< தீத்து 1 >
1 ௧ தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம மகனாகிய தீத்துவிற்கு எழுதுகிறதாவது:
ⲁ̅ⲡⲁⲩⲗⲟⲥ ⲡϩⲙϩⲁⲗ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲁⲡⲟⲥⲧⲟⲗⲟⲥ ⲇⲉ ⲙⲡⲉⲭⲥ ⲓⲏⲥ ⲕⲁⲧⲁ ⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲛⲛⲥⲱⲧⲡ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲁⲩⲱ ⲡⲥⲟⲟⲩⲛ ⲛⲧⲙⲉ ⲧⲁⲓ ⲉⲧϣⲟⲟⲡ ⲕⲁⲧⲁ ⲟⲩⲙⲛⲧⲉⲩⲥⲉⲃⲏⲥ
2 ௨ பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
ⲃ̅ϩⲛ ⲑⲉⲗⲡⲓⲥ ⲙⲡⲱⲛϩ ϣⲁ ⲉⲛⲉϩ ⲡⲁⲓ ⲉⲛⲧⲁϥⲉⲣⲏⲧ ⲙⲙⲟϥ ⲛϭⲓ ⲡⲛⲟⲩⲧⲉ ⲙⲙⲉ ϩⲁⲑⲏ ⲛⲛⲉⲟⲩⲟⲉⲓϣ ⲛϣⲁ ⲉⲛⲉϩ (aiōnios )
3 ௩ பொய்யுரையாத தேவன் ஆரம்பகாலமுதல் நித்தியஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் செய்து அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, (aiōnios )
ⲅ̅ⲉⲁϥⲟⲩⲱⲛϩ ⲇⲉ ⲉⲃⲟⲗ ⲙⲡⲉϥϣⲁϫⲉ ϩⲛ ⲛⲉϥⲟⲩⲟⲉⲓϣ ϩⲛ ⲟⲩⲧⲁϣⲉⲟⲉⲓϣ ⲡⲁⲓ ⲁⲛⲟⲕ ⲉⲛⲧⲁⲩⲧⲁⲛϩⲟⲩⲧ ⲉⲣⲟϥ ⲕⲁⲧⲁ ⲡⲟⲩⲉϩⲥⲁϩⲛⲉ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉⲛⲥⲱⲧⲏⲣ ⲉϥⲥϩⲁⲓ
4 ௪ ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்.
ⲇ̅ⲛⲧⲓⲧⲟⲥ ⲡϩⲁⲕ ⲛϣⲏⲣⲉ ⲕⲁⲧⲁ ⲧⲉⲛⲡⲓⲥⲧⲓⲥ ϩⲓ ⲟⲩⲥⲟⲡ ⲧⲉⲭⲁⲣⲓⲥ ⲛⲁⲕ ⲙⲛ ϯⲣⲏⲛⲏ ⲛⲧⲙ ⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉⲓⲱⲧ ⲙⲛ ⲡⲉⲭⲥ ⲓⲏⲥ ⲡⲉⲛⲥⲱⲧⲏⲣ
5 ௫ நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பர்களை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தா தீவிலே விட்டுவந்தேன்.
ⲉ̅ⲉⲧⲃⲉ ⲡⲁⲓ ⲁⲓⲕⲁⲁⲕ ϩⲛ ⲕⲣⲏⲧⲏ ϫⲉⲕⲁⲥ ⲉⲕⲉⲥⲙⲓⲛⲉ ⲙⲡⲕⲉⲥⲉⲉⲡⲉ ⲁⲩⲱ ⲛⲅⲧⲁϩⲟ ⲉⲣⲁⲧⲟⲩ ⲛϩⲉⲛⲡⲣⲉⲥⲃⲩⲧⲉⲣⲟⲥ ⲕⲁⲧⲁ ⲡⲟⲗⲓⲥ ⲛⲑⲉ ⲉⲛⲧⲁⲓϩⲱⲛ ⲉⲧⲟⲟⲧⲕ ⲙⲙⲟⲥ
6 ௬ குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கர்களென்றும் அடங்காதவர்களென்றும் பெயரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவன் இருந்தால் அவனையே மூப்பராக ஏற்படுத்தலாம்.
ⲋ̅ⲡⲉⲧⲉⲙⲛϩⲱⲃ ϫⲓ ⲉϩⲟⲩⲛ ⲉⲣⲟϥ ⲉⲁϥⲣϩⲁⲓ ⲛⲟⲩⲥϩⲓⲙⲉ ⲛⲟⲩⲱⲧ ⲉⲩⲛⲧⲁϥ ⲙⲙⲁⲩ ⲛⲛⲉϥϣⲏⲣⲉ ⲙⲡⲓⲥⲧⲟⲥ ⲉⲛⲥⲉϩⲛ ⲟⲩⲕⲁⲧⲏⲅⲟⲣⲓⲁ ⲁⲛ ⲙⲙⲛⲧϣⲛⲁ ⲏ ⲛⲥⲉϩⲩⲡⲟⲧⲁⲥⲥⲉ ⲁⲛ
7 ௭ ஏனென்றால், கண்காணியானவன் தேவனுடைய மேற்பார்வைக்காரனுக்குரியவிதமாக, குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடிக்காதவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்காதவனும்,
ⲍ̅ϣϣⲉ ⲅⲁⲣ ⲉⲡⲉⲡⲓⲥⲕⲟⲡⲟⲥ ⲉⲧⲙⲧⲣⲉⲩϭⲛϩⲱⲃ ⲉϩⲟⲩⲛ ⲉⲣⲟϥ ϩⲱⲥ ⲟⲓⲕⲟⲛⲟⲙⲟⲥ ⲛⲧⲉ ⲡⲛⲟⲩⲧⲉ ⲉⲛⲟⲩϫⲁⲥⲓϩⲏⲧ ⲁⲛ ⲡⲉ ⲉⲛⲟⲩⲣⲉϥϭⲛⲁⲧ ⲁⲛ ⲡⲉ ⲉⲛⲟⲩⲣⲉϥϯϩⲉ ⲁⲛ ⲡⲉ ⲉⲛⲟⲩⲛⲟϣⲥϥ ⲁⲛ ⲡⲉ ⲉⲛⲟⲩⲙⲁⲓϩⲏⲩ ⲛϣⲗⲟϥ ⲁⲛ ⲡⲉ
8 ௮ அந்நியர்களை உபசரிக்கிறவனும், நல்லவைகள்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,
ⲏ̅ⲁⲗⲗⲁ ⲉϥⲟ ⲙⲙⲁⲓϣⲙⲙⲟ ⲙⲙⲁⲓ ⲡⲉⲧⲛⲁⲛⲟⲩϥ ⲛϩⲁⲕ ⲛⲇⲓⲕⲁⲓⲟⲥ ⲉϥⲟⲩⲁⲁⲃ ⲛⲉⲅⲕⲣⲁⲧⲏⲥ
9 ௯ ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்த்து பேசுகிறவர்களைக் கடிந்துகொள்ளவும் வல்லவனுமாக இருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாகப் பற்றிக்கொள்ளுகிறவனுமாக இருக்கவேண்டும்.
ⲑ̅ⲉϥϭⲟⲗϫ ⲙⲡϣⲁϫⲉ ⲉⲧⲛϩⲟⲧ ⲕⲁⲧⲁ ⲧⲉⲥⲃⲱ ϫⲉⲕⲁⲥ ⲉϥⲉϣϭⲙϭⲟⲙ ⲉⲥⲟⲡⲥ ϩⲛ ⲧⲉⲥⲃⲱ ⲉⲧⲟⲩⲟϫ ⲁⲩⲱ ⲉϫⲡⲓⲉ ⲛⲉⲧⲟⲩⲱϩⲙ
10 ௧0 அநேகர், விசேஷமாக விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண் பேச்சுக்காரர்களும், மனதை மயக்குகிறவர்களுமாக இருக்கிறார்கள்.
ⲓ̅ϩⲁϩ ⲅⲁⲣ ⲛⲉⲧⲉⲛⲥⲉϩⲩⲡⲟⲧⲁⲥⲥⲉ ⲁⲛ ⲛⲣⲉϥϫⲉϣⲁϫⲉ ⲛⲉⲡⲣⲁ ⲁⲩⲱ ⲛⲣⲉϥⲧⲁⲕⲉ ϩⲏⲧ ⲛϩⲟⲩⲟ ⲇⲉ ⲛⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲥⲃⲃⲉ
11 ௧௧ அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்திற்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
ⲓ̅ⲁ̅ⲛⲁⲓ ⲉϣϣⲉ ⲉϣⲧⲙⲣⲱⲟⲩ ⲛⲁⲓ ⲉⲧϣⲟⲣϣⲣ ⲛϩⲉⲛⲏⲉⲓ ⲧⲏⲣⲟⲩ ⲉⲩϯ ⲥⲃⲱ ⲛⲛⲉⲧⲉⲙⲉϣϣⲉ ⲉⲧⲃⲉ ⲟⲩⲙⲛⲧⲙⲁⲓϩⲏⲩ ⲛϣⲗⲟϥ
12 ௧௨ கிரேத்தா தீவைச்சேர்ந்தவர்கள் ஓயாத பொய்யர்கள், காட்டுமிராண்டிகள், பெருந்தீனிச் சோம்பேறிகள் என்று அவர்களில் ஒருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்.
ⲓ̅ⲃ̅ⲁⲩⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ϫⲟⲟⲥ ⲉⲃⲟⲗ ⲛϩⲏⲧⲟⲩ ϫⲉ ⲛⲉⲕⲣⲏⲧⲏⲥ ϩⲉⲛⲣⲉϥϫⲓϭⲟⲗ ⲛⲉ ⲛⲟⲩⲟⲉⲓϣ ⲛⲓⲙ ϩⲉⲛⲑⲏⲣⲓⲟⲛ ⲉⲩϩⲟⲟⲩ ⲛⲉ ϩⲉⲛϩⲏ ⲉⲩⲟⲩⲟⲥϥ ⲛⲉ
13 ௧௩ இந்தச் சாட்சி உண்மையாக இருக்கிறது; எனவே, அவர்கள் யூதர்களுடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தைவிட்டு விலகுகிற மனிதர்களுடைய கட்டளைகளுக்கும் செவிகொடுக்காமல்,
ⲓ̅ⲅ̅ⲧⲉⲓⲙⲛⲧⲙⲛⲧⲣⲉ ⲟⲩⲙⲉ ⲧⲉ ⲉⲧⲃⲉ ⲡⲁⲓ ϫⲡⲓⲟⲟⲩ ϩⲛ ⲟⲩϣⲱⲱⲧ ⲉⲃⲟⲗ ϫⲉⲕⲁⲥ ⲉⲩⲉⲟⲩϫⲁⲓ ϩⲛ ⲧⲡⲓⲥⲧⲓⲥ
14 ௧௪ விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.
ⲓ̅ⲇ̅ⲉⲛⲥⲉⲕⲱ ⲛϩⲧⲏⲩ ⲁⲛ ⲉϩⲉⲛϣϥⲱ ⲛⲓⲟⲩⲇⲁⲓ ⲙⲛ ϩⲉⲛⲉⲛⲧⲟⲗⲏ ⲛⲣⲱⲙⲉ ⲉⲩⲕⲧⲟ ⲙⲙⲟⲟⲩ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲧⲙⲉ
15 ௧௫ சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாக இருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாக இருக்காது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாக இருக்கும்.
ⲓ̅ⲉ̅ⲛⲕⲁ ⲛⲓⲙ ⲟⲩⲁⲁⲃ ⲛⲛⲉⲧⲟⲩⲁⲁⲃ ⲛⲉⲧϫⲁϩⲙ ⲇⲉ ⲙⲛ ⲛⲁⲡⲓⲥⲧⲟⲥ ⲙⲛ ⲗⲁⲁⲩ ⲟⲩⲁⲁⲃ ⲛⲁⲩ ⲁⲗⲗⲁ ⲛⲉⲩⲕⲉϩⲏⲧ ⲥⲟⲟϥ ⲙⲛ ⲧⲉⲩⲥⲩⲛⲓⲇⲏⲥⲓⲥ
16 ௧௬ அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், செயல்களினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நல்ல செயல்களையும் செய்ய தகுதியற்றவர்களுமாக இருக்கிறார்கள்.
ⲓ̅ⲋ̅ⲥⲉϩⲟⲙⲟⲗⲟⲅⲓ ϫⲉ ⲥⲉⲥⲟⲟⲩⲛ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲥⲉⲁⲣⲛⲁ ⲇⲉ ⲙⲙⲟϥ ϩⲛ ⲛⲉⲩϩⲃⲏⲩⲉ ⲉⲩⲃⲏⲧ ⲁⲩⲱ ⲉⲩⲟ ⲛⲁⲧⲥⲱⲧⲙ ⲛϫⲟⲟⲩⲧ ϩⲛ ϩⲱⲃ ⲛⲓⲙ ⲉⲧⲛⲁⲛⲟⲩϥ