< Qığeepç'iy 16 >

1 İzrailybışin cəmə'ət Elimğançe ayk'anan. Manbı Elimneyiy Sinayne yıq'neene, Sin eyhene sahreeqa Misirğançe qığepç'iyne q'öb'esde vuzane yits'ıxhob'esde yiğıl qabı hiviyxhar.
அதன் பின்னர் முழு இஸ்ரயேல் சமுதாயமும் ஏலிமிலிருந்து புறப்பட்டு, அவர்கள் எகிப்திலிருந்து வெளியேறிய இரண்டாம் மாதம் பதினைந்தாம்நாள் ஏலிமுக்கும் சீனாய்க்கும் இடையேயுள்ள சீன் பாலைவனத்தை வந்தடைந்தார்கள்.
2 Sahree milletin Mısaylenayiy Harunulena haa'a giviyğal.
அப்பாலைவனத்திலே இஸ்ரயேல் சமுதாயம் முழுவதும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள்.
3 İzrailybışe manbışik'le eyhe ıxha: – Misir çurunane k'umk'umbışde k'ane gyuv'urne gahıl, avts'esınmeen gıney otxhanang'a, Rəbbine xılençe ma'ab hapt'ıynxhiy nimee yugda eyxheyiy. Şunad inimeen millet sahreeqa mıssıka gyapt'as qadı!
இஸ்ரயேலர் அவர்களிடம், “நாங்கள் யெகோவாவின் கையால் எகிப்திலே இறந்திருக்கலாமே! நாங்களோ அங்கே இறைச்சிப் பானைகளைச் சுற்றி உட்கார்ந்து, விரும்பிய உணவையெல்லாம் சாப்பிட்டோம்; ஆனால் நீங்கள், இந்த முழு மக்கள் கூட்டமும் பட்டினியாய்ச் சாகும்படி இந்தப் பாலைவனத்திற்குள் எங்களைக் கொண்டுவந்திருக்கிறீர்கள்” என்றார்கள்.
4 Rəbbee Mısayk'le eyhen: – Zı şolqa xəənçe gıney gyoğa'as. Hasre millet yiğıs qığeç'ecen, çisın yiğısiysın gıney se'ecen. Zı manbı Yizde q'aanunbışil k'ırı iliyxheyeva məxüb siliys üvxəs.
அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நான் வானத்திலிருந்து உங்களுக்கு அப்பத்தைப் பொழிவேன். இந்த மக்கள் ஒவ்வொரு நாளும் வெளியே போய் அந்நாளுக்குப் போதுமானதைச் சேர்க்கவேண்டும். அதன்மூலம் அவர்கள் என் அறிவுறுத்தலின்படி நடப்பார்களோ இல்லையோ என்று அவர்களைப் சோதித்துப் பார்ப்பேன்.
5 Yixhıd'esde yiğıl q'öd şene yiğbışilinmeen sı'ı, ögiykecad otxhanan kar he'ecen.
ஆறாம்நாளிலோ, மற்றநாட்களில் சேர்ப்பதுபோல் இருமடங்கு சேர்க்கவேண்டும். அந்த நாளிலே அவர்கள் எடுத்துவந்ததைத் தயாரித்து வைக்கவேண்டும்” என்றார்.
6 Mıseeyiy Harunee İzrailybışik'le eyhen: – Exhal şok'le ats'axhxhesın Misirğançe şu Rəbbee qığav'u vuxhay.
ஆகவே, மோசேயும் ஆரோனும் இஸ்ரயேலரிடம், “யெகோவாவே உங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தார் என்பதை இன்று மாலையில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்,
7 Miç'eedmee şok'le Mana inyaa ıxhay, Mang'una xəbvalla g'avcesda. Rəbbik'le g'ayxhin şu Culena haa'a. Şi vuşbıne vooxhee, şu şalena haa'a?
காலையிலோ யெகோவாவின் மகிமையைக் காண்பீர்கள்; ஏனெனில் அவருக்கு விரோதமான உங்கள் முறுமுறுப்பை அவர் கேட்டார். நீங்கள் எங்களுக்கு விரோதமாய் முறுமுறுப்பதற்கு நாங்கள் யார்?” என்றார்கள்.
8 Mısee manbışik'le meed eyhen: – Şok'le inəxüd ats'axhxhes Mana Rəbb ıxhay: g'iyna exhal Mang'vee şos çuru heles, miç'eedıd avts'esınmeen gıney. Mang'uk'le g'ayxhiyn şu Culena haa'a. Nya'a şi vuşbune vooxhe? Şu şalena deş, Rəbbilena ha'a.
மேலும் மோசே அவர்களிடம், “மாலையில் நீங்கள் சாப்பிடுவதற்கு இறைச்சியையும், காலையில் வேண்டிய அளவு அப்பத்தையும் தருவார்; ஏனெனில் அவருக்கு எதிரான உங்கள் முறுமுறுப்பை யெகோவா கேட்டிருக்கிறார். அப்பொழுது நீங்கள் யெகோவாவே இதைத் தருகிறார் என்பதை அறிந்துகொள்வீர்கள். நீங்கள் எங்களுக்கு எதிராக அல்ல, யெகோவாவுக்கு எதிராகவே முறுமுறுக்கிறீர்கள். எங்களுக்கு எதிராய் முறுமுறுக்க நாங்கள் யார்?” என்றார்கள்.
9 Mısee Harunuk'le eyhen: – İzrailyne cəmə'ətık'le eyhe: «Rəbbine ögiylqa savaale, Mang'uk'le g'ayxhiyn şu Culqa alepçiy».
அதன்பின் மோசே ஆரோனிடம் சொன்னதாவது: “நீ முழு இஸ்ரயேல் சமுதாயத்தினரிடமும், ‘எல்லோரும் யெகோவாவுக்கு முன்பாக வாருங்கள். ஏனெனில் அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறார்’ என்று சொல்” என்றான்.
10 Harun İzrailyne cəmə'ətıka yuşan ha'ane gahıl, cəmə'ətın vuk'ulybı sak'al ha'anbı sahrayne suralqa. Sayid manbışik'le buludne dirakee Rəbbin nur ıxhay g'ece.
ஆரோன் முழு இஸ்ரயேல் சமுதாயத்தோடும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், அவர்கள் பாலைவனத்தை நோக்கிப் பார்த்தபோது, யெகோவாவின் மகிமை மேகத்திலே தோன்றியது.
11 Rəbbee Mısayk'le eyhen:
அப்பொழுது யெகோவா மோசேயிடம்,
12 – Zak'le İzrailybışe Zalena haa'a g'ayxhı. Manbışik'le eyhe: «Exheqana şu çuru oxhanas, miç'eedıd avts'esınmeen gıney. Manke şok'le ats'axhxhesın Zı Rəbb, vuşda Allah ıxhay».
“நான் இஸ்ரயேலருடைய முறுமுறுப்புகளைக் கேட்டேன். நீ அவர்களிடம், ‘நீங்கள் மாலையில் இறைச்சியைச் சாப்பிட்டு, காலையில் அப்பத்தினால் திருப்தியாவீர்கள். அப்பொழுது நானே உங்கள் இறைவனாகிய யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்’ என்று சொல்” என்றார்.
13 Exheeqana bilydirçinar aletxu qadı çadırbı gı'xı'yn ciga gyats'a'an. Miç'eebiysıb mane cigayne hiqiy-alla ç'iy ı'xiyxə.
அந்த மாலை வேளையிலேயே காடைகள் வந்து அவர்கள் முகாமை மூடிக்கொண்டன. காலையில் முகாமைச் சுற்றி ஒரு பனிப்படலம் படிந்தது.
14 Ç'iy ts'ıts'axhamee, ç'iyene aq'val k'üvən xırıp'-xırıp' ha'an g'iravuk akaran sa kar axva.
பனி விலகிய பின்பு, தரையின்மீது உறைபனி போன்ற மெல்லிய துகள்கள் பாலைவனத்தில் காணப்பட்டன.
15 Ixhyanbı g'acu İzrailybışe sana-sang'uk'le eyhen: – İn hucoone? Manbışik'le man hucoo ıxhay ats'a deşdiy. Mısee manbışik'le eyhen: – İn Rəbbee şos oxhanasva huvuyn gıney vod.
அதை இஸ்ரயேலர் கண்டபோது, ஒருவரையொருவர் பார்த்து, “இது என்ன?” என்றார்கள். ஏனெனில், அது என்ன என்பது அவர்களுக்குத் தெரியாதிருந்தது. அப்பொழுது மோசே அவர்களிடம், “இதுதான் நீங்கள் உண்பதற்காக யெகோவா கொடுத்திருக்கும் அப்பம்.
16 Rəbbee inva şok'le uvhu: «Sı'iyle qiyğa, həməxüd he'e, xizaneene insanaaşis sik'ı ixhecen, gırgıng'ulqa sa vexhxheedın hixhrecen».
யெகோவா கட்டளையிட்டிருப்பது இதுவே: ‘ஒவ்வொருவரும் தான் சாப்பிடக்கூடியதைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். உங்கள் கூடாரத்தில் உள்ளவர்களில் ஒருவருக்கு ஒரு ஓமர் அளவுப்படி, ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளுங்கள்’” என்றான்.
17 İzrailybışe gırgın cok'le uvhiyn xhinne ha'a. Sanbışe geed sa'a, mansanbışe k'ılda.
இஸ்ரயேலர் தங்களுக்குச் சொல்லப்பட்டபடியே செய்தார்கள். சிலர் அதிகமாகவும், சிலர் குறைவாகவும் சேர்த்தார்கள்.
18 Vexhxhayka gyoobakka gibğılmee, geeb sav'uyng'unab hexxaba haagu deş, k'ılyba sav'uyng'unab k'ılyba haagu deş. Gırgıng'vee q'aralika sav'una xhinnecab haa'gva.
அவர்கள் சேர்த்தவற்றை ஓமரால் அளந்த போது அதிகமாகச் சேர்த்தவனிடம் தேவைக்கதிகமாக இருந்ததில்லை, குறைவாகச் சேர்த்தவனிடம் போதாமல் இருக்கவுமில்லை. ஒவ்வொருவரும் தனக்குவேண்டிய அளவையே சேர்த்தார்கள்.
19 Mısee manbışik'le eyhen: – Vuşde neng'veecad miç'eediys vuççud g'ılymadaççe.
அப்பொழுது மோசே அவர்களிடம், “ஒருவரும் மறுநாள் காலைவரை அதில் எதையும் வைத்திருக்கக்கூடாது” என்று சொன்னான்.
20 Sassanbışe Mısayl k'ırı ilydiyxhı kar miç'eediys g'aledaççe. Mane otxhuneeqa mı'qər a'a, mançike eva g'əə giyğal. Mısee manbışilqa qəl haa'a.
ஆனாலும் சிலர் மோசே சொன்னதைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் காலைவரை அதிலொரு பகுதியை வைத்திருந்தார்கள். அது புழுப்பிடித்து நாற்றமெடுத்தது. மோசே அவர்கள்மீது கோபங்கொண்டான்.
21 Miç'eeb gırgıng'vee cus vukkanameena q'aralika sa'a vuxha. Qiyğa verığ pıra quvxhamee, mana xhinelqaniyxhe siviyk'alna.
காலைதோறும் ஒவ்வொருவனும் தனக்குத் தேவையான அளவைச் சேர்த்தான். வெயில் ஏறினபோது அது உருகிப்போனது.
22 Yixhıd'esde yiğıl manbışe q'öd manimeen otxhuniy sa'a, sang'ulqa q'öble vexhxha gyooxha vuxha. Cəmə'ətne ç'ak'ınbışe co nimeen kariy sı'ıva abı Mısays yuşan ha'an.
ஆறாம்நாளில் ஒவ்வொருவரும் ஒருவனுக்கு இரண்டு ஓமர் வீதம் இருமடங்கு உணவைச் சேர்த்தார்கள். சமுதாயத்தின் தலைவர்கள் இதை மோசேக்கு அறிவித்தார்கள்.
23 Mısee manbışik'le eyhen: – Rəbbe inəxüdud eyhe: «G'iyqiyn ülycümün yighıd'esın, manzil haa'an yiğ vod. Man muq'addasın Rəbbin yiğ Şabbat vod. G'iyniykecad qecesın qece, qoxhxharasınıd qoxhre. Hexxada axuynıd g'iyqiys havace».
அப்பொழுது மோசே அவர்களிடம், “யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்டது இதுவே: நாளைய தினம் ஓய்ந்திருக்கும் ஒரு நாளாக யெகோவாவுக்குப் பரிசுத்த ஓய்வுநாளாய் இருக்கவேண்டும். எனவே, இன்றே சுடவேண்டியதை சுட்டு, அவிக்கவேண்டியதை அவித்துக்கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிட்டபின் மீதியானதை காலைவரை வையுங்கள்” என்றான்.
24 Manbışe otxhuniy Mısee uvhiyn xhinne g'iyqilqamee havacıva, mançeeqa mı'q'ərıd ı'ı deş, evad eyxhe deş.
மோசே கட்டளையிட்டபடியே காலைவரை அதைச் சேமித்து வைத்தார்கள். அது நாற்றமெடுக்கவோ, புழுப்பிடிக்கவோ இல்லை.
25 Mısee eyhen: – G'iyna şu man otxhanan kar oxhne. G'iyna Rəbbin yiğ, Şabbat vod. Şok'le g'iyna g'ad oxhanas vuççud aveykes deş.
அப்பொழுது மோசே இஸ்ரயேலரிடம், “இன்றைக்கே அதைச் சாப்பிடுங்கள். ஏனெனில் இன்றைய நாள் யெகோவாவுக்குரிய ஓய்வுநாளாய் இருக்கிறது. இன்று நீங்கள் எதையும் நிலத்திலே காணமாட்டீர்கள்.
26 Şu man kar yixhne yiğna se'e, Şabbatıl, yighıd'esde yiğıl, şok'le vuççud aveykes deş.
நீங்கள் ஆறு நாட்களும் அதைச் சேர்க்கவேண்டும். ஓய்வுநாளாகிய ஏழாம் நாளிலே அது கிடைக்காது” என்றான்.
27 Milletıken sabara insanar yighıd'esde yiğılib otxhuniy sa'asva qığepç'eyib manbışik'le vuççud iveeke deş.
ஆனாலும் மக்களில் சிலர் ஏழாம்நாள் அவற்றைச் சேர்ப்பதற்குப் போனபோது, அவர்கள் ஒன்றையும் காணவில்லை.
28 Rəbbee Mısayk'le eyhen: – Şu mısılqameene Zı g'ixhxhiyne g'ayda-q'aanunuka gyuv'ur-oza qıdeepxhes?
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீங்கள் எவ்வளவு காலத்திற்கு என் கட்டளைகளையும், அறிவுறுத்தல்களையும் கைக்கொள்ள மறுப்பீர்கள்?
29 İlyaake, Zı, Rəbbee şos Şabbatın yiğ huvu, mançil-allad Zı yixhıd'esde yiğıl şos q'öd manimeen otxhuniy hele. Yighıd'esde yiğılyıb gırgınbı cone xaybışee gyuv'urecen, əq'ənaqa ımaak'anancen.
யெகோவா உங்களுக்கு ஓய்வுநாளைக் கொடுத்திருப்பதை மனதில் வைத்திருங்கள். அதனால்தான் ஆறாம்நாளில் இரண்டு நாட்களுக்குரிய அப்பத்தை அவர் உங்களுக்குக் கொடுக்கிறார். ஆகையால் ஏழாம்நாளில் நீங்கள் ஒவ்வொருவரும் இருக்கும் இடத்திலேயே இருக்கவேண்டும், ஒருவரும் வெளியே போகக்கூடாது” என்றார்.
30 Məxüb milletın yighıb'esde yiğıl manzil haa'a.
எனவே மக்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.
31 Mane otxhuniyn do İzrailybışe manna giyxhe. Mana vuc k'aşnişne toxumukub akar, rangısıb cagvaraba vob. Opxhıniysıb itv qadğuyn k'alet xhinne vob.
இஸ்ரயேல் மக்கள் அந்த அப்பத்தை மன்னா என்று அழைத்தார்கள். அது கொத்தமல்லி விதையைப்போல வெள்ளையாகவும், தேனில் தயாரித்த பணியாரத்தின் சுவையுள்ளதாகவும் இருந்தது.
32 Mısee eyhen: – Rəbbee inəxüd he'eva vod eyhe: «Sa vexhxha mannayna alyapt'ı şole qiyğiyne nasılbışis havaace. Hasre manbışik'led g'acecen, Zı şu Misirğançe qığav'uyng'a şos sahree huvuyn gıney».
அப்பொழுது மோசே இஸ்ரயேல் மக்களிடம், “யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்டிருப்பது இதுவே: நான் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது, நான் உங்களுக்குப் பாலைவனத்தில் சாப்பிடக்கொடுத்த அப்பத்தை, வரப்போகும் உங்கள் தலைமுறையினருக்குக் காட்டுவதற்காக, அந்த மன்னாவில் ஒரு ஓமர் அளவு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்” என்றான்.
33 Mısee Harunuk'le eyhen: – Kup alyaat'u mançeeqa sa vexhxha mannayna haç'ee'e. Qiyğad Rəbbine ögiylqa gixhxhe qihniyne nasılbışis havaces ixhecen.
மேலும் மோசே ஆரோனிடம், “நீ ஒரு ஜாடியை எடுத்து, ஒரு ஓமர் அளவு மன்னாவை அதற்குள் போடு. பின், வரப்போகும் தலைமுறையினருக்காக யெகோவாவுக்கு முன்பாக அதை வை” என்றான்.
34 Rəbbee Mısayk'le uvhuyn xhinne, Harunee havacesva mannanan kup mugaavilenane q'utyeyne hiqa giyxhe.
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் வரப்போகும் காலங்களுக்காக மன்னாவை எடுத்து சாட்சிப்பெட்டியின் முன் வைத்தான்.
35 İnsanarnane cigeeqa, Kana'anqa, qavaalesmee, İzrailybışe yoq'ts'al senna manna ooxhan.
இஸ்ரயேலர் தாங்கள் குடியேறவேண்டிய நாட்டிற்கு வரும்வரைக்கும் நாற்பது வருடமாக மன்னாவையே சாப்பிட்டார்கள். கானானின் எல்லைக்கு வரும்வரை மன்னாவையே சாப்பிட்டார்கள்.
36 (Sa omer efana yits'ıb'esda pay vobna).
ஒரு ஓமர் என்பது எப்பா அளவின் பத்தில் ஒரு பங்கு ஆகும்.

< Qığeepç'iy 16 >