< வெளிப்படுத்தின விசேஷம் 6 >
1 ௧ ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னைப் பார்த்து: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போல சத்தமாகச் சொல்வதைக்கேட்டேன்.
ਅਨਨ੍ਤਰੰ ਮਯਿ ਨਿਰੀਕ੍ਸ਼਼ਮਾਣੇ ਮੇਸ਼਼ਸ਼ਾਵਕੇਨ ਤਾਸਾਂ ਸਪ੍ਤਮੁਦ੍ਰਾਣਾਮ੍ ਏਕਾ ਮੁਦ੍ਰਾ ਮੁਕ੍ਤਾ ਤਤਸ੍ਤੇਸ਼਼ਾਂ ਚਤੁਰ੍ਣਾਮ੍ ਏਕਸ੍ਯ ਪ੍ਰਾਣਿਨ ਆਗਤ੍ਯ ਪਸ਼੍ਯੇਤਿਵਾਚਕੋ ਮੇਘਗਰ੍ਜਨਤੁਲ੍ਯੋ ਰਵੋ ਮਯਾ ਸ਼੍ਰੁਤਃ|
2 ௨ நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.
ਤਤਃ ਪਰਮ੍ ਏਕਃ ਸ਼ੁਕ੍ਲਾਸ਼੍ਚੋ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਃ, ਤਦਾਰੂਢੋ ਜਨੋ ਧਨੁ ਰ੍ਧਾਰਯਤਿ ਤਸ੍ਮੈ ਚ ਕਿਰੀਟਮੇਕਮ੍ ਅਦਾਯਿ ਤਤਃ ਸ ਪ੍ਰਭਵਨ੍ ਪ੍ਰਭਵਿਸ਼਼੍ਯੰਸ਼੍ਚ ਨਿਰ੍ਗਤਵਾਨ੍|
3 ௩ அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லக்கேட்டேன்.
ਅਪਰੰ ਦ੍ਵਿਤੀਯਮੁਦ੍ਰਾਯਾਂ ਤੇਨ ਮੋਚਿਤਾਯਾਂ ਦ੍ਵਿਤੀਯਸ੍ਯ ਪ੍ਰਾਣਿਨ ਆਗਤ੍ਯ ਪਸ਼੍ਯੇਤਿ ਵਾਕ੍ ਮਯਾ ਸ਼੍ਰੁਤਾ|
4 ௪ அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்வதற்காகச் சமாதானத்தை பூமியிலிருந்து எடுத்துப்போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய வாளும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
ਤਤੋ (ਅ)ਰੁਣਵਰ੍ਣੋ (ਅ)ਪਰ ਏਕੋ (ਅ)ਸ਼੍ਵੋ ਨਿਰ੍ਗਤਵਾਨ੍ ਤਦਾਰੋਹਿਣਿ ਪ੍ਰੁʼਥਿਵੀਤਃ ਸ਼ਾਨ੍ਤ੍ਯਪਹਰਣਸ੍ਯ ਲੋਕਾਨਾਂ ਮਧ੍ਯੇ ਪਰਸ੍ਪਰੰ ਪ੍ਰਤਿਘਾਤੋਤ੍ਪਾਦਨਸ੍ਯ ਚ ਸਾਮਰ੍ਥ੍ਯੰ ਸਮਰ੍ਪਿਤਮ੍, ਏਕੋ ਬ੍ਰੁʼਹਤ੍ਖਙ੍ਗੋ (ਅ)ਪਿ ਤਸ੍ਮਾ ਅਦਾਯਿ|
5 ௫ அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்வதைக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.
ਅਪਰੰ ਤ੍ਰੁʼਤੀਯਮੁਦ੍ਰਾਯਾਂ ਤਨ ਮੋਚਿਤਾਯਾਂ ਤ੍ਰੁʼਤੀਯਸ੍ਯ ਪ੍ਰਾਣਿਨ ਆਗਤ੍ਯ ਪਸ਼੍ਯੇਤਿ ਵਾਕ੍ ਮਯਾ ਸ਼੍ਰੁਤਾ, ਤਤਃ ਕਾਲਵਰ੍ਣ ਏਕੋ (ਅ)ਸ਼੍ਵੋ ਮਯਾ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਃ, ਤਦਾਰੋਹਿਣੋ ਹਸ੍ਤੇ ਤੁਲਾ ਤਿਸ਼਼੍ਠਤਿ
6 ௬ அப்பொழுது, ஒரு வெள்ளிக்காசுக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு வெள்ளிக்காசுக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சைரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.
ਅਨਨ੍ਤਰੰ ਪ੍ਰਾਣਿਚਤੁਸ਼਼੍ਟਯਸ੍ਯ ਮਧ੍ਯਾਦ੍ ਵਾਗਿਯੰ ਸ਼੍ਰੁਤਾ ਗੋਧੂਮਾਨਾਮੇਕਃ ਸੇਟਕੋ ਮੁਦ੍ਰਾਪਾਦੈਕਮੂਲ੍ਯਃ, ਯਵਾਨਾਞ੍ਚ ਸੇਟਕਤ੍ਰਯੰ ਮੁਦ੍ਰਾਪਾਦੈਕਮੂਲ੍ਯੰ ਤੈਲਦ੍ਰਾਕ੍ਸ਼਼ਾਰਸਾਸ਼੍ਚ ਤ੍ਵਯਾ ਮਾ ਹਿੰਸਿਤਵ੍ਯਾਃ|
7 ௭ அவர் நான்காம் முத்திரையை உடைத்தபோது, நான்காம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன்.
ਅਨਨ੍ਤਰੰ ਚਤੁਰ੍ਥਮੁਦ੍ਰਾਯਾਂ ਤੇਨ ਮੋਚਿਤਾਯਾਂ ਚਤੁਰ੍ਥਸ੍ਯ ਪ੍ਰਾਣਿਨ ਆਗਤ੍ਯ ਪਸ਼੍ਯੇਤਿ ਵਾਕ੍ ਮਯਾ ਸ਼੍ਰੁਤਾ|
8 ௮ நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவனுக்குப் பின்னே சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், மரணத்தினாலும், பூமியின் கொடிய மிருகங்களினாலும், பூமியில் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்களைக் கொலைசெய்ய அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (Hadēs )
ਤਤਃ ਪਾਣ੍ਡੁਰਵਰ੍ਣ ਏਕੋ (ਅ)ਸ਼੍ਵੋ ਮਯਾ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਃ, ਤਦਾਰੋਹਿਣੋ ਨਾਮ ਮ੍ਰੁʼਤ੍ਯੁਰਿਤਿ ਪਰਲੋਕਸ਼੍ਚ ਤਮ੍ ਅਨੁਚਰਤਿ ਖਙ੍ਗੇਨ ਦੁਰ੍ਭਿਕ੍ਸ਼਼ੇਣ ਮਹਾਮਾਰ੍ੱਯਾ ਵਨ੍ਯਪਸ਼ੁਭਿਸ਼੍ਚ ਲੋਕਾਨਾਂ ਬਧਾਯ ਪ੍ਰੁʼਥਿਵ੍ਯਾਸ਼੍ਚਤੁਰ੍ਥਾਂਸ਼ਸ੍ਯਾਧਿਪਤ੍ਯੰ ਤਸ੍ਮਾ ਅਦਾਯਿ| (Hadēs )
9 ௯ அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினாலும் தாங்கள் கொடுத்த சாட்சியினாலும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழேப் பார்த்தேன்.
ਅਨਨ੍ਤਰੰ ਪਞ੍ਚਮਮੁਦ੍ਰਾਯਾਂ ਤੇਨ ਮੋਚਿਤਾਯਾਮ੍ ਈਸ਼੍ਵਰਵਾਕ੍ਯਹੇਤੋਸ੍ਤਤ੍ਰ ਸਾਕ੍ਸ਼਼੍ਯਦਾਨਾੱਚ ਛੇਦਿਤਾਨਾਂ ਲੋਕਾਨਾਂ ਦੇਹਿਨੋ ਵੇਦ੍ਯਾ ਅਧੋ ਮਯਾਦ੍ਰੁʼਸ਼੍ਯਨ੍ਤ|
10 ௧0 அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமும் உள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடம் எங்களுடைய இரத்தத்தைக்குறித்து எவ்வளவு காலங்கள் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று அதிக சத்தமாகக் கேட்டார்கள்.
ਤ ਉੱਚੈਰਿਦੰ ਗਦਨ੍ਤਿ, ਹੇ ਪਵਿਤ੍ਰ ਸਤ੍ਯਮਯ ਪ੍ਰਭੋ ਅਸ੍ਮਾਕੰ ਰਕ੍ਤਪਾਤੇ ਪ੍ਰੁʼਥਿਵੀਨਿਵਾਸਿਭਿ ਰ੍ਵਿਵਦਿਤੁੰ ਤਸ੍ਯ ਫਲ ਦਾਤੁਞ੍ਚ ਕਤਿ ਕਾਲੰ ਵਿਲਮ੍ਬਸੇ?
11 ௧௧ அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்களுடைய உடன்பணியாளர்களும் தங்களுடைய சகோதரர்களுமானவர்களின் எண்ணிக்கை நிறைவாகும்வரை இன்னும் கொஞ்சக்காலம் காத்திருக்கவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
ਤਤਸ੍ਤੇਸ਼਼ਾਮ੍ ਏਕੈਕਸ੍ਮੈ ਸ਼ੁਭ੍ਰਃ ਪਰਿੱਛਦੋ (ਅ)ਦਾਯਿ ਵਾਗਿਯਞ੍ਚਾਕਥ੍ਯਤ ਯੂਯਮਲ੍ਪਕਾਲਮ੍ ਅਰ੍ਥਤੋ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਯੇ ਸਹਾਦਾਸਾ ਭ੍ਰਾਤਰੋ ਯੂਯਮਿਵ ਘਾਨਿਸ਼਼੍ਯਨ੍ਤੇ ਤੇਸ਼਼ਾਂ ਸੰਖ੍ਯਾ ਯਾਵਤ੍ ਸਮ੍ਪੂਰ੍ਣਤਾਂ ਨ ਗੱਛਤਿ ਤਾਵਦ੍ ਵਿਰਮਤ|
12 ௧௨ அவர் ஆறாம் முத்திரையை உடைப்பதைப் பார்த்தேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கருப்புக் கம்பளியைப்போலக் கருத்துப்போனது; சந்திரன் இரத்தம்போல ஆனது.
ਅਨਨ੍ਤਰੰ ਯਦਾ ਸ ਸ਼਼ਸ਼਼੍ਠਮੁਦ੍ਰਾਮਮੋਚਯਤ੍ ਤਦਾ ਮਯਿ ਨਿਰੀਕ੍ਸ਼਼ਮਾਣੇ ਮਹਾਨ੍ ਭੂਕਮ੍ਪੋ (ਅ)ਭਵਤ੍ ਸੂਰ੍ੱਯਸ਼੍ਚ ਉਸ਼਼੍ਟ੍ਰਲੋਮਜਵਸ੍ਤ੍ਰਵਤ੍ ਕ੍ਰੁʼਸ਼਼੍ਣਵਰ੍ਣਸ਼੍ਚਨ੍ਦ੍ਰਮਾਸ਼੍ਚ ਰਕ੍ਤਸਙ੍ਕਾਸ਼ੋ (ਅ)ਭਵਤ੍
13 ௧௩ அத்திமரம் பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.
ਗਗਨਸ੍ਥਤਾਰਾਸ਼੍ਚ ਪ੍ਰਬਲਵਾਯੁਨਾ ਚਾਲਿਤਾਦ੍ ਉਡੁਮ੍ਬਰਵ੍ਰੁʼਕ੍ਸ਼਼ਾਤ੍ ਨਿਪਾਤਿਤਾਨ੍ਯਪੱਕਫਲਾਨੀਵ ਭੂਤਲੇ ਨ੍ਯਪਤਨ੍|
14 ௧௪ வானமும் சுருட்டப்பட்ட புத்தகம்போல விலகிப்போனது; மலைகள் தீவுகள் எல்லாம் தங்களுடைய இடங்களைவிட்டு விலகிச்சென்றன.
ਆਕਾਸ਼ਮਣ੍ਡਲਞ੍ਚ ਸਙ੍ਕੁਚ੍ਯਮਾਨਗ੍ਰਨ੍ਥਇਵਾਨ੍ਤਰ੍ਧਾਨਮ੍ ਅਗਮਤ੍ ਗਿਰਯ ਉਪਦ੍ਵੀਪਾਸ਼੍ਚ ਸਰ੍ੱਵੇ ਸ੍ਥਾਨਾਨ੍ਤਰੰ ਚਾਲਿਤਾਃ
15 ௧௫ பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், படைத்தளபதிகளும், பலவான்களும், அடிமைகள், சுதந்திரமானவர்கள் எல்லோரும், குகைகளிலும் மலைகளின் பாறைகளிலும் ஒளிந்துகொண்டு,
ਪ੍ਰੁʼਥਿਵੀਸ੍ਥਾ ਭੂਪਾਲਾ ਮਹਾੱਲੋਕਾਃ ਸਹਸ੍ਤ੍ਰਪਤਯੋ ਧਨਿਨਃ ਪਰਾਕ੍ਰਮਿਣਸ਼੍ਚ ਲੋਕਾ ਦਾਸਾ ਮੁਕ੍ਤਾਸ਼੍ਚ ਸਰ੍ੱਵੇ (ਅ)ਪਿ ਗੁਹਾਸੁ ਗਿਰਿਸ੍ਥਸ਼ੈਲੇਸ਼਼ੁ ਚ ਸ੍ਵਾਨ੍ ਪ੍ਰਾੱਛਾਦਯਨ੍|
16 ௧௬ மலைகளையும் பாறைகளையும் பார்த்து: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;
ਤੇ ਚ ਗਿਰੀਨ੍ ਸ਼ੈਲਾਂਸ਼੍ਚ ਵਦਨ੍ਤਿ ਯੂਯਮ੍ ਅਸ੍ਮਦੁਪਰਿ ਪਤਿਤ੍ਵਾ ਸਿੰਹਾਸਨੋਪਵਿਸ਼਼੍ਟਜਨਸ੍ਯ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਿਤੋ ਮੇਸ਼਼ਸ਼ਾਵਕਸ੍ਯ ਕੋਪਾੱਚਾਸ੍ਮਾਨ੍ ਗੋਪਾਯਤ;
17 ௧௭ அவருடைய கோபத்தின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைத்து நிற்கமுடியும் என்றார்கள்.
ਯਤਸ੍ਤਸ੍ਯ ਕ੍ਰੋਧਸ੍ਯ ਮਹਾਦਿਨਮ੍ ਉਪਸ੍ਥਿਤੰ ਕਃ ਸ੍ਥਾਤੁੰ ਸ਼ਕ੍ਨੋਤਿ?