< வெளிப்படுத்தின விசேஷம் 7 >

1 இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலோ, கடலின்மேலோ, ஒரு மரத்தின்மேலோ காற்று அடிக்காதபடி பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருப்பதைப் பார்த்தேன்.
इजी ते बाद मैं तरतिया रे चारो कूणेयां पाँदे चार स्वर्गदूत खड़े देखे। तिने स्वर्गदूते तरतिया री चारो अवा पकड़ी राखी थी, ताकि तरती या समुद्र या केसी डाल़ो पाँदे अवा नि चलो।
2 ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக்கோலை வைத்திருந்த வேறொரு தூதன் சூரியன் உதிக்கும் திசையிலிருந்து ஏறிவருவதைப் பார்த்தேன்; அவன், பூமியையும் கடலையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி:
तेबे मैं एक ओर स्वर्गदूतो खे जिऊँदे परमेशरो री मुहर लयी की पूर्वो ते ऊबो खे आऊँदा ऊआ देखेया। तिने तिना चारो स्वर्गदूता ते, जिना खे तरती और समुद्रो रा नुकशाण करने रा अक्क दित्तेया था, जोरे की आक्का पायी की बोलेया,
3 நாம் நமது தேவனுடைய ஊழியக்காரர்களின் நெற்றிகளில் முத்திரைப் போடும்வரைக்கும் பூமியையும் கடலையும் மரங்களையும் சேதப்படுத்தாமல் இருங்கள் என்று அதிக சத்தமாகச் சொன்னான்.
“जदुओ तक आसे आपणे परमेशरो रे दासो रे माथेया पाँदे मुहर नि लगाई देऊँगे, तदुओ तक तरती, समुद्र और डाल़ा रा नुकशाण नि करना।”
4 முத்திரைபோடப்பட்டவர்களின் எண்ணிக்கையைச் சொல்வதைக்கேட்டேன்; இஸ்ரவேல் மக்களுடைய எல்லாக் கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர்.
और जिना पाँदे मुहर लगाई, मैं तिना री गिणती सुणी कि इस्राएलो री ल्वादा रे सारे गोत्रा बीचा ते एक लाख चवाल़ी ह्जारा पाँदे मुहर लगाई।
5 யூதாகோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். ரூபன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். காத் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.
स्वर्गदूते हर गोत्रो ते बारा ह्जारा लोका पाँदे मुहर लगाई: यहूदा रे गोत्रो बीचा ते बारा ह्जारा पाँदे मुहर लगाई, रूबेनो रे गोत्रो बीचा ते बारा ह्जारा पाँदे, गादो रे गोत्रो बीचा ते बारा ह्जारा पाँदे,
6 ஆசேர் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். நப்தலி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். மனாசே கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.
आशेरो रे गोत्रो बीचा ते बारा ह्जारा पाँदे, मनश्शिह रे गोत्रो बीचा ते बारा ह्जारा पाँदे,
7 சிமியோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.
शमौनो रे गोत्रो बीचा ते बारा ह्जारा पाँदे, लेविए रे गोत्रो बीचा ते बारा ह्जारा पाँदे, इस्साकारो रे गोत्रो बीचा ते बारा ह्जारा पाँदे,
8 செபுலோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.
जबूलूनो रे गोत्रो बीचा ते बारा ह्जारा पाँदे, यूसुफो रे गोत्रो बीचा ते बारा ह्जारा पाँदे और बिन्यामीनो रे गोत्रो बीचा ते बारा ह्जारा पाँदे मुहर लगाई।
9 இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, எல்லாத் தேசங்களிலும் கோத்திரங்களிலும் மக்களிலும் மொழிக்காரர்களிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணிப்பார்க்க முடியாத திரளான மக்கள்கூட்டம், வெள்ளை அங்கிகளை அணிந்து, தங்களுடைய கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்பதைக் கண்டேன்.
इजी ते बाद मैं नजर दित्ती और हर एक जाति, कुल़, लोक और पाषा बीचा ते एक एड़ी बड़ी पीड़ देखी, जेतेखे कोई गिणी नि सको था। सेयो सफेद टाले पईनी की और आपणे आथो रे खजूरो रिया डाल़िया लयी की सिंहासनो रे सामणे और मिन्टूए रे सामणे खड़ी रे थे।
10 ௧0 அவர்கள் அதிக சத்தமாக: இரட்சிப்பு, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்களுடைய தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரியது என்று ஆர்ப்பரித்தார்கள்.
और सेयो लोक जोरे की आक्का पायी की बोलणे लगी रे थे, “म्हारे परमेशरो रा, जो सिंहासनो पाँदे बैठी रा और मिन्टूए री जय-जयकार ओ कऊँकि ये सेयो ईए जिने आसा रा उद्धार कित्तेया।”
11 ௧௧ தூதர்கள் எல்லோரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சுற்றிநின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:
और सारे स्वर्गदूत, तेस सिंहासन, बुजुर्ग और चारो प्राणिया रे चऊँ कनारे खड़ी रे थे। तेबे सेयो सिंहासनो रे सामणे मुंओ रे पारे रूड़ी गे और परमेशरो गे माथा टेकेया,
12 ௧௨ ஆமென், எங்களுடைய தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். (aiōn g165)
और बोलेया, “आमीन्, म्हारे परमेशरो री स्तुति, महिमा, ज्ञान, धन्यवाद, आदर, सामर्थ और शक्ति जुगो-जुगो तक बणी री रओ। आमीन्।” (aiōn g165)
13 ௧௩ அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னைப் பார்த்து: வெள்ளை அங்கிகளை அணிந்திருக்கிற இவர்கள் யார்? எங்கே இருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.
इजी ते बाद बुजुर्गा बीचा ते एकी जणे मांते पूछेया, “क्या तुसे जाणोए कि ये सफेद टाले पईने रे लोक कूणे? और केथा ते आयी रे?”
14 ௧௪ அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் அதிக உபத்திரவத்தில் இருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்களுடைய அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே நனைத்து வெண்மையாக்கிக்கொண்டவர்கள்.
मैं तेसखे जबाब दित्तेया, “ओ श्रीमान् जी, आँऊ नि जाणदा पर तूँ ई जाणेया।” तिने बुजुर्गे माखे बोलेया, “ये सफेद टाले पईने रे सेयो लोक ए, जो तेस बड़े क्ल़ेशो ते निकल़ी की आयी रे। इने लोके आपणे टाले मिन्टूए रे खूने की तोई की सफेद करी राखे।
15 ௧௫ எனவே, இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரை ஆராதிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களோடு இருந்து பாதுகாப்பார்.
इजी बजअ ते, “सेयो परमेशरो रे सिंहासनो रे सामणे ए और तेसरे मन्दरो रे रात-दिन सेवा करोए और जो सिंहासनो पाँदे बैठी रा, तेस तिना पाँदे आपणा तम्बू ताणना।
16 ௧௬ இவர்கள் இனிப் பசியடைவதும் இல்லை, இனித் தாகமடைவதும் இல்லை; வெயிலோ, வெப்பமோ இவர்கள்மேல் படுவதும் இல்லை.
सेयो फेर पूखे-त्याये नि ऊणे और ना ई तिना पाँदे तूप और ना ई कोई तपन पड़नी।
17 ௧௭ சிங்காசனத்தின் நடுவில் இருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீர் உள்ள ஊற்றுகளுக்கு நடத்திக்கொண்டு போவார்; தேவனே இவர்களுடைய கண்ணீர் எல்லாவற்றையும் துடைப்பார்” என்றான்.
कऊँकि मिन्टू, जो सिंहासनो रे बीचे ए, तेस तिना री रखवाल़ी करनी और सेयो जीवनरूपी सूबल़ा रे नेड़े लयी जाणे और परमेशरे तिना री आखी ते सारे आसू टूसी देणे।”

< வெளிப்படுத்தின விசேஷம் 7 >