< வெளிப்படுத்தின விசேஷம் 6 >
1 ௧ ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னைப் பார்த்து: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போல சத்தமாகச் சொல்வதைக்கேட்டேன்.
అనన్తరం మయి నిరీక్షమాణే మేషశావకేన తాసాం సప్తముద్రాణామ్ ఏకా ముద్రా ముక్తా తతస్తేషాం చతుర్ణామ్ ఏకస్య ప్రాణిన ఆగత్య పశ్యేతివాచకో మేఘగర్జనతుల్యో రవో మయా శ్రుతః|
2 ௨ நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.
తతః పరమ్ ఏకః శుక్లాశ్చో దృష్టః, తదారూఢో జనో ధను ర్ధారయతి తస్మై చ కిరీటమేకమ్ అదాయి తతః స ప్రభవన్ ప్రభవిష్యంశ్చ నిర్గతవాన్|
3 ௩ அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லக்கேட்டேன்.
అపరం ద్వితీయముద్రాయాం తేన మోచితాయాం ద్వితీయస్య ప్రాణిన ఆగత్య పశ్యేతి వాక్ మయా శ్రుతా|
4 ௪ அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்வதற்காகச் சமாதானத்தை பூமியிலிருந்து எடுத்துப்போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய வாளும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
తతో ఽరుణవర్ణో ఽపర ఏకో ఽశ్వో నిర్గతవాన్ తదారోహిణి పృథివీతః శాన్త్యపహరణస్య లోకానాం మధ్యే పరస్పరం ప్రతిఘాతోత్పాదనస్య చ సామర్థ్యం సమర్పితమ్, ఏకో బృహత్ఖఙ్గో ఽపి తస్మా అదాయి|
5 ௫ அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்வதைக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.
అపరం తృతీయముద్రాయాం తన మోచితాయాం తృతీయస్య ప్రాణిన ఆగత్య పశ్యేతి వాక్ మయా శ్రుతా, తతః కాలవర్ణ ఏకో ఽశ్వో మయా దృష్టః, తదారోహిణో హస్తే తులా తిష్ఠతి
6 ௬ அப்பொழுது, ஒரு வெள்ளிக்காசுக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு வெள்ளிக்காசுக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சைரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.
అనన్తరం ప్రాణిచతుష్టయస్య మధ్యాద్ వాగియం శ్రుతా గోధూమానామేకః సేటకో ముద్రాపాదైకమూల్యః, యవానాఞ్చ సేటకత్రయం ముద్రాపాదైకమూల్యం తైలద్రాక్షారసాశ్చ త్వయా మా హింసితవ్యాః|
7 ௭ அவர் நான்காம் முத்திரையை உடைத்தபோது, நான்காம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன்.
అనన్తరం చతుర్థముద్రాయాం తేన మోచితాయాం చతుర్థస్య ప్రాణిన ఆగత్య పశ్యేతి వాక్ మయా శ్రుతా|
8 ௮ நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவனுக்குப் பின்னே சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், மரணத்தினாலும், பூமியின் கொடிய மிருகங்களினாலும், பூமியில் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்களைக் கொலைசெய்ய அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (Hadēs )
తతః పాణ్డురవర్ణ ఏకో ఽశ్వో మయా దృష్టః, తదారోహిణో నామ మృత్యురితి పరలోకశ్చ తమ్ అనుచరతి ఖఙ్గేన దుర్భిక్షేణ మహామార్య్యా వన్యపశుభిశ్చ లోకానాం బధాయ పృథివ్యాశ్చతుర్థాంశస్యాధిపత్యం తస్మా అదాయి| (Hadēs )
9 ௯ அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினாலும் தாங்கள் கொடுத்த சாட்சியினாலும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழேப் பார்த்தேன்.
అనన్తరం పఞ్చమముద్రాయాం తేన మోచితాయామ్ ఈశ్వరవాక్యహేతోస్తత్ర సాక్ష్యదానాచ్చ ఛేదితానాం లోకానాం దేహినో వేద్యా అధో మయాదృశ్యన్త|
10 ௧0 அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமும் உள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடம் எங்களுடைய இரத்தத்தைக்குறித்து எவ்வளவு காலங்கள் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று அதிக சத்தமாகக் கேட்டார்கள்.
త ఉచ్చైరిదం గదన్తి, హే పవిత్ర సత్యమయ ప్రభో అస్మాకం రక్తపాతే పృథివీనివాసిభి ర్వివదితుం తస్య ఫల దాతుఞ్చ కతి కాలం విలమ్బసే?
11 ௧௧ அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்களுடைய உடன்பணியாளர்களும் தங்களுடைய சகோதரர்களுமானவர்களின் எண்ணிக்கை நிறைவாகும்வரை இன்னும் கொஞ்சக்காலம் காத்திருக்கவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
తతస్తేషామ్ ఏకైకస్మై శుభ్రః పరిచ్ఛదో ఽదాయి వాగియఞ్చాకథ్యత యూయమల్పకాలమ్ అర్థతో యుష్మాకం యే సహాదాసా భ్రాతరో యూయమివ ఘానిష్యన్తే తేషాం సంఖ్యా యావత్ సమ్పూర్ణతాం న గచ్ఛతి తావద్ విరమత|
12 ௧௨ அவர் ஆறாம் முத்திரையை உடைப்பதைப் பார்த்தேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கருப்புக் கம்பளியைப்போலக் கருத்துப்போனது; சந்திரன் இரத்தம்போல ஆனது.
అనన్తరం యదా స షష్ఠముద్రామమోచయత్ తదా మయి నిరీక్షమాణే మహాన్ భూకమ్పో ఽభవత్ సూర్య్యశ్చ ఉష్ట్రలోమజవస్త్రవత్ కృష్ణవర్ణశ్చన్ద్రమాశ్చ రక్తసఙ్కాశో ఽభవత్
13 ௧௩ அத்திமரம் பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.
గగనస్థతారాశ్చ ప్రబలవాయునా చాలితాద్ ఉడుమ్బరవృక్షాత్ నిపాతితాన్యపక్కఫలానీవ భూతలే న్యపతన్|
14 ௧௪ வானமும் சுருட்டப்பட்ட புத்தகம்போல விலகிப்போனது; மலைகள் தீவுகள் எல்லாம் தங்களுடைய இடங்களைவிட்டு விலகிச்சென்றன.
ఆకాశమణ్డలఞ్చ సఙ్కుచ్యమానగ్రన్థఇవాన్తర్ధానమ్ అగమత్ గిరయ ఉపద్వీపాశ్చ సర్వ్వే స్థానాన్తరం చాలితాః
15 ௧௫ பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், படைத்தளபதிகளும், பலவான்களும், அடிமைகள், சுதந்திரமானவர்கள் எல்லோரும், குகைகளிலும் மலைகளின் பாறைகளிலும் ஒளிந்துகொண்டு,
పృథివీస్థా భూపాలా మహాల్లోకాః సహస్త్రపతయో ధనినః పరాక్రమిణశ్చ లోకా దాసా ముక్తాశ్చ సర్వ్వే ఽపి గుహాసు గిరిస్థశైలేషు చ స్వాన్ ప్రాచ్ఛాదయన్|
16 ௧௬ மலைகளையும் பாறைகளையும் பார்த்து: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;
తే చ గిరీన్ శైలాంశ్చ వదన్తి యూయమ్ అస్మదుపరి పతిత్వా సింహాసనోపవిష్టజనస్య దృష్టితో మేషశావకస్య కోపాచ్చాస్మాన్ గోపాయత;
17 ௧௭ அவருடைய கோபத்தின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைத்து நிற்கமுடியும் என்றார்கள்.
యతస్తస్య క్రోధస్య మహాదినమ్ ఉపస్థితం కః స్థాతుం శక్నోతి?