< ரோமர் 12 >

1 அப்படியிருக்க, சகோதரர்களே, நீங்கள் உங்களுடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் என்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யும் புத்தியுள்ள ஆராதனை.
হে ভ্রাতর ঈশ্ৱরস্য কৃপযাহং যুষ্মান্ ৱিনযে যূযং স্ৱং স্ৱং শরীরং সজীৱং পৱিত্রং গ্রাহ্যং বলিম্ ঈশ্ৱরমুদ্দিশ্য সমুৎসৃজত, এষা সেৱা যুষ্মাকং যোগ্যা|
2 நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள். (aiōn g165)
অপরং যূযং সাংসারিকা ইৱ মাচরত, কিন্তু স্ৱং স্ৱং স্ৱভাৱং পরাৱর্ত্য নূতনাচারিণো ভৱত, তত ঈশ্ৱরস্য নিদেশঃ কীদৃগ্ উত্তমো গ্রহণীযঃ সম্পূর্ণশ্চেতি যুষ্মাভিরনুভাৱিষ্যতে| (aiōn g165)
3 அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் யாராவது தன்னைக்குறித்து நினைக்கவேண்டிய அளவிற்கு அதிகமாக நினைக்காமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்துகொடுத்த விசுவாச அளவின்படி, தெளிந்த எண்ணம் உள்ளவனாக நினைக்கவேண்டும்.
কশ্চিদপি জনো যোগ্যৎৱাদধিকং স্ৱং ন মন্যতাং কিন্তু ঈশ্ৱরো যস্মৈ প্রত্যযস্য যৎপরিমাণম্ অদদাৎ স তদনুসারতো যোগ্যরূপং স্ৱং মনুতাম্, ঈশ্ৱরাদ্ অনুগ্রহং প্রাপ্তঃ সন্ যুষ্মাকম্ একৈকং জনম্ ইত্যাজ্ঞাপযামি|
4 ஏனென்றால், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக உறுப்புகள் இருந்தும், எல்லா உறுப்புகளுக்கும் ஒரே வேலை இல்லாததைப்போல,
যতো যদ্ৱদস্মাকম্ একস্মিন্ শরীরে বহূন্যঙ্গানি সন্তি কিন্তু সর্ৱ্ৱেষামঙ্গানাং কার্য্যং সমানং নহি;
5 அநேகராகிய நாமும் கிறிஸ்துவிற்குள் ஒரே சரீரமாக இருக்க, ஒருவருக்கொருவர் உறுப்புகளாக இருக்கிறோம்.
তদ্ৱদস্মাকং বহুৎৱেঽপি সর্ৱ্ৱে ৱযং খ্রীষ্টে একশরীরাঃ পরস্পরম্ অঙ্গপ্রত্যঙ্গৎৱেন ভৱামঃ|
6 நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்கள் உள்ளவர்களாக இருக்கிறதினால், நம்மில் தீர்க்கதரிசனம் சொல்லுகிற வரத்தை உடையவன் விசுவாசப்பிரமாணத்தின்படி சொல்லட்டும்.
অস্মাদ্ ঈশ্ৱরানুগ্রহেণ ৱিশেষং ৱিশেষং দানম্ অস্মাসু প্রাপ্তেষু সৎসু কোপি যদি ভৱিষ্যদ্ৱাক্যং ৱদতি তর্হি প্রত্যযস্য পরিমাণানুসারতঃ স তদ্ ৱদতু;
7 ஊழியம் செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும்,
যদ্ৱা যদি কশ্চিৎ সেৱনকারী ভৱতি তর্হি স তৎসেৱনং করোতু; অথৱা যদি কশ্চিদ্ অধ্যাপযিতা ভৱতি তর্হি সোঽধ্যাপযতু;
8 புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் நிலைத்திருக்கவேண்டும்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கட்டும்; முதலாளியானவன் கவனமாக இருக்கவேண்டும்; இரக்கம் செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யட்டும்.
তথা য উপদেষ্টা ভৱতি স উপদিশতু যশ্চ দাতা স সরলতযা দদাতু যস্ত্ৱধিপতিঃ স যত্নেনাধিপতিৎৱং করোতু যশ্চ দযালুঃ স হৃষ্টমনসা দযতাম্|
9 உங்களுடைய அன்பு மாயமில்லாமல் இருக்கட்டும், தீமையை வெறுத்து, நன்மையைப் பிடித்துக்கொண்டிருங்கள்.
অপরঞ্চ যুষ্মাকং প্রেম কাপট্যৱর্জিতং ভৱতু যদ্ অভদ্রং তদ্ ঋতীযধ্ৱং যচ্চ ভদ্রং তস্মিন্ অনুরজ্যধ্ৱম্|
10 ௧0 சகோதர அன்பினாலே ஒருவர்மேல் ஒருவர் பாசமாக இருங்கள்; மரியாதை கொடுக்கிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.
১০অপরং ভ্রাতৃৎৱপ্রেম্না পরস্পরং প্রীযধ্ৱং সমাদরাদ্ একোঽপরজনং শ্রেষ্ঠং জানীধ্ৱম্|
11 ௧௧ அசதியாக இல்லாமல் எச்சரிக்கையாக இருங்கள்; ஆவியிலே அனலாக இருங்கள்; கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்.
১১তথা কার্য্যে নিরালস্যা মনসি চ সোদ্যোগাঃ সন্তঃ প্রভুং সেৱধ্ৱম্|
12 ௧௨ நம்பிக்கையிலே சந்தோஷமாக இருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாக இருங்கள்; ஜெபத்திலே உறுதியாக நிலைத்திருங்கள்.
১২অপরং প্রত্যাশাযাম্ আনন্দিতা দুঃখসমযে চ ধৈর্য্যযুক্তা ভৱত; প্রার্থনাযাং সততং প্রৱর্ত্তধ্ৱং|
13 ௧௩ பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியர்களை உபசரியுங்கள்.
১৩পৱিত্রাণাং দীনতাং দূরীকুরুধ্ৱম্ অতিথিসেৱাযাম্ অনুরজ্যধ্ৱম্|
14 ௧௪ உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டுமேதவிர சபிக்காமல் இருங்கள்.
১৪যে জনা যুষ্মান্ তাডযন্তি তান্ আশিষং ৱদত শাপম্ অদত্ত্ৱা দদ্ধ্ৱমাশিষম্|
15 ௧௫ சந்தோஷப்படுகிறவர்களோடு சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களோடு அழுங்கள்.
১৫যে জনা আনন্দন্তি তৈঃ সার্দ্ধম্ আনন্দত যে চ রুদন্তি তৈঃ সহ রুদিত|
16 ௧௬ ஒருவரோடொருவர் ஒரேசிந்தை உள்ளவர்களாக இருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்திக்காமல், தாழ்மையானவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்; உங்களை நீங்களே புத்திமான்கள் என்று நினைக்கவேண்டாம்.
১৬অপরঞ্চ যুষ্মাকং মনসাং পরস্পরম্ একোভাৱো ভৱতু; অপরম্ উচ্চপদম্ অনাকাঙ্ক্ষ্য নীচলোকৈঃ সহাপি মার্দৱম্ আচরত; স্ৱান্ জ্ঞানিনো ন মন্যধ্ৱং|
17 ௧௭ ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாமல் இருங்கள்; எல்லா மனிதர்களுக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்யுங்கள்.
১৭পরস্মাদ্ অপকারং প্রাপ্যাপি পরং নাপকুরুত| সর্ৱ্ৱেষাং দৃষ্টিতো যৎ কর্ম্মোত্তমং তদেৱ কুরুত|
18 ௧௮ உங்களால் முடிந்தவரை எல்லா மனிதர்களோடும் சமாதானமாக இருங்கள்.
১৮যদি ভৱিতুং শক্যতে তর্হি যথাশক্তি সর্ৱ্ৱলোকৈঃ সহ নির্ৱ্ৱিরোধেন কালং যাপযত|
19 ௧௯ பிரியமானவர்களே, “பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன்,” என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதி இருக்கிறதினால், நீங்கள் பழிவாங்காமல், தேவனுடைய கோபத்தின் தண்டனைக்கு இடம்கொடுங்கள்.
১৯হে প্রিযবন্ধৱঃ, কস্মৈচিদ্ অপকারস্য সমুচিতং দণ্ডং স্ৱযং ন দদ্ধ্ৱং, কিন্ত্ৱীশ্ৱরীযক্রোধায স্থানং দত্ত যতো লিখিতমাস্তে পরমেশ্ৱরঃ কথযতি, দানং ফলস্য মৎকর্ম্ম সূচিতং প্রদদাম্যহং|
20 ௨0 அன்றியும், உன் பகைவன் பசியாக இருந்தால், அவனுக்கு ஆகாரம் கொடு; அவன் தாகமாக இருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக்கொடு; நீ இப்படிச் செய்வதினால் நெருப்புத் தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.”
২০ইতিকারণাদ্ রিপু র্যদি ক্ষুধার্ত্তস্তে তর্হি তং ৎৱং প্রভোজয| তথা যদি তৃষার্ত্তঃ স্যাৎ তর্হি তং পরিপাযয| তেন ৎৱং মস্তকে তস্য জ্ৱলদগ্নিং নিধাস্যসি|
21 ௨௧ நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.
২১কুক্রিযযা পরাজিতা ন সন্ত উত্তমক্রিযযা কুক্রিযাং পরাজযত|

< ரோமர் 12 >