< வெளிப்படுத்தின விசேஷம் 21 >

1 பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் பார்த்தேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; கடலும் இல்லாமல்போனது.
অনন্তরং নৱীনম্ আকাশমণ্ডলং নৱীনা পৃথিৱী চ মযা দৃষ্টে যতঃ প্রথমম্ আকাশমণ্ডলং প্রথমা পৃথিৱী চ লোপং গতে সমুদ্রো ঽপি ততঃ পরং ন ৱিদ্যতে|
2 யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்திலிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதைப் பார்த்தேன்; அது தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
অপরং স্ৱর্গাদ্ অৱরোহন্তী পৱিত্রা নগরী, অর্থতো নৱীনা যিরূশালমপুরী মযা দৃষ্টা, সা ৱরায ৱিভূষিতা কন্যেৱ সুসজ্জিতাসীৎ|
3 மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனிதர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலம் இருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாக இருப்பார்; அவர்களும் அவருடைய மக்களாக இருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடு இருந்து அவர்களுடைய தேவனாக இருப்பார்.
অনন্তরং স্ৱর্গাদ্ এষ মহারৱো মযা শ্রুতঃ পশ্যাযং মানৱৈঃ সার্দ্ধম্ ঈশ্ৱরস্যাৱাসঃ, স তৈঃ সার্দ্ধং ৱৎস্যতি তে চ তস্য প্রজা ভৱিষ্যন্তি, ঈশ্ৱরশ্চ স্ৱযং তেষাম্ ঈশ্ৱরো ভূৎৱা তৈঃ সার্দ্ধং স্থাস্যতি|
4 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று சொன்னது.
তেষাং নেত্রেভ্যশ্চাশ্রূণি সর্ৱ্ৱাণীশ্ৱরেণ প্রমার্ক্ষ্যন্তে মৃত্যুরপি পুন র্ন ভৱিষ্যতি শোকৱিলাপক্লেশা অপি পুন র্ন ভৱিষ্যন্তি, যতঃ প্রথমানি সর্ৱ্ৱাণি ৱ্যতীতিনি|
5 சிங்காசனத்தின்மேல் உட்காருந்திருந்தவர்: இதோ, நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.
অপরং সিংহাসনোপৱিষ্টো জনোঽৱদৎ পশ্যাহং সর্ৱ্ৱাণি নূতনীকরোমি| পুনরৱদৎ লিখ যত ইমানি ৱাক্যানি সত্যানি ৱিশ্ৱাস্যানি চ সন্তি|
6 அன்றியும், அவர் என்னைப் பார்த்து: ஆயிற்று, நான் அல்பாவும், ஓமெகாவும், தொடக்கமும், முடிவுமாக இருக்கிறேன். தாகமாக இருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீர் ஊற்றிலிருந்து இலவசமாகக் கொடுப்பேன்.
পন র্মাম্ অৱদৎ সমাপ্তং, অহং কঃ ক্ষশ্চ, অহম্ আদিরন্তশ্চ যঃ পিপাসতি তস্মা অহং জীৱনদাযিপ্রস্রৱণস্য তোযং ৱিনামূল্যং দাস্যামি|
7 ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாக இருப்பேன், அவன் என் குமாரனாக இருப்பான்.
যো জযতি স সর্ৱ্ৱেষাম্ অধিকারী ভৱিষ্যতি, অহঞ্চ তস্যেশ্ৱরো ভৱিষ্যামি স চ মম পুত্রো ভৱিষ্যতি|
8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (Limnē Pyr g3041 g4442)
কিন্তু ভীতানাম্ অৱিশ্ৱাসিনাং ঘৃণ্যানাং নরহন্তৃণাং ৱেশ্যাগামিনাং মোহকানাং দেৱপূজকানাং সর্ৱ্ৱেষাম্ অনৃতৱাদিনাঞ্চাংশো ৱহ্নিগন্ধকজ্ৱলিতহ্রদে ভৱিষ্যতি, এষ এৱ দ্ৱিতীযো মৃত্যুঃ| (Limnē Pyr g3041 g4442)
9 பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணமகளை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,
অনন্তরং শেষসপ্তদণ্ডৈঃ পরিপূর্ণাঃ সপ্ত কংসা যেষাং সপ্তদূতানাং করেষ্ৱাসন্ তেষামেক আগত্য মাং সম্ভাষ্যাৱদৎ, আগচ্ছাহং তাং কন্যাম্ অর্থতো মেষশাৱকস্য ভাৱিভার্য্যাং ৎৱাং দর্শযামি|
10 ௧0 பெரிதும் உயரமுமான ஒரு மலையின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
১০ততঃ স আত্মাৱিষ্টং মাম্ অত্যুচ্চং মহাপর্ৱ্ৱতমেংক নীৎৱেশ্ৱরস্য সন্নিধিতঃ স্ৱর্গাদ্ অৱরোহন্তীং যিরূশালমাখ্যাং পৱিত্রাং নগরীং দর্শিতৱান্|
11 ௧௧ அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கின் ஒளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.
১১সা ঈশ্ৱরীযপ্রতাপৱিশিষ্টা তস্যাস্তেজো মহার্ঘরত্নৱদ্ অর্থতঃ সূর্য্যকান্তমণিতেজস্তুল্যং|
12 ௧௨ அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.
১২তস্যাঃ প্রাচীরং বৃহদ্ উচ্চঞ্চ তত্র দ্ৱাদশ গোপুরাণি সন্তি তদ্গোপুরোপরি দ্ৱাদশ স্ৱর্গদূতা ৱিদ্যন্তে তত্র চ দ্ৱাদশ নামান্যর্থত ইস্রাযেলীযানাং দ্ৱাদশৱংশানাং নামানি লিখিতানি|
13 ௧௩ வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் வம்சத்தில் உள்ள பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.
১৩পূর্ৱ্ৱদিশি ত্রীণি গোপুরাণি উত্তরদিশি ত্রীণি গোপুরাণি দক্ষিণদিষি ত্রীণি গোপুরাণি পশ্চীমদিশি চ ত্রীণি গোপুরাণি সন্তি|
14 ௧௪ நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்கள் இருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு பெயர்களும் பதிந்திருந்தன.
১৪নগর্য্যাঃ প্রাচীরস্য দ্ৱাদশ মূলানি সন্তি তত্র মেষাশাৱাকস্য দ্ৱাদশপ্রেরিতানাং দ্ৱাদশ নামানি লিখিতানি|
15 ௧௫ என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான்.
১৫অনরং নগর্য্যাস্তদীযগোপুরাণাং তৎপ্রাচীরস্য চ মাপনার্থং মযা সম্ভাষমাণস্য দূতস্য করে স্ৱর্ণময একঃ পরিমাণদণ্ড আসীৎ|
16 ௧௬ அந்த நகரம் சதுரமாக இருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாக இருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது இரண்டாயிரத்து இருநூறு கிலோமீட்டர் தூர அளவாக இருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாக இருந்தது.
১৬নগর্য্যা আকৃতিশ্চতুরস্রা তস্যা দৈর্ঘ্যপ্রস্থে সমে| ততঃ পরং স তেগ পরিমাণদণ্ডেন তাং নগরীং পরিমিতৱান্ তস্যাঃ পরিমাণং দ্ৱাদশসহস্রনল্ৱাঃ| তস্যা দৈর্ঘ্যং প্রস্থম্ উচ্চৎৱঞ্চ সমানানি|
17 ௧௭ அவன் அதின் மதிலை அளந்தபோது, மனித அளவின்படியே அது நூற்றுநாற்பத்துநான்கு முழமாக இருந்தது.
১৭অপরং স তস্যাঃ প্রাচীরং পরিমিতৱান্ তস্য মানৱাস্যার্থতো দূতস্য পরিমাণানুসারতস্তৎ চতুশ্চৎৱারিংশদধিকাশতহস্তপরিমিতং |
18 ௧௮ அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாக இருந்தது.
১৮তস্য প্রাচীরস্য নির্ম্মিতিঃ সূর্য্যকান্তমণিভি র্নগরী চ নির্ম্মলকাচতুল্যেন শুদ্ধসুৱর্ণেন নির্ম্মিতা|
19 ௧௯ நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் எல்லாவகை இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,
১৯নগর্য্যাঃ প্রাচীরস্য মূলানি চ সর্ৱ্ৱৱিধমহার্ঘমণিভি র্ভূষিতানি| তেষাং প্রথমং ভিত্তিমূলং সূর্য্যকান্তস্য, দ্ৱিতীযং নীলস্য, তৃতীযং তাম্রমণেঃ, চতুর্থং মরকতস্য,
20 ௨0 ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.
২০পঞ্চমং ৱৈদূর্য্যস্য, ষষ্ঠং শোণরত্নস্য, সপ্তমং চন্দ্রকান্তস্য, অষ্টমং গোমেদস্য, নৱমং পদ্মরাগস্য, দশমং লশূনীযস্য, একাদশং ষেরোজস্য, দ্ৱাদশং মর্টীষ্মণেশ্চাস্তি|
21 ௨௧ பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாக இருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாக இருந்தது.
২১দ্ৱাদশগোপুরাণি দ্ৱাদশমুক্তাভি র্নির্ম্মিতানি, একৈকং গোপুরম্ একৈকযা মুক্তযা কৃতং নগর্য্যা মহামার্গশ্চাচ্ছকাচৱৎ নির্ম্মলসুৱর্ণেন নির্ম্মিতং|
22 ௨௨ அதிலே தேவாலயத்தை நான் பார்க்கவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.
২২তস্যা অন্তর একমপি মন্দিরং মযা ন দৃষ্টং সতঃ সর্ৱ্ৱশক্তিমান্ প্রভুঃ পরমেশ্ৱরো মেষশাৱকশ্চ স্ৱযং তস্য মন্দিরং|
23 ௨௩ நகரத்திற்கு வெளிச்சம் கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டியதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.
২৩তস্যৈ নগর্য্যৈ দীপ্তিদানার্থং সূর্য্যাচন্দ্রমসোঃ প্রযোজনং নাস্তি যত ঈশ্ৱরস্য প্রতাপস্তাং দীপযতি মেষশাৱকশ্চ তস্যা জ্যোতিরস্তি|
24 ௨௪ இரட்சிக்கப்படுகிற மக்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்களுடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
২৪পরিত্রাণপ্রাপ্তলোকনিৱহাশ্চ তস্যা আলোকে গমনাগমনে কুর্ৱ্ৱন্তি পৃথিৱ্যা রাজানশ্চ স্ৱকীযং প্রতাপং গৌরৱঞ্চ তন্মধ্যম্ আনযন্তি|
25 ௨௫ அங்கே இரவு இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை.
২৫তস্যা দ্ৱারাণি দিৱা কদাপি ন রোৎস্যন্তে নিশাপি তত্র ন ভৱিষ্যতি|
26 ௨௬ உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
২৬সর্ৱ্ৱজাতীনাং গৌরৱপ্রতাপৌ তন্মধ্যম্ আনেষ্যেতে|
27 ௨௭ தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் செல்வதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டவர்கள்மட்டும் அதில் செல்வார்கள்.
২৭পরন্ত্ৱপৱিত্রং ঘৃণ্যকৃদ্ অনৃতকৃদ্ ৱা কিমপি তন্মধ্যং ন প্রৱেক্ষ্যতি মেষশাৱকস্য জীৱনপুস্তকে যেষাং নামানি লিখিতানি কেৱলং ত এৱ প্রৱেক্ষ্যন্তি|

< வெளிப்படுத்தின விசேஷம் 21 >