< சகரியா 5 >

1 நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து பார்க்கும்போது, இதோ, பறக்கிற ஒரு புத்தகச்சுருளைக் கண்டேன்.
Tôi nhìn lên, thấy một cuộn sách bay trên không.
2 தூதன் என்னிடம், நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; பறக்கிற ஒரு புத்தகச்சுருளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்து முழமுமாயிருக்கிறது என்றேன்.
Thiên sứ hỏi tôi: “Ông thấy gì?” Tôi đáp: “Một cuộn sách đang bay, bề dài sách ấy 9 mét và bề ngang 4,5 mét.”
3 அப்பொழுது அவர்: இது பூமியின் மீதெங்கும் புறப்பட்டுப்போகிற சாபம்; எந்தத் திருடனும் அந்த புத்தகச்சுருளின் ஒரு புறத்திலிருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்; ஆணையிடுகிற எவனும், அந்த புத்தகச்சுருளின் மறுபுறத்தில் இருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்.
Thiên sứ nói: “Sách này chứa lời nguyền rủa, bay ra khắp mặt đất. Vì chiếu theo sách ấy, ai trộm cắp phải bị xử tử, ai thề dối cũng bị xử tử.
4 அது திருடன் வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய்யாக சத்தியம் செய்கிறவன் வீட்டிலும் வந்து, அவனவன் வீட்டின் நடுவிலே தங்கி, அதை அதின் மரங்களோடும் அதின் கற்களோடும்கூட நிர்மூலமாக்குவதற்காக அதைப் புறப்பட்டுப்போகச்செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றார்.
Đây là điều Chúa Hằng Hữu Vạn Quân phán: ‘Lời nguyền rủa này sẽ vào nhà kẻ trộm, nhà của người nhân danh Ta thề dối, tiêu hủy nhà họ, cả cây lẫn đá.’”
5 பின்பு என்னுடன் பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து, புறப்பட்டு வருகிறதை என்னவென்று பார் என்றார்.
Một lúc sau, thiên sứ bước tới, bảo tôi: “Nhìn lên xem. Có vật gì đang tiến tới đó?”
6 அது என்னவென்று கேட்டேன்; அதற்கு அவர்: அது புறப்பட்டுவருகிறதான ஒரு மரக்கால் என்றார். பின்னும் அவர்: பூமியெங்கும் இதுதான் அவர்களுடைய கண்ணோக்கம் என்றார்.
Tôi hỏi: “Vật gì thế?” Thiên sứ đáp: “Một cái thúng chứa đầy tội lỗi dân trên đất.”
7 இதோ, ஒரு தாலந்து எடையுள்ள ஈயமூடி தூக்கிவரப்பட்டது; மரக்காலின் நடுவிலே ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள்.
Bỗng nhiên, cái nắp thúng bằng chì lật ra, tôi thấy có một phụ nữ ngồi trong thúng.
8 அப்பொழுது அவர்: இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார்.
Thiên sứ nói: “Nó tượng trưng cho sự đồi bại, độc ác.” Và thiên sứ đẩy người phụ nữ vào trong thúng, đậy nắp lại.
9 அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டு வருகிற இரண்டு பெண்களைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் இறக்கைகளைப்போன்ற இறக்கைகள் இருந்தது; அவர்கள் இறக்கைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலை பூமிக்கும் வானத்திற்கும் நடுவாகத் தூக்கிக்கொண்டு போனார்கள்.
Tôi nhìn lên, lần này thấy có hai người phụ nữ bay đến, có cánh như cánh cò. Họ bưng thùng, bay lên, lơ lửng giữa trời đất.
10 ௧0 நான் என்னுடன் பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன்.
Tôi hỏi thiên sứ: “Họ đem thúng đi đâu?”
11 ௧௧ அதற்கு அவர்: சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டுவதற்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.
Thiên sứ đáp: “Đi qua xứ Ba-by-lôn. Họ sẽ cất một cái nhà tại đó. Khi cất xong, cái thúng sẽ được đặt xuống, đúng chỗ của nó.”

< சகரியா 5 >