< ரோமர் 9 >

1 எனக்கு அதிக துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது;
ⲁ̅⳿ⲑⲙⲏⲓ ⲡⲉϯϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϧⲉⲛ Ⲡⲭ̅ⲥ̅ ⳿ⲛϯ ϫⲉⲙⲉⲑⲛⲟⲩϫ ⲁⲛ ⲉⲥⲉⲣⲙⲉⲑⲣⲉ ⳿ⲉⲣⲟⲓ ⲛⲉⲙⲏⲓ ⳿ⲛϫⲉ ⲧⲁⲥⲩⲛⲏⲇⲉⲥⲓⲥ ϧⲉⲛ ⲟⲩⲡ͞ⲛⲁ̅ ⲉϥⲟⲩⲁⲃ.
2 நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவியானவருக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாக இருக்கிறது.
ⲃ̅ϫⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲛⲓϣϯ ⳿ⲛ⳿ⲙⲕⲁϩ ⳿ⲛϩⲏⲧ ⲛⲉⲙⲏ ⲓ ⲛⲉⲙ ⲟⲩϣⲉⲛϩⲏⲧ ⳿ⲙⲡⲁϥⲙⲟⲩⲛⲕ ϧⲉⲛ ⲡⲁϩⲏ ⲧ.
3 சரீரத்தின்படி என் இனத்தைச் சேர்ந்த என் சகோதரர்களுக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே.
ⲅ̅ⲛⲁⲓⲧⲱⲃϩ ⲅⲁⲣ ⳿ⲁⲛⲟⲕ ⳿ⲉⲉⲣ⳿ⲁⲛⲁⲑⲏⲙⲁ ⳿ⲉⲃⲟⲗ ϩⲁ Ⲡⲭ̅ⲥ̅ ⳿ⲉϫⲉⲛ ⲛⲁ⳿ⲥⲛⲏⲟⲩ ⲛⲁⲥⲩⲛⲅⲉⲛⲏⲥ ⲕⲁⲧⲁ ⲥⲁⲣⲝ.
4 அவர்கள் இஸ்ரவேலர்களே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவ ஆராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;
ⲇ̅ⲉⲧⲉ ⳿ⲛ⳿ⲓⲥⲣⲁⲏⲗⲓⲧⲏⲥ ⲛⲉ ⲛⲏⲉⲧⲉ ⲑⲱⲟⲩ ⲧⲉ ϯⲙⲉⲧϣⲏⲣⲓ ⲛⲉⲙ ⲡⲓⲱⲟⲩ ⲛⲉⲙ ⲛⲓⲇⲓ⳿ⲁⲑⲏⲕⲏ ⲛⲉⲙ ⲡⲓⲥⲉⲙⲛⲉ ⲛⲟⲙⲟⲥ ⲛⲉⲙ ⲡⲓϣⲉⲙϣⲓ ⲛⲉⲙ ⲛⲓⲱϣ.
5 முற்பிதாக்கள் அவர்களுடையவர்களே; சரீரத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலான தேவன். ஆமென். (aiōn g165)
ⲉ̅ⲛⲏⲉⲧⲉ ⳿ⲛⲟⲩⲟⲩ ⲛⲉ ⲛⲓⲓⲟϯ ⲟⲩⲟϩ ⳿ⲛⲑⲱⲟⲩ ⲟⲛ ⲁ Ⲡⲭ̅ⲥ̅ ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϧⲏⲧⲟⲩ ⲕⲁⲧⲁ ⲥⲁⲣⲝ ⲫⲏⲉⲧⲭⲏ ϩⲓϫⲉⲛ ⲟⲩⲟⲛ ⲛⲓⲃⲉⲛ ⲫϯ ⲉⲧ⳿ⲥⲙⲁⲣⲱⲟⲩⲧ ϣⲁ ⲉⲛⲉϩ ⲁⲙⲏⲛ. (aiōn g165)
6 தேவவசனம் நிறைவேறாமல்போனது என்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோரும் இஸ்ரவேலர் இல்லையே.
ⲋ̅ⲡⲁⲓⲣⲏϯ ⲇⲉ ⳿ⲙⲡⲉ ⲡⲓⲥⲁϫⲓ ⳿ⲛⲧⲉ ⲫϯ ϩⲉⲓ ⳿ⲉⲃⲟⲗ ⲟⲩ ⲅⲁⲣ ⲟⲩⲟⲛ ⲛⲓⲃⲉⲛ ⲁⲛ ⲉⲧⲉ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⳿ⲡⲓⲥ̅ⲗ̅ ⲛⲁⲓ ⲛⲉ ⳿ⲡⲓⲥ̅ⲗ̅.
7 அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தினராக இருந்தாலும் அனைவரும் பிள்ளைகள் அல்லவே; “ஈசாக்கினிடம் உன் வம்சம் விளங்கும்” என்று சொல்லியிருக்கிறதே.
ⲍ̅ⲟⲩⲇⲉ ϫⲉ ϩⲁⲛ⳿ϫⲣⲟϫ ⳿ⲛⲧⲉ ⲁⲃⲣⲁⲁⲙ ⲛⲉ ϩⲁⲛϣⲏⲣⲓ ⲧⲏⲣⲟⲩ ⲛⲉ ⲁⲗⲗⲁ ϧⲉⲛ ⳿ Ⲓⲥⲁⲁⲕ ⲉⲩ⳿ⲉⲑⲁϩⲉⲙ ⲟⲩ⳿ϫⲣⲟϫ ⲛⲁⲕ.
8 அது எப்படியென்றால், சரீரத்தின்படி பிள்ளைகள் ஆனவர்கள் தேவனுடைய பிள்ளைகள் அல்லவே, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகள் ஆனவர்களே அந்த வம்சம் என்று எண்ணப்படுகிறார்கள்.
ⲏ̅ⲉⲧⲉ ⲫⲁⲓ ⲡⲉ ϫⲉ ⲛⲓϣⲏⲣⲓ ⳿ⲛⲧⲉ ⳿ⲧⲥⲁⲣⲝ ⲁⲛ ⲛⲁⲓ ⲛⲉ ⲛⲓϣⲏⲣⲓ ⳿ⲛⲧⲉ ⲫϯ ⲁⲗⲗⲁ ⲛⲓϣⲏⲣⲓ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲱϣ ⲉⲧⲟⲩⲛⲁⲟⲡⲟⲩ ⲉⲩ⳿ϫⲣⲟϫ.
9 அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு மகனைப் பெறுவாள் என்பதே.
ⲑ̅ⲡⲁⲓⲥⲁϫⲓ ⲅⲁⲣ ⲫⲁ ⲟⲩⲱϣ ⲡⲉ ϫⲉ ⲕⲁⲧⲁ ⲡⲁⲓⲥⲏⲟⲩ ⲫⲁⲓ ⲉⲓ⳿ⲉ⳿ⲓ ⲟⲩⲟϩ ⲉⲣⲉ ⲟⲩϣⲏⲣⲓ ϣⲱⲡⲓ ⳿ⲛⲥⲁⲣⲣⲁ.
10 ௧0 இதுமட்டுமல்லாமல், நம்முடைய முற்பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது,
ⲓ̅ⲟⲩ ⲙⲟⲛⲟⲛ ⲇⲉ ⲁⲗⲗⲁ ⲛⲉⲙ ⳿ⲧⲕⲉⲉⲣⲉⲃⲉⲕⲕⲁ ⳿ⲉⲁⲥϭⲓ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲟⲩϣⲁ⳿ⲓⲣⲓ ⳿ⲛⲟⲩⲱⲧ ⳿ⲛⲧⲉ ⳿ Ⲓⲥⲁⲁⲕ ⲡⲉⲛⲓⲱⲧ.
11 ௧௧ குழந்தைகள் இன்னும் பிறக்காமலும், நன்மை தீமை ஒன்றும் செய்யாமல் இருக்கும்போது, தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படி இருக்கிற அவருடைய தீர்மானம், செயல்களினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படி,
ⲓ̅ⲁ̅ⲉⲙⲡⲁⲛⲧⲟⲩⲙⲁⲥⲟⲩ ⲅⲁⲣ ⲟⲩⲇⲉ ⳿ⲙⲡⲁⲧⲟⲩ⳿ⲓⲣⲓ ⳿ⲛⲟⲩϩⲱⲃ ⳿ⲉⲛⲁⲛⲉϥ ⲓⲉ ⲉϥϩⲱⲟⲩ ϩⲓⲛⲁ ϯⲙⲉⲧⲥⲱⲧⲡ ⲉⲧⲁ ⲫϯ ⲑⲁϣⲥ ⲓⲥϫⲉⲛ ϣⲟⲣⲡ ⳿ⲛⲧⲉⲥϣⲱⲡⲓ ⲉⲥ⳿ⲥⲙⲟⲛⲧ.
12 ௧௨ மூத்தவன், இளையவனுக்கு ஊழியம் செய்வான் என்று அவளுக்கு சொல்லப்பட்டது.
ⲓ̅ⲃ̅⳿ⲉⲛⲟⲩ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ϩⲁⲛ⳿ϩⲃⲏⲟⲩ⳿ⲓ ⲁⲛ ⲧⲉ ⲁⲗⲗⲁ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲡⲉⲧⲑⲱϩⲉⲙ ⲁⲩϫⲟⲥ ⲛⲁⲥ ϫⲉ ⲉⲣⲉ ⲡⲓⲛⲓϣϯ ⲉⲣⲃⲱⲕ ⳿ⲙⲡⲓⲕⲟⲩϫⲓ.
13 ௧௩ அப்படியே, யாக்கோபை நேசித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.
ⲓ̅ⲅ̅ⲕⲁⲧⲁ⳿ⲫⲣⲏϯ ⲉⲧ⳿ⲥϧⲏⲟⲩⲧ ϫⲉ ⲓⲁⲕⲱⲃ ⲙⲉⲛ ⲁⲓⲙⲉⲛⲣⲓⲧϥ ⲏⲥⲁⲩ ⲇⲉ ⲁⲓⲙⲉⲥⲧⲱϥ.
14 ௧௪ ஆகவே, நாம் என்னசொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.
ⲓ̅ⲇ̅ⲟⲩ ϫⲉ ⲡⲉⲧⲉⲛⲛⲁϫⲟϥ ⲙⲏ ⲟⲩⲟⲛ ⲟⲩⲙⲉⲧϭ ⲓ⳿ⲛϫⲟⲛⲥ ϧⲁⲧⲉⲛ ⲫϯ ⳿ⲛⲛⲉⲥϣⲱⲡⲓ.
15 ௧௫ அவர் மோசேயைப் பார்த்து: எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ அவன்மேல் இரக்கமாக இருப்பேன், எவன்மேல் உருக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ அவன்மேல் உருக்கமாக இருப்பேன் என்றார்.
ⲓ̅ⲉ̅⳿ϥϫⲱ ⲅⲁⲣ ⳿ⲙⲙⲟⲥ ⳿ⲙⲙⲱ⳿ⲩⲥⲏⲥ ϫⲉ ϯ ⲛⲁⲛⲁⲓ ⳿ⲙⲫⲏ ⳿ⲉϯⲛⲁⲛⲁⲓ ⲛⲁϥ ⲟⲩⲟϩ ϯⲛⲁϣⲉⲛϩⲏ ⲧ ϧⲁ ⲫⲏ ⳿ⲉϯⲛⲁϣⲉⲛϩⲏⲧ ϧⲁⲣⲟϥ.
16 ௧௬ ஆகவே, விரும்புகிறவனாலும் இல்லை, ஓடுகிறவனாலும் இல்லை, இரங்குகிற தேவனாலே ஆகும்.
ⲓ̅ⲋ̅ϩⲁⲣⲁ ⲟⲩⲛ ⲫⲁ ⲡⲉⲑⲟⲩⲱϣ ⲁⲛ ⲡⲉ ⲟⲩⲇⲉ ⳿ⲙⲫⲁ ⲡⲉⲧϭⲟϫⲓ ⲁⲛ ⲡⲉ ⲁⲗⲗⲁ ⲫⲁ ⲫϯ ⲉⲑⲛⲁⲓ ⲡⲉ.
17 ௧௭ மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடம் காண்பிப்பதற்காகவும், என்னுடைய பெயர் பூமியில் எங்கும் பிரசித்தமடைவதற்காகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனோடு சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.
ⲓ̅ⲍ̅⳿ⲥϫⲱ ⲅⲁⲣ ⳿ⲙⲙⲟⲥ ⳿ⲛϫⲉ ϯ⳿ⲅⲣⲁⲫⲏ ⳿ⲙⲫⲁⲣⲁⲱ ϫⲉ ⲉⲑⲃⲉ ⲫⲁⲓ ⲁⲓⲧⲟⲩⲛⲟⲥⲕ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲁⲟⲩⲱⲛϩ ⳿ⲛⲧⲁϫⲟⲙ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛ⳿ϧⲣⲏⲓ ⳿ⲛϧⲏⲧⲕ ⲟⲩⲟϩ ⳿ⲛⲥⲉⲫ⳿ⲓⲣⲓ ⳿ⲉⲡⲁⲣⲁⲛ ϩⲓϫⲉⲛ ⳿ⲡⲕⲁϩⲓ ⲧⲏⲣϥ.
18 ௧௮ எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.
ⲓ̅ⲏ̅ϩⲁⲣⲁ ⲟⲩⲛ ⲡⲉⲧⲉϥⲟⲩⲁϣϥ ϣⲁϥⲛⲁⲓ ⲛⲁϥ ⲫⲏ ⲇⲉ ⲉⲧⲁϥⲟⲩⲁϣϥ ⲁⲛ ϣⲁϥⲉⲑⲣⲉϥⲉⲛϣⲱⲧ.
19 ௧௯ அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய்.
ⲓ̅ⲑ̅⳿ⲭⲛⲁϫⲟⲥ ⲟⲩⲛ ⲛⲏⲓ ϫⲉ ⲉⲑⲃⲉⲟⲩ ⳿ϥϫⲉⲙ ⲁⲣⲓⲕⲓ ⲛⲓⲙ ⲅⲁⲣ ⲉϥϯ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉ⳿ϩⲣⲉⲛ ⲡⲉϥⲥⲟϭ ⲛⲓ.
20 ௨0 அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா?
ⲕ̅ⲙⲉⲛⲟⲩⲛⲅⲉ ⲱ ⳿ⲫⲣⲱⲙⲓ ⳿ⲛⲑⲟⲕ ⲛⲓⲙ ⳿ⲛⲑⲟⲕ ⲫⲏⲉⲧⲉⲣⲟⲩⲱ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉ⳿ϩⲣⲉⲛ ⲫϯ ⲙⲏ ⳿ⲉⲣⲉϣ ⲡⲓⲙⲟⲛⲕ ϫⲟⲥ ⳿ⲙⲫⲏⲉⲧⲁϥⲙⲟⲛⲕϥ ϫⲉ ⲉⲑⲃⲉⲟⲩ ⲁⲕⲑⲁⲙⲓⲟⲓ ⳿ⲙⲡⲁⲓⲣⲏϯ.
21 ௨௧ மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?
ⲕ̅ⲁ̅ϣⲁⲛ ⳿ⲙⲙⲟⲛ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲕⲉⲣⲁⲙⲉⲩⲥ ⳿ⲙ⳿ⲡⲉⲣϣⲓϣⲓ ⳿ⲙⲡⲉϥ⳿ⲟⲙⲓ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲡⲁⲓⲟⲩⲱϣⲉⲙ ⲣⲱ ⳿ⲉⲑⲁⲙⲓⲟ ⳿ⲛⲟⲩ⳿ⲥⲕⲉⲩⲟⲥ ⲟⲩⲁⲓ ⲙⲉⲛ ⳿ⲉ⳿ⲡⲧⲁⲓⲟ ⲕⲉⲟⲩⲁⲓ ⲇⲉ ⲉⲩϣⲱϣ.
22 ௨௨ தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,
ⲕ̅ⲃ̅ⲓⲥϫⲉ ⲇⲉ ⲁϥⲟⲩⲱϣ ⳿ⲛϫⲉ ⲫϯ ⲉϥⲟⲩⲱⲛϩ ⳿ⲙⲡⲉϥϫⲱⲛⲧ ⳿ⲉⲃⲟⲗ ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁⲙⲟⲛ ⳿ⲉⲧⲉϥϫⲟⲙ ⲁϥ⳿ⲓⲛⲓ ϧⲉⲛ ⲟⲩⲛⲓϣϯ ⳿ⲙⲙⲉⲧⲣⲉϥⲱⲟⲩ ⳿ⲛϩⲏⲧ ⳿ⲛϩⲁⲛ⳿ⲥⲕⲉⲩⲟⲥ ⳿ⲛⲧⲉ ⳿ⲡϫⲱⲛⲧ ⲉⲩⲥⲉⲃⲧⲱⲧ ⳿ⲉ⳿ⲡⲧⲁⲕⲟ.
23 ௨௩ தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன?
ⲕ̅ⲅ̅ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉϥⲟⲩⲱⲛϩ ⳿ⲛϯⲙⲉⲧⲣⲁⲙⲁ⳿ⲟ ⳿ⲛⲧⲉ ⲡⲉϥⲱⲟⲩ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϫⲉⲛ ϩⲁⲛ⳿ⲥⲕⲉⲩⲟⲥ ⳿ⲛⲛⲁⲓ ⲉⲧⲉ ⲛⲏ ⲛⲉ ⲉⲧⲁϥⲉⲣϣⲟⲣⲡ ⳿ⲛⲥⲉⲃⲧⲱⲧⲟⲩ ⲉⲩⲱⲟⲩ.
24 ௨௪ அவர் யூதர்களிலிருந்து மட்டுமல்ல, யூதரல்லாத மக்களிடமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே.
ⲕ̅ⲇ̅ⲉⲧⲉ ⳿ⲁⲛⲟⲛ ⲡⲉ ϧⲁ ⲛⲏⲉⲧⲁϥⲑⲁϩⲙⲟⲩ ⲟⲩ ⲙⲟⲛⲟⲛ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ⲁⲗⲗⲁ ⲛⲉⲙ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲓⲕⲉⲉⲑⲛⲟⲥ.
25 ௨௫ அந்தப்படி: “எனக்கு மக்களாக இல்லாதவர்களை என்னுடைய மக்கள் என்றும், நேசிக்கப்படாமல் இருந்தவளை நேசிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்.
ⲕ̅ⲉ̅⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⲟⲛ ⳿ⲉⲧⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⳿ⲛⲱⲥⲓⲉ ϫⲉ ϯⲛⲁⲙⲟⲩϯ ⳿ⲉⲫⲏⲉⲧⲉ ⲡⲁⲗⲁⲟⲥ ⲁⲛ ⲡⲉ ϫⲉ ⲡⲁⲗⲁⲟⲥ ⲟⲩⲟϩ ⲑⲏ ⲉⲧⲉ ⳿ⲙⲡⲟⲩⲙⲉⲛⲣⲓⲧⲥ ϫⲉ ⲁⲩⲙⲉⲛⲣⲓⲧⲥ.
26 ௨௬ நீங்கள் என்னுடைய மக்கள் இல்லை என்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்” என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.
ⲕ̅ⲋ̅ⲟⲩⲟϩ ⲉⲥ⳿ⲉϣⲱⲡⲓ ϧⲉⲛ ⲡⲓⲙⲁ ⲉⲧⲁⲩϫⲟⲥ ⲛⲱⲟⲩ ⳿ⲙⲙⲟϥ ϫⲉ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⲡⲁⲗⲁⲟⲥ ⲁⲛ ⳿ⲙⲡⲓⲙⲁ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲉⲩ⳿ⲉⲙⲟⲩϯ ⳿ⲉⲣⲱⲟⲩ ϫⲉ ⲛⲉⲛϣⲏ ⲣⲓ ⳿ⲙⲫϯ ⲉⲧⲟⲛϧ.
27 ௨௭ அல்லாமலும் இஸ்ரவேல் மக்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணலைப்போல இருந்தாலும், மீதியாக இருப்பவர்கள்மட்டும் இரட்சிக்கப்படுவார்கள் என்றும்;
ⲕ̅ⲍ̅ⲏⲥⲁ⳿ⲏⲁⲥ ⲇⲉ ⲉϥⲱϣ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲉϫⲉⲛ ⳿ⲡⲓⲥ̅ⲗ̅ ϫⲉ ⲉϣⲱⲡ ⲉⲣⲉ ⳿ⲧⲏⲡⲓ ⳿ⲛⲧⲉ ⲛⲉⲛϣⲏⲣⲓ ⳿ⲙ⳿ⲡⲓⲥ̅ⲗ̅ ⲉⲥⲟⲓ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲙⲡⲓϣⲱ ⳿ⲛⲧⲉ ⳿ⲫⲓⲟⲙ ⳿ⲡⲥⲱϫⲡ ⲉϥ⳿ⲉⲛⲟϩⲉⲙ.
28 ௨௮ அவர் நீதியோடு சீக்கிரமாகத் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார்” என்றும், ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான்.
ⲕ̅ⲏ̅ⲟⲩⲥⲁϫⲓ ⲅⲁⲣ ⲉϥϫⲱⲕ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲉⲃⲟⲗ ⲟⲩⲟϩ ⲉϥϣⲱⲧ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲉⲃⲟⲗ ⲫⲏⲉⲧⲉ Ⲡ⳪ ⲛⲁⲁⲓϥ ϩⲓϫⲉⲛ ⳿ⲡⲕⲁϩⲓ.
29 ௨௯ அல்லாமலும் ஏசாயா முன்பே சொன்னபடி: “சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு வம்சத்தைக்கூட மீதியாக வைக்காமல் இருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவைப்போல இருந்திருப்போம்.”
ⲕ̅ⲑ̅ⲟⲩⲟϩ ⲕⲁⲧⲁ⳿ⲫⲣⲏϯ ⲟⲛ ⲉⲧⲁϥϫⲟⲥ ⳿ⲛϫⲉ ⲏⲥⲁ⳿ⲏⲁⲥ ϫⲉ ⲉⲛⲉ⳿ⲙⲡⲉ Ⲡ⳪ ⲥⲁⲃⲁⲱⲑ ⲥⲱϫⲡ ⳿ⲛⲟⲩ⳿ϫⲣⲟϫ ⲛⲁⲛ ⲛⲁⲛⲛⲁⲉⲣ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲛⲥⲟⲇⲟⲙⲁ ⲡⲉ ⲟⲩⲟϩ ⲛⲁⲛⲛⲁ⳿ⲓⲛⲓ ⳿ⲛⲅⲟⲙⲟⲣⲣⲁ.
30 ௩0 இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்? நீதியைத் தேடாத யூதரல்லாத மக்கள் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினால் உண்டாகும் நீதியே.
ⲗ̅ⲟⲩ ϫⲉ ⲡⲉⲧⲉⲛⲛⲁϫⲟϥ ϫⲉ ⲛⲓⲉⲑⲛⲟⲥ ⲉⲧⲉ ⳿ⲙⲡⲟⲩϭⲟϫⲓ ⳿ⲛⲥⲁ ϯⲙⲉⲑⲙⲏⲓ ⲁⲩⲧⲁϩⲉ ϯⲙⲉⲑⲙⲏ ⲓ ϯⲙⲉⲑⲙⲏⲓ ⲇⲉ ϯ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⳿ⲫⲛⲁϩϯ.
31 ௩௧ நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை.
ⲗ̅ⲁ̅⳿ⲡⲓⲥ̅ⲗ̅ ⲇⲉ ⲉϥϭⲟϫⲓ ⳿ⲛⲥⲁ ⲡⲓⲛⲟⲙⲟⲥ ⳿ⲛⲧⲉ ϯⲙⲉⲑⲙⲏⲓ ⳿ⲙⲡⲉϥⲫⲟϩ ⳿ⲉⲡⲓⲛⲟⲙⲟⲥ.
32 ௩௨ ஏனென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் செயல்களினாலே தேடினதினால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.
ⲗ̅ⲃ̅ⲉⲑⲃⲉⲟⲩ ϫⲉ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⳿ⲫⲛⲁϩϯ ⲁⲛ ⲡⲉ ⲁⲗⲗⲁ ϩⲱⲥ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ϩⲁⲛ⳿ϩⲃⲏⲟⲩ⳿Ⲓ ⲁⲩϭⲓϭⲣⲟⲡ ⳿ⲉⲡⲓⲱⲛⲓ ⳿ⲛϭⲣⲟⲡ ⲕⲁⲧⲁ⳿ⲫⲣⲏϯ ⲉⲧ⳿ⲥϧⲏⲟⲩⲧ.
33 ௩௩ “இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுகிறதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை” என்று எழுதியிருக்கிறபடி நடந்தது.
ⲗ̅ⲅ̅ϫⲉ ϩⲏⲡⲡⲉ ϯⲛⲁⲭⲱ ϧⲉⲛ ⲥⲓⲱⲛ ⳿ⲛⲟⲩⲱⲛⲓ ⳿ⲛϭⲣⲟⲡ ⲛⲉⲙ ⲟⲩⲡⲉⲧⲣⲁ ⳿ⲛ⳿ⲥⲕⲁⲛⲇⲁⲗⲟⲛ ⲟⲩⲟϩ ⲫⲏⲉⲑⲛⲁϩϯ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲛⲛⲉϥϭⲓϣⲓⲡⲓ

< ரோமர் 9 >