nʼani afura sɛ Awurade somfo?
௧௯என் தாசனையல்லாமல் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்? யெகோவாவுடைய ஊழியக்காரனையல்லாமல் குருடன் யார்?
20 Woahu nneɛma bebree, nanso amfa wo ho; Ɔkwan da wʼasom, nanso wonte hwee.”
௨0நீ அநேக காரியங்களைக் கண்டும் கவனிக்காமல் இருக்கிறாய்; அவனுக்குச் செவிகளைத் திறந்தாலும் கேளாதேபோகிறான்.
21 Ɛsɔɔ Awurade ani, ne trenee nti sɛ ɔbɛma ne mmara ayɛ kɛse na anya anuonyam.
௨௧யெகோவா தமது நீதியினிமித்தம் அவன்மேல் பிரியம் வைத்திருந்தார்; அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார்.
22 Nanso saa nnipa a wɔawia wɔn na wɔafow wɔn yi, wɔn nyinaa aka amoa mu anaa wɔde wɔn asie wɔ afiase. Wɔayɛ wɔn asade na wonni obi a obegye wɔn; wɔayɛ wɔn akorɔnne na wonni obi a ɔbɛka se, “Momfa wɔn nsan nkɔ.”
௨௨இந்த மக்களோ கொள்ளையிடப்பட்டும், சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் கெபிகளிலே அகப்பட்டு, காவலறைகளிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்; தப்புவிப்பார் இல்லாமல் கொள்ளையாகி, விட்டுவிடு என்பார் இல்லாமல் சூறையாவார்கள்.
23 Mo mu hena na obetie eyi anaa nʼani beku ho yiye akyiri yi?
௨௩உங்களில் இதற்குச் செவிகொடுத்துப் பின்வருகிறதைக் கவனித்துக் கேட்கிறவன் யார்?
24 Hena na ɔde Yakob maa sɛ ɔmmɛyɛ akorɔnne, na ɔde Israel maa afowfo? Ɛnyɛ Awurade a yɛayɛ bɔne atia no no? Efisɛ wɔannantew nʼakwan so; na wɔanni ne mmara so.
௨௪யாக்கோபைச் சூறையிட்டு இஸ்ரவேலைக் கொள்ளைக்காரருக்கு ஒப்புக்கொடுக்கிறவர் யார்? அவர்கள் பாவம்செய்து விரோதித்த யெகோவா அல்லவோ? அவருடைய வழிகளில் நடக்க மனதாயிராமலும், அவருடைய வேதத்திற்குச் செவிகொடாமலும் போனார்களே.
25 Enti ohwiee nʼabufuwhyew guu wɔn so, akodi mu basabasayɛ. Ɛde ogyaframa bunkam wɔn so, nanso wɔante ase. Ɛhyew wɔn, nanso amfa wɔn ho.
௨௫இவர்கள்மேல் அவர் தமது கோபத்தின் உக்கிரத்தையும், போரின் வலிமையையும் வரச்செய்து, அவர்களைச்சூழ அக்கினிஜூவாலைகளைக் கொளுத்தியிருந்தும் உணராதிருந்தார்கள்; அது அவர்களை எரித்தும், அதை மனதிலே வைக்காதேபோனார்கள்.

< Yesaia 42 >