< ரோமர் 14 >

1 விசுவாசத்தில் பலவீனமாக உள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன சந்தேகங்களைக் குற்றமாக தீர்மானிக்காமல் இருங்கள்.
ⲁ̅ⲡⲉⲧϣⲱⲛⲓ ϧⲉⲛ ⳿ⲫⲛⲁϩϯ ϣⲟⲡϥ ⳿ⲉⲣⲱⲧⲉⲛ ϧⲉⲛ ϩⲁⲛϩⲓⲟⲓ ⲁⲛ ⳿ⲛⲧⲉ ϩⲁⲛⲙⲟⲕⲙⲉⲕ.
2 ஒருவன் எந்த உணவுப்பொருளையும் சாப்பிடலாம் என்று நம்புகிறான்; பலவீனமாக உள்ளவனோ காய்கறிகளைமட்டும் சாப்பிடுகிறான்.
ⲃ̅ⲟⲩⲟⲛ ⲡⲉⲑⲛⲁϩϯ ⲙⲉⲛ ⳿ⲉⲟⲩⲉⲙ ⲉⲛⲭⲁⲓ ⲛⲓⲃⲉⲛ ⲡⲉⲧϣⲱⲛⲓ ⲇⲉ ϣⲁϥⲟⲩⲉⲙ ⲟⲩⲟϯ.
3 சாப்பிடுகிறவன் சாப்பிடாமல் இருக்கிறவனை அற்பமாக நினைக்காமல் இருக்கவேண்டும்; சாப்பிடாமல் இருக்கிறவனும் சாப்பிடுகிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காமல் இருக்கவேண்டும்; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே.
ⲅ̅ⲫⲏⲉⲑⲟⲩⲱⲙ ⳿ⲙⲡⲉⲛ⳿ⲑⲣⲉϥϣⲉϣϥ ⲫⲏⲉⲧⲉ⳿ⲛ⳿ϥⲟⲩⲱⲙ ⲁⲛ ⲫⲏⲉⲧⲉ⳿ⲛ⳿ϥⲟⲩⲱⲙ ⲁⲛ ⳿ⲙⲡⲉⲛ⳿ⲑⲣⲉϥϯ ϩⲁⲡ ⳿ⲉⲡⲉⲑⲟⲩⲱⲙ ⲫϯ ⲅⲁⲣ ⲁϥϣⲟⲡϥ ⳿ⲉⲣⲟϥ.
4 மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய முதலாளிக்கே அவன் பொறுப்பாளி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராக இருக்கிறாரே.
ⲇ̅⳿ⲛⲑⲟⲕ ⲛⲓⲙ ⳿ⲛⲑⲟⲕ ⲫⲏⲉⲧϯϩⲁⲡ ⳿ⲉⲟⲩⲃⲱⲕ ⳿ⲛϣⲉⲙⲙⲟ ⲉϥⲟϩⲓ ⳿ⲉⲣⲁⲧϥ ⳿ⲉⲡⲉϥ⳪ ⲓⲉ ⲉϥⲛⲁϩⲉⲓ ⲉϥⲟϩⲓ ⲇⲉ ⳿ⲉⲣⲁⲧϥ ⲟⲩⲟⲛ ⳿ϣϫⲟⲙ ⳿ⲙⲠ⳪ ⳿ⲉⲧⲁϩⲟϥ ⳿ⲉⲣⲁⲧϥ.
5 அன்றியும், ஒருவன் ஒருநாளைவிட மற்றொரு நாள் சிறந்தது என்று நினைக்கிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சமமாக நினைக்கிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாக இருக்கட்டும்.
ⲉ̅ⲟⲩⲟⲛ ⲡⲉϯϩⲁⲡ ⲅⲁⲣ ⲙⲉⲛ ⳿ⲛ⳿ⲉϩⲟⲟⲩ ϧⲁ⳿ⲧϩⲏ ⳿ⲛ⳿ⲉϩⲟⲟⲩ ⲟⲩⲟⲛ ⲡⲉⲧϯϩⲁⲡ ⲇⲉ ⳿ⲛ⳿ⲉϩⲟⲟⲩ ⲛⲓⲃⲉⲛ ⲡⲓⲟⲩⲁⲓ ⲡⲓⲟⲩⲁⲓ ⲙⲁⲣⲉϥⲑⲱⲧ ⳿ⲛϩⲏⲧ ϧⲉⲛ ⲡⲉϥϩⲏⲧ ⳿ⲙⲙⲓⲛ ⳿ⲙⲙⲟϥ.
6 நாட்களை சிறப்பாக்கிக்கொள்கிறவன் கர்த்தருக்கென்று சிறப்பாக்கிக் கொள்கிறான்; நாட்களை சிறப்பாக்கிக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று சிறப்பாக்கிக் கொள்ளாமல் இருக்கிறான். சாப்பிடுகிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று சாப்பிடுகிறான்; சாப்பிடாமல் இருக்கிறவனும் கர்த்தருக்கென்று சாப்பிடாமல், தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறான்.
ⲋ̅ⲫⲏⲉⲑⲙⲉⲩⲓ ⳿ⲉⲡⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⲁϥⲙⲉⲩⲓ ⳿ⲉⲠ⳪ ⲟⲩⲟϩ ⲡⲉⲑⲟⲩⲱⲙ ⲁϥⲟⲩⲱⲙ ⳿ⲙⲠ⳪ ⳿ϥϣⲉⲡ⳿ϩⲙⲟⲧ ⲅⲁⲣ ⳿ⲛⲧⲉⲛ ⲫϯ ⲟⲩⲟϩ ⲫⲏⲉⲧⲉ⳿ⲛ⳿ϥⲟⲩⲱⲙ ⲁⲛ ⳿ϥⲟⲩⲱⲙ ⲁⲛ ⳿ⲙⲠ⳪ ⲟⲩⲟϩ ⳿ϥϣⲉⲡ⳿ϩⲙⲟⲧ ⳿ⲛⲧⲉⲛ ⲫϯ.
7 நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதும் இல்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதும் இல்லை.
ⲍ̅⳿ⲙⲙⲟⲛ ⳿ϩⲗⲓ ⲅⲁⲣ ⳿ⲙⲙⲟⲛ ⲛⲁⲱⲛϧ ⲛⲁϥ ⲟⲩⲟϩ ⳿ⲙⲙⲟⲛ ⳿ϩⲗⲓ ⲛⲁⲙⲟⲩ ⲛⲁϥ.
8 நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; எனவே, பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாக இருக்கிறோம்.
ⲏ̅ⲉϣⲱⲡ ⲅⲁⲣ ⲉⲛⲛⲁⲱⲛϧ ⲉⲛⲛⲁⲱⲛϧ ⳿ⲙⲡϭ̅ ⲥ̅ ⲉϣⲱⲡ ⲇⲉ ⲉⲛⲛⲁⲙⲟⲩ ⲉⲛⲛⲁⲙⲟⲩ ⳿ⲙⲠ⳪ ⳿ⲓⲧⲉ ⲟⲩⲛ ⲉⲛⲛⲁⲱⲛϧ ⳿ⲓⲧⲉ ⲉⲛⲛⲁⲙⲟⲩ ⳿ⲁⲛⲟⲛ ⲛⲁ Ⲡ⳪.
9 கிறிஸ்துவும் மரித்தவர்களுக்கும், ஜீவனுள்ளவர்களுக்கும் ஆண்டவராக இருப்பதற்காக, மரித்தும், உயிரோடு எழுந்தும், பிழைத்தும் இருக்கிறார்.
ⲑ̅ⲉⲑⲃⲉ ⲫⲁⲓ Ⲡⲭ̅ⲥ̅ ⲁϥⲙⲟⲩ ⲟⲩⲟϩ ⲁϥⲱⲛϧ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉϥⲉⲣ⳪ ⳿ⲉⲛⲏⲉⲑⲙⲱⲟⲩⲧ ⲛⲉⲙ ⲛⲏⲉⲧⲟⲛϧ.
10 ௧0 இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளி என்று தீர்க்கிறது என்ன? நீ உன் சகோதரனை அற்பமாக நினைக்கிறது என்ன? நாமெல்லோரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.
ⲓ̅⳿ⲛⲑⲟⲕ ⲇⲉ ⲉⲑⲃⲉⲟⲩ ⳿ⲕϯϩⲁⲡ ⳿ⲉⲡⲉⲕⲥⲟⲛ ⳿ⲙⲙⲟⲛ ⳿ⲛⲑⲟⲕ ϩⲱⲕ ⲉⲑⲃⲉⲟⲩ ⳿ⲕϣⲱϣ ⳿ⲙⲡⲉⲕⲥⲟⲛ ⳿ⲁⲛⲟⲛ ⲅⲁⲣ ⲧⲏⲣⲉⲛ ⲥⲉⲛⲁⲧⲁϩⲟⲛ ⳿ⲉⲣⲁⲧⲉⲛ ⲛⲁϩⲣⲉⲛ ⲡⲓⲃⲏⲙⲁ ⳿ⲛⲧⲉ ⲫϯ.
11 ௧௧ அப்படியே: “முழங்கால்கள் எல்லாம் எனக்கு முன்பாக முடங்கும், நாக்குகள் எல்லாம் தேவனை அறிக்கைப்பண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன்” என்பதாகக் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.
ⲓ̅ⲁ̅⳿ⲥ⳿ⲥϧⲏⲟⲩⲧ ⲅⲁⲣ ϫⲉ ϯⲟⲛϧ ⳿ⲁⲛⲟⲕ ⲡⲉϫⲉ Ⲡ⳪ ϫⲉ ⲕⲉⲗⲓ ⲛⲓⲃⲉⲛ ⲉⲩ⳿ⲉⲕⲱⲗϫ ⲛⲏⲓ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉ ⲗⲁⲥ ⲛⲓⲃⲉⲛ ⲟⲩⲱⲛϩ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲙⲫϯ.
12 ௧௨ எனவே, நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கு ஒப்புவிப்பான்.
ⲓ̅ⲃ̅ϩⲁⲣⲁ ⲟⲩⲛ ⲡⲓⲟⲩⲁⲓ ⲡⲓⲟⲩⲁⲓ ⳿ⲙⲙⲟⲛ ⳿ϥⲛⲁϯⲗⲟⲅⲟⲥ ⳿ⲉϫⲱϥ ⳿ⲙⲫϯ.
13 ௧௩ இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகள் என்று தீர்க்காமல் இருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடையையும் இடறலையும் போடக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
ⲓ̅ⲅ̅⳿ⲙⲡⲉⲛ⳿ⲑⲣⲉⲛϯϩⲁⲡ ⲟⲩⲛ ϫⲉ ⳿ⲉⲛⲉⲛⲉⲣⲏⲟⲩ ⲁⲗⲗⲁ ⲫⲁⲓ ⲙⲁⲗⲗⲟⲛ ⲙⲁϩⲁⲡ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲉ⳿ϣⲧⲉⲙⲭ ⲁ ⲟⲩϭⲣⲟⲡ ⲓⲉ ⲟⲩ⳿ⲥⲕⲁⲛⲇⲁⲗⲟⲛ ⳿ⲙⲡⲉⲕⲥⲟⲛ.
14 ௧௪ எந்தப்பொருளும் தன்னில்தானே தீட்டானவைகள் இல்லை என்று கர்த்தராகிய இயேசுவிற்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டானது என்று நினைக்கிறவன் எவனோ அவனுக்கு அது தீட்டானதாக இருக்கும்.
ⲓ̅ⲇ̅ϯ⳿ⲉⲙⲓ ⲟⲩⲟϩ ⲡⲁϩⲏⲧ ⲑⲏⲧ ϧⲉⲛ Ⲡ⳪ Ⲓⲏ̅ⲥ̅ ϫⲉ ⳿ⲙⲙⲟⲛ ⳿ϩⲗⲓ ⲉϥϭⲁϧⲉⲙ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲧϥ ⳿ⲉⲃⲏⲗ ⳿ⲉⲫⲏⲉⲑⲙⲉⲩⲓ ⳿ⲉⲟⲩⲉⲛⲭⲁⲓ ϫⲉ ⳿ϥ ϭⲁϧⲉⲙ ⳿ϥϭⲁϧⲉⲙ ⳿ⲛⲧⲟⲧϥ ⳿ⲙⲫⲏ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ.
15 ௧௫ ஆகாரத்தினாலே உன் சகோதரனுக்கு விசனம் உண்டாக்கினால், நீ அன்பாக நடக்கிறவன் இல்லை; அவனை உன் ஆகாரத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே.
ⲓ̅ⲉ̅ⲓⲥϫⲉ ⲅⲁⲣ ⲉⲑⲃⲉ ⲟⲩ⳿ϧⲣⲉ ⲁⲣⲉ ⲡⲉⲕⲥⲟⲛ ⲛⲁⲉⲣ⳿ⲥⲕⲁⲛⲇⲁⲗⲓⲍⲉⲥⲑⲉ ⲓⲉ ⳿ⲕⲙⲟϣⲓ ⲁⲛ ϫⲉ ⲕⲁⲧⲁ ⲟⲩⲁⲅⲁⲡⲏ ⳿ⲙⲡⲉⲣⲧⲁⲕⲉ ⲫⲏⲉⲧⲁ Ⲡⲭ̅ⲥ̅ ⲙⲟⲩ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϫⲱϥ ϧⲉⲛ ⲧⲉⲕ⳿ϧⲣⲉ.
16 ௧௬ உங்களுடைய நல்ல செயல்கள் அவமதிக்கப்பட இடங்கொடுக்காமல் இருங்கள்.
ⲓ̅ⲋ̅⳿ⲙⲡⲉⲛ⳿ⲑⲣⲟⲩϫⲉⲟⲩ⳿ⲁ ⲟⲩⲛ ⳿ⲉⲡⲉⲧⲉⲛⲡⲉⲑⲛⲁⲛⲉϥ.
17 ௧௭ தேவனுடைய ராஜ்யம் சாப்பிடுவதும் குடிப்பதும் இல்லை, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியானவரால் உண்டாகும் சந்தோஷமாகவும் இருக்கிறது.
ⲓ̅ⲍ̅ϯⲙⲉⲧⲟⲩⲣⲟ ⲅⲁⲣ ⳿ⲛⲧⲉ ⲫϯ ⲛⲁⲥϧⲉⲛ ⲟⲩⲱⲙ ⲁⲛ ⲛⲉⲙ ⲟⲩⲥⲱ ⲁⲗⲗⲁ ⲁⲥϧⲉⲛ ⲟⲩⲙⲉⲑⲙⲏ ⲓ ⲛⲉⲙ ⲟⲩϩⲓⲣⲏⲛⲏ ⲛⲉⲙ ⲟⲩⲣⲁϣⲓ ϧⲉⲛ ⲟⲩⲡ͞ⲛⲁ̅ ⲉϥⲟⲩⲁⲃ.
18 ௧௮ இவைகளிலே கிறிஸ்துவிற்கு ஊழியம் செய்கிறவன் தேவனுக்குப் பிரியமானவனும் மனிதனால் அங்கீகரிக்கப்பட்டவனுமாக இருக்கிறான்.
ⲓ̅ⲏ̅ⲫⲏ ⲅⲁⲣ ⲉⲧⲟⲓ ⳿ⲙⲃⲱⲕ ϧⲉⲛ ⲛⲁⲓ ⳿ⲉⲠⲭ̅ⲥ̅ ⳿ϥⲣⲁⲛⲁϥ ⳿ⲙⲫϯ ⲟⲩⲟϩ ⳿ϥⲥⲟⲩⲧⲱⲛ ⲡⲉ ϧⲉⲛ ⲛⲓⲣⲱⲙⲓ.
19 ௧௯ எனவே, சமாதானத்திற்குரியவைகளையும், ஐக்கிய பக்திவளர்ச்சியை உண்டாக்கக்கூடியவைகளையும் நாடுவோம்.
ⲓ̅ⲑ̅ϩⲁⲣⲁ ⲟⲩⲛ ⲙⲁⲣⲉⲛϭⲟϫⲓ ⳿ⲛⲥⲁ ⲛⲁ ϯϩⲓⲣⲏⲛⲏ ⲛⲉⲙ ⲛⲁ ⲡⲓⲕⲱⲧ ⳿ⲉⲛⲉⲛⲉⲣⲏⲟⲩ.
20 ௨0 ஆகாரத்திற்காக தேவனுடைய செயல்களை அழித்துப்போடாதே. எந்த உணவுப்பொருளும் சுத்தமானதுதான்; ஆனாலும் இடறல் உண்டாகச் சாப்பிடுகிறவனுக்கு அது தீமையாக இருக்கும்.
ⲕ̅⳿ⲙⲡⲉⲣⲃⲉⲗ ⲡⲓϩⲱⲃ ⳿ⲛⲧⲉ ⲫϯ ⳿ⲉⲃⲟⲗ ⲉⲑⲃⲉ ⲟⲩ⳿ϧⲣⲉ ⲥⲉⲟⲩⲁⲃ ⲙⲉⲛ ⲧⲏⲣⲟⲩ ⲁⲗⲗⲁ ⲟⲩⲡⲉⲧϩⲱⲟⲩ ⲡⲉ ⳿ⲙⲡⲓⲣⲱⲙⲓ ⲫⲏⲉⲑⲛⲁⲟⲩⲱⲙ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲉⲛ ⲟⲩϭⲣⲟⲡ.
21 ௨௧ இறைச்சி சாப்பிடுவதும், மதுபானம் அருந்துகிறதும், வேறு எதையாவது செய்கிறதும், உன் சகோதரன் இடறுவதற்கோ, தவறுவதற்கோ, பலவீனப்படுகிறதற்கோ காரணமாக இருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமல் இருப்பதே நன்மையாக இருக்கும்.
ⲕ̅ⲁ̅ⲛⲁⲛⲉⲥ ⳿ⲉ⳿ϣⲧⲉⲙⲟⲩⲉⲙ ⲁϥ ⲟⲩⲇⲉ ⳿ⲉ⳿ϣⲧⲉⲙⲥⲉ ⲏⲣⲡ ⲛⲉⲙ ⲫⲏⲉⲧⲉ ⲡⲉⲕⲥⲟⲛ ⲛⲁ ϭⲓϭⲣⲟⲡ ⳿ⲛϧⲏⲧϥ.
22 ௨௨ உனக்கு விசுவாசம் இருந்தால் அது தேவனுக்குமுன்பாக உனக்குள்மட்டும் இருக்கட்டும். நல்லது என்று நிச்சயித்த விஷயத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான்.
ⲕ̅ⲃ̅⳿ⲛⲑⲟⲕ ⲟⲩⲟⲛⲧⲁⲕ ⳿ⲛⲟⲩⲛⲁϩϯ ⳿ⲙⲙⲁⲩ ⲭⲁϥ ⳿ⲛϧⲏⲧⲕ ⳿ⲙⲡⲉ⳿ⲙⲑⲟ ⳿ⲙⲫϯ ⲱⲟⲩⲛⲓ⳿ⲁⲧϥ ⳿ⲙⲫⲏⲉⲧⲉ⳿ⲛ⳿ϥⲛⲁϯϩⲁⲡ ⳿ⲉⲣⲟϥ ⲁⲛ ϧⲉⲛ ⲫⲏⲉⲧⲉϥⲛⲁⲉⲣⲇⲟⲕⲓⲙⲁⲍⲓⲛ ⳿ⲙⲙⲟϥ.
23 ௨௩ ஒருவன் சந்தேகத்துடன் சாப்பிட்டால், அவன் விசுவாசம் இல்லாமல் சாப்பிடுகிறதினால், தண்டனைக்குரியவனாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத எதுவும் பாவமே.
ⲕ̅ⲅ̅ⲫⲏ ⲇⲉ ⲉⲧⲟⲓ ⳿ⲛϩⲏⲧ ⲃ̅ ⲉϣⲱⲡ ⲁϥϣⲁⲛⲟⲩⲱⲙ ⲁϥϩⲓⲧϥ ⳿ⲉ⳿ⲡϩⲁⲡ ϫⲉ ⳿ⲛⲟⲩ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲟⲩⲛⲁϩϯ ⲁⲛ ⲡⲉ ϩⲱⲃ ⲇⲉ ⲛⲓⲃⲉⲛ ⲉⲧⲉ⳿ⲛⲟⲩ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲟⲩⲛⲁϩϯ ⲁⲛ ⲡⲉ ⲟⲩⲛⲟⲃⲓ ⲡⲉ

< ரோமர் 14 >