< ரோமர் 1 >

1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாக இருப்பதற்காக அழைக்கப்பட்டவனும், தேவனுடைய நற்செய்திக்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,
ऐ चिठ्ठी पौलुस दिया तरफा ला है, जड़ा प्रभु यीशु मसीह दा सेवक है, कने परमेश्वरे उसयो प्रेरित होणे तांई चुणया है, कने परमेश्वरे दा शुभसमाचार दा प्रचार करणे तांई नियुक्त कितया है।
2 ரோமாபுரியில் உள்ள தேவனுக்குப் பிரியமானவர்களும் பரிசுத்தவான்களாவதற்காக அழைக்கப்பட்டவர்களாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது;
पबित्र शास्त्र च परमेश्वरे अपणे संदेश देणेबालयां दे जरिये बड़े पेहले ही शुभसमाचार दा वायदा कितया था,
3 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
ऐ शुभसमाचार उदे अपणे पुत्र, साड़े प्रभु यीशु मसीह दे बारे च है, उदा जन्म इक इन्सान दे रुपे च राजा दाऊदे दे बन्शे च होया था,
4 இயேசுகிறிஸ்துவைக்குறித்து தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாகப் பரிசுத்த வேதாகமங்களில், முன்னமே தம்முடைய நற்செய்தியைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்,
कने पबित्र आत्मा दिया शक्तिया ला जालू सै मरयां चे जिन्दा होया तालू उनी साबित किता की सै परमेश्वरे दा पुत्र है। कने सै यीशु मसीह साड़ा प्रभु है।
5 சரீரத்தின்படி தாவீதின் வம்சத்தில் பிறந்தவரும், பரிசுத்த ஆவியின்படி தேவனுடைய குமாரர் என்று மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்ததினாலே பலமாக நிரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாக இருக்கிறார்.
मसीह दे जरिये मिंजो अनुग्रह कने प्रेरिताई परमेश्वरे ला मिली ताकि उदे नाऐ दिया बजा ने सारियां जातियां दे लोक मसीह पर भरोसा करन कने उदे हुकमा जो मनन,
6 அவர் எல்லா தேசத்து மக்களையும், அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும்,
तुसां विश्वासी जड़े रोम शेहर च रेंदे न इना ही लोकां च शामिल न जिना जो परमेश्वरे यीशु मसीह दे होणे तांई चुणया है।
7 தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியப்பண்ணுவதற்காக, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் கொடுத்திருக்கிறார்.
ऐ चिठ्ठी रोम शेहर च रेणेबाले उना सारयां दे ना है जिना ने परमेश्वर प्यार करदा है, कने अपणे पबित्र लोक होणे तांई सदया है, साड़े पिता परमेश्वरे कने प्रभु यीशु मसीह दिया तरफा ला तुसां जो अनुग्रह कने शांति मिलदी रे।
8 உங்களுடைய விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லோருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாக என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
पेहले मैं तुसां सारयां तांई यीशु मसीह दे जरिये अपणे परमेश्वरे दा धन्यबाद करदा है, क्योंकि मती सारियां जगां दे लोक तुसां दे यीशु मसीह पर भरोसे दे बारे च गल्लां करा दे न।
9 நான் ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத் தேவகுமாரனுடைய நற்செய்தியினாலே என் ஆவியோடு நான் வணங்குகிற தேவன் எனக்குச் சாட்சியாக இருக்கிறார்.
परमेश्वर जिसदी सेबा मैं अपणे पुरे मने ने उदे पुत्रे दे बारे च शुभसमाचार दा प्रचार करदा है, सेई मेरा गबाह है, की मैं अपणी प्राथना च तुसां लोकां जो लगातार याद करदा है,
10 ௧0 நீங்கள் உறுதிப்படுத்தப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுப்பதற்காகவும்,
कने हर रोज बिनती करदा है, की परमेश्वरे दी इच्छा ने कुसी ना कुसी तरीके ने आखरी च तुसां ने मिलणे दा मौका मिल्ले।
11 ௧௧ உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் உள்ள விசுவாசத்தினால் உங்களோடு நானும் ஆறுதல் அடைவதற்கும், உங்களைப் பார்க்க ஆவலாக இருக்கிறதினாலே,
क्योंकि मैं तुसां ने मिलने दी बड़ी इच्छा है, ताकि मैं तुसां जो कोई आत्मिक बरदान दें जिसने तुसां भरोसे च होर भी मजबूत होई जान,
12 ௧௨ நான் எப்படியாவது உங்களிடம் வருகிறதற்கு தேவனுடைய விருப்பத்தினாலே எனக்கு நல்ல பயணம் சீக்கிரத்தில் அமையவேண்டும் என்று ஜெபித்துக்கொள்கிறேன்.
मेरे बोलने दा मतलब ऐ की मैं तुसां जो उत्साहित करी सकें क्योंकि तुसां जाणदे न की मैं कियां भरोसा किता कने तुसां मिंजो उत्साहित करी सकन क्योंकि मैं जाणदा है की तुसां कियां भरोसा किता।
13 ௧௩ சகோதரர்களே, யூதரல்லாதவர்களாகிய மற்றவர்களுக்குள்ளே நான் அநேகரை இரட்சிப்பிற்குள் வழிநடத்தினதுபோல உங்களுக்குள்ளும் சிலரை இரட்சிப்பிற்குள் வழிநடத்துவதற்காக, உங்களிடம் வருவதற்காக பலமுறை நான் யோசனையாக இருந்தேன், ஆனாலும் இதுவரைக்கும் எனக்குத் தடை உண்டானது என்று நீங்கள் அறியாமல் இருக்க எனக்கு மனமில்லை.
कने हे मसीह भाईयो, मैं चांदा है की तुसां जाणी लिया की मैं तुसां बाल बार-बार ओणा चांदा, की जियां मैं होर जातियां च मसीह तांई चेले बणाऐ, तियां ही तुसां च भी चेले बणन, पर हले दीकर इदे च रुकाबट ओंदी रेई।
14 ௧௪ கிரேக்கர்களுக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடர்களுக்கும் நான் கடனாளியாக இருக்கிறேன்.
मेरी जिम्मेबारी सारयां लोकां जो शुभसमाचार सुणाणे दी है, चाऐ सै यूनानी भाषा जाणने बाले होन या नी जाणने बाले होन कने चाहे समझदार होन या नासमझ होन। इस तांई मेरी रोम शेहरे च तुसां ने मिलणे दी बड़ी इच्छा है।
15 ௧௫ எனவே, ரோமாபுரியில் இருக்கிற உங்களுக்கும் என்னால் முடிந்தவரை நற்செய்தியைப் பிரசங்கம்பண்ண விரும்புகிறேன்.
इस तांई मैं तुसां जो भी जड़े रोम शेहरे च रेंदे न, शुभसमाचार सुणाणे जो भरपूर तैयार है।
16 ௧௬ கிறிஸ்துவின் நற்செய்தியைக்குறித்து நான் வெட்கப்படமாட்டேன்; முதலில் யூதர்களிலும், பின்பு கிரேக்கர்களிலும் விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாக இருக்கிறது.
क्योंकि मैं मसीह दे शुभसमाचार च घमंड करदा है, क्योंकि शुभसमाचार दी शक्ति ने ही परमेश्वरे शुरु ला यहूदियां जो बचाया कने हुण सारे संसारे दे लोकां जो बचांदा है।
17 ௧௭ “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்த நற்செய்தியினால் வெளிப்படுத்தப்படுகிறது.
क्योंकि शुभसमाचार च परमेश्वर दी धार्मिकता दे बारे च दसया है, ऐ धार्मिकता शुरु ला लेईकरी आखरी दीकर भरोसे दे जरिये होंदी है, जियां पबित्र शास्त्र च लिखया है, “जड़ा माणु भरोसे दे जरिये परमेश्वरे सोगी सही बणी रेंदा है, उनी ही जिन्दा रेणा।”
18 ௧௮ சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனிதர்களுடைய எல்லாவிதமான அவபக்திக்கும் அநியாயத்திற்கும் எதிராக, தேவனுடைய கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
परमेश्वरे दा गुस्सा तां, जड़े बुराई कने अधार्मिक कम्म करदे न उना लोकां पर स्वर्गे ला प्रकट होंदा है, जड़े बुरे कम्म करणे दे जरिये लोकां जो परमेश्वरे दिया सच्चाईयां जो जाणने ला रोकदे न।
19 ௧௯ தேவனைக்குறித்து தெரிந்துகொள்வது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
इस तांई की सै परमेश्वरे दे ज्ञाने दे बारे च असानी ने समझी सकदे न, क्योंकि परमेश्वरे ऐ ज्ञान उना पर प्रगट कितया है।
20 ௨0 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. (aïdios g126)
क्योंकि परमेश्वरे दी हमेशा दी शक्ति कने चरित्र जो दिखी नी सकदे, पर संसार दी शुरुआत ला ही परमेश्वरे इना जो अपणी सृष्टिया ने दसया है, इस तांई उना बाल कोई भाना नी है की सै परमेश्वर जो नी जाणदे। (aïdios g126)
21 ௨௧ அவர்கள் தேவனைத் தெரிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், நன்றி சொல்லாமலும் இருந்து, தங்களுடைய சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்ச்சி இல்லாத அவர்களுடைய இருதயம் இருள் அடைந்தது.
इसा बजा ने की परमेश्वरे जो जाणने पर भी उना परमेश्वरे दे रुपे च इज्जत नी दिती, कने सोचणा लग्गे की ऐ बेकार गल्लां न, ऐथू दीकर की उना जो जियां सोचणा चाईदा तियां नी सोचया पर बेकार गल्लां सोचदे रे।
22 ௨௨ அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பைத்தியக்காரர்களாகி,
सै अपणे आपे जो बुद्धिमान जताई करी मुर्ख बणी गे,
23 ௨௩ அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய உருவங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.
कने हमेशा जिन्दा रेणेबाले परमेश्वरे दिया महिमा जो हमेशा जिन्दा नी रेणेबाले, कने पंछियां, कने चारां पैरां बाले, कने रेंगणेबाले जानवरां दियां मुर्तियां सांई बदली दिता कने इना दी पूजा करणा लग्गे।
24 ௨௪ இதனால் அவர்கள் தங்களுடைய இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்களுடைய சரீரங்களை அவமானப்படுத்துவதற்காக தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
इसा बजा ला परमेश्वरे उना जो उना दे मने दिया इच्छा अनुसार यौन अशुद्धता तांई छडी दिता, ताकि सै अपु चे बुरे कम्म करी के अपणे शरीरां दी अनादर करन।
25 ௨௫ தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். (aiōn g165)
क्योंकि सै परमेश्वरे दे बारे दिया सच्चाईया पर भरोसा करणे जो मना करदे न, कने सै उसयो मंदे जड़ा जुठ है। कने उना संसारे दी पूजा कने सेबा किती, कने ना की उस सृष्‍टिकर्ता दी सेबा किती। उस सृष्‍टिकर्ता दी जिनी सारे संसारे दियां चिजां जो बणाया है, उदी महिमा सदा होंदी रे। आमीन। (aiōn g165)
26 ௨௬ இதனால் தேவன் அவர்களை இழிவான இச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்தார்; அப்படியே அவர்களுடைய பெண்கள் இயற்கையான இச்சையை இயற்கைக்கு எதிரான இச்சையாக மாற்றினார்கள்.
इस तांई तां परमेश्वरे उना जो उना दे बुरे बिचारां दे बशे च छडी दिता; ऐथू दीकर उना दियां जनानिया मर्दां सोगी जायज रिशतयां जो दुजियां जनानियां सोगी नाजायज रिशतयां च बदली दिता।
27 ௨௭ அப்படியே ஆண்களும் பெண்களை இயற்கையின்படி அனுபவிக்காமல், ஒருவர்மேல் ஒருவர் இச்சையினாலே பொங்கி, ஆணோடு ஆண் அவலட்சணமானதை செய்து, தங்களுடைய தவறுகளுக்குத்தக்க பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
तियां ही मर्द भी जनानिया सोगी जायज रिशता छडी करी अपु चे व्यभिचार करिरी बरबाद होणे लग्गे, कने मर्दां-मर्दां सोगी व्यभिचार करिके अपणे ही शरीरे च अपणिया इसा गलतिया दी ठीक सजा मिल्ली।
28 ௨௮ தேவனைத் தெரிந்துகொள்ளும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனமில்லாமல் இருந்ததால், தவறான காரியங்களைச் செய்வதற்காக, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
क्योंकि जालू उना परमेश्वरे जो अपनाणा मुर्खता समझया, तां परमेश्वरे भी उना जो सारे नकम्मे कम्म करणे तांई उना दे नकम्मे मने दे बशे च छडी दिता।
29 ௨௯ அவர்கள் எல்லாவிதமான அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாக,
इस तांई सै हर तरा दे गलत कम्मा च, बुराई च, कने लालच, कने बैरभाव ने भरुई गे; कने जलन, कने हत्या, कने लड़ाई झगड़े, कने धोखा, कने जलन ने भरुई गे, कने चुगलखोर,
30 ௩0 கோள் சொல்லுகிறவர்களுமாக, அவதூறு பண்ணுகிறவர்களுமாக, தேவனைப் பகைக்கிறவர்களுமாக, மூர்க்கர்களுமாக, அகந்தை உள்ளவர்களுமாக, வீம்புக்காரர்களுமாக, பொல்லாதவைகளை யோசிக்கிறவர்களுமாக, பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாக,
गप्पां मारणे बाले, कने होरनी दी बेस्ती करणे बाले, लड़ाके, घमंडी, झूठे, डिंगमार, बुरियाँ गल्लां करणे बाले, कने माता पिता दी गल्ल नी मनणे बाले,
31 ௩௧ உணர்வு இல்லாதவர்களுமாக, உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாக, சுபாவ அன்பு இல்லாதவர்களுமாக, இணங்காதவர்களுமாக, இரக்கம் இல்லாதவர்களுமாக இருக்கிறார்கள்.
बेअकले, धोखेबाज, दया भाव नी है कने निर्दयी होई गियो न।
32 ௩௨ இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குத் தகுதியானவர்கள் என்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் தெரிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களையும் ஏற்றுக்கொள்ளுகிறவர்களுமாக இருக்கிறார்கள்.
सै तां परमेश्वरे दे नियम जो जाणदे न की ऐसा कम्म करणे बाले मौत दी सजा जोगे न, तमि ना सिर्फ अपु ऐसे कम्म करदे न कने करणे बालयां ने खुश भी होंदे न।

< ரோமர் 1 >