< தீத்து 2 >
1 ௧ நீயோ ஆரோக்கியமான உபதேசத்திற்குரியவைகளைப் போதிக்கவேண்டும்.
ଯଥାର୍ଥସ୍ୟୋପଦେଶସ୍ୟ ୱାକ୍ୟାନି ତ୍ୱଯା କଥ୍ୟନ୍ତାଂ
2 ௨ முதிர்வயதுள்ள ஆண்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாக இருக்கும்படி புத்திசொல்லு.
ୱିଶେଷତଃ ପ୍ରାଚୀନଲୋକା ଯଥା ପ୍ରବୁଦ୍ଧା ଧୀରା ୱିନୀତା ୱିଶ୍ୱାସେ ପ୍ରେମ୍ନି ସହିଷ୍ଣୁତାଯାଞ୍ଚ ସ୍ୱସ୍ଥା ଭୱେଯୁସ୍ତଦ୍ୱତ୍
3 ௩ முதிர்வயதுள்ள பெண்களும் அப்படியே பரிசுத்தத்திற்குரியவிதமாக நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்திற்கு அடிமைப்படாதவர்களுமாக இருக்கவும்,
ପ୍ରାଚୀନଯୋଷିତୋଽପି ଯଥା ଧର୍ମ୍ମଯୋଗ୍ୟମ୍ ଆଚାରଂ କୁର୍ୟ୍ୟୁଃ ପରନିନ୍ଦକା ବହୁମଦ୍ୟପାନସ୍ୟ ନିଘ୍ନାଶ୍ଚ ନ ଭୱେଯୁଃ
4 ௪ தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு வாலிபப் பெண்கள் தங்களுடைய கணவர்களிடமும், தங்களுடைய பிள்ளைகளிடமும் அன்புள்ளவர்களும்,
କିନ୍ତୁ ସୁଶିକ୍ଷାକାରିଣ୍ୟଃ ସତ୍ୟ ଈଶ୍ୱରସ୍ୟ ୱାକ୍ୟଂ ଯତ୍ ନ ନିନ୍ଦ୍ୟେତ ତଦର୍ଥଂ ଯୁୱତୀଃ ସୁଶୀଲତାମ୍ ଅର୍ଥତଃ ପତିସ୍ନେହମ୍ ଅପତ୍ୟସ୍ନେହଂ
5 ௫ தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாக இருக்கும்படி, அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கத்தக்க நல்லகாரியங்களைப் போதிக்கிறவர்களுமாக இருக்கவும் முதிர்வயதுள்ள பெண்களுக்குப் புத்திசொல்லு.
ୱିନୀତିଂ ଶୁଚିତ୍ୱଂ ଗୃହିଣୀତ୍ୱଂ ସୌଜନ୍ୟଂ ସ୍ୱାମିନିଘ୍ନଞ୍ଚାଦିଶେଯୁସ୍ତଥା ତ୍ୱଯା କଥ୍ୟତାଂ|
6 ௬ அப்படியே, இளைஞர்களும் தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்கவும் நீ புத்திசொல்லி,
ତଦ୍ୱଦ୍ ଯୂନୋଽପି ୱିନୀତଯେ ପ୍ରବୋଧଯ|
7 ௭ நீயே எல்லாவற்றிலும் உன்னை நல்ல செயல்களுக்கு மாதிரியாகக் காண்பித்து,
ତ୍ୱଞ୍ଚ ସର୍ୱ୍ୱୱିଷଯେ ସ୍ୱଂ ସତ୍କର୍ମ୍ମଣାଂ ଦୃଷ୍ଟାନ୍ତଂ ଦର୍ଶଯ ଶିକ୍ଷାଯାଞ୍ଚାୱିକୃତତ୍ୱଂ ଧୀରତାଂ ଯଥାର୍ଥଂ
8 ௮ எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே வேறுபாடில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம் கண்டுபிடிக்க முடியாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாக இருப்பாயாக.
ନିର୍ଦ୍ଦୋଷଞ୍ଚ ୱାକ୍ୟଂ ପ୍ରକାଶଯ ତେନ ୱିପକ୍ଷୋ ଯୁଷ୍ମାକମ୍ ଅପୱାଦସ୍ୟ କିମପି ଛିଦ୍ରଂ ନ ପ୍ରାପ୍ୟ ତ୍ରପିଷ୍ୟତେ|
9 ௯ வேலைக்காரர்கள் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவிதத்திலும் கவரக்கூடியதாக்கும்படி,
ଦାସାଶ୍ଚ ଯତ୍ ସ୍ୱପ୍ରଭୂନାଂ ନିଘ୍ନାଃ ସର୍ୱ୍ୱୱିଷଯେ ତୁଷ୍ଟିଜନକାଶ୍ଚ ଭୱେଯୁଃ ପ୍ରତ୍ୟୁତ୍ତରଂ ନ କୁର୍ୟ୍ୟୁଃ
10 ௧0 தங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, எல்லாவிதத்திலும் உண்மையையும் நேர்மையையும் காண்பிக்கும்படி புத்திசொல்லு.
କିମପି ନାପହରେଯୁଃ କିନ୍ତୁ ପୂର୍ଣାଂ ସୁୱିଶ୍ୱସ୍ତତାଂ ପ୍ରକାଶଯେଯୁରିତି ତାନ୍ ଆଦିଶ| ଯତ ଏୱମ୍ପ୍ରକାରେଣାସ୍ମକଂ ତ୍ରାତୁରୀଶ୍ୱରସ୍ୟ ଶିକ୍ଷା ସର୍ୱ୍ୱୱିଷଯେ ତୈ ର୍ଭୂଷିତୱ୍ୟା|
11 ௧௧ ஏனென்றால், எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது வெளிப்பட்டது.
ଯତୋ ହେତୋସ୍ତ୍ରାଣାଜନକ ଈଶ୍ୱରସ୍ୟାନୁଗ୍ରହଃ ସର୍ୱ୍ୱାନ୍ ମାନୱାନ୍ ପ୍ରତ୍ୟୁଦିତୱାନ୍
12 ௧௨ நாம் அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாக இந்த உலகத்திலே வாழ்ந்து, (aiōn )
ସ ଚାସ୍ମାନ୍ ଇଦଂ ଶିକ୍ଷ୍ୟତି ଯଦ୍ ୱଯମ୍ ଅଧର୍ମ୍ମଂ ସାଂସାରିକାଭିଲାଷାଂଶ୍ଚାନଙ୍ଗୀକୃତ୍ୟ ୱିନୀତତ୍ୱେନ ନ୍ୟାଯେନେଶ୍ୱରଭକ୍ତ୍ୟା ଚେହଲୋକେ ଆଯୁ ର୍ୟାପଯାମଃ, (aiōn )
13 ௧௩ நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்திற்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் வருகைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
ପରମସୁଖସ୍ୟାଶାମ୍ ଅର୍ଥତୋ ଽସ୍ମାକଂ ମହତ ଈଶ୍ୱରସ୍ୟ ତ୍ରାଣକର୍ତ୍ତୁ ର୍ୟୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟ ପ୍ରଭାୱସ୍ୟୋଦଯଂ ପ୍ରତୀକ୍ଷାମହେ|
14 ௧௪ அவர் நம்மை எல்லா அக்கிரமங்களிலிருந்து மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த மக்களாகவும், நல்லசெயல்களைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
ଯତଃ ସ ଯଥାସ୍ମାନ୍ ସର୍ୱ୍ୱସ୍ମାଦ୍ ଅଧର୍ମ୍ମାତ୍ ମୋଚଯିତ୍ୱା ନିଜାଧିକାରସ୍ୱରୂପଂ ସତ୍କର୍ମ୍ମସୂତ୍ସୁକମ୍ ଏକଂ ପ୍ରଜାୱର୍ଗଂ ପାୱଯେତ୍ ତଦର୍ଥମ୍ ଅସ୍ମାକଂ କୃତେ ଆତ୍ମଦାନଂ କୃତୱାନ୍|
15 ௧௫ இவைகளை நீ பேசி, போதித்து, எல்லா அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடுக்காதிருப்பாயாக.
ଏତାନି ଭାଷସ୍ୱ ପୂର୍ଣସାମର୍ଥ୍ୟେନ ଚାଦିଶ ପ୍ରବୋଧଯ ଚ, କୋଽପି ତ୍ୱାଂ ନାୱମନ୍ୟତାଂ|