< ரோமர் 13 >
1 ௧ எந்த மனிதனும் உயர் அதிகாரம் உள்ளவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும்; ஏனென்றால், தேவனாலேயல்லாமல் ஒரு அதிகாரமும் இல்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
ਯੁਸ਼਼੍ਮਾਕਮ੍ ਏਕੈਕਜਨਃ ਸ਼ਾਸਨਪਦਸ੍ਯ ਨਿਘ੍ਨੋ ਭਵਤੁ ਯਤੋ ਯਾਨਿ ਸ਼ਾਸਨਪਦਾਨਿ ਸਨ੍ਤਿ ਤਾਨਿ ਸਰ੍ੱਵਾਣੀਸ਼੍ਵਰੇਣ ਸ੍ਥਾਪਿਤਾਨਿ; ਈਸ਼੍ਵਰੰ ਵਿਨਾ ਪਦਸ੍ਥਾਪਨੰ ਨ ਭਵਤਿ|
2 ௨ எனவே, அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே தண்டனையை வரவழைத்துக்கொள்கிறார்கள்.
ਇਤਿ ਹੇਤੋਃ ਸ਼ਾਸਨਪਦਸ੍ਯ ਯਤ੍ ਪ੍ਰਾਤਿਕੂਲ੍ਯੰ ਤਦ੍ ਈਸ਼੍ਵਰੀਯਨਿਰੂਪਣਸ੍ਯ ਪ੍ਰਾਤਿਕੂਲ੍ਯਮੇਵ; ਅਪਰੰ ਯੇ ਪ੍ਰਾਤਿਕੂਲ੍ਯਮ੍ ਆਚਰਨ੍ਤਿ ਤੇ ਸ੍ਵੇਸ਼਼ਾਂ ਸਮੁਚਿਤੰ ਦਣ੍ਡੰ ਸ੍ਵਯਮੇਵ ਘਟਯਨ੍ਤੇ|
3 ௩ மேலும் அதிகாரிகள் நல்ல செயல்களுக்கு அல்ல, தீய செயல்களுக்கே பயங்கரமாக இருக்கிறார்கள்; எனவே, நீ அதிகாரத்திற்குப் பயப்படாமல் இருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.
ਸ਼ਾਸ੍ਤਾ ਸਦਾਚਾਰਿਣਾਂ ਭਯਪ੍ਰਦੋ ਨਹਿ ਦੁਰਾਚਾਰਿਣਾਮੇਵ ਭਯਪ੍ਰਦੋ ਭਵਤਿ; ਤ੍ਵੰ ਕਿੰ ਤਸ੍ਮਾਨ੍ ਨਿਰ੍ਭਯੋ ਭਵਿਤੁਮ੍ ਇੱਛਸਿ? ਤਰ੍ਹਿ ਸਤ੍ਕਰ੍ੰਮਾਚਰ, ਤਸ੍ਮਾਦ੍ ਯਸ਼ੋ ਲਪ੍ਸ੍ਯਸੇ,
4 ௪ உனக்கு நன்மை உண்டாவதற்காக, அவன் தேவனுடைய ஊழியக்காரனாக இருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் வீணாகப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபத்தின் தண்டனையை வரப்பண்ணுவதற்காக, அவன் நீதியைச் செலுத்துகிற தேவனுடைய ஊழியக்காரனாக இருக்கிறானே.
ਯਤਸ੍ਤਵ ਸਦਾਚਰਣਾਯ ਸ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਭ੍ਰੁʼਤ੍ਯੋ(ਅ)ਸ੍ਤਿ| ਕਿਨ੍ਤੁ ਯਦਿ ਕੁਕਰ੍ੰਮਾਚਰਸਿ ਤਰ੍ਹਿ ਤ੍ਵੰ ਸ਼ਙ੍ਕਸ੍ਵ ਯਤਃ ਸ ਨਿਰਰ੍ਥਕੰ ਖਙ੍ਗੰ ਨ ਧਾਰਯਤਿ; ਕੁਕਰ੍ੰਮਾਚਾਰਿਣੰ ਸਮੁਚਿਤੰ ਦਣ੍ਡਯਿਤੁਮ੍ ਸ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਦਣ੍ਡਦਭ੍ਰੁʼਤ੍ਯ ਏਵ|
5 ௫ எனவே, நீங்கள் கோபத்தின் தண்டனைக்காக மட்டுமில்லை, மனச்சாட்சிக்காகவும் கீழ்ப்படியவேண்டும்.
ਅਤਏਵ ਕੇਵਲਦਣ੍ਡਭਯਾੰਨਹਿ ਕਿਨ੍ਤੁ ਸਦਸਦ੍ਬੋਧਾਦਪਿ ਤਸ੍ਯ ਵਸ਼੍ਯੇਨ ਭਵਿਤਵ੍ਯੰ|
6 ௬ இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவனுடைய ஊழியக்காரர்களாக இருக்கிறார்களே.
ਏਤਸ੍ਮਾਦ੍ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਰਾਜਕਰਦਾਨਮਪ੍ਯੁਚਿਤੰ ਯਸ੍ਮਾਦ੍ ਯੇ ਕਰੰ ਗ੍ਰੁʼਹ੍ਲਨ੍ਤਿ ਤ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਕਿਙ੍ਕਰਾ ਭੂਤ੍ਵਾ ਸਤਤਮ੍ ਏਤਸ੍ਮਿਨ੍ ਕਰ੍ੰਮਣਿ ਨਿਵਿਸ਼਼੍ਟਾਸ੍ਤਿਸ਼਼੍ਠਨ੍ਤਿ|
7 ௭ எனவே எல்லோருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; யாருக்கு வரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு வரியையும், யாருக்கு சொத்துவரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு சொத்துவரியையும் செலுத்துங்கள்; யாருக்குப் பயப்படவேண்டுமோ அவனுக்குப் பயப்படுங்கள்; யாருக்கு மதிப்புக் கொடுக்கவேண்டுமோ அவனுக்கு மதிப்புக் கொடுங்கள்.
ਅਸ੍ਮਾਤ੍ ਕਰਗ੍ਰਾਹਿਣੇ ਕਰੰ ਦੱਤ, ਤਥਾ ਸ਼ੁਲ੍ਕਗ੍ਰਾਹਿਣੇ ਸ਼ੁਲ੍ਕੰ ਦੱਤ, ਅਪਰੰ ਯਸ੍ਮਾਦ੍ ਭੇਤਵ੍ਯੰ ਤਸ੍ਮਾਦ੍ ਬਿਭੀਤ, ਯਸ਼੍ਚ ਸਮਾਦਰਣੀਯਸ੍ਤੰ ਸਮਾਦ੍ਰਿਯਧ੍ਵਮ੍; ਇੱਥੰ ਯਸ੍ਯ ਯਤ੍ ਪ੍ਰਾਪ੍ਯੰ ਤਤ੍ ਤਸ੍ਮੈ ਦੱਤ|
8 ௮ ஒருவரிலொருவர் அன்பு செலுத்துகிற கடனைத்தவிர, வேறு எதிலும் யாருக்கும் கடன்படாமல் இருங்கள்; அயலகத்தாரிடம் அன்புசெலுத்துகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.
ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਪਰਸ੍ਪਰੰ ਪ੍ਰੇਮ ਵਿਨਾ (ਅ)ਨ੍ਯਤ੍ ਕਿਮਪਿ ਦੇਯਮ੍ ਰੁʼਣੰ ਨ ਭਵਤੁ, ਯਤੋ ਯਃ ਪਰਸ੍ਮਿਨ੍ ਪ੍ਰੇਮ ਕਰੋਤਿ ਤੇਨ ਵ੍ਯਵਸ੍ਥਾ ਸਿਧ੍ਯਤਿ|
9 ௯ எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சிக்காமல் இருப்பாயாக என்கிற இந்தக் கட்டளைகளும், வேறு எந்தக் கட்டளையும், உன்னிடத்தில் நீ அன்பாக செலுத்துவதுபோல மற்றவனிடமும் அன்புசெலுத்துவாயாக என்கிற ஒரே வாக்கியத்தில் அடங்கியிருக்கிறது.
ਵਸ੍ਤੁਤਃ ਪਰਦਾਰਾਨ੍ ਮਾ ਗੱਛ, ਨਰਹਤ੍ਯਾਂ ਮਾ ਕਾਰ੍ਸ਼਼ੀਃ, ਚੈਰ੍ੱਯੰ ਮਾ ਕਾਰ੍ਸ਼਼ੀਃ, ਮਿਥ੍ਯਾਸਾਕ੍ਸ਼਼੍ਯੰ ਮਾ ਦੇਹਿ, ਲੋਭੰ ਮਾ ਕਾਰ੍ਸ਼਼ੀਃ, ਏਤਾਃ ਸਰ੍ੱਵਾ ਆਜ੍ਞਾ ਏਤਾਭ੍ਯੋ ਭਿੰਨਾ ਯਾ ਕਾਚਿਦ੍ ਆਜ੍ਞਾਸ੍ਤਿ ਸਾਪਿ ਸ੍ਵਸਮੀਪਵਾਸਿਨਿ ਸ੍ਵਵਤ੍ ਪ੍ਰੇਮ ਕੁਰ੍ੱਵਿਤ੍ਯਨੇਨ ਵਚਨੇਨ ਵੇਦਿਤਾ|
10 ௧0 அன்பு மற்றவனுக்கு தீமை செய்யாது; எனவே, அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக இருக்கிறது.
ਯਤਃ ਪ੍ਰੇਮ ਸਮੀਪਵਾਸਿਨੋ(ਅ)ਸ਼ੁਭੰ ਨ ਜਨਯਤਿ ਤਸ੍ਮਾਤ੍ ਪ੍ਰੇਮ੍ਨਾ ਸਰ੍ੱਵਾ ਵ੍ਯਵਸ੍ਥਾ ਪਾਲ੍ਯਤੇ|
11 ௧௧ தூக்கத்தைவிட்டு எழுந்திருக்க வேண்டிய நேரமானது என்று, நாம் நேரத்தை அறிந்தவர்களாக, இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு அருகில் இருந்ததைவிட இப்பொழுது அது நமக்கு மிக அருகில் இருக்கிறது.
ਪ੍ਰਤ੍ਯਯੀਭਵਨਕਾਲੇ(ਅ)ਸ੍ਮਾਕੰ ਪਰਿਤ੍ਰਾਣਸ੍ਯ ਸਾਮੀਪ੍ਯਾਦ੍ ਇਦਾਨੀਂ ਤਸ੍ਯ ਸਾਮੀਪ੍ਯਮ੍ ਅਵ੍ਯਵਹਿਤੰ; ਅਤਃ ਸਮਯੰ ਵਿਵਿਚ੍ਯਾਸ੍ਮਾਭਿਃ ਸਾਮ੍ਪ੍ਰਤਮ੍ ਅਵਸ਼੍ਯਮੇਵ ਨਿਦ੍ਰਾਤੋ ਜਾਗਰ੍ੱਤਵ੍ਯੰ|
12 ௧௨ இரவு கடந்துபோனது, பகல் அருகில் வந்துவிட்டது; எனவே, இருளின் செயல்களை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களை அணிந்துகொள்வோம்.
ਬਹੁਤਰਾ ਯਾਮਿਨੀ ਗਤਾ ਪ੍ਰਭਾਤੰ ਸੰਨਿਧਿੰ ਪ੍ਰਾਪ੍ਤੰ ਤਸ੍ਮਾਤ੍ ਤਾਮਸੀਯਾਃ ਕ੍ਰਿਯਾਃ ਪਰਿਤ੍ਯਜ੍ਯਾਸ੍ਮਾਭਿ ਰ੍ਵਾਸਰੀਯਾ ਸੱਜਾ ਪਰਿਧਾਤਵ੍ਯਾ|
13 ௧௩ களியாட்டும், வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாக நடக்காமல், பகலிலே நடக்கிறவர்கள்போல ஒழுங்காக நடப்போம்.
ਅਤੋ ਹੇਤੋ ਰ੍ਵਯੰ ਦਿਵਾ ਵਿਹਿਤੰ ਸਦਾਚਰਣਮ੍ ਆਚਰਿਸ਼਼੍ਯਾਮਃ| ਰਙ੍ਗਰਸੋ ਮੱਤਤ੍ਵੰ ਲਮ੍ਪਟਤ੍ਵੰ ਕਾਮੁਕਤ੍ਵੰ ਵਿਵਾਦ ਈਰ੍ਸ਼਼੍ਯਾ ਚੈਤਾਨਿ ਪਰਿਤ੍ਯਕ੍ਸ਼਼੍ਯਾਮਃ|
14 ௧௪ தீய இச்சைகளுக்கு இடமாக சரீரத்தைக் கொடுக்காமல், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்.
ਯੂਯੰ ਪ੍ਰਭੁਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਰੂਪੰ ਪਰਿੱਛਦੰ ਪਰਿਧੱਧ੍ਵੰ ਸੁਖਾਭਿਲਾਸ਼਼ਪੂਰਣਾਯ ਸ਼ਾਰੀਰਿਕਾਚਰਣੰ ਮਾਚਰਤ|