< ரோமர் 13 >
1 ௧ எந்த மனிதனும் உயர் அதிகாரம் உள்ளவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும்; ஏனென்றால், தேவனாலேயல்லாமல் ஒரு அதிகாரமும் இல்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
୧ସାସନ୍କାରିଆମନର୍ କାତା ସବୁ ଲକ୍ ମାନ୍ବାକେ ବାଦିଅ, କାଇକେବଇଲେ ପରମେସର୍ ଆଦେସ୍ ନ ଦେଲେ କେ ମିସା ସାସନ୍ କର୍ବାକେ ଅଦିକାର୍ ନ ପାଏ । ଗାଦିଟାନେ ରଇଲା ସାସନ୍କାରିଆମନ୍କେ ପରମେସର୍ ବସାଇଲା ଆଚେ ।
2 ௨ எனவே, அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே தண்டனையை வரவழைத்துக்கொள்கிறார்கள்.
୨ସେଟାର୍ ପାଇ ଜେ ଗାଦିତେଇ ବସ୍ଲା ସାସନ୍କାରିଆମନ୍କେ ବିରଦ୍ କର୍ସି, ସେ ପରମେସର୍ ତିଆର୍କଲା ଗାଦିର ବିରଦ୍ କଲାନି । ଜେ ଏଟା କର୍ସି ସେ ପର୍ମେସରର୍ ବିଚାର୍ନା ଜାଗାଇ ଟିଆଅଇସି ।
3 ௩ மேலும் அதிகாரிகள் நல்ல செயல்களுக்கு அல்ல, தீய செயல்களுக்கே பயங்கரமாக இருக்கிறார்கள்; எனவே, நீ அதிகாரத்திற்குப் பயப்படாமல் இருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.
୩ଆମର୍ ଚଲାଚଲ୍ତି ସତ୍ ରଇଲେ ସାସନ୍କାରିଆକେ ଡର୍ବାର୍ ଦର୍କାର୍ ନାଇ । କାରାପ୍ ରଇଲେ ଡର୍ବାର୍ ଆଚେ । ସାସନ୍କାରିଆମନ୍କେ ତମେ ଡର୍ବାକେ ମନ୍ କରାସ୍ ନାଇ, ସେନ୍ତାର୍ଆଲେ ନିକ କାମ୍ କରା ଆରି ସେମନ୍ ତମ୍କେ ନାମ୍ବାଇ ।
4 ௪ உனக்கு நன்மை உண்டாவதற்காக, அவன் தேவனுடைய ஊழியக்காரனாக இருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் வீணாகப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபத்தின் தண்டனையை வரப்பண்ணுவதற்காக, அவன் நீதியைச் செலுத்துகிற தேவனுடைய ஊழியக்காரனாக இருக்கிறானே.
୪ସେମନ୍ ପର୍ମେସରର୍ ଗତିଦାଙ୍ଗ୍ଡାମନ୍ ଆରି ତମର୍ ନିକପାଇସେ କାମ୍ କଲାଇନି । ତମେ ଜଦି କାରାପ୍ କାମ୍ କର୍ତେରଇସା, ତେବେ ସେମନ୍କେ ଡର୍ବାର୍ ଆଚେ । କାଇକେବଇଲେ ତମ୍କେ ଡଣ୍ଡ୍ ଦେବାକେ ତାକର୍ ଅଦିକାର୍ ଆଚେ । ସେମନ୍ ପର୍ମେସରର୍ ଗତିଦାଙ୍ଗ୍ଡା ଆରି ଜେତ୍କି ଲକ୍ କାରାପ୍ କାମ୍ କର୍ତେରଇବାଇ, ସେମନ୍କେ ପର୍ମେସର୍ ଡଣ୍ଡ୍ ଦେବାଇ ।
5 ௫ எனவே, நீங்கள் கோபத்தின் தண்டனைக்காக மட்டுமில்லை, மனச்சாட்சிக்காகவும் கீழ்ப்படியவேண்டும்.
୫ସେଟାର୍ପାଇ ତମେ ସାସନ୍କାରିଆମନର୍ କାତା ମାନ୍ବାର୍ ଆଚେ । ଉଜେ ପରମେସରର୍ ଡଣ୍ଡ୍ ଡରିକରି ନାଇ, ମାତର୍ ନିଜର୍ ବୁଦିସଙ୍ଗ୍ ଏଟା ଟିକ୍ କାମ୍ ବଲି ଜାନିକରି ମିସା ଏଟା କର୍ବାର୍ ଆଚେ ।
6 ௬ இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவனுடைய ஊழியக்காரர்களாக இருக்கிறார்களே.
୬ଏଟାର୍ପାଇ ତମେ ସିସ୍ତୁ ମିସା ଦେଲାସ୍ନି, କାଇକେବଇଲେ ସାସନ୍କାରିଆମନ୍ ଟିକ୍ସଙ୍ଗ୍ କାମ୍ କଲାବେଲେ ପରମେସରର୍ ସେବା କର୍ତେ ରଇବାଇ ।
7 ௭ எனவே எல்லோருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; யாருக்கு வரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு வரியையும், யாருக்கு சொத்துவரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு சொத்துவரியையும் செலுத்துங்கள்; யாருக்குப் பயப்படவேண்டுமோ அவனுக்குப் பயப்படுங்கள்; யாருக்கு மதிப்புக் கொடுக்கவேண்டுமோ அவனுக்கு மதிப்புக் கொடுங்கள்.
୭ସେଟାର୍ ପାଇ ସେମନ୍ ଜେତ୍କି ପାଇବାର୍ ଆଚେ ସେଟା ସେମନ୍କେ ଦେଇଦିଆସ୍ । ତମେ ସିସ୍ତୁ କି ଅଡି ଜାଇଟା ଦେବାର୍ ଆଚେ, ସେଟା ବାନ୍ଦିଦିଆସ୍ ଆରି ସେମନ୍କେ ନାମିକରି ସନ୍ମାନ୍ କରା ।
8 ௮ ஒருவரிலொருவர் அன்பு செலுத்துகிற கடனைத்தவிர, வேறு எதிலும் யாருக்கும் கடன்படாமல் இருங்கள்; அயலகத்தாரிடம் அன்புசெலுத்துகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.
୮ନିଜର୍ ନିଜର୍ ବିତ୍ରେ ଆଲାଦ୍ କରାକରି ଅଇବାଟା ଚାଡି ଆରି କାଇ ବିସଇ କାର୍ ଲଗେ ମିସା ଉଦାର୍ ଉଆ ନାଇ । ଜେ ଏଟା ବିନ୍ ଲକର୍ପାଇ କର୍ସି, ସେ ନିୟମ୍ ମାନ୍ସି ।
9 ௯ எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சிக்காமல் இருப்பாயாக என்கிற இந்தக் கட்டளைகளும், வேறு எந்தக் கட்டளையும், உன்னிடத்தில் நீ அன்பாக செலுத்துவதுபோல மற்றவனிடமும் அன்புசெலுத்துவாயாக என்கிற ஒரே வாக்கியத்தில் அடங்கியிருக்கிறது.
୯ନିୟମ୍ତେଇ ଲେକାଅଇଲା ଆଚେ, “ବେସିଆ କାମ୍ କର୍ବାର୍ ନାଇ, ନର୍ ମାର୍ବାର୍ ନାଇ, ଚରାଇବାର୍ ନାଇ, ବିନ୍ ଲକର୍ ଦିନ୍ସୁ ଲବାଇବାର୍ ନାଇ ।” ନିଜ୍କେ ଆଲାଦ୍ କଲାପାରା ବିନ୍ ଲକ୍ମନ୍କେ ଆଲାଦ୍ କରା । ଏ ଗଟେକ୍ ଆଦେସ୍ ଜଦି ତମେ ମାନ୍ସା, ନିୟମେ ରଇବା ସବୁ ଆଦେସ୍ ମାନ୍ଲାପାରା ଅଇସି ।
10 ௧0 அன்பு மற்றவனுக்கு தீமை செய்யாது; எனவே, அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக இருக்கிறது.
୧୦କାଇକେବଇଲେ ତମେ ଗଟେକ୍ ଲକ୍କେ ଆଲାଦ୍ କର୍ତେ ରଇଲେ, କେବେ ମିସା ତାକେ ଅନିଆଇ ନ କରାସ୍ । ଆରି ତମେ ଜଦି ସେମନ୍କେ ଆଲାଦ୍ କର୍ସାବଇଲେ, ସବୁ ନିୟମ୍ ମାନିକରିଆଚାସ୍ ।
11 ௧௧ தூக்கத்தைவிட்டு எழுந்திருக்க வேண்டிய நேரமானது என்று, நாம் நேரத்தை அறிந்தவர்களாக, இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு அருகில் இருந்ததைவிட இப்பொழுது அது நமக்கு மிக அருகில் இருக்கிறது.
୧୧ଏବେ ତମେ ଏଟା କର୍ବାର୍ ଆଚେ । କାଇକେବଇଲେ ବେଲା କେଟ୍ଲାଆଚେ । ଆମେ ସଇରଇବା ଲକର୍ପାରା ନ ଅଇକରି ଚେତା ଅଇ ଜାଗ୍ରତ୍ ଅଇରଇବାର୍ ଆଚେ । ବିସ୍ବାସ୍ କର୍ବା ବେଲା ଆଗ୍ତୁ ରଇଲେ ମିସା ଆମର୍ ମୁକ୍ତି ପାଇବା ଦିନ୍ ଲଗେ ଅଇଆଚେ ।
12 ௧௨ இரவு கடந்துபோனது, பகல் அருகில் வந்துவிட்டது; எனவே, இருளின் செயல்களை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களை அணிந்துகொள்வோம்.
୧୨ରାତି ଦାପ୍ରେ ସାରିଜାଇସିବେ, ସାକାଲ୍ ଅଇବାକେ ଗାଲାନି । ସେଟାର୍ପାଇ ଆସା, ରାତିଆ କରିରଇବା କାରାପ୍ କାମ୍ ସବୁ ଚାଡିକରି, ଉଜ୍ଲେ ଜୁଇଦ୍ କର୍ବା ଆତ୍ଆତିଆର୍ ଦାରୁ ।
13 ௧௩ களியாட்டும், வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாக நடக்காமல், பகலிலே நடக்கிறவர்கள்போல ஒழுங்காக நடப்போம்.
୧୩ବେସିଆମନର୍ ଦଲେ ମିସ୍ବାର୍ ନାଇ, ମାତୁଆଲ୍ମନର୍ ଦଲେ ଜିବାର୍ ନାଇ, ବିନ୍ ମାଇଜିମନର୍ ସଙ୍ଗ୍ ମିସିରଇବାର୍ ନାଇ, ଲାଗାଜଡା ଅଇବାର୍ ନାଇ ଆରି ଇଁସା ଅଇବାର୍ ନାଇ । ଆମେ ଜେତ୍କି ଲକ୍ ଉଜ୍ଲେ ରଇଆଚୁ, ଟିକ୍ ସଙ୍ଗ୍ ଚଲାଚଲ୍ତି କରୁ ।
14 ௧௪ தீய இச்சைகளுக்கு இடமாக சரீரத்தைக் கொடுக்காமல், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்.
୧୪ମାପ୍ରୁ ଜିସୁକିରିସ୍ଟର୍ ଆତ୍ଆତିଆର୍ ଦାରି ରଉଁ । ଆରି ଆମର୍ ପାପର୍ ଗୁନ୍ଚଲନ୍ ନ ମାନିକରି ଆମେ ମନ୍ କର୍ବାଟା ପୁରାପୁରୁନ୍ ନ କରୁ ।