< வெளிப்படுத்தின விசேஷம் 22 +

1 பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறதை எனக்குக் காண்பித்தான்.
អនន្តរំ ស ស្ផដិកវត៑ និម៌្មលម៑ អម្ឫតតោយស្យ ស្រោតោ មាម៑ អឧឝ៌យត៑ តទ៑ ឦឝ្វរស្យ មេឞឝាវកស្យ ច សិំហាសនាត៑ និគ៌ច្ឆតិ។
2 நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவமரம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த மரத்தின் இலைகள் மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தகுந்தவைகள்.
នគយ៌្យា មាគ៌មធ្យេ តស្យា នទ្យាះ បាឝ៌្វយោរម្ឫតវ្ឫក្ឞា វិទ្យន្តេ តេឞាំ ទ្វាទឝផលានិ ភវន្តិ, ឯកៃកោ វ្ឫក្ឞះ ប្រតិមាសំ ស្វផលំ ផលតិ តទ្វ្ឫក្ឞបត្រាណិ ចាន្យជាតីយានាម៑ អារោគ្យជនកានិ។
3 இனி சாபமில்லை. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.
អបរំ កិមបិ ឝាបគ្រស្តំ បុន រ្ន ភវិឞ្យតិ តស្យា មធ្យ ឦឝ្វរស្យ មេឞឝាវកស្យ ច សិំហាសនំ ស្ថាស្យតិ តស្យ ទាសាឝ្ច តំ សេវិឞ្យន្តេ។
4 அவருடைய ஊழியக்காரர்கள் அவரைச் சேவித்து, அவருடைய முகத்தைப் பார்ப்பார்கள், அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
តស្យ វទនទឝ៌នំ ប្រាប្ស្យន្តិ ភាលេឞុ ច តស្យ នាម លិខិតំ ភវិឞ្យតិ។
5 அங்கே இரவுகள் இருக்காது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டியதில்லை; தேவனாகிய கர்த்தாவே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் எல்லாக் காலங்களிலும் அரசாளுவார்கள். (aiōn g165)
តទានីំ រាត្រិះ បុន រ្ន ភវិឞ្យតិ យតះ ប្រភុះ បរមេឝ្វរស្តាន៑ ទីបយិឞ្យតិ តេ ចានន្តកាលំ យាវទ៑ រាជត្វំ ករិឞ្យន្តេ។ (aiōn g165)
6 பின்பு, தேவதூதன் என்னைப் பார்த்து: “இந்த வசனங்கள் உண்மையும் சத்தியமானவைகள், சீக்கிரமாக நடக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரர்களுக்குக் காட்டும்படி, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்”.
អនន្តរំ ស មាម៑ អវទត៑, វាក្យានីមានិ វិឝ្វាស្យានិ សត្យានិ ច, អចិរាទ៑ យៃ រ្ភវិតវ្យំ តានិ ស្វទាសាន៑ ជ្ញាបយិតុំ បវិត្រភវិឞ្យទ្វាទិនាំ ប្រភុះ បរមេឝ្វរះ ស្វទូតំ ប្រេឞិតវាន៑។
7 “இதோ, சீக்கிரமாக வருகிறேன்; இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கடைபிடிக்கிறவன் பாக்கியவான்” என்றார்.
បឝ្យាហំ តូណ៌ម៑ អាគច្ឆាមិ, ឯតទ្គ្រន្ថស្យ ភវិឞ្យទ្វាក្យានិ យះ បាលយតិ ស ឯវ ធន្យះ។
8 யோவானாகிய நானே இவைகளைப் பார்த்தும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுப் பார்த்தபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.
យោហនហម៑ ឯតានិ ឝ្រុតវាន៑ ទ្ឫឞ្ដវាំឝ្ចាស្មិ ឝ្រុត្វា ទ្ឫឞ្ដ្វា ច តទ្ទឝ៌កទូតស្យ ប្រណាមាត៌្ហំ តច្ចរណយោរន្តិកេ ៜបតំ។
9 அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யவேண்டாம்; “உன்னோடும் உன் சகோதரர்களோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புத்தகத்தின் வசனங்களைக் கடைபிடிக்கிற ஊழியர்களில் நானும் ஒருவன்; தேவனைத் தொழுதுகொள்” என்றான்.
តតះ ស មាម៑ អវទត៑ សាវធានោ ភវ មៃវំ ក្ឫរុ, ត្វយា តវ ភ្រាត្ឫភិ រ្ភវិឞ្យទ្វាទិភិរេតទ្គ្រន្ថស្ថវាក្យបាលនការិភិឝ្ច សហទាសោ ៜហំ។ ត្វម៑ ឦឝ្វរំ ប្រណម។
10 ௧0 அவர் என்னைப் பார்த்து: இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களுக்கு முத்திரை போடவேண்டாம்; காலம் நெருங்கியிருக்கிறது.
ស បុន រ្មាម៑ អវទត៑, ឯតទ្គ្រន្ថស្ថភវិឞ្យទ្វាក្យានិ ត្វយា ន មុទ្រាង្កយិតវ្យានិ យតះ សមយោ និកដវត៌្តី។
11 ௧௧ “அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்; அசுத்தமாக இருக்கிறவன் இன்னும் அசுத்தமாக இருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
អធម៌្មាចារ ឥតះ បរមប្យធម៌្មម៑ អាចរតុ, អមេធ្យាចារ ឥតះ បរមប្យមេធ្យម៑ អាចរតុ ធម៌្មាចារ ឥតះ បរមបិ ធម៌្មម៑ អាចរតុ បវិត្រាចារឝ្ចេតះ បរមបិ បវិត្រម៑ អាចរតុ។
12 ௧௨ இதோ, சீக்கிரமாக வருகிறேன்; அவனவனுடைய செய்கைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடுகூட வருகிறது.
បឝ្យាហំ តូណ៌ម៑ អាគច្ឆាមិ, ឯកៃកស្មៃ ស្វក្រិយានុយាយិផលទានាត៌្ហំ មទ្ទាតវ្យផលំ មម សមវត៌្តិ។
13 ௧௩ நான் அல்பாவும் ஓமெகாவும், தொடக்கமும் முடிவும், முந்தினவரும் பிந்தினவருமாக இருக்கிறேன்.
អហំ កះ ក្ឞឝ្ច ប្រថមះ ឝេឞឝ្ចាទិរន្តឝ្ច។
14 ௧௪ ஜீவமரத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள்வழியாக நகரத்திற்குள் செல்வதற்கும் அவருடைய கட்டளைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
អមុតវ្ឫក្ឞស្យាធិការប្រាប្ត្យត៌្ហំ ទ្វារៃ រ្នគរប្រវេឝាត៌្ហញ្ច យេ តស្យាជ្ញាះ បាលយន្តិ ត ឯវ ធន្យាះ។
15 ௧௫ நாய்களும், சூனியக்காரர்களும், விபசாரக்காரர்களும், கொலைபாதகர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற அனைவரும் வெளியே இருப்பார்கள்.
កុក្កុរៃ រ្មាយាវិភិះ បុង្គាមិភិ រ្នរហន្ត្ឫភិ រ្ទេវាច៌្ចកៃះ សវ៌្វៃរន្ឫតេ ប្រីយមាណៃរន្ឫតាចារិភិឝ្ច ពហិះ ស្ថាតវ្យំ។
16 ௧௬ இவைகளை சபைகளில் உங்களுக்குச் சாட்சியாக தெரிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும், வம்சமும், பிரகாசமுள்ள விடியற்கால நட்சத்திரமுமாக இருக்கிறேன்” என்றார்.
មណ្ឌលីឞុ យុឞ្មភ្យមេតេឞាំ សាក្ឞ្យទានាត៌្ហំ យីឝុរហំ ស្វទូតំ ប្រេឞិតវាន៑, អហមេវ ទាយូទោ មូលំ វំឝឝ្ច, អហំ តេជោមយប្រភាតីយតារាស្វរូបះ។
17 ௧௭ ஆவியானவரும் மணமகளும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாக இருக்கிறவன் வரவேண்டும்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாக வாங்கிக்கொள்ளவேண்டும்.
អាត្មា កន្យា ច កថយតះ, ត្វយាគម្យតាំ។ ឝ្រោតាបិ វទតុ, អាគម្យតាមិតិ។ យឝ្ច ត្ឫឞាត៌្តះ ស អាគច្ឆតុ យឝ្ចេច្ឆតិ ស វិនា មូល្យំ ជីវនទាយិ ជលំ គ្ឫហ្លាតុ។
18 ௧௮ இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற அனைவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடு எதையாவது கூட்டினால், இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
យះ កឝ្ចិទ៑ ឯតទ្គ្រន្ថស្ថភវិឞ្យទ្វាក្យានិ ឝ្ឫណោតិ តស្មា អហំ សាក្ឞ្យមិទំ ទទាមិ, កឝ្ចិទ៑ យទ្យបរំ កិមប្យេតេឞុ យោជយតិ តហ៌ីឝ្វរោគ្រន្ថេៜស្មិន៑ លិខិតាន៑ ទណ្ឌាន៑ តស្មិន្នេវ យោជយិឞ្យតិ។
19 ௧௯ ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புத்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாவது எடுத்துப்போட்டால், ஜீவபுத்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகளில் இருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
យទិ ច កឝ្ចិទ៑ ឯតទ្គ្រន្ថស្ថភវិឞ្យទ្វាក្យេភ្យះ កិមប្យបហរតិ តហ៌ីឝ្វរោ គ្រន្ថេ ៜស្មិន៑ លិខិតាត៑ ជីវនវ្ឫក្ឞាត៑ បវិត្រនគរាច្ច តស្យាំឝមបហរិឞ្យតិ។
20 ௨0 இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: “உண்மையாகவே நான் சீக்கிரமாக வருகிறேன்” என்கிறார். “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.”
ឯតត៑ សាក្ឞ្យំ យោ ទទាតិ ស ឯវ វក្តិ សត្យម៑ អហំ តូណ៌ម៑ អាគច្ឆាមិ។ តថាស្តុ។ ប្រភោ យីឝោ, អាគម្យតាំ ភវតា។
21 ௨௧ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.
អស្មាកំ ប្រភោ រ្យីឝុខ្រីឞ្ដស្យានុគ្រហះ សវ៌្វេឞុ យុឞ្មាសុ វត៌្តតាំ។ អាមេន៑។

< வெளிப்படுத்தின விசேஷம் 22 +