< வெளிப்படுத்தின விசேஷம் 15 >

1 பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதர்களைப் பார்த்தேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிவிற்கு வந்தது.
Am văzut pe cer un alt semn mare și minunat: șapte îngeri care aveau cele șapte plăgi de pe urmă, căci în ei s-a sfârșit mânia lui Dumnezeu.
2 அன்றியும், அக்கினிக் கலந்த கண்ணாடிக் கடல்போல ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் உருவத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் பெயரின் எண்ணிற்கும் உள்ளாகாமல் ஜெயம் பெற்றவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் பார்த்தேன்.
Am văzut ceva ca o mare de sticlă amestecată cu foc și pe cei ce au biruit fiara, chipul ei și numărul numelui ei, care stăteau pe marea de sticlă, având harpele lui Dumnezeu.
3 அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய செய்கைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
Ei cântau cântecul lui Moise, robul lui Dumnezeu, și cântecul Mielului, zicând “Mari și minunate sunt lucrările Tale, Doamne Dumnezeule, Cel Atotputernic! Drepte și adevărate sunt căile Tale, Împărate al neamurilor.
4 கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருப்பார்கள்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா தேசத்து மக்களும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளிப்பட்டது” என்றார்கள்.
Cine nu s-ar teme de Tine, Doamne? și să-ți glorificăm numele? Căci numai Tu ești sfânt. Căci toate neamurile vor veni și se vor închina înaintea ta. Căci faptele Tale drepte au fost descoperite.”
5 இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது;
După acestea, m-am uitat, și templul cortului mărturiei din ceruri s-a deschis.
6 அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அந்த ஏழு தூதர்களும் பரிசுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடையணிந்து, மார்பில் பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.
Cei șapte îngeri care aveau cele șapte plăgi au ieșit, îmbrăcați în in pur și strălucitor și purtând fâșii de aur în jurul pieptului.
7 அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது. (aiōn g165)
Una din cele patru făpturi vii a dat celor șapte îngeri șapte cupe de aur pline cu mânia lui Dumnezeu, care trăiește în vecii vecilor. (aiōn g165)
8 அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவனுடைய ஆலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் செல்லமுடியவில்லை.
Templul s-a umplut de fum de la gloria lui Dumnezeu și de la puterea Lui. Nimeni nu a putut intra în templu până când cele șapte plăgi ale celor șapte îngeri nu se vor fi terminat.

< வெளிப்படுத்தின விசேஷம் 15 >