< வெளிப்படுத்தின விசேஷம் 21 >
1 ௧ பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் பார்த்தேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; கடலும் இல்லாமல்போனது.
ତା ପାଚେ ଆନେଙ୍ଗ୍ ର ପୁନି ଆକାସିଂ ଆରି ପୁନି ପୁର୍ତି ହୁଡ଼୍ତାଂ; ଇନେକିଦେଂକି ପର୍ତୁମ୍ ଆକାସିଂ ଆରି ପର୍ତୁମ୍ ପୁର୍ତି ବୁଡା ଆଜ଼ି ମାଚାତ୍, ଆରେ ହାମ୍ଦୁର୍ ଆରେ ହିଲ୍ୱାତାତ୍ ।
2 ௨ யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்திலிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதைப் பார்த்தேன்; அது தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
ଆରେ ଆନେଙ୍ଗ୍ ପୁଇପୁୟା ଗାଡ଼୍ଦ, ଇଚିସ୍ ପୁନି ଜିରୁସାଲମ୍ତ ବିବାଦାଙ୍ଗ୍ଣେନ୍ କାଜିଂ ରଞ୍ଚି ଗାଡ଼୍ ଲାକେ ଜାଗ୍ରତ୍ ଆଜ଼ି ସାର୍ଗେତାଂ ଇସ୍ୱର୍ତି ଲାଗାଂତାଂ ପୁର୍ତିତ ଜୁଦ୍ନାକା ହୁଡ଼୍ତାଂ ।
3 ௩ மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனிதர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலம் இருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாக இருப்பார்; அவர்களும் அவருடைய மக்களாக இருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடு இருந்து அவர்களுடைய தேவனாக இருப்பார்.
ଆରେ ଆନେଙ୍ଗ୍ ଗାଦି ବିତ୍ରେତାଂ ର ଗାଜା ସବଦ୍ ଇଦାଂ ଇନାକା ୱେଚାଙ୍ଗ୍, ହୁଡ଼ାଟ୍, ମାନାୟାର୍ ବିତ୍ରେ ଇସ୍ୱର୍ତି ବାହାକିନାକା ମାନାତ୍, ହେୱାନ୍ ହେୱାର୍ ଲାହାଙ୍ଗ୍ ବାହାକିନାନ୍, ଆରେ ହେୱାର୍ ଇସ୍ୱର୍ ଲକୁ ଆନାର୍ ଆରେ ଇସ୍ୱର୍ ନିଜେ ହେୱାର୍ ଲାହାଂ ମାନ୍ଗାନାନ୍,
4 ௪ அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று சொன்னது.
ହେୱାର୍ କାଣ୍ଙ୍ଗାତାଂ ୱିଜ଼ୁ କାଣେଲ୍ ନେନ୍ଦାନାନ୍; ହାକି ଆରେ ଗିଟା ଆଉତ୍; ଦୁକ୍ କି ଆଡ଼୍ବାନାକା କି ନନାକା ଆରେ ଆଉତ୍; ଇନେକିଦେଂକି ଆଗେନି ବିସ୍ରେ ସବୁ ବୁଡ଼ା ଆତାତ୍ନ୍ନା ।
5 ௫ சிங்காசனத்தின்மேல் உட்காருந்திருந்தவர்: இதோ, நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.
ପାଚେ ଗାଦିତ କୁଚ୍ଚି ମାନାୟ୍ ଇଚାନ୍, ହୁଡ଼ାଟ୍ ଆପ୍ ସବୁ ବିସ୍ରେ ପୁନାକା କିତାପ୍ନା । ଆରେ ହେୱାନ୍ ଇଚାନ୍, ଲେକିକିୟା, ଇନେକିଦେଂକି ଇ ୱିଜ଼ୁ କାତା ପାର୍ତିନିକିଂ ଆରି ହାତ୍ପା ।
6 ௬ அன்றியும், அவர் என்னைப் பார்த்து: ஆயிற்று, நான் அல்பாவும், ஓமெகாவும், தொடக்கமும், முடிவுமாக இருக்கிறேன். தாகமாக இருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீர் ஊற்றிலிருந்து இலவசமாகக் கொடுப்பேன்.
ହେୱାନ୍ ନାଙ୍ଗେଙ୍ଗ୍ ଆରେ ଇଚାନ୍, ୱିଜ଼ୁ କାମାୟ୍ ୱିସ୍ତାତ୍ନା । ଆନ୍ ଆରମ୍ ଆରି ହାରିହାରା, ଆରେ ଆଗେ ଆରି ୱିଜ଼୍ନାକା । ଇନେର୍ ଏସ୍କି ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଆପ୍ ଜିବୁନ୍ ଲାକେ ଜାର୍ଣ୍ତାଂ ଉପ୍କା ମଲ୍ଦାଂ ଉଣ୍ଡେଙ୍ଗ୍ ହିଦ୍ନାପ୍ ।
7 ௭ ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாக இருப்பேன், அவன் என் குமாரனாக இருப்பான்.
ଇନେର୍ ଜିତାନାନ୍, ହେୱାନ୍ ଇ ୱିଜ଼ୁତି ଆଦିକାର୍ ଆନାନ୍; ଆପ୍ ହେୱାନ୍ତି ଇସ୍ୱର୍ ଆନାପ୍, ଆରେ ହେୱାନ୍ ମା ମାଜ଼ି ଆନାନ୍ ।
8 ௮ பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (Limnē Pyr )
ମାତର୍ ଇମ୍ଣାକାର୍ ପାଣ୍ଡ୍ରାନାକାର୍, ପାର୍ତି କିୱାକାର୍, ଗିଣ୍ପ୍ରାଲ୍, ନାର୍ଅହ୍ନାକାନ୍, ଦାରିୟା, ଚୁଟ୍କିୟାର୍, ଆରି ପୁତ୍ଡ଼ା ପୁଜାକିନାକାନ୍, ହେୱାର୍ ଆରି ୱିଜ଼ାର୍ ମିଚ୍ କାତା ଇନାକାର୍ ନାଣି ଆରି ଗନ୍ଦକ୍ ଆହ୍ନି ହାମ୍ଦୁର୍ତ ବାଗ୍ ଅୟାନାର୍; ଇଦାଂ ନେ ରି ହାକି । (Limnē Pyr )
9 ௯ பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணமகளை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,
ତାପାଚେ ଇମ୍ଣି ସାତ୍ ଦୁତ୍ ୱିସ୍ତି ସାତ୍ ଦୁକ୍ତ ବାର୍ତି ସାତ୍ କଣ୍ଡିଆସ୍ତି ମାଚାନ୍, ହେୱେକ୍ ବିତ୍ରେତାଂ ରଞ୍ଜେଲ୍ ୱାଜ଼ି ନାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଞ୍ଚାତ୍, ଇବେ ୱା, ଆନେଙ୍ଗ୍ ନିଙ୍ଗେଙ୍ଗ୍ ହେ ଗାଡ଼୍, ଇଚିସ୍ ମେଣ୍ଡାହିମ୍ଣାତି ଡକ୍ରୁହିଂ ଚଚ୍ଚାନାଙ୍ଗ୍ ।
10 ௧0 பெரிதும் உயரமுமான ஒரு மலையின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
ହେବେ ହେୱାନ୍ ନାଙ୍ଗେଙ୍ଗ୍ ଜିବୁନ୍ତ ର ଗାଜା ଆରି ପାନ୍ତି ମାଡ଼ିତ ଅଜ଼ି ହାଲ୍ଜି ପୁଇପୁୟା ଗାଡ଼୍ଦ ଜିରୁସାଲମ୍ତ ଚଚ୍ଚାତାନ୍, ହେଦାଂ ସାର୍ଗେତାଂ ଇସ୍ୱର୍ ଲାଗାଂ ଜୁଜ଼ି ମାଚାତ୍ ଆରି ଇସ୍ୱର୍ତି ଜାଜ୍ମାଲ୍ ଆତାତ୍ ।
11 ௧௧ அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கின் ஒளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.
ଆରେ ତା ଇସ୍ୱର୍ତି ଜାଜ୍ମାଲ୍ ଲାକେ ମାଚାତ୍; ତା ଅଜଡ଼୍ ବେସି ମଲ୍ଦି ମଣି ଲାକେ, ନିର୍ମଲ୍ ୱେଡ଼ାମଣି ଲାକେ ।
12 ௧௨ அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.
ତା ରଞ୍ଜାଙ୍ଗ୍ ଗାଜା ଆରି ପାନ୍ତି କୁୱାଡ଼୍ ମାନାତ୍, ହେବେ ବାରଗଟା ଦୁୱେର୍ରିଂ ହେ ଦୁୱେର୍ତ ବାରଜାଣ୍ ଦୁତ୍ ଆରି ଦୁୱେର୍କାଂ ଜପି ଇସ୍ରାଏଲ୍ ହିମ୍ଣାଂତି ବାରଜାଣ୍ ଲାତ୍ରାନି ତର୍ ଲେକାତାତ୍ନା ।
13 ௧௩ வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் வம்சத்தில் உள்ள பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.
ୱେଡ଼ାହନି ନିପ ତିନିଗଟା ଦୁୱେର୍ରିଂ, ପାଲନିପ ତିନିଗଟା ଦୁୱାରିଂ, ଦିଗବାଗାଙ୍ଗ୍ ତିନିଗଟା ଦୁୱାରିଂ ଆରି ୱେଡ଼ାହାନିନିପ ତିନିଗଟା ଦୁୱାରିଂ ।
14 ௧௪ நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்கள் இருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு பெயர்களும் பதிந்திருந்தன.
ହେ ଗାଡ଼୍ନି କୁୱାଡ଼୍ନି ବାର କୁନାଦି, ହେ ସବୁ ଜପି ରଚ୍ୟାଜ଼ି ମାଚାତ୍ ମେଣ୍ଡାହିମ୍ଣା ବାର ପକ୍ୟାତାକାର୍ ବାରଗଟା ତର୍ ଲେକାତାତ୍ନା ।
15 ௧௫ என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான்.
ଇନେର୍ ନା ଲାହାଙ୍ଗ୍ କାତା ଇଞ୍ଜି ମାଚାନ୍, ତା କେଇଦ ଗାଡ଼୍ ତା ଦୁୱେର୍ରିଂ ଆରି କୁୱାଡ଼୍ ଲାଜ୍ଜେଙ୍ଗ୍ ର ହନା ଲାଚ୍ନାକା ବେଡ୍ଗା ମାଚାତ୍ ।
16 ௧௬ அந்த நகரம் சதுரமாக இருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாக இருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது இரண்டாயிரத்து இருநூறு கிலோமீட்டர் தூர அளவாக இருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாக இருந்தது.
ଗାଡ଼୍ ଚାରିକଣ୍ଆଁ, ତା ଲାମା ଆରି ଅହାର୍ ସମାନ୍; ହେୱାନ୍ ହେ ବେଡ୍ଗାତାଂ ଗାଡ଼୍ଦିଂ ଲାଜ୍ଚିଲେ ବାର ହାଜାର୍ ୧୨,୦୦୦ ଆପ୍କୁ ଆତିକ୍; ହେବେନି ଲାମା, ଅହାର୍ ଆରି ପାନ୍ତାକା ସମାନ୍ ।
17 ௧௭ அவன் அதின் மதிலை அளந்தபோது, மனித அளவின்படியே அது நூற்றுநாற்பத்துநான்கு முழமாக இருந்தது.
ପାଚେ ହେୱାନ୍ ହେବେନି କୁୱାଡ଼୍ ଲାଚ୍ଚିଲେ ହେଦାଂ ମାନାୟ୍ତିଂ ଲଡ଼ା ଇସାପ୍ରେ ସାତ୍କଡ଼ିଚାରି ୧, ୪୪ ଆତ୍ ଆତାତ୍, ଦୁତ୍ନେ ଇ ଲଡ଼ା ଇସାପ୍ରେ ଲାଜ୍ଜି ମାଚାନ୍ ।
18 ௧௮ அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாக இருந்தது.
ହେ ଇଲ୍ ୱେଡ଼ାମଣି ରଚ୍ଚାକା, ଆରେ କୁୱାଡ଼୍ ସକଟ୍ କାଚ୍ ଲାକେ ନେକ୍ରି ହନା ଲାହାଂ ରଚ୍ଚାକା ।
19 ௧௯ நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் எல்லாவகை இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,
ଗାଡ଼୍ନି କୁୱାଡ଼୍ କୁନାଦି ୱିଜ଼ୁ ବାନି ବେସି ମଲ୍ ମଣି ରଞ୍ଚାକା । ପର୍ତୁମ୍ କୁନାଦି ହିରା, ଜେତାକା ମଣିନି, ତିନି ବଦୁର୍ଜ୍ୟମଣି, ଚାରି ମରକତମଣି,
20 ௨0 ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.
ପାଞ୍ଚ୍ ପୁଲକମଣି, ଚଅ ମାଣିକ୍ୟମଣି, ସାତ୍ ପୁସ୍ପରାଗମଣି, ଆଟ୍ ପିରଜ୍ମଣି, ନଅ ଗମେଦକମଣି, ଦସ୍ ଲସୁନିୟମଣି, ଏଗାର୍ ଇନ୍ଦ୍ରନିଲମଣି, ଆରି ବାର ଗାନ୍ଦାନିମଣି ।
21 ௨௧ பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாக இருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாக இருந்தது.
ବାର ଦୁୱେର୍ ବାର ମୁକ୍ତା, ୱିଜ଼ୁ ଦୁୱେର୍ ରଞ୍ଜାଙ୍ଗ୍ ରଞ୍ଜାଙ୍ଗ୍ ମୁକ୍ତାତ ରଚ୍ଚାକା; ଆରେ ଗାଡ଼୍ନି ହାଜ଼ି ସକଟ୍ କାଚ୍ ଲାକେ ନେକ୍ରାକା ହନା ଲାହାଂ ରଚ୍ଚାକା ।
22 ௨௨ அதிலே தேவாலயத்தை நான் பார்க்கவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.
ଆନେଙ୍ଗ୍ ହେ ଗାଡ଼୍ଦ ଇମ୍ଣାକାପା ମନ୍ଦିର୍ତ ପା ହୁଡ଼୍ୱାତାଂ, ଇନେକିଦେଂକି ମାପ୍ରୁ, ୱିଜ଼ୁତିଂ ସାକ୍ତିକାଟାକାନ୍ ଇସ୍ୱର୍ ଆରି ମେଣ୍ଡାହିମ୍ଣା ହେବେନି ମନ୍ଦିର୍ ଲାକେ ମାନାନ୍ ।
23 ௨௩ நகரத்திற்கு வெளிச்சம் கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டியதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.
ଅଜଡ଼୍ କାଜିଂ ହେ ଗାଡ଼୍ନି ୱେଡ଼ା କି ଲେଞ୍ଜ୍ ଲଡ଼ା ଆକାୟ୍, ଇନେକିଦେଂକି ଇସ୍ୱର୍ତି ଜାଜ୍ମାଲ୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଅଜଡ଼୍ କିନାତ୍ ଆରି ମେଣ୍ଡାହିମ୍ଣା ହେବେନି ବୈଟା ଲାକେ ।
24 ௨௪ இரட்சிக்கப்படுகிற மக்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்களுடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
ହେବେ ଅଜଡ଼୍ତ ଜାତିର୍ ବୁଲାଚାଲା କିତାର୍, ଆରି ପୁର୍ତିନି ରାଜାର୍ ଜାର୍ ଜାର୍ ହଲ୍ନାକା ତା ବିତ୍ରେ ତାସିୱାଜ଼ି ଚାନ୍ଦା ହିନାର୍ ।
25 ௨௫ அங்கே இரவு இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை.
ହେବେନି ଦୁୱେର୍ ଲାଗାଂ ୱେଡ଼ାଲିଂ ମୁଡ଼୍କେ ଗେହ୍ୟା ଆଉତ୍, ଇନେକିଦେଂକି ହେ ବାହାତ ନାଣା ଆଉତ୍ ।
26 ௨௬ உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
ଲକୁ ଜାତିଲାହାଂ ହଲ୍ନାକା ଆରି ପାଣ୍ ତା ବିତ୍ରେ ତାହିୱାନାର୍ ।
27 ௨௭ தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் செல்வதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டவர்கள்மட்டும் அதில் செல்வார்கள்.
ଇମ୍ଣାକା ପା ସକଟ୍ ବିସ୍ରେ ନଲେ ଗିଣ୍ କିନାକାର୍ ଆରି ମିଚ୍ୱାର୍ ଇନେର୍ ହେବେ ମୁଡ଼୍କେ ହଣ୍ଡେଙ୍ଗ୍ ଆଡୁର୍; କେବଲ୍ ଇମ୍ଣାକାର୍ତି ତର୍ ମେଣ୍ଡାହିମ୍ଣା ଜିବୁନ୍ ପତିତ ଲେକାତାତ୍ନା, ହେୱାର୍ ହଣ୍ଡେଙ୍ଗ୍ ଆଡ୍ନାର୍ ।