< வெளிப்படுத்தின விசேஷம் 2 >
1 ௧ எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கையில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் நடுவிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
ఇఫిషస్థసమితే ర్దూతం ప్రతి త్వమ్ ఇదం లిఖ; యో దక్షిణకరేణ సప్త తారా ధారయతి సప్తానాం సువర్ణదీపవృక్షాణాం మధ్యే గమనాగమనే కరోతి చ తేనేదమ్ ఉచ్యతే|
2 ௨ நீ செய்தவைகளையும், உன் கடினஉழைப்பையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகித்துக்கொள்ளமுடியாமல் இருக்கிறதையும், அப்போஸ்தலர்களாக இல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லுகிறதை நீ சோதித்துப்பார்த்து அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கண்டுபிடித்ததையும்;
తవ క్రియాః శ్రమః సహిష్ణుతా చ మమ గోచరాః, త్వం దుష్టాన్ సోఢుం న శక్నోషి యే చ ప్రేరితా న సన్తః స్వాన్ ప్రేరితాన్ వదన్తి త్వం తాన్ పరీక్ష్య మృషాభాషిణో విజ్ఞాతవాన్,
3 ௩ நீ சகித்துக்கொண்டு இருக்கிறதையும், பொறுமையாக இருக்கிறதையும், என் நாமத்திற்காக ஓய்வு இல்லாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.
అపరం త్వం తితిక్షాం విదధాసి మమ నామార్థం బహు సోఢవానసి తథాపి న పర్య్యక్లామ్యస్తదపి జానామి|
4 ௪ ஆனாலும், நீ ஆரம்பத்திலே வைத்திருந்த அன்பைவிட்டுவிட்டாய் என்று உன்மேல் எனக்குக் குறை உண்டு.
కిఞ్చ తవ విరుద్ధం మయైతత్ వక్తవ్యం యత్ తవ ప్రథమం ప్రేమ త్వయా వ్యహీయత|
5 ௫ எனவே, நீ எந்த நிலைமையில் இருந்து விழுந்தாய் என்பதை நினைத்து, மனம்திரும்பி, ஆதியில் செய்த செய்கைகளைச் செய்; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, நீ மனம்திரும்பவில்லை என்றால், உன் விளக்குத்தண்டை அதனிடத்திலிருந்து நீக்கிவிடுவேன்.
అతః కుతః పతితో ఽసి తత్ స్మృత్వా మనః పరావర్త్త్య పూర్వ్వీయక్రియాః కురు న చేత్ త్వయా మనసి న పరివర్త్తితే ఽహం తూర్ణమ్ ఆగత్య తవ దీపవృక్షం స్వస్థానాద్ అపసారయిష్యామి|
6 ௬ நான் வெறுக்கிற நிக்கொலாய் மதத்தைச் சேர்ந்தவர்களின் செய்கைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்தில் உண்டு.
తథాపి తవేష గుణో విద్యతే యత్ నీకలాయతీయలోకానాం యాః క్రియా అహమ్ ఋతీయే తాస్త్వమపి ఋతీయమే|
7 ௭ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் எவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் நடுவில் இருக்கிற ஜீவமரத்தின் கனியை உண்ணக்கொடுப்பேன் என்று எழுது.
యస్య శ్రోత్రం విద్యతే స సమితీః ప్రత్యుచ్యమానామ్ ఆత్మనః కథాం శృణోతు| యో జనో జయతి తస్మా అహమ్ ఈశ్వరస్యారామస్థజీవనతరోః ఫలం భోక్తుం దాస్యామి|
8 ௮ சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவருமானவர் சொல்லுகிறதாவது;
అపరం స్ముర్ణాస్థసమితే ర్దూతం ప్రతీదం లిఖ; య ఆదిరన్తశ్చ యో మృతవాన్ పునర్జీవితవాంశ్చ తేనేదమ్ ఉచ్యతే,
9 ௯ உன் செய்கைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியம் உள்ளவனாக இருந்தும் உனக்கு இருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதர்கள் என்று சொல்லியும் யூதர்களாக இல்லாமல் சாத்தானுடைய கூட்டமாக இருக்கிறவர்கள் செய்யும் அவதூறுகளையும் அறிந்திருக்கிறேன்.
తవ క్రియాః క్లేశో దైన్యఞ్చ మమ గోచరాః కిన్తు త్వం ధనవానసి యే చ యిహూదీయా న సన్తః శయతానస్య సమాజాః సన్తి తథాపి స్వాన్ యిహూదీయాన్ వదన్తి తేషాం నిన్దామప్యహం జానామి|
10 ௧0 நீ படப்போகிற பாடுகளைப்பற்றிப் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படுவதற்காகப் பிசாசு உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாட்கள் உபத்திரவப்படுவீர்கள். ஆனாலும் நீ மரிக்கும்வரை உண்மையாக இரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
త్వయా యో యః క్లేశః సోఢవ్యస్తస్మాత్ మా భైషీః పశ్య శయతానో యుష్మాకం పరీక్షార్థం కాంశ్చిత్ కారాయాం నిక్షేప్స్యతి దశ దినాని యావత్ క్లేశో యుష్మాసు వర్త్తిష్యతే చ| త్వం మృత్యుపర్య్యన్తం విశ్వాస్యో భవ తేనాహం జీవనకిరీటం తుభ్యం దాస్యామి|
11 ௧௧ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்று எழுது.
యస్య శ్రోత్రం విద్యతే స సమితీః ప్రత్యుచ్యమానామ్ ఆత్మనః కథాం శృణోతు| యో జయతి స ద్వితీయమృత్యునా న హింసిష్యతే|
12 ௧௨ பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: இரண்டு பக்கமும் கூர்மையான வாளை வைத்திருப்பவர் சொல்லுகிறதாவது;
అపరం పర్గామస్థసమితే ర్దూతం ప్రతీదం లిఖ, యస్తీక్ష్ణం ద్విధారం ఖఙ్గం ధారయతి స ఏవ భాషతే|
13 ௧௩ உன் செய்கைகளையும், சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடியிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்மேல் நீ வைத்த உன் விசுவாசத்தை, நீ மறுதலிக்காமல் இருந்ததையும் அறிந்திருக்கிறேன்.
తవ క్రియా మమ గోచరాః, యత్ర శయతానస్య సింహాసనం తత్రైవ త్వం వససి తదపి జానామి| త్వం మమ నామ ధారయసి మద్భక్తేరస్వీకారస్త్వయా న కృతో మమ విశ్వాస్యసాక్షిణ ఆన్తిపాః సమయే ఽపి న కృతః| స తు యుష్మన్మధ్యే ఽఘాని యతః శయతానస్తత్రైవ నివసతి|
14 ௧௪ ஆனாலும், சில காரியங்களைக்குறித்து உன்மேல் எனக்குக் குறை உண்டு; இஸ்ரவேல் மக்கள் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளை சாப்பிடுவதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் சாதகமான இடறலை அவர்களுக்கு முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்கள் உன்னிடம் உண்டு.
తథాపి తవ విరుద్ధం మమ కిఞ్చిద్ వక్తవ్యం యతో దేవప్రసాదాదనాయ పరదారగమనాయ చేస్రాయేలః సన్తానానాం సమ్ముఖ ఉన్మాథం స్థాపయితుం బాలాక్ యేనాశిక్ష్యత తస్య బిలియమః శిక్షావలమ్బినస్తవ కేచిత్ జనాస్తత్ర సన్తి|
15 ௧௫ அப்படியே நிக்கொலாய் மதத்தினருடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்களும் உன்னிடம் உண்டு; அதை நான் வெறுக்கிறேன்.
తథా నీకలాయతీయానాం శిక్షావలమ్బినస్తవ కేచిత్ జనా అపి సన్తి తదేవాహమ్ ఋతీయే|
16 ௧௬ நீ மனம்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, என் வாயின் வாளினால் அவர்களோடு யுத்தம்பண்ணுவேன்.
అతో హేతోస్త్వం మనః పరివర్త్తయ న చేదహం త్వరయా తవ సమీపముపస్థాయ మద్వక్తస్థఖఙ్గేన తైః సహ యోత్స్యామి|
17 ௧௭ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவை உண்ணக்கொடுத்து, பெற்றுக்கொள்கிறவனைத்தவிர வேறொருவனுக்கும் தெரியாத புதிய நாமம் எழுதப்பட்ட வெண்மையானக் கல்லைக் கொடுப்பேன் என்று எழுது.
యస్య శ్రోత్రం విద్యతే స సమితీః ప్రత్యుచ్యమానామ్ ఆత్మనః కథాం శృణోతు| యో జనో జయతి తస్మా అహం గుప్తమాన్నాం భోక్తుం దాస్యామి శుభ్రప్రస్తరమపి తస్మై దాస్యామి తత్ర ప్రస్తరే నూతనం నామ లిఖితం తచ్చ గ్రహీతారం వినా నాన్యేన కేనాప్యవగమ్యతే|
18 ௧௮ தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: அக்கினிஜூவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களும் உள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;
అపరం థుయాతీరాస్థసమితే ర్దూతం ప్రతీదం లిఖ| యస్య లోచనే వహ్నిశిఖాసదృశే చరణౌ చ సుపిత్తలసఙ్కాశౌ స ఈశ్వరపుత్రో భాషతే,
19 ௧௯ உன் செய்கைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த செயல்களைவிட பின்பு செய்த செயல்கள் அதிகமாக இருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.
తవ క్రియాః ప్రేమ విశ్వాసః పరిచర్య్యా సహిష్ణుతా చ మమ గోచరాః, తవ ప్రథమక్రియాభ్యః శేషక్రియాః శ్రేష్ఠాస్తదపి జానామి|
20 ௨0 ஆனாலும், உன்மேல் எனக்குக் குறை உண்டு; என்னவென்றால், தன்னைத் தீர்க்கதரிசி என்று சொல்லுகிற யேசபேல் என்னும் பெண், என்னுடைய ஊழியக்காரர்கள் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைச் சாப்பிடவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை ஏமாற்ற, நீ அவளுக்கு இடம் கொடுக்கிறாய்.
తథాపి తవ విరుద్ధం మయా కిఞ్చిద్ వక్తవ్యం యతో యా ఈషేబల్నామికా యోషిత్ స్వాం భవిష్యద్వాదినీం మన్యతే వేశ్యాగమనాయ దేవప్రసాదాశనాయ చ మమ దాసాన్ శిక్షయతి భ్రామయతి చ సా త్వయా న నివార్య్యతే|
21 ௨௧ அவள் மனம்திரும்புவதற்காக அவளுக்கு வாய்ப்புக்கொடுத்தேன்; தன் வேசித்தன வழியைவிட்டு மனம்திரும்ப அவளுக்கு விருப்பம் இல்லை.
అహం మనఃపరివర్త్తనాయ తస్యై సమయం దత్తవాన్ కిన్తు సా స్వీయవేశ్యాక్రియాతో మనఃపరివర్త్తయితుం నాభిలషతి|
22 ௨௨ இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளோடு விபசாரம் செய்தவர்கள் தங்களுடைய செய்கைகளைவிட்டு மனம்திரும்பவில்லை என்றால், அவர்களையும் அதிக உபத்திரவத்திலே தள்ளி,
పశ్యాహం తాం శయ్యాయాం నిక్షేప్స్యామి, యే తయా సార్ద్ధం వ్యభిచారం కుర్వ్వన్తి తే యది స్వక్రియాభ్యో మనాంసి న పరావర్త్తయన్తి తర్హి తానపి మహాక్లేశే నిక్షేప్స్యామి
23 ௨௩ அவளுடைய பிள்ளைகளையும் கொல்லுவேன்; அப்பொழுது நானே, சிந்தனைகளையும், இருதயங்களையும் ஆராய்கிறவர் என்று எல்லா சபைகளும் அறிந்துகொள்ளும்; உங்கள் ஒவ்வொருவனுக்கும் உங்களுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடியே பலன் கொடுப்பேன்.
తస్యాః సన్తానాంశ్చ మృత్యునా హనిష్యామి| తేనాహమ్ అన్తఃకరణానాం మనసాఞ్చానుసన్ధానకారీ యుష్మాకమేకైకస్మై చ స్వక్రియాణాం ఫలం మయా దాతవ్యమితి సర్వ్వాః సమితయో జ్ఞాస్యన్తి|
24 ௨௪ தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பின்பற்றாமலும், சாத்தானுடைய ஆழமான இரகசியங்கள் என்று சொல்லப்படுகிற அந்தத் தந்திரங்களை அறிந்துகொள்ளாமலும் இருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் எந்தவொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.
అపరమ్ అవశిష్టాన్ థుయాతీరస్థలోకాన్ అర్థతో యావన్తస్తాం శిక్షాం న ధారయన్తి యే చ కైశ్చిత్ శయతానస్య గమ్భీరార్థా ఉచ్యన్తే తాన్ యే నావగతవన్తస్తానహం వదామి యుష్మాసు కమప్యపరం భారం నారోపయిష్యామి;
25 ௨௫ நான் வரும்வரைக்கும் என்னை விசுவாசித்து என்னைப் பற்றிக்கொண்டிருங்கள்.
కిన్తు యద్ యుష్మాకం విద్యతే తత్ మమాగమనం యావద్ ధారయత|
26 ௨௬ ஜெயம்பெற்று கடைசிவரைக்கும் நான் செய்த காரியங்களைச் செய்கிறவன் எவனோ அவனுக்கு நான் என் பிதாவிடம் இருந்து அதிகாரம் பெற்றதுபோல, தேசங்களின் மக்கள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
యో జనో జయతి శేషపర్య్యన్తం మమ క్రియాః పాలయతి చ తస్మా అహమ్ అన్యజాతీయానామ్ ఆధిపత్యం దాస్యామి;
27 ௨௭ அவன் இரும்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
పితృతో మయా యద్వత్ కర్తృత్వం లబ్ధం తద్వత్ సో ఽపి లౌహదణ్డేన తాన్ చారయిష్యతి తేన మృద్భాజనానీవ తే చూర్ణా భవిష్యన్తి|
28 ௨௮ விடியற்கால நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.
అపరమ్ అహం తస్మై ప్రభాతీయతారామ్ అపి దాస్యామి|
29 ௨௯ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது.
యస్య శ్రోత్రం విద్యతే స సమితీః ప్రత్యుచ్యమానామ్ ఆత్మనః కథాం శృణోతు|