< வெளிப்படுத்தின விசேஷம் 21 >

1 பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் பார்த்தேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; கடலும் இல்லாமல்போனது.
फिरी मैं नोआ स्वर्ग कने नोई धरती दिखी, क्योंकि पूराणी धरती कने स्वर्ग हुण नी थे। कने हुण कोई समुन्द्र भी नी था।
2 யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்திலிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதைப் பார்த்தேன்; அது தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
फिरी मैं पबित्र नोऐ शेहर यरूशलेमे जो भी दिखया, जड़ा स्वर्गे ला परमेश्वरे दिया तरफा ला थले ओआ दा है। उस शेहरे जो नोईया लाड़िया सांई तैयार कितया था, जिसा जो कपड़े पहनाई करी कने श्रृंगार कितया है जड़ी लाड़े सोगी बियाह करणे तांई तैयार है।
3 மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனிதர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலம் இருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாக இருப்பார்; அவர்களும் அவருடைய மக்களாக இருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடு இருந்து அவர்களுடைய தேவனாக இருப்பார்.
फिरी मैं इक अबाज सुणी जड़ी परमेश्वरे दे सिंहासने ला जोरे ला बोली, “दिख, हुण परमेश्वरे लोकां बिच अपणा घर बणाणा।” उनी उना सोगी रैणा, कने सै उदे लोक होणे, उनी अपु उना जो अपणे लोकां दे रुपे च अपनाणा कने उनी उना सोगी रेंणा कने उना भी उसयो परमेश्वरे दे रुपे च अपनाई लेंणा।
4 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று சொன்னது.
परमेश्वरे उना दियां हखी ला सारे आंसू पूंज्जी देंणे; कने इदे बाद कुसी भी माणुऐ जो दुख नी सेहणा पोंणा, रोणा नी पोंणा, दर्द महसूस नी होणा, ना ही कूदी मौत होंणी क्योंकि पूराणे संसारे दियां सारियां चीजां गायब होई गियां न।
5 சிங்காசனத்தின்மேல் உட்காருந்திருந்தவர்: இதோ, நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.
कने जड़ा सिंहासने पर बैठया था, उनी बोलया, “दिख, मैं सब कुछ नोआ करी दिन्दा है।” फिरी उनी बोलया, “लिखि ले, क्योंकि जड़ा मैं बोलदा है उदे पर भरोसा करी सकदा है। ऐ गल्लां पक्का ही होणियां।”
6 அன்றியும், அவர் என்னைப் பார்த்து: ஆயிற்று, நான் அல்பாவும், ஓமெகாவும், தொடக்கமும், முடிவுமாக இருக்கிறேன். தாகமாக இருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீர் ஊற்றிலிருந்து இலவசமாகக் கொடுப்பேன்.
फिरी उनी मिंजो बोलया, सब कुछ मुकी गिया है। मैं अलफा कने ओमेगा, कने शुरुआत कने अंत है। जड़ा कोई प्यासा है, मैं उसयो उस पाणिऐ ला मुफ्त पांणी पिणे तांई देणा जड़ा हमेशा दी जिन्दगी दिन्दा है।
7 ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாக இருப்பேன், அவன் என் குமாரனாக இருப்பான்.
जड़ा शैताने जो हराई दिन्दा है, उसयो मिंजो ला सै ऐ सारियां आशीषां मिलणियां; कने मैं उदा परमेश्वर होणा कने सै मेरा पुत्र होणा।
8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (Limnē Pyr g3041 g4442)
पर जड़े मिंजो पर भरोसा नी रखदे, उना जो जोर लाईकरी गंधक बालिया उसा झिला च पाई देणा, जड़ी दुज्जी मौत है। कने सेई अंजाम उना दा भी होणा, जड़े लोकां दे सामणे मिंजो अपनाणे ला डरदे न, बुरे कम्म करदे न, जड़े हत्यारे न, गंदे कम्म करदे न, जादू टोणा करदे न, मूर्तियां दी पूजा करदे न, या झूठ बोलदे न। (Limnē Pyr g3041 g4442)
9 பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணமகளை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,
फिरी उना सत्तां स्वर्गदूतां चे इकी जिना माणुऐ दिया जाति पर सत्त आखरी मुसीबतां ला भरयो कटोरे न्योरे थे, मिंजो सोगी गल्ल किती कने उनी बोलया, “ऐथू ओआ, मैं तिजो लाड़ी दसणी जिदा जल्दी ही छेलुये सोगी बियाह होई जाणा है।”
10 ௧0 பெரிதும் உயரமுமான ஒரு மலையின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
तालू परमेश्वरे दिया आत्मा इक दर्शण दसया। उस दर्शने च स्वर्गदूत मिंजो इक बड़े बड्डे पाड़े पर लेई गिया। कने पबित्र शेहर यरूशलेम दसया, जड़ा परमेश्वरे दिया तरफा ला स्वर्गे ला थले उतरया था।
11 ௧௧ அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கின் ஒளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.
शेहर परमेश्वरे ला मिलणे बालिया लौई ला चमका दा था, कने उदी ज्योति बड़े कीमती पथर मतलब की यशब नाऐ दे बेशकीमती पथरे सांई चमका दी थी, कने शीशे सांई साफ थी।
12 ௧௨ அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.
शेहरे दियां चारो पासे दियां दिबारां बड़िया उच्चिया थियां, कने शेहरे च बारा दरबाजे थे कने उना सारे दरबाजयां च इक स्वर्गदूत पेहरा दे दा था कने उना दरबाजयां पर इस्राएलियां दे बारा गोत्रां दे ना लिखयो थे।
13 ௧௩ வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் வம்சத்தில் உள்ள பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.
शेहरे दिया चारों दिशां च तिन दरबाजे थे: पूर्व, पश्चिम, उत्तर कने दक्षिण च।
14 ௧௪ நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்கள் இருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு பெயர்களும் பதிந்திருந்தன.
उना शेहरे दियां दिबारां बारा बड्डे-बड्डे पथरां उपर बणाईयां थियां, कने उना हर इक पथरे पर छेलुये दे बारह प्रेरितां दे नां लिखयो थे।
15 ௧௫ என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான்.
सै स्वर्गदूत जड़ा मिंजो सोगी गल्लां करा दा था, उदे बाल दरबाजयां कने उदियां दिबारां जो नापणे तांई इक सोने दा गज था।
16 ௧௬ அந்த நகரம் சதுரமாக இருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாக இருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது இரண்டாயிரத்து இருநூறு கிலோமீட்டர் தூர அளவாக இருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாக இருந்தது.
उस शेहरे दे चार सिरे थे कने चारो सिरे इकोदे थे। स्वर्गदूते उस सोने दे फीते ला शेहरे जो नापया; इदी लम्बाई दो हजार चार सौ किलो मीटर थी। इदी चौड़ाई कने उच्चाई लम्बाईया बराबर ही थी।
17 ௧௭ அவன் அதின் மதிலை அளந்தபோது, மனித அளவின்படியே அது நூற்றுநாற்பத்துநான்கு முழமாக இருந்தது.
इदे बाद स्वर्गदूते दिबारां दी उच्चाई नापी। उनी इसयो भी इयां ही नापया जियां लोक चीजां जो नापदे न। दिबार छियासठ मीटर उच्ची थी।
18 ௧௮ அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாக இருந்தது.
शेहर खरे सोने ला बणया था जड़ा शीशे सांई चमकदा था कने उदियां दिबारां यशब नाऐ दे कीमती पथरे ला बणियां थियां।
19 ௧௯ நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் எல்லாவகை இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,
उस शेहरे दियां नियां कीमती बारा बड्डे-बड्डे पत्थरां पर बणियां थियां; पैली नीं यशबे दी, दुज्जी नीलमणी दी, तीजी लालड़ीऐ दी, चोथी मरकते दी,
20 ௨0 ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.
पंजमी गोमेदके दी, छेमी माणिक्ये दी, सतमी पीतमणिऐ दी, अठमी पेरोजे दी, नौमी पुखराजे दी, दसमी लहसनिये दी, गयारमी धूम्रकांते दी, कने बारमी याकूबे दी थी।
21 ௨௧ பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாக இருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாக இருந்தது.
बारा दरबाजे भी इक-इक कीमती मोतियां ला बणयो थे, कने शेहरे दियां सड़कां खरे सोने दियां बणियां थियां जड़ियां शीशे सांई चमकदियां थियां।
22 ௨௨ அதிலே தேவாலயத்தை நான் பார்க்கவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.
मैं इस शेहरे च कोई मंदिर नी दिखया क्योंकि सारयां ला शक्तिशाली प्रभु परमेश्वर कने छेलू उस शेहरे च है। इस तांई ओथु मंदरे दी कोई जरूरत नी है।
23 ௨௩ நகரத்திற்கு வெளிச்சம் கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டியதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.
उस शेहरे च ना सूरजे दी कने ना चन्द्रमे दी जरूरत है, क्योंकि सै शेहर परमेश्वरे कने छेलुये दिया रोशनिया ला रोशन है।
24 ௨௪ இரட்சிக்கப்படுகிற மக்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்களுடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
उस शेहरे च चमक संसारे च रेणे बालयां सारे लोकां जो रौशनी दिन्दी है कने संसारे दे सारे राजयां अपणिया-अपणिया दौलता जो उस शेहरे च लेई ओंणा है।
25 ௨௫ அங்கே இரவு இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை.
उस शेहरे दे दरबाजे दिन भर खुले रेंदे न। सै कड़ी कदी भी बंद नी होंदी क्योंकि ओथु कदी भी रात नी होंदी।
26 ௨௬ உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
संसारे दे लोकां संसारे दियां सारियां खुबसुरत चीजां जो कने लोकां दिया धन दौलता जो उस शेहरे च लेई ओंणा है।
27 ௨௭ தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் செல்வதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டவர்கள்மட்டும் அதில் செல்வார்கள்.
पर जड़े कुछ भी गंदा था या सै लोक जड़े बुराई करदे न या झूठ बोलदे न, उना जो पक्का ही उस शेहरे च अंदर ओंणे दी इजाजत नी है। ओथु सिर्फ सेई लोक अंदर जाई सकदे न जिना दे ना छेलुये दिया जिन्दगिया दिया कताबा च लिखयो थे।

< வெளிப்படுத்தின விசேஷம் 21 >