< ரோமர் 12 >
1 ௧ அப்படியிருக்க, சகோதரர்களே, நீங்கள் உங்களுடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் என்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யும் புத்தியுள்ள ஆராதனை.
১হে ভ্রাতর ঈশ্ৱরস্য কৃপযাহং যুষ্মান্ ৱিনযে যূযং স্ৱং স্ৱং শরীরং সজীৱং পৱিত্রং গ্রাহ্যং বলিম্ ঈশ্ৱরমুদ্দিশ্য সমুৎসৃজত, এষা সেৱা যুষ্মাকং যোগ্যা|
2 ௨ நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள். (aiōn )
২অপরং যূযং সাংসারিকা ইৱ মাচরত, কিন্তু স্ৱং স্ৱং স্ৱভাৱং পরাৱর্ত্য নূতনাচারিণো ভৱত, তত ঈশ্ৱরস্য নিদেশঃ কীদৃগ্ উত্তমো গ্রহণীযঃ সম্পূর্ণশ্চেতি যুষ্মাভিরনুভাৱিষ্যতে| (aiōn )
3 ௩ அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் யாராவது தன்னைக்குறித்து நினைக்கவேண்டிய அளவிற்கு அதிகமாக நினைக்காமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்துகொடுத்த விசுவாச அளவின்படி, தெளிந்த எண்ணம் உள்ளவனாக நினைக்கவேண்டும்.
৩কশ্চিদপি জনো যোগ্যৎৱাদধিকং স্ৱং ন মন্যতাং কিন্তু ঈশ্ৱরো যস্মৈ প্রত্যযস্য যৎপরিমাণম্ অদদাৎ স তদনুসারতো যোগ্যরূপং স্ৱং মনুতাম্, ঈশ্ৱরাদ্ অনুগ্রহং প্রাপ্তঃ সন্ যুষ্মাকম্ একৈকং জনম্ ইত্যাজ্ঞাপযামি|
4 ௪ ஏனென்றால், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக உறுப்புகள் இருந்தும், எல்லா உறுப்புகளுக்கும் ஒரே வேலை இல்லாததைப்போல,
৪যতো যদ্ৱদস্মাকম্ একস্মিন্ শরীরে বহূন্যঙ্গানি সন্তি কিন্তু সর্ৱ্ৱেষামঙ্গানাং কার্য্যং সমানং নহি;
5 ௫ அநேகராகிய நாமும் கிறிஸ்துவிற்குள் ஒரே சரீரமாக இருக்க, ஒருவருக்கொருவர் உறுப்புகளாக இருக்கிறோம்.
৫তদ্ৱদস্মাকং বহুৎৱেঽপি সর্ৱ্ৱে ৱযং খ্রীষ্টে একশরীরাঃ পরস্পরম্ অঙ্গপ্রত্যঙ্গৎৱেন ভৱামঃ|
6 ௬ நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்கள் உள்ளவர்களாக இருக்கிறதினால், நம்மில் தீர்க்கதரிசனம் சொல்லுகிற வரத்தை உடையவன் விசுவாசப்பிரமாணத்தின்படி சொல்லட்டும்.
৬অস্মাদ্ ঈশ্ৱরানুগ্রহেণ ৱিশেষং ৱিশেষং দানম্ অস্মাসু প্রাপ্তেষু সৎসু কোপি যদি ভৱিষ্যদ্ৱাক্যং ৱদতি তর্হি প্রত্যযস্য পরিমাণানুসারতঃ স তদ্ ৱদতু;
7 ௭ ஊழியம் செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும்,
৭যদ্ৱা যদি কশ্চিৎ সেৱনকারী ভৱতি তর্হি স তৎসেৱনং করোতু; অথৱা যদি কশ্চিদ্ অধ্যাপযিতা ভৱতি তর্হি সোঽধ্যাপযতু;
8 ௮ புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் நிலைத்திருக்கவேண்டும்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கட்டும்; முதலாளியானவன் கவனமாக இருக்கவேண்டும்; இரக்கம் செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யட்டும்.
৮তথা য উপদেষ্টা ভৱতি স উপদিশতু যশ্চ দাতা স সরলতযা দদাতু যস্ত্ৱধিপতিঃ স যত্নেনাধিপতিৎৱং করোতু যশ্চ দযালুঃ স হৃষ্টমনসা দযতাম্|
9 ௯ உங்களுடைய அன்பு மாயமில்லாமல் இருக்கட்டும், தீமையை வெறுத்து, நன்மையைப் பிடித்துக்கொண்டிருங்கள்.
৯অপরঞ্চ যুষ্মাকং প্রেম কাপট্যৱর্জিতং ভৱতু যদ্ অভদ্রং তদ্ ঋতীযধ্ৱং যচ্চ ভদ্রং তস্মিন্ অনুরজ্যধ্ৱম্|
10 ௧0 சகோதர அன்பினாலே ஒருவர்மேல் ஒருவர் பாசமாக இருங்கள்; மரியாதை கொடுக்கிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.
১০অপরং ভ্রাতৃৎৱপ্রেম্না পরস্পরং প্রীযধ্ৱং সমাদরাদ্ একোঽপরজনং শ্রেষ্ঠং জানীধ্ৱম্|
11 ௧௧ அசதியாக இல்லாமல் எச்சரிக்கையாக இருங்கள்; ஆவியிலே அனலாக இருங்கள்; கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்.
১১তথা কার্য্যে নিরালস্যা মনসি চ সোদ্যোগাঃ সন্তঃ প্রভুং সেৱধ্ৱম্|
12 ௧௨ நம்பிக்கையிலே சந்தோஷமாக இருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாக இருங்கள்; ஜெபத்திலே உறுதியாக நிலைத்திருங்கள்.
১২অপরং প্রত্যাশাযাম্ আনন্দিতা দুঃখসমযে চ ধৈর্য্যযুক্তা ভৱত; প্রার্থনাযাং সততং প্রৱর্ত্তধ্ৱং|
13 ௧௩ பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியர்களை உபசரியுங்கள்.
১৩পৱিত্রাণাং দীনতাং দূরীকুরুধ্ৱম্ অতিথিসেৱাযাম্ অনুরজ্যধ্ৱম্|
14 ௧௪ உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டுமேதவிர சபிக்காமல் இருங்கள்.
১৪যে জনা যুষ্মান্ তাডযন্তি তান্ আশিষং ৱদত শাপম্ অদত্ত্ৱা দদ্ধ্ৱমাশিষম্|
15 ௧௫ சந்தோஷப்படுகிறவர்களோடு சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களோடு அழுங்கள்.
১৫যে জনা আনন্দন্তি তৈঃ সার্দ্ধম্ আনন্দত যে চ রুদন্তি তৈঃ সহ রুদিত|
16 ௧௬ ஒருவரோடொருவர் ஒரேசிந்தை உள்ளவர்களாக இருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்திக்காமல், தாழ்மையானவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்; உங்களை நீங்களே புத்திமான்கள் என்று நினைக்கவேண்டாம்.
১৬অপরঞ্চ যুষ্মাকং মনসাং পরস্পরম্ একোভাৱো ভৱতু; অপরম্ উচ্চপদম্ অনাকাঙ্ক্ষ্য নীচলোকৈঃ সহাপি মার্দৱম্ আচরত; স্ৱান্ জ্ঞানিনো ন মন্যধ্ৱং|
17 ௧௭ ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாமல் இருங்கள்; எல்லா மனிதர்களுக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்யுங்கள்.
১৭পরস্মাদ্ অপকারং প্রাপ্যাপি পরং নাপকুরুত| সর্ৱ্ৱেষাং দৃষ্টিতো যৎ কর্ম্মোত্তমং তদেৱ কুরুত|
18 ௧௮ உங்களால் முடிந்தவரை எல்லா மனிதர்களோடும் சமாதானமாக இருங்கள்.
১৮যদি ভৱিতুং শক্যতে তর্হি যথাশক্তি সর্ৱ্ৱলোকৈঃ সহ নির্ৱ্ৱিরোধেন কালং যাপযত|
19 ௧௯ பிரியமானவர்களே, “பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன்,” என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதி இருக்கிறதினால், நீங்கள் பழிவாங்காமல், தேவனுடைய கோபத்தின் தண்டனைக்கு இடம்கொடுங்கள்.
১৯হে প্রিযবন্ধৱঃ, কস্মৈচিদ্ অপকারস্য সমুচিতং দণ্ডং স্ৱযং ন দদ্ধ্ৱং, কিন্ত্ৱীশ্ৱরীযক্রোধায স্থানং দত্ত যতো লিখিতমাস্তে পরমেশ্ৱরঃ কথযতি, দানং ফলস্য মৎকর্ম্ম সূচিতং প্রদদাম্যহং|
20 ௨0 அன்றியும், உன் பகைவன் பசியாக இருந்தால், அவனுக்கு ஆகாரம் கொடு; அவன் தாகமாக இருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக்கொடு; நீ இப்படிச் செய்வதினால் நெருப்புத் தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.”
২০ইতিকারণাদ্ রিপু র্যদি ক্ষুধার্ত্তস্তে তর্হি তং ৎৱং প্রভোজয| তথা যদি তৃষার্ত্তঃ স্যাৎ তর্হি তং পরিপাযয| তেন ৎৱং মস্তকে তস্য জ্ৱলদগ্নিং নিধাস্যসি|
21 ௨௧ நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.
২১কুক্রিযযা পরাজিতা ন সন্ত উত্তমক্রিযযা কুক্রিযাং পরাজযত|