< தீத்து 2 >
1 ௧ நீயோ ஆரோக்கியமான உபதேசத்திற்குரியவைகளைப் போதிக்கவேண்டும்.
ਯਥਾਰ੍ਥਸ੍ਯੋਪਦੇਸ਼ਸ੍ਯ ਵਾਕ੍ਯਾਨਿ ਤ੍ਵਯਾ ਕਥ੍ਯਨ੍ਤਾਂ
2 ௨ முதிர்வயதுள்ள ஆண்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாக இருக்கும்படி புத்திசொல்லு.
ਵਿਸ਼ੇਸ਼਼ਤਃ ਪ੍ਰਾਚੀਨਲੋਕਾ ਯਥਾ ਪ੍ਰਬੁੱਧਾ ਧੀਰਾ ਵਿਨੀਤਾ ਵਿਸ਼੍ਵਾਸੇ ਪ੍ਰੇਮ੍ਨਿ ਸਹਿਸ਼਼੍ਣੁਤਾਯਾਞ੍ਚ ਸ੍ਵਸ੍ਥਾ ਭਵੇਯੁਸ੍ਤਦ੍ਵਤ੍
3 ௩ முதிர்வயதுள்ள பெண்களும் அப்படியே பரிசுத்தத்திற்குரியவிதமாக நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்திற்கு அடிமைப்படாதவர்களுமாக இருக்கவும்,
ਪ੍ਰਾਚੀਨਯੋਸ਼਼ਿਤੋ(ਅ)ਪਿ ਯਥਾ ਧਰ੍ੰਮਯੋਗ੍ਯਮ੍ ਆਚਾਰੰ ਕੁਰ੍ੱਯੁਃ ਪਰਨਿਨ੍ਦਕਾ ਬਹੁਮਦ੍ਯਪਾਨਸ੍ਯ ਨਿਘ੍ਨਾਸ਼੍ਚ ਨ ਭਵੇਯੁਃ
4 ௪ தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு வாலிபப் பெண்கள் தங்களுடைய கணவர்களிடமும், தங்களுடைய பிள்ளைகளிடமும் அன்புள்ளவர்களும்,
ਕਿਨ੍ਤੁ ਸੁਸ਼ਿਕ੍ਸ਼਼ਾਕਾਰਿਣ੍ਯਃ ਸਤ੍ਯ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਵਾਕ੍ਯੰ ਯਤ੍ ਨ ਨਿਨ੍ਦ੍ਯੇਤ ਤਦਰ੍ਥੰ ਯੁਵਤੀਃ ਸੁਸ਼ੀਲਤਾਮ੍ ਅਰ੍ਥਤਃ ਪਤਿਸ੍ਨੇਹਮ੍ ਅਪਤ੍ਯਸ੍ਨੇਹੰ
5 ௫ தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாக இருக்கும்படி, அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கத்தக்க நல்லகாரியங்களைப் போதிக்கிறவர்களுமாக இருக்கவும் முதிர்வயதுள்ள பெண்களுக்குப் புத்திசொல்லு.
ਵਿਨੀਤਿੰ ਸ਼ੁਚਿਤ੍ਵੰ ਗ੍ਰੁʼਹਿਣੀਤ੍ਵੰ ਸੌਜਨ੍ਯੰ ਸ੍ਵਾਮਿਨਿਘ੍ਨਞ੍ਚਾਦਿਸ਼ੇਯੁਸ੍ਤਥਾ ਤ੍ਵਯਾ ਕਥ੍ਯਤਾਂ|
6 ௬ அப்படியே, இளைஞர்களும் தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்கவும் நீ புத்திசொல்லி,
ਤਦ੍ਵਦ੍ ਯੂਨੋ(ਅ)ਪਿ ਵਿਨੀਤਯੇ ਪ੍ਰਬੋਧਯ|
7 ௭ நீயே எல்லாவற்றிலும் உன்னை நல்ல செயல்களுக்கு மாதிரியாகக் காண்பித்து,
ਤ੍ਵਞ੍ਚ ਸਰ੍ੱਵਵਿਸ਼਼ਯੇ ਸ੍ਵੰ ਸਤ੍ਕਰ੍ੰਮਣਾਂ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਾਨ੍ਤੰ ਦਰ੍ਸ਼ਯ ਸ਼ਿਕ੍ਸ਼਼ਾਯਾਞ੍ਚਾਵਿਕ੍ਰੁʼਤਤ੍ਵੰ ਧੀਰਤਾਂ ਯਥਾਰ੍ਥੰ
8 ௮ எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே வேறுபாடில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம் கண்டுபிடிக்க முடியாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாக இருப்பாயாக.
ਨਿਰ੍ੱਦੋਸ਼਼ਞ੍ਚ ਵਾਕ੍ਯੰ ਪ੍ਰਕਾਸ਼ਯ ਤੇਨ ਵਿਪਕ੍ਸ਼਼ੋ ਯੁਸ਼਼੍ਮਾਕਮ੍ ਅਪਵਾਦਸ੍ਯ ਕਿਮਪਿ ਛਿਦ੍ਰੰ ਨ ਪ੍ਰਾਪ੍ਯ ਤ੍ਰਪਿਸ਼਼੍ਯਤੇ|
9 ௯ வேலைக்காரர்கள் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவிதத்திலும் கவரக்கூடியதாக்கும்படி,
ਦਾਸਾਸ਼੍ਚ ਯਤ੍ ਸ੍ਵਪ੍ਰਭੂਨਾਂ ਨਿਘ੍ਨਾਃ ਸਰ੍ੱਵਵਿਸ਼਼ਯੇ ਤੁਸ਼਼੍ਟਿਜਨਕਾਸ਼੍ਚ ਭਵੇਯੁਃ ਪ੍ਰਤ੍ਯੁੱਤਰੰ ਨ ਕੁਰ੍ੱਯੁਃ
10 ௧0 தங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, எல்லாவிதத்திலும் உண்மையையும் நேர்மையையும் காண்பிக்கும்படி புத்திசொல்லு.
ਕਿਮਪਿ ਨਾਪਹਰੇਯੁਃ ਕਿਨ੍ਤੁ ਪੂਰ੍ਣਾਂ ਸੁਵਿਸ਼੍ਵਸ੍ਤਤਾਂ ਪ੍ਰਕਾਸ਼ਯੇਯੁਰਿਤਿ ਤਾਨ੍ ਆਦਿਸ਼| ਯਤ ਏਵਮ੍ਪ੍ਰਕਾਰੇਣਾਸ੍ਮਕੰ ਤ੍ਰਾਤੁਰੀਸ਼੍ਵਰਸ੍ਯ ਸ਼ਿਕ੍ਸ਼਼ਾ ਸਰ੍ੱਵਵਿਸ਼਼ਯੇ ਤੈ ਰ੍ਭੂਸ਼਼ਿਤਵ੍ਯਾ|
11 ௧௧ ஏனென்றால், எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது வெளிப்பட்டது.
ਯਤੋ ਹੇਤੋਸ੍ਤ੍ਰਾਣਾਜਨਕ ਈਸ਼੍ਵਰਸ੍ਯਾਨੁਗ੍ਰਹਃ ਸਰ੍ੱਵਾਨ੍ ਮਾਨਵਾਨ੍ ਪ੍ਰਤ੍ਯੁਦਿਤਵਾਨ੍
12 ௧௨ நாம் அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாக இந்த உலகத்திலே வாழ்ந்து, (aiōn )
ਸ ਚਾਸ੍ਮਾਨ੍ ਇਦੰ ਸ਼ਿਕ੍ਸ਼਼੍ਯਤਿ ਯਦ੍ ਵਯਮ੍ ਅਧਰ੍ੰਮੰ ਸਾਂਸਾਰਿਕਾਭਿਲਾਸ਼਼ਾਂਸ਼੍ਚਾਨਙ੍ਗੀਕ੍ਰੁʼਤ੍ਯ ਵਿਨੀਤਤ੍ਵੇਨ ਨ੍ਯਾਯੇਨੇਸ਼੍ਵਰਭਕ੍ਤ੍ਯਾ ਚੇਹਲੋਕੇ ਆਯੁ ਰ੍ਯਾਪਯਾਮਃ, (aiōn )
13 ௧௩ நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்திற்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் வருகைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
ਪਰਮਸੁਖਸ੍ਯਾਸ਼ਾਮ੍ ਅਰ੍ਥਤੋ (ਅ)ਸ੍ਮਾਕੰ ਮਹਤ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਤ੍ਰਾਣਕਰ੍ੱਤੁ ਰ੍ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਪ੍ਰਭਾਵਸ੍ਯੋਦਯੰ ਪ੍ਰਤੀਕ੍ਸ਼਼ਾਮਹੇ|
14 ௧௪ அவர் நம்மை எல்லா அக்கிரமங்களிலிருந்து மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த மக்களாகவும், நல்லசெயல்களைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
ਯਤਃ ਸ ਯਥਾਸ੍ਮਾਨ੍ ਸਰ੍ੱਵਸ੍ਮਾਦ੍ ਅਧਰ੍ੰਮਾਤ੍ ਮੋਚਯਿਤ੍ਵਾ ਨਿਜਾਧਿਕਾਰਸ੍ਵਰੂਪੰ ਸਤ੍ਕਰ੍ੰਮਸੂਤ੍ਸੁਕਮ੍ ਏਕੰ ਪ੍ਰਜਾਵਰ੍ਗੰ ਪਾਵਯੇਤ੍ ਤਦਰ੍ਥਮ੍ ਅਸ੍ਮਾਕੰ ਕ੍ਰੁʼਤੇ ਆਤ੍ਮਦਾਨੰ ਕ੍ਰੁʼਤਵਾਨ੍|
15 ௧௫ இவைகளை நீ பேசி, போதித்து, எல்லா அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடுக்காதிருப்பாயாக.
ਏਤਾਨਿ ਭਾਸ਼਼ਸ੍ਵ ਪੂਰ੍ਣਸਾਮਰ੍ਥ੍ਯੇਨ ਚਾਦਿਸ਼ ਪ੍ਰਬੋਧਯ ਚ, ਕੋ(ਅ)ਪਿ ਤ੍ਵਾਂ ਨਾਵਮਨ੍ਯਤਾਂ|