< சகரியா 5 >

1 நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து பார்க்கும்போது, இதோ, பறக்கிற ஒரு புத்தகச்சுருளைக் கண்டேன்.
Андин мән йәнә бешимни көтирип, мана бир учар орам язмини көрдүм.
2 தூதன் என்னிடம், நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; பறக்கிற ஒரு புத்தகச்சுருளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்து முழமுமாயிருக்கிறது என்றேன்.
У мәндин: «Немини көрдүң?» дәп сориди. Мән: «Бир учар орам язмини көрдүм; узунлуғи жигирмә гәз, кәңлиги он гәз екән» — дедим.
3 அப்பொழுது அவர்: இது பூமியின் மீதெங்கும் புறப்பட்டுப்போகிற சாபம்; எந்தத் திருடனும் அந்த புத்தகச்சுருளின் ஒரு புறத்திலிருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்; ஆணையிடுகிற எவனும், அந்த புத்தகச்சுருளின் மறுபுறத்தில் இருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்.
У маңа: «Бу болса пүтүн зимин үстигә чиқирилған ләнәттур; чүнки һәр бир оғрилиқ қилғучи бу тәрипигә йезилғини бойичә үзүп ташлиниду; вә қәсәм ичкүчиләрниң һәр бири у тәрипигә йезилғини бойичә үзүп ташлиниду».
4 அது திருடன் வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய்யாக சத்தியம் செய்கிறவன் வீட்டிலும் வந்து, அவனவன் வீட்டின் நடுவிலே தங்கி, அதை அதின் மரங்களோடும் அதின் கற்களோடும்கூட நிர்மூலமாக்குவதற்காக அதைப் புறப்பட்டுப்போகச்செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றார்.
— «Мән бу [язмини] чиқиримән» — дәйду самави қошунларниң Сәрдари болған Пәрвәрдигар, «вә у оғриниң өйигә һәмдә намим билән ялғандин қәсәм ичкүчиниң өйигә кириду вә шу өйдә қонуп уни яғач-ташлири билән қошупла йәветиду».
5 பின்பு என்னுடன் பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து, புறப்பட்டு வருகிறதை என்னவென்று பார் என்றார்.
Андин мән билән сөзлишиватқан пәриштә чиқип маңа: «Әнди бешиңни көтәргин, неминиң чиқиватқинини көрүп бақ» — деди.
6 அது என்னவென்று கேட்டேன்; அதற்கு அவர்: அது புறப்பட்டுவருகிறதான ஒரு மரக்கால் என்றார். பின்னும் அவர்: பூமியெங்கும் இதுதான் அவர்களுடைய கண்ணோக்கம் என்றார்.
Мән: «У немә?» — дәп соридим. У маңа: «Бу чиқиватқан «әфаһ» севитидур», вә: «Бу болса [шу рәзилләрниң] пүтүн зиминдики қияпитидур» — деди.
7 இதோ, ஒரு தாலந்து எடையுள்ள ஈயமூடி தூக்கிவரப்பட்டது; மரக்காலின் நடுவிலே ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள்.
Әфаһ севитиниң ағзидин думилақ бир қоғушун көтирилди, мана, әфаһ севити ичидә бир аял олтиратти.
8 அப்பொழுது அவர்: இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார்.
У: «Бу болса, рәзиллик»тур» — дәп, уни әфаһ севити ичигә қайтуруп ташлап, әфаһниң ағзиға еғир қоғушунни ташлап қойди.
9 அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டு வருகிற இரண்டு பெண்களைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் இறக்கைகளைப்போன்ற இறக்கைகள் இருந்தது; அவர்கள் இறக்கைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலை பூமிக்கும் வானத்திற்கும் நடுவாகத் தூக்கிக்கொண்டு போனார்கள்.
Бешимни көтирип, мана икки аялниң чиққанлиғини көрдүм; шамал уларниң қанатлирини йәлпүтүп туратти (уларниң ләйләкниңкидәк қанатлири бар еди); улар әфаһни асман билән зиминниң оттурисиға көтәрди.
10 ௧0 நான் என்னுடன் பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன்.
Мән билән сөзлишиватқан пәриштидин: «Улар әфаһни нәгә көтирип маңиду?» — дәп соридим.
11 ௧௧ அதற்கு அவர்: சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டுவதற்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.
У маңа: Улар әфаһ үчүн «Шинар зимини»да бир өй селишқа кәтти; өй бәрпа қилинғандин кейин, әфаһ севити шу йәрдә өз туралғусиға қоюлиду, — дәп җавап бәрди.

< சகரியா 5 >