< ரோமர் 6 >
1 ௧ ஆகவே, என்னசொல்லுவோம்? கிருபை பெருகுவதற்காகப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? சொல்லக்கூடாதே.
ప్రభూతరూపేణ యద్ అనుగ్రహః ప్రకాశతే తదర్థం పాపే తిష్ఠామ ఇతి వాక్యం కిం వయం వదిష్యామః? తన్న భవతు|
2 ௨ பாவத்திற்கு மரித்த நாம் இனி அதிலே எப்படி வாழ்வோம்?
పాపం ప్రతి మృతా వయం పునస్తస్మిన్ కథమ్ జీవిష్యామః?
3 ௩ கிறிஸ்து இயேசுவிற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாம் அனைவரும் அவருடைய மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமல் இருக்கிறீர்களா?
వయం యావన్తో లోకా యీశుఖ్రీష్టే మజ్జితా అభవామ తావన్త ఏవ తస్య మరణే మజ్జితా ఇతి కిం యూయం న జానీథ?
4 ௪ மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிய ஜீவனுள்ளவர்களாக நடந்துகொள்வதற்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவோடு அடக்கம் பண்ணப்பட்டோம்.
తతో యథా పితుః పరాక్రమేణ శ్మశానాత్ ఖ్రీష్ట ఉత్థాపితస్తథా వయమపి యత్ నూతనజీవిన ఇవాచరామస్తదర్థం మజ్జనేన తేన సార్ద్ధం మృత్యురూపే శ్మశానే సంస్థాపితాః|
5 ௫ ஆகவே, அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
అపరం వయం యది తేన సంయుక్తాః సన్తః స ఇవ మరణభాగినో జాతాస్తర్హి స ఇవోత్థానభాగినోఽపి భవిష్యామః|
6 ௬ நாம் இனிப் பாவத்திற்கு அடிமையாக இல்லாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோவதற்காக, நம்முடைய பழைய மனிதன் அவரோடு சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
వయం యత్ పాపస్య దాసాః పున ర్న భవామస్తదర్థమ్ అస్మాకం పాపరూపశరీరస్య వినాశార్థమ్ అస్మాకం పురాతనపురుషస్తేన సాకం క్రుశేఽహన్యతేతి వయం జానీమః|
7 ௭ மரித்தவன் பாவத்திற்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
యో హతః స పాపాత్ ముక్త ఏవ|
8 ௮ எனவே, கிறிஸ்துவோடு நாம் மரித்தோம் என்றால், அவரோடு பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.
అతఏవ యది వయం ఖ్రీష్టేన సార్ద్ధమ్ అహన్యామహి తర్హి పునరపి తేన సహితా జీవిష్యామ ఇత్యత్రాస్మాకం విశ్వాసో విద్యతే|
9 ௯ மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்து இனி இறப்பதில்லை என்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்ளுவதில்லை.
యతః శ్మశానాద్ ఉత్థాపితః ఖ్రీష్టో పున ర్న మ్రియత ఇతి వయం జానీమః| తస్మిన్ కోప్యధికారో మృత్యో ర్నాస్తి|
10 ௧0 அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேமுறை மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.
అపరఞ్చ స యద్ అమ్రియత తేనైకదా పాపమ్ ఉద్దిశ్యామ్రియత, యచ్చ జీవతి తేనేశ్వరమ్ ఉద్దిశ్య జీవతి;
11 ௧௧ அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
తద్వద్ యూయమపి స్వాన్ పాపమ్ ఉద్దిశ్య మృతాన్ అస్మాకం ప్రభుణా యీశుఖ్రీష్టేనేశ్వరమ్ ఉద్దిశ్య జీవన్తో జానీత|
12 ௧௨ ஆகவே, நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படிவதற்காக, மரணத்திற்குரிய உங்களுடைய சரீரத்தில் பாவம் ஆளுகை செய்யாமல் இருக்கட்டும்.
అపరఞ్చ కుత్సితాభిలాషాన్ పూరయితుం యుష్మాకం మర్త్యదేహేషు పాపమ్ ఆధిపత్యం న కరోతు|
13 ௧௩ நீங்கள் உங்களுடைய சரீர உறுப்புகளை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடுக்காமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களுடைய சரீர உறுப்புகளை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.
అపరం స్వం స్వమ్ అఙ్గమ్ అధర్మ్మస్యాస్త్రం కృత్వా పాపసేవాయాం న సమర్పయత, కిన్తు శ్మశానాద్ ఉత్థితానివ స్వాన్ ఈశ్వరే సమర్పయత స్వాన్యఙ్గాని చ ధర్మ్మాస్త్రస్వరూపాణీశ్వరమ్ ఉద్దిశ్య సమర్పయత|
14 ௧௪ நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறதினால், பாவம் உங்களை மேற்கொள்ளமுடியாது.
యుష్మాకమ్ ఉపరి పాపస్యాధిపత్యం పున ర్న భవిష్యతి, యస్మాద్ యూయం వ్యవస్థాయా అనాయత్తా అనుగ్రహస్య చాయత్తా అభవత|
15 ௧௫ இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறதினால், பாவம் செய்யலாமா? செய்யக்கூடாதே.
కిన్తు వయం వ్యవస్థాయా అనాయత్తా అనుగ్రహస్య చాయత్తా అభవామ, ఇతి కారణాత్ కిం పాపం కరిష్యామః? తన్న భవతు|
16 ௧௬ மரணத்திற்குரிய பாவத்திற்கானாலும், நீதிக்குரிய கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படிவதற்காக உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே அடிமைகளாக இருக்கிறீர்கள் என்று தெரியாமல் இருக்கிறீர்களா?
యతో మృతిజనకం పాపం పుణ్యజనకం నిదేశాచరణఞ్చైతయోర్ద్వయో ర్యస్మిన్ ఆజ్ఞాపాలనార్థం భృత్యానివ స్వాన్ సమర్పయథ, తస్యైవ భృత్యా భవథ, ఏతత్ కిం యూయం న జానీథ?
17 ௧௭ முன்பு நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாகக் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.
అపరఞ్చ పూర్వ్వం యూయం పాపస్య భృత్యా ఆస్తేతి సత్యం కిన్తు యస్యాం శిక్షారూపాయాం మూషాయాం నిక్షిప్తా అభవత తస్యా ఆకృతిం మనోభి ర్లబ్ధవన్త ఇతి కారణాద్ ఈశ్వరస్య ధన్యవాదో భవతు|
18 ௧௮ பாவத்திலிருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.
ఇత్థం యూయం పాపసేవాతో ముక్తాః సన్తో ధర్మ్మస్య భృత్యా జాతాః|
19 ௧௯ உங்களுடைய சரீர பலவீனத்தினால் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன். அக்கிரமத்தைச் செய்வதற்காக முன்பே நீங்கள் உங்களுடைய சரீர உறுப்புகளை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதைச் செய்வதற்காக உங்களுடைய சரீர உறுப்புகளை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்.
యుష్మాకం శారీరిక్యా దుర్బ్బలతాయా హేతో ర్మానవవద్ అహమ్ ఏతద్ బ్రవీమి; పునః పునరధర్మ్మకరణార్థం యద్వత్ పూర్వ్వం పాపామేధ్యయో ర్భృత్యత్వే నిజాఙ్గాని సమార్పయత తద్వద్ ఇదానీం సాధుకర్మ్మకరణార్థం ధర్మ్మస్య భృత్యత్వే నిజాఙ్గాని సమర్పయత|
20 ௨0 பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாக இருந்தகாலத்தில் நீதிக்கு விலகினவர்களாக இருந்தீர்கள்.
యదా యూయం పాపస్య భృత్యా ఆస్త తదా ధర్మ్మస్య నాయత్తా ఆస్త|
21 ௨௧ இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தெரிகிற காரியங்களினாலே அந்தகாலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.
తర్హి యాని కర్మ్మాణి యూయమ్ ఇదానీం లజ్జాజనకాని బుధ్యధ్వే పూర్వ్వం తై ర్యుష్మాకం కో లాభ ఆసీత్? తేషాం కర్మ్మణాం ఫలం మరణమేవ|
22 ௨௨ இப்பொழுது நீங்கள் பாவத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். (aiōnios )
కిన్తు సామ్ప్రతం యూయం పాపసేవాతో ముక్తాః సన్త ఈశ్వరస్య భృత్యాఽభవత తస్మాద్ యుష్మాకం పవిత్రత్వరూపం లభ్యమ్ అనన్తజీవనరూపఞ్చ ఫలమ్ ఆస్తే| (aiōnios )
23 ௨௩ பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (aiōnios )
యతః పాపస్య వేతనం మరణం కిన్త్వస్మాకం ప్రభుణా యీశుఖ్రీష్టేనానన్తజీవనమ్ ఈశ్వరదత్తం పారితోషికమ్ ఆస్తే| (aiōnios )