< வெளிப்படுத்தின விசேஷம் 2 >
1 ௧ எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கையில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் நடுவிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
১ইফিষস্থসমিতে র্দূতং প্রতি ৎৱম্ ইদং লিখ; যো দক্ষিণকরেণ সপ্ত তারা ধারযতি সপ্তানাং সুৱর্ণদীপৱৃক্ষাণাং মধ্যে গমনাগমনে করোতি চ তেনেদম্ উচ্যতে|
2 ௨ நீ செய்தவைகளையும், உன் கடினஉழைப்பையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகித்துக்கொள்ளமுடியாமல் இருக்கிறதையும், அப்போஸ்தலர்களாக இல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லுகிறதை நீ சோதித்துப்பார்த்து அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கண்டுபிடித்ததையும்;
২তৱ ক্রিযাঃ শ্রমঃ সহিষ্ণুতা চ মম গোচরাঃ, ৎৱং দুষ্টান্ সোঢুং ন শক্নোষি যে চ প্রেরিতা ন সন্তঃ স্ৱান্ প্রেরিতান্ ৱদন্তি ৎৱং তান্ পরীক্ষ্য মৃষাভাষিণো ৱিজ্ঞাতৱান্,
3 ௩ நீ சகித்துக்கொண்டு இருக்கிறதையும், பொறுமையாக இருக்கிறதையும், என் நாமத்திற்காக ஓய்வு இல்லாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.
৩অপরং ৎৱং তিতিক্ষাং ৱিদধাসি মম নামার্থং বহু সোঢৱানসি তথাপি ন পর্য্যক্লাম্যস্তদপি জানামি|
4 ௪ ஆனாலும், நீ ஆரம்பத்திலே வைத்திருந்த அன்பைவிட்டுவிட்டாய் என்று உன்மேல் எனக்குக் குறை உண்டு.
৪কিঞ্চ তৱ ৱিরুদ্ধং মযৈতৎ ৱক্তৱ্যং যৎ তৱ প্রথমং প্রেম ৎৱযা ৱ্যহীযত|
5 ௫ எனவே, நீ எந்த நிலைமையில் இருந்து விழுந்தாய் என்பதை நினைத்து, மனம்திரும்பி, ஆதியில் செய்த செய்கைகளைச் செய்; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, நீ மனம்திரும்பவில்லை என்றால், உன் விளக்குத்தண்டை அதனிடத்திலிருந்து நீக்கிவிடுவேன்.
৫অতঃ কুতঃ পতিতো ঽসি তৎ স্মৃৎৱা মনঃ পরাৱর্ত্ত্য পূর্ৱ্ৱীযক্রিযাঃ কুরু ন চেৎ ৎৱযা মনসি ন পরিৱর্ত্তিতে ঽহং তূর্ণম্ আগত্য তৱ দীপৱৃক্ষং স্ৱস্থানাদ্ অপসারযিষ্যামি|
6 ௬ நான் வெறுக்கிற நிக்கொலாய் மதத்தைச் சேர்ந்தவர்களின் செய்கைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்தில் உண்டு.
৬তথাপি তৱেষ গুণো ৱিদ্যতে যৎ নীকলাযতীযলোকানাং যাঃ ক্রিযা অহম্ ঋতীযে তাস্ত্ৱমপি ঋতীযমে|
7 ௭ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் எவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் நடுவில் இருக்கிற ஜீவமரத்தின் கனியை உண்ணக்கொடுப்பேன் என்று எழுது.
৭যস্য শ্রোত্রং ৱিদ্যতে স সমিতীঃ প্রত্যুচ্যমানাম্ আত্মনঃ কথাং শৃণোতু| যো জনো জযতি তস্মা অহম্ ঈশ্ৱরস্যারামস্থজীৱনতরোঃ ফলং ভোক্তুং দাস্যামি|
8 ௮ சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவருமானவர் சொல்லுகிறதாவது;
৮অপরং স্মুর্ণাস্থসমিতে র্দূতং প্রতীদং লিখ; য আদিরন্তশ্চ যো মৃতৱান্ পুনর্জীৱিতৱাংশ্চ তেনেদম্ উচ্যতে,
9 ௯ உன் செய்கைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியம் உள்ளவனாக இருந்தும் உனக்கு இருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதர்கள் என்று சொல்லியும் யூதர்களாக இல்லாமல் சாத்தானுடைய கூட்டமாக இருக்கிறவர்கள் செய்யும் அவதூறுகளையும் அறிந்திருக்கிறேன்.
৯তৱ ক্রিযাঃ ক্লেশো দৈন্যঞ্চ মম গোচরাঃ কিন্তু ৎৱং ধনৱানসি যে চ যিহূদীযা ন সন্তঃ শযতানস্য সমাজাঃ সন্তি তথাপি স্ৱান্ যিহূদীযান্ ৱদন্তি তেষাং নিন্দামপ্যহং জানামি|
10 ௧0 நீ படப்போகிற பாடுகளைப்பற்றிப் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படுவதற்காகப் பிசாசு உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாட்கள் உபத்திரவப்படுவீர்கள். ஆனாலும் நீ மரிக்கும்வரை உண்மையாக இரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
১০ৎৱযা যো যঃ ক্লেশঃ সোঢৱ্যস্তস্মাৎ মা ভৈষীঃ পশ্য শযতানো যুষ্মাকং পরীক্ষার্থং কাংশ্চিৎ কারাযাং নিক্ষেপ্স্যতি দশ দিনানি যাৱৎ ক্লেশো যুষ্মাসু ৱর্ত্তিষ্যতে চ| ৎৱং মৃত্যুপর্য্যন্তং ৱিশ্ৱাস্যো ভৱ তেনাহং জীৱনকিরীটং তুভ্যং দাস্যামি|
11 ௧௧ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்று எழுது.
১১যস্য শ্রোত্রং ৱিদ্যতে স সমিতীঃ প্রত্যুচ্যমানাম্ আত্মনঃ কথাং শৃণোতু| যো জযতি স দ্ৱিতীযমৃত্যুনা ন হিংসিষ্যতে|
12 ௧௨ பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: இரண்டு பக்கமும் கூர்மையான வாளை வைத்திருப்பவர் சொல்லுகிறதாவது;
১২অপরং পর্গামস্থসমিতে র্দূতং প্রতীদং লিখ, যস্তীক্ষ্ণং দ্ৱিধারং খঙ্গং ধারযতি স এৱ ভাষতে|
13 ௧௩ உன் செய்கைகளையும், சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடியிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்மேல் நீ வைத்த உன் விசுவாசத்தை, நீ மறுதலிக்காமல் இருந்ததையும் அறிந்திருக்கிறேன்.
১৩তৱ ক্রিযা মম গোচরাঃ, যত্র শযতানস্য সিংহাসনং তত্রৈৱ ৎৱং ৱসসি তদপি জানামি| ৎৱং মম নাম ধারযসি মদ্ভক্তেরস্ৱীকারস্ত্ৱযা ন কৃতো মম ৱিশ্ৱাস্যসাক্ষিণ আন্তিপাঃ সমযে ঽপি ন কৃতঃ| স তু যুষ্মন্মধ্যে ঽঘানি যতঃ শযতানস্তত্রৈৱ নিৱসতি|
14 ௧௪ ஆனாலும், சில காரியங்களைக்குறித்து உன்மேல் எனக்குக் குறை உண்டு; இஸ்ரவேல் மக்கள் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளை சாப்பிடுவதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் சாதகமான இடறலை அவர்களுக்கு முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்கள் உன்னிடம் உண்டு.
১৪তথাপি তৱ ৱিরুদ্ধং মম কিঞ্চিদ্ ৱক্তৱ্যং যতো দেৱপ্রসাদাদনায পরদারগমনায চেস্রাযেলঃ সন্তানানাং সম্মুখ উন্মাথং স্থাপযিতুং বালাক্ যেনাশিক্ষ্যত তস্য বিলিযমঃ শিক্ষাৱলম্বিনস্তৱ কেচিৎ জনাস্তত্র সন্তি|
15 ௧௫ அப்படியே நிக்கொலாய் மதத்தினருடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்களும் உன்னிடம் உண்டு; அதை நான் வெறுக்கிறேன்.
১৫তথা নীকলাযতীযানাং শিক্ষাৱলম্বিনস্তৱ কেচিৎ জনা অপি সন্তি তদেৱাহম্ ঋতীযে|
16 ௧௬ நீ மனம்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, என் வாயின் வாளினால் அவர்களோடு யுத்தம்பண்ணுவேன்.
১৬অতো হেতোস্ত্ৱং মনঃ পরিৱর্ত্তয ন চেদহং ৎৱরযা তৱ সমীপমুপস্থায মদ্ৱক্তস্থখঙ্গেন তৈঃ সহ যোৎস্যামি|
17 ௧௭ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவை உண்ணக்கொடுத்து, பெற்றுக்கொள்கிறவனைத்தவிர வேறொருவனுக்கும் தெரியாத புதிய நாமம் எழுதப்பட்ட வெண்மையானக் கல்லைக் கொடுப்பேன் என்று எழுது.
১৭যস্য শ্রোত্রং ৱিদ্যতে স সমিতীঃ প্রত্যুচ্যমানাম্ আত্মনঃ কথাং শৃণোতু| যো জনো জযতি তস্মা অহং গুপ্তমান্নাং ভোক্তুং দাস্যামি শুভ্রপ্রস্তরমপি তস্মৈ দাস্যামি তত্র প্রস্তরে নূতনং নাম লিখিতং তচ্চ গ্রহীতারং ৱিনা নান্যেন কেনাপ্যৱগম্যতে|
18 ௧௮ தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: அக்கினிஜூவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களும் உள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;
১৮অপরং থুযাতীরাস্থসমিতে র্দূতং প্রতীদং লিখ| যস্য লোচনে ৱহ্নিশিখাসদৃশে চরণৌ চ সুপিত্তলসঙ্কাশৌ স ঈশ্ৱরপুত্রো ভাষতে,
19 ௧௯ உன் செய்கைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த செயல்களைவிட பின்பு செய்த செயல்கள் அதிகமாக இருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.
১৯তৱ ক্রিযাঃ প্রেম ৱিশ্ৱাসঃ পরিচর্য্যা সহিষ্ণুতা চ মম গোচরাঃ, তৱ প্রথমক্রিযাভ্যঃ শেষক্রিযাঃ শ্রেষ্ঠাস্তদপি জানামি|
20 ௨0 ஆனாலும், உன்மேல் எனக்குக் குறை உண்டு; என்னவென்றால், தன்னைத் தீர்க்கதரிசி என்று சொல்லுகிற யேசபேல் என்னும் பெண், என்னுடைய ஊழியக்காரர்கள் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைச் சாப்பிடவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை ஏமாற்ற, நீ அவளுக்கு இடம் கொடுக்கிறாய்.
২০তথাপি তৱ ৱিরুদ্ধং মযা কিঞ্চিদ্ ৱক্তৱ্যং যতো যা ঈষেবল্নামিকা যোষিৎ স্ৱাং ভৱিষ্যদ্ৱাদিনীং মন্যতে ৱেশ্যাগমনায দেৱপ্রসাদাশনায চ মম দাসান্ শিক্ষযতি ভ্রামযতি চ সা ৎৱযা ন নিৱার্য্যতে|
21 ௨௧ அவள் மனம்திரும்புவதற்காக அவளுக்கு வாய்ப்புக்கொடுத்தேன்; தன் வேசித்தன வழியைவிட்டு மனம்திரும்ப அவளுக்கு விருப்பம் இல்லை.
২১অহং মনঃপরিৱর্ত্তনায তস্যৈ সমযং দত্তৱান্ কিন্তু সা স্ৱীযৱেশ্যাক্রিযাতো মনঃপরিৱর্ত্তযিতুং নাভিলষতি|
22 ௨௨ இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளோடு விபசாரம் செய்தவர்கள் தங்களுடைய செய்கைகளைவிட்டு மனம்திரும்பவில்லை என்றால், அவர்களையும் அதிக உபத்திரவத்திலே தள்ளி,
২২পশ্যাহং তাং শয্যাযাং নিক্ষেপ্স্যামি, যে তযা সার্দ্ধং ৱ্যভিচারং কুর্ৱ্ৱন্তি তে যদি স্ৱক্রিযাভ্যো মনাংসি ন পরাৱর্ত্তযন্তি তর্হি তানপি মহাক্লেশে নিক্ষেপ্স্যামি
23 ௨௩ அவளுடைய பிள்ளைகளையும் கொல்லுவேன்; அப்பொழுது நானே, சிந்தனைகளையும், இருதயங்களையும் ஆராய்கிறவர் என்று எல்லா சபைகளும் அறிந்துகொள்ளும்; உங்கள் ஒவ்வொருவனுக்கும் உங்களுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடியே பலன் கொடுப்பேன்.
২৩তস্যাঃ সন্তানাংশ্চ মৃত্যুনা হনিষ্যামি| তেনাহম্ অন্তঃকরণানাং মনসাঞ্চানুসন্ধানকারী যুষ্মাকমেকৈকস্মৈ চ স্ৱক্রিযাণাং ফলং মযা দাতৱ্যমিতি সর্ৱ্ৱাঃ সমিতযো জ্ঞাস্যন্তি|
24 ௨௪ தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பின்பற்றாமலும், சாத்தானுடைய ஆழமான இரகசியங்கள் என்று சொல்லப்படுகிற அந்தத் தந்திரங்களை அறிந்துகொள்ளாமலும் இருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் எந்தவொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.
২৪অপরম্ অৱশিষ্টান্ থুযাতীরস্থলোকান্ অর্থতো যাৱন্তস্তাং শিক্ষাং ন ধারযন্তি যে চ কৈশ্চিৎ শযতানস্য গম্ভীরার্থা উচ্যন্তে তান্ যে নাৱগতৱন্তস্তানহং ৱদামি যুষ্মাসু কমপ্যপরং ভারং নারোপযিষ্যামি;
25 ௨௫ நான் வரும்வரைக்கும் என்னை விசுவாசித்து என்னைப் பற்றிக்கொண்டிருங்கள்.
২৫কিন্তু যদ্ যুষ্মাকং ৱিদ্যতে তৎ মমাগমনং যাৱদ্ ধারযত|
26 ௨௬ ஜெயம்பெற்று கடைசிவரைக்கும் நான் செய்த காரியங்களைச் செய்கிறவன் எவனோ அவனுக்கு நான் என் பிதாவிடம் இருந்து அதிகாரம் பெற்றதுபோல, தேசங்களின் மக்கள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
২৬যো জনো জযতি শেষপর্য্যন্তং মম ক্রিযাঃ পালযতি চ তস্মা অহম্ অন্যজাতীযানাম্ আধিপত্যং দাস্যামি;
27 ௨௭ அவன் இரும்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
২৭পিতৃতো মযা যদ্ৱৎ কর্তৃৎৱং লব্ধং তদ্ৱৎ সো ঽপি লৌহদণ্ডেন তান্ চারযিষ্যতি তেন মৃদ্ভাজনানীৱ তে চূর্ণা ভৱিষ্যন্তি|
28 ௨௮ விடியற்கால நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.
২৮অপরম্ অহং তস্মৈ প্রভাতীযতারাম্ অপি দাস্যামি|
29 ௨௯ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது.
২৯যস্য শ্রোত্রং ৱিদ্যতে স সমিতীঃ প্রত্যুচ্যমানাম্ আত্মনঃ কথাং শৃণোতু|