< Mezmurlar 4 >

1 Müzik şefi için - Telli sazlarla - Davut'un mezmuru Sana seslenince yanıtla beni, Ey adil Tanrım! Ferahlat beni sıkıntıya düştüğümde, Lütfet bana, kulak ver duama.
கம்பியிசைக் கருவிகளுடன் பாடப்பட்டு பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். நீதியுள்ள என் இறைவனே, நான் கூப்பிடும்போது எனக்குப் பதில் தாரும். என் துயரத்திலிருந்து எனக்கு ஆறுதலைக் கொடும்; என்மேல் இரக்கமாயிருந்து என் ஜெபத்தைக் கேளும்.
2 Ey insanlar, ne zamana dek Onurumu utanca çevireceksiniz? Ne zamana dek boş şeylere gönül verecek, Yalan peşinde koşacaksınız? (Sela)
மனிதர்களே, எவ்வளவு காலத்திற்கு என் மகிமையை வெட்கமாக மாற்றுவீர்கள்? எவ்வளவு காலத்திற்கு வெறுமையானவைகளை விரும்பி, பொய்யான தெய்வங்களைத் தேடுவீர்கள்?
3 Bilin ki, RAB sadık kulunu kendine ayırmıştır, Ne zaman seslensem, duyar beni.
யெகோவா பக்தியுள்ளவர்களைத் தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; நான் யெகோவாவைக் கூப்பிடும்போது அவர் செவிகொடுப்பார்.
4 Öfkelenebilirsiniz, ama günah işlemeyin; İyi düşünün yatağınızda, susun. (Sela)
நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்; நீங்கள் உங்கள் படுக்கையில் இருக்கும்போது, உங்கள் இருதயங்களை ஆராய்ந்து அமைதியாயிருங்கள்.
5 Doğruluk kurbanları sunun RAB'be, O'na güvenin.
நீதியான பலிகளைச் செலுத்தி, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்.
6 “Kim bize iyilik yapacak?” diyen çok. Ya RAB, yüzünün ışığıyla bizi aydınlat!
“எங்களுக்கு நன்மையைக் காட்டுகிறவன் யார்?” என்று அநேகர் கேட்கிறார்கள்; யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளி எங்கள்மேல் பிரகாசிக்கட்டும்.
7 Öyle bir sevinç verdin ki bana, Onların bol tahıl ve yeni şaraptan aldığı sevinçten fazla.
தானியமும் புதுத் திராட்சை இரசமும் நிறைந்திருக்கிற காலத்தின் மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியினால் நீர் என் இருதயத்தை நிரப்பியிருக்கிறீர்.
8 Esenlik içinde yatar uyurum, Çünkü yalnız sen, ya RAB, Güvenlik içinde tutarsın beni.
நான் படுத்து மன அமைதியுடன் உறங்குவேன்; ஏனெனில் யெகோவாவே, நீர் மட்டுமே என்னைப் பாதுகாப்பாகக் குடியிருக்கச் செய்கிறீர்.

< Mezmurlar 4 >