< வெளிப்படுத்தின விசேஷம் 22 +

1 பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறதை எனக்குக் காண்பித்தான்.
ⲁ̅ⲟⲩⲟϩ ⲁⲩⲧⲁⲙⲟⲓ ⳿ⲉⲟⲩⲓⲁⲣⲟ ⳿ⲙⲙⲱⲟⲩ ⳿ⲛⲱⲛϧ ⲉϥⲫⲟⲣⲓ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲛⲟⲩ⳿ⲭⲣⲓⲥⲧⲁⲗⲗⲟⲛ ⲉϥⲛⲏⲟⲩ ⳿ⲉⲃⲟⲗ ϩⲁ ⲡⲓ⳿ⲑⲣⲟⲛⲟⲥ ⳿ⲛⲧⲉ ⲫϯ ⲛⲉⲙ ⲡⲓϩⲓⲏⲃ.
2 நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவமரம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த மரத்தின் இலைகள் மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தகுந்தவைகள்.
ⲃ̅ϧⲉⲛ ⳿ⲑⲙⲏϯ ⳿ⲙⲡⲉⲥ⳿ϣⲑⲉϩ ⲟⲩⲟϩ ⲡⲓⲓⲁⲣⲟ ⲥⲁ⳿ⲙⲛⲁⲓ ⲛⲉⲙ ⲥⲁ⳿ⲙⲛⲁⲓ ⲟⲩ⳿ϣϣⲏⲛ ⳿ⲛⲧⲉ ⳿ⲡⲱⲛϧ ⲉϥ⳿ⲓⲛⲓ ⳿ⲙⲡⲓⲓ̅ⲃ̅ ⳿ⲛⲟⲩⲧⲁϩ ⳿ⲉⲃⲟⲗ ⲟⲩⲁⲓ ϧⲁⲣⲁ ⳿ⲁⲃⲟⲧ ⲟⲩⲟϩ ⲛⲓϫⲱⲃⲓ ⳿ⲛⲧⲉ ⲡⲓ⳿ϣϣⲏⲛ ⲉⲩⲉⲣⲫⲁϧⲣⲓ ⳿ⲛⲛⲉⲛⲃⲁⲗ ⳿ⲛⲛⲓⲉⲑⲛⲟⲥ.
3 இனி சாபமில்லை. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.
ⲅ̅ⲟⲩⲟϩ ⲥⲱϥ ⲛⲓⲃⲉⲛ ⳿ⲛⲛⲉϥϣⲱⲡⲓ ϫⲉ ⲟⲩⲟϩ ⲡⲓ⳿ⲑⲣⲟⲛⲟⲥ ⳿ⲛⲧⲉ ⲫϯ ⲛⲉⲙ ⲡⲓϩⲓⲏⲃ ⲉⲩ⳿ⲉϣⲱⲡⲓ ⳿ⲛϧⲏⲧⲥ ⲟⲩⲟϩ ⳿ⲛⲛⲉϥϣⲱⲡⲓ ⳿ⲛϫⲉ ⳿ⲡϫⲱⲛⲧ ⲁⲗⲗⲁ ⲛⲓ⳿ⲉⲃⲓⲁⲓⲕ ⳿ⲛⲧⲉ ⲫϯ ⲉⲩ⳿ⲉϣⲉⲙϣⲓ ⳿ⲙⲙⲟϥ.
4 அவருடைய ஊழியக்காரர்கள் அவரைச் சேவித்து, அவருடைய முகத்தைப் பார்ப்பார்கள், அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
ⲇ̅ⲟⲩⲟϩ ⲉⲩⲛⲁⲩ ⳿ⲉⲡⲉϥϩⲟ ⲟⲩⲟϩ ⲡⲉϥⲣⲁⲛ ϩⲓ ⲧⲟⲩⲧⲉϩⲛⲓ.
5 அங்கே இரவுகள் இருக்காது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டியதில்லை; தேவனாகிய கர்த்தாவே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் எல்லாக் காலங்களிலும் அரசாளுவார்கள். (aiōn g165)
ⲉ̅⳿ⲛⲛⲉ ⳿ⲉϫⲱⲣϩ ϣⲱⲡⲓ ϫⲉ ⲟⲩⲇⲉ ⳿ⲛⲛⲟⲩⲉⲣ⳿ⲭ ⲣⲓⲁ ⳿ⲛⲟⲩⲱⲓⲛⲓ ⳿ⲛϧⲏⲧⲥ ⲟⲩⲇⲉ ⲟⲩⲟⲩⲱⲓⲛⲓ ⳿ⲛⲧⲉ ⳿ⲫⲣⲏ ϫⲉ Ⲡ⳪ ⲫϯ ⲉϥ⳿ⲉⲉⲣⲟⲩⲱⲓⲛⲓ ⳿ⲉⲣⲱⲟⲩ ⲟⲩⲟϩ ⲉⲩ⳿ⲉⲉⲣⲟⲩⲣⲟ ϣⲁ ⲉⲛⲉϩ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲉⲛⲉϩ. (aiōn g165)
6 பின்பு, தேவதூதன் என்னைப் பார்த்து: “இந்த வசனங்கள் உண்மையும் சத்தியமானவைகள், சீக்கிரமாக நடக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரர்களுக்குக் காட்டும்படி, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்”.
ⲋ̅ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ⲛⲏⲓ ϫⲉ ⲛⲁⲓⲥⲁϫⲓ ⲥⲉ⳿ⲛϩⲟⲧ ⲟⲩⲟϩ ⲥⲉⲟⲩⲁⲃ ϩⲁⲛⲙⲉⲑⲙⲏⲓ ⲛⲉ ⲟⲩⲟϩ Ⲡ⳪ ⲫϯ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲡ͞ⲛⲁ̅ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲁϥⲧⲁⲟⲩⲟ ⳿ⲙⲡⲉϥⲁⲅⲅⲉⲗⲟⲥ ⳿ⲉⲧⲁⲙⲉ ⲛⲉϥⲉⲃⲓⲁⲓⲕ ⳿ⲉⲛⲏⲉⲧⲥⲉ⳿ⲙ⳿ⲡϣⲁ ⳿ⲛⲧⲟⲩϣⲱⲡⲓ ⳿ⲛⲭⲱⲗⲉⲙ.
7 “இதோ, சீக்கிரமாக வருகிறேன்; இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கடைபிடிக்கிறவன் பாக்கியவான்” என்றார்.
ⲍ̅ϩⲏⲡⲡⲉ ϯⲛⲏⲟⲩ ϩⲏⲡⲡⲉ ϯⲛⲏⲟⲩ ⳿ⲛⲭⲱⲗⲉⲙ ⲱⲟⲩ⳿ⲛⲓⲁⲧϥ ⳿ⲙⲫⲏⲉⲑⲛⲁ⳿ⲁⲣⲉϩ ⳿ⲉⲛⲓⲥⲁϫⲓ ⳿ⲛⲧⲉ ⲧⲁⲓ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲓⲁ ⳿ⲛⲧⲉ ⲡⲁⲓϫⲱⲙ.
8 யோவானாகிய நானே இவைகளைப் பார்த்தும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுப் பார்த்தபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.
ⲏ̅⳿ⲁⲛⲟⲕ ⲡⲉ ⲓⲱⲁⲛⲛⲏⲥ ⲫⲏⲉⲧⲁϥⲛⲁⲩ ⲟⲩⲟϩ ⲫⲏⲉⲧⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲛⲁⲓ ⲧⲟⲧⲉ ⲉⲧⲁⲓⲥⲱⲧⲉⲙ ⲟⲩⲟϩ ⲉⲧⲁⲓⲛⲁⲩ ⳿ⲉⲛⲁⲓ ⲁⲓϩⲓⲧⲧ ⲉⲡⲉⲥⲏ ⲧ ⳿ⲙⲡⲉ⳿ⲙⲑⲟ ⳿ⲛⲛⲉⲛϭⲁⲗⲁⲩϫ ⳿ⲙⲡⲓⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲫⲏⲉⲧⲧⲁⲙⲟ ⳿ⲙⲙⲟⲓ ⳿ⲉⲛⲁⲓ.
9 அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யவேண்டாம்; “உன்னோடும் உன் சகோதரர்களோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புத்தகத்தின் வசனங்களைக் கடைபிடிக்கிற ஊழியர்களில் நானும் ஒருவன்; தேவனைத் தொழுதுகொள்” என்றான்.
ⲑ̅ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ⲛⲏⲓ ϫⲉ ⳿ⲙⲫⲱⲣ ⳿ⲁⲛⲟⲕ ⲟⲩ⳿ϣⲫⲏⲣ ⳿ⲙⲃⲱⲕ ⳿ⲛⲧⲁⲕ ⲛⲉⲙ ⲛⲉⲕ⳿ⲥⲛⲏⲟⲩ ⲛⲓ⳿ⲡⲣⲟⲫⲏ ⲧⲏⲥ ⲛⲉⲙ ⲛⲏⲉⲑⲛⲁ⳿ⲁⲣⲉϩ ⳿ⲉⲛⲓⲥⲁϫⲓ ⳿ⲛⲧⲉ ⲡⲁⲓϫⲱⲙ ⲟⲩⲱϣⲧ ⳿ⲙⲫϯ.
10 ௧0 அவர் என்னைப் பார்த்து: இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களுக்கு முத்திரை போடவேண்டாம்; காலம் நெருங்கியிருக்கிறது.
ⲓ̅ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ⲛⲏⲓ ϫⲉ ⳿ⲙⲡⲉⲣⲧⲉⲃ ⲛⲓⲥⲁϫⲓ ⳿ⲛⲧⲉ ⲧⲁⲓ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲓⲁ ⳿ⲛⲧⲉ ⲡⲁⲓϫⲱⲙ ⲡⲓⲥⲏⲟⲩ ⲅⲁⲣ ⲁϥϧⲱⲛⲧ.
11 ௧௧ “அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்; அசுத்தமாக இருக்கிறவன் இன்னும் அசுத்தமாக இருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
ⲓ̅ⲁ̅ⲫⲏⲉⲧϭⲓ⳿ⲛϫⲟⲛⲥ ⲙⲁⲣⲉϥϭⲓ⳿ⲛϫⲟⲛⲥ ⲟⲛ ⲫⲏⲉⲧⲑⲱⲗⲉⲃ ⲙⲁⲣⲉϥⲑⲱⲗⲉⲃ ⲡⲓ⳿ⲑⲙⲏⲓ ⲙⲁⲣⲉϥ⳿ⲑⲙⲁⲓⲟϥ ⲫⲏⲉⲑⲟⲩⲁⲃ ⲙⲁⲣⲉϥⲧⲟⲩⲃⲟϥ.
12 ௧௨ இதோ, சீக்கிரமாக வருகிறேன்; அவனவனுடைய செய்கைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடுகூட வருகிறது.
ⲓ̅ⲃ̅ϩⲏⲡⲡⲉ ϯⲛⲏⲟⲩ ⳿ⲛⲭⲱⲗⲉⲙ ⲡⲁⲃⲉⲭⲉ ⲛⲉⲙⲏⲓ ϯⲛⲁϯ ⳿ⲙⲡⲓⲟⲩⲁⲓ ⲡⲓⲟⲩⲁⲓ ⲕⲁⲧⲁ ⲛⲉϥ⳿ϩⲃⲏ ⲟⲩ⳿ⲓ.
13 ௧௩ நான் அல்பாவும் ஓமெகாவும், தொடக்கமும் முடிவும், முந்தினவரும் பிந்தினவருமாக இருக்கிறேன்.
ⲓ̅ⲅ̅⳿ⲁⲛⲟⲕ ⲡⲉ ⲡⲓⲁⲗⲫⲁ ⲛⲉⲙ ⲡⲓⲱ ϯⲁⲣⲭⲏ ⲛⲉⲙ ⲡⲓϫⲱⲕ ⳿ⲉⲃⲟⲗ.
14 ௧௪ ஜீவமரத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள்வழியாக நகரத்திற்குள் செல்வதற்கும் அவருடைய கட்டளைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
ⲓ̅ⲇ̅ⲱⲟⲩ⳿ⲛⲓⲁⲧⲟⲩ ⳿ⲛⲟⲩⲟⲛ ⲛⲓⲃⲉⲛ ⲛⲏⲉⲑⲛⲁ⳿ⲓⲣⲓ ⳿ⲛⲛⲉϥⲉⲛⲧⲟⲗⲏ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉ ⲡⲟⲩⲉⲣϣⲓϣⲓ ϣⲱⲡⲓ ϩⲓϫⲉⲛ ⲡⲓ⳿ϣϣⲏⲛ ⳿ⲛⲧⲉ ⳿ⲡⲱⲛϧ ⲟⲩⲟϩ ⲉⲩ⳿ⲉϣⲉ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉϯⲃⲁⲕⲓ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲡⲓⲡⲩⲗⲱⲛ.
15 ௧௫ நாய்களும், சூனியக்காரர்களும், விபசாரக்காரர்களும், கொலைபாதகர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற அனைவரும் வெளியே இருப்பார்கள்.
ⲓ̅ⲉ̅ⲛⲓⲟⲩϩⲱⲣ ⲇⲉ ⲥⲁⲃⲟⲗ ⲛⲉⲙ ⲛⲓⲫⲁⲣⲙⲁⲅⲟⲥ ⲛⲉⲙ ⲛⲓⲡⲟⲣⲛⲟⲥ ⲛⲉⲙ ⲛⲓⲣⲉϥϧⲱⲧⲉⲃ ⲛⲉⲙ ⲛⲓϣⲁⲙϣⲉ ⲓϧ ⲛⲉⲙ ⲟⲩⲟⲛ ⲛⲓⲃⲉⲛ ⲉⲧ⳿ⲓⲣⲓ ⳿ⲛϯⲙⲉⲑⲛⲟⲩϫ.
16 ௧௬ இவைகளை சபைகளில் உங்களுக்குச் சாட்சியாக தெரிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும், வம்சமும், பிரகாசமுள்ள விடியற்கால நட்சத்திரமுமாக இருக்கிறேன்” என்றார்.
ⲓ̅ⲋ̅⳿ⲁⲛⲟⲕ ⲡⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲁⲓⲧⲁⲟⲩⲟ ⳿ⲙⲡⲁⲁⲅⲅⲉⲗⲟⲥ ⳿ⲉⲉⲣⲙⲉⲑⲣⲉ ⲛⲱⲧⲉⲛ ⳿ⲛⲛⲁⲓⲥⲁϫⲓ ϧⲉⲛ ⲛⲓⲉⲕ⳿ⲕⲗⲏⲥⲓⲁ ⲧⲏⲣⲟⲩ ⳿ⲁⲛⲟⲕ ⲡⲉ ϯⲛⲟⲩⲛⲓ ⲛⲉⲙ ⲡⲓⲅⲉⲛⲟⲥ ⳿ⲛⲧⲉ ⲇⲁⲩⲓⲇ ⲛⲉⲙ ⲡⲓⲥⲓⲟⲩ ⳿ⲉϣⲁϥϣⲁⲓ ⳿ⲛⲧⲟⲟⲩ⳿ⲓ.
17 ௧௭ ஆவியானவரும் மணமகளும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாக இருக்கிறவன் வரவேண்டும்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாக வாங்கிக்கொள்ளவேண்டும்.
ⲓ̅ⲍ̅ⲛⲉⲙ ⲡ͞ⲛⲁ̅ ⲛⲉⲙ ϯϣⲉⲗⲉⲧ ⲟⲩⲟϩ ⲥⲉϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⳿ⲁⲙⲟⲩ ⲛⲉⲙ ⲫⲏⲉⲧⲥⲱⲧⲉⲙ ⲙⲁⲣⲟⲩϫⲟⲥ ϫⲉ ⳿ⲁⲙⲟⲩ ⲟⲩⲟϩ ⲫⲏⲉⲧⲟⲃⲓ ⲙⲁⲣⲉϥ⳿ⲓ ⲫⲏⲉⲑⲟⲩⲱϣ ⲙⲁⲣⲉϥϭⲓ ⳿ⲛⲟⲩⲙⲱⲟⲩ ⳿ⲛⲱⲛϧ ⳿ⲛϫⲓⲛϫⲏ.
18 ௧௮ இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற அனைவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடு எதையாவது கூட்டினால், இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
ⲓ̅ⲏ̅ϯⲉⲣⲙⲉⲑⲣⲉ ⳿ⲁⲛⲟⲕ ⳿ⲛⲟⲩⲟⲛ ⲛⲓⲃⲉⲛ ⲉⲧⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲛⲓⲥⲁϫⲓ ⳿ⲛⲧⲉ ⲧⲁⲓ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲓⲁ ⳿ⲛⲧⲉ ⲡⲁⲓϫⲱⲙ ϫⲉ ⲫⲏⲉⲑⲛⲁⲧⲟⲩϩⲟ ⳿ⲉⲣⲱⲟⲩ ⲉⲣⲉ ⲫϯ ⲧⲟⲩϩⲟ ⳿ⲉⲣⲱⲟⲩ ⳿ⲛⲛⲓⲉⲣϧⲟⲧ ⲉⲧ⳿ⲥϧⲏⲟⲩⲧ ϩⲓ ⲡⲁⲓϫⲱⲙ.
19 ௧௯ ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புத்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாவது எடுத்துப்போட்டால், ஜீவபுத்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகளில் இருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
ⲓ̅ⲑ̅ⲫⲏ ⲇⲉ ⲉⲑⲛⲁϫⲱϫ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲓⲥⲁϫⲓ ⳿ⲛⲧⲉ ⲡⲁⲓϫⲱⲙ ⳿ⲛⲧⲉ ⲧⲁⲓ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲓⲁ ⲉⲣⲉ ⲫϯ ⲉϥ⳿ⲉⲉⲗ ⲡⲉϥⲙⲉⲣⲟⲥ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓ ⳿ⲡϫⲱⲙ ⳿ⲛⲧⲉ ⳿ⲡⲱⲛϧ ⲛⲉⲙ ϯⲃⲁⲕⲓ ⲉⲑⲟⲩⲁⲃ ⲉⲧ⳿ⲥϧⲏ ⲟⲩⲧ ϩⲓ ⲡⲁⲓϫⲱⲙ.
20 ௨0 இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: “உண்மையாகவே நான் சீக்கிரமாக வருகிறேன்” என்கிறார். “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.”
ⲕ̅⳿ϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⳿ⲛϫⲉ ⲫⲏⲉⲧⲉⲣⲙⲉⲑⲣⲉ ⳿ⲛⲛⲁⲓ ϫⲉ ⲥⲉⲛⲁϣⲱⲡⲓ ⲟⲩⲟϩ ⲥⲉⲛⲏⲟⲩ ⳿ⲛⲭⲱⲗⲉⲙ ⳿ⲁⲙⲟⲩ ⲡⲉⲛ⳪ Ⲓⲏ̅ⲥ̅ Ⲡⲭ̅ⲥ̅.
21 ௨௧ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.
ⲕ̅ⲁ̅⳿ⲉϫⲉⲛ ⲛⲓⲁⲅⲓⲟⲥ ⲧⲏⲣⲟⲩ ϣⲁ ⲉⲛⲉϩ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲉⲛⲉϩ ⲁⲙⲏⲛ ⲁⲡⲟⲕⲁⲗⲩⲙⲯⲓⲥ ⲓⲱⲁⲛⲛⲟⲩ ⲑⲉⲟⲗⲟⲅⲟⲩ ⲉⲛ ⲓⲣⲏⲛⲏ ⲧⲟⲩ ⲕ̅ⲉ̅ ⲁⲙⲏⲛ

< வெளிப்படுத்தின விசேஷம் 22 +