< வெளிப்படுத்தின விசேஷம் 21 >

1 பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் பார்த்தேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; கடலும் இல்லாமல்போனது.
לאחר מכן ראיתי שמים חדשים וארץ חדשה ללא ימים, כי השמים והארץ שקיימים היום נעלמו.
2 யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்திலிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதைப் பார்த்தேன்; அது தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
ראיתי גם את עיר הקודש, ירושלים החדשה, יורדת מן השמים מאת אלוהים. היא נראתה הדורה ככלה בחתונתה.
3 மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனிதர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலம் இருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாக இருப்பார்; அவர்களும் அவருடைய மக்களாக இருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடு இருந்து அவர்களுடைய தேவனாக இருப்பார்.
שמעתי קול רם מכיסא המלכות:”מעונו של אלוהים הוא בין בני־האדם; אלוהים יחיה איתם והם יהיו לו לעם.
4 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று சொன்னது.
הוא ימחה מעיניהם כל דמעה, ולא יהיה יותר מוות, אבל, קריאות צער או כאב. כל אלה ייעלמו לנצח!“
5 சிங்காசனத்தின்மேல் உட்காருந்திருந்தவர்: இதோ, நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.
היושב על כיסא המלכות הכריז:”אני עושה הכול חדש!“הוא פנה אלי ואמר:”כתוב את אשר אומר לך, כי דברים אלה נכונים ואמיתיים:
6 அன்றியும், அவர் என்னைப் பார்த்து: ஆயிற்று, நான் அல்பாவும், ஓமெகாவும், தொடக்கமும், முடிவுமாக இருக்கிறேன். தாகமாக இருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீர் ஊற்றிலிருந்து இலவசமாகக் கொடுப்பேன்.
תם ונשלם! אני האלף והתו – ההתחלה והסוף. את הצמא אשקה ממעיין מי־החיים חינם!
7 ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாக இருப்பேன், அவன் என் குமாரனாக இருப்பான்.
המנצח יירש את כל הברכות האלה; אני אהיה לו לאלוהים והוא יהיה לי לבן.
8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (Limnē Pyr g3041 g4442)
אך מוגי־הלב שמפנים לי את גבם, חסרי האמונה, הפושעים, המושחתים, הרוצחים, הנואפים, עובדי האלילים וכל השקרנים, יושלכו לאגם הבוער באש וגופרית אשר הוא המוות השני.“ (Limnē Pyr g3041 g4442)
9 பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணமகளை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,
אחד משבעת המלאכים, שנשאו את שבע הקערות המלאות בשבע המגפות, ניגש אלי ואמר:”בוא איתי ואראה לך את הכלה – את אשת השה.“
10 ௧0 பெரிதும் உயரமுமான ஒரு மலையின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
הוא נשא אותי ברוח אל הר גדול וגבוה, והראה לי את ירושלים עיר־הקודש יורדת מן השמים מאת אלוהים.
11 ௧௧ அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கின் ஒளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.
העיר הייתה מלאה כבוד אלוהים; היא זרחה והקרינה נוגה כשל אבן יקרה שמבהיקה כבדולח.
12 ௧௨ அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.
לעיר הייתה חומה גדולה וגבוהה ובה שנים־עשר שערים, ובכל שער עמד מלאך. על השערים היו כתובים שמות שנים־עשר שבטי ישראל.
13 ௧௩ வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் வம்சத்தில் உள்ள பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.
שלושה שערים היו בצד מזרח, שלושה בצד צפון, שלושה בצד דרום ושלושה בצד מערב.
14 ௧௪ நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்கள் இருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு பெயர்களும் பதிந்திருந்தன.
לחומת העיר היו שנים־עשר יסודות ועליהם כתובים שמות שנים־עשר שליחי השה.
15 ௧௫ என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான்.
המלאך אשר דיבר אלי החזיק בידו מכשיר־מדידה עשוי זהב, כדי למדוד את העיר, את שעריה ואת חומתה.
16 ௧௬ அந்த நகரம் சதுரமாக இருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாக இருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது இரண்டாயிரத்து இருநூறு கிலோமீட்டர் தூர அளவாக இருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாக இருந்தது.
במדדו את העיר הוא נוכח לדעת שצורתה ריבועית – אורכה שווה לרוחבה. למעשה, צורת העיר כקובייה; כל הצלעות שוות – אורך, רוחב וגובה, כל צלע כ־2400 קילומטרים.
17 ௧௭ அவன் அதின் மதிலை அளந்தபோது, மனித அளவின்படியே அது நூற்றுநாற்பத்துநான்கு முழமாக இருந்தது.
המלאך מדד את עובי החומה ונוכח לדעת שעובייה כ־65 מטרים.
18 ௧௮ அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாக இருந்தது.
העיר עצמה הייתה עשויה זהב טהור ושקוף כזכוכית זכה ועדינה. החומה הייתה עשויה אבן־ישפה יקרה,
19 ௧௯ நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் எல்லாவகை இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,
ובנויה של שתים־עשרה שכבות של אבני־יסוד משובצות באבני־חן יקרות. אבן היסוד הראשונה משובצת בישפה אבן היסוד השנייה משובצת בספיר אבן היסוד השלישית משובצת בשבו אבן היסוד הרביעית משובצת בברקת
20 ௨0 ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.
אבן היסוד החמישית משובצת ביהלום אבן היסוד השישית משובצת באודם אבן היסוד השביעית משובצת בתרשיש אבן היסוד השמינית משובצת בשוהם אבן היסוד התשיעית משובצת בפטדה אבן היסוד העשירית משובצת בנופך אבן היסוד האחת־עשרה משובצת בלשם אבן היסוד השתים־עשרה משובצת באחלמה.
21 ௨௧ பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாக இருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாக இருந்தது.
שנים־עשר השערים היו שתים־עשרה פנינים – כל שער פנינה. רחובה המרכזי של העיר מרוצף זהב טהור ושקוף כזכוכית.
22 ௨௨ அதிலே தேவாலயத்தை நான் பார்க்கவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.
לא הבחנתי בהיכל בעיר, כי היכל העיר הוא ה׳ אלוהי צבאות והשה.
23 ௨௩ நகரத்திற்கு வெளிச்சம் கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டியதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.
העיר הנפלאה הזאת אינה זקוקה לאור השמש או לאור הירח, שכן כבוד אלוהים וכבוד השה מאירים אותה באור רב.
24 ௨௪ இரட்சிக்கப்படுகிற மக்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்களுடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
עמי העולם יחיו לאורה, ומלכי העולם יביאו אליה את כבודם ותפארתם.
25 ௨௫ அங்கே இரவு இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை.
שערי העיר לא ייסגרו לעולם; הם יהיו פתוחים כל היום, כי לא יהיה לילה בעיר.
26 ௨௬ உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
כבודם ותפארתם של כל העמים יובאו אליה.
27 ௨௭ தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் செல்வதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டவர்கள்மட்டும் அதில் செல்வார்கள்.
עיר זאת תהיה קדושה וטהורה; לא יהיה בתוכה כל דבר טמא, לא יהיו בה חוטאים, שקרנים, נואפים ופושעים. רק הכתובים בספר־החיים של השה ייכנסו לעיר.

< வெளிப்படுத்தின விசேஷம் 21 >