< Mezmurlar 95 >
1 Gelin, RAB'be sevinçle haykıralım, Bizi kurtaran kayaya sevinç çığlıkları atalım,
வாருங்கள், யெகோவாவை மகிழ்ச்சியோடு பாடுவோம்; நம்முடைய இரட்சிப்பின் கன்மலையை சத்தமிட்டுத் துதிப்போம்.
2 Şükranla huzuruna çıkalım, O'na sevinç ilahileri yükseltelim!
நன்றியுடன் அவர்முன் வருவோம்; இசையினாலும் பாட்டினாலும் அவரைப் புகழ்ந்து உயர்த்துவோம்.
3 Çünkü RAB ulu Tanrı'dır, Bütün ilahların üstünde ulu kraldır.
யெகோவாவே மகா இறைவனாய் இருக்கிறார்; எல்லாத் தெய்வங்களுக்கும் மேலான மகா அரசருமாய் இருக்கிறார்.
4 Yerin derinlikleri O'nun elindedir, Dağların dorukları da O'nun.
பூமியின் ஆழங்கள் அவருடைய கரத்தில் இருக்கின்றன; மலை உச்சிகளும் அவருக்கே உரியவை.
5 Deniz O'nundur, çünkü O yarattı, Karaya da O'nun elleri biçim verdi.
கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வறண்ட நிலத்தையும் அவருடைய கரங்களே உருவாக்கின.
6 Gelin, tapınalım, eğilelim, Bizi yaratan RAB'bin önünde diz çökelim.
வாருங்கள், நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக நாம் குனிந்து, பணிந்து, வழிபடுவோம்; நாம் முழங்காலிடுவோம்.
7 Çünkü O Tanrımız'dır, Bizse O'nun otlağının halkı, Elinin altındaki koyunlarız. Bugün sesini duyarsanız,
அவரே நம் இறைவன்; நாம் அவருடைய மேய்ச்சலின் மக்களும் அவருடைய பராமரிப்புக்குள்ளான மந்தையுமாய் இருக்கிறோம். இன்று நீங்கள் அவருடைய குரலைக் கேட்பீர்களானால்,
8 Meriva'da, o gün çölde, Massa'da olduğu gibi, Yüreklerinizi nasırlaştırmayın.
“அன்று மேரிபாவில் விவாதம் செய்தது போலவும், பாலைவனத்திலே மாசாவில் சோதனை செய்தது போலவும், உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்.
9 Yaptıklarımı görmelerine karşın, Atalarınız orada beni sınayıp denediler.
அங்கே உங்கள் முன்னோர்கள் என்னைச் சோதித்தார்கள்; நான் செய்தவைகளைக் கண்டிருந்தும் என்னைப் பரீட்சை பார்த்தார்கள்.
10 Kırk yıl o kuşaktan hep iğrendim, “Yüreği kötü yola sapan bir halktır” dedim, “Yollarımı bilmiyorlar.”
நான் நாற்பது வருடங்களாக அந்தச் சந்ததியோடு கோபமாயிருந்தேன்; ‘அவர்கள் என்னைவிட்டு விலகிப்போகும் இருதயமுள்ள மக்கள் என்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்கள்’ என்றும் நான் சொன்னேன்.
11 Bu yüzden öfkeyle ant içtim: “Huzur diyarıma asla girmeyecekler!”
எனவே கோபங்கொண்டு, ‘அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதில்லை’ என்று, ஆணையிட்டு அறிவித்தேன்.”