< வெளிப்படுத்தின விசேஷம் 10 >

1 பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்; மேகம் அவனைச் சுற்றியிருந்தது, அவனுடைய தலையின்மேல் வானவில் இருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினித் தூண்களைப்போலவும் இருந்தது.
तेबे मैं एक ओर तागतबर स्वर्गदूत बादल़ो ते किरे रे, स्वर्गो ते उतरदे ऊए देखेया। तेसरे सिरो पाँदे बादल़ो रा मेघधनुष था और तेसरा मूँ सूरजो जेड़ा और तेसरे पैर आगी रे खम्बे जेड़े थे।
2 திறக்கப்பட்ட ஒரு சிறிய புத்தகம் அவனுடைய கையில் இருந்தது; தன் வலது பாதத்தைக் கடலின்மேலும், தன் இடதுபாதத்தை பூமியின்மேலும் வைத்து,
तिने आपणा दाँणा पैर समुद्रो रे और खूँजा तरतिया पाँदे राखेया। तेसरे आथो रे एक छोटी जी खुली री कताब थी।
3 சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல அதிக சத்தமாக ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.
तेबे से इतणी जोरे की चिंगेया, जेड़ा शेर गर्जोआ और जेबे से चिंगेया, तो गर्जणा री सात आवाजा सुणिया।
4 அந்த ஏழு இடிகளும் தங்களுடைய சத்தங்களை முழங்கினபோது நான் எழுதவேண்டுமென்று இருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் அவைகள் இரகசியமாக இருக்க முத்திரைபோடு என்று வானத்திலிருந்து சொன்ன ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
जेबे सातो गर्जणा री आवाजा सुणी चुकिया, तो आऊँ लिखणे वाल़ा ई था, पर मैं स्वर्गो ते ये आवाज सुणी, “जो गल्ला गर्जणा रे तिना सात आवाजा ते सुणी राखिया, तिना खे गुप्त राख और लिख नि।”
5 கடலின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் பார்த்த அந்த தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி:
जेस स्वर्गदूतो खे मैं तरतिया पाँदे और समुद्रो रे खड़ेया रा देखेया था, तिने आपणा दाँणा आथ स्वर्गो री तरफा खे चकेया,
6 வானத்தையும் அதில் இருப்பவைகளையும், பூமியையும் அதில் இருப்பவைகளையும், கடலையும் அதில் இருப்பவைகளையும் உண்டாக்கினவரும் எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். இனி காலம் தாமதம் ஆகாது; (aiōn g165)
और तिने तेसरी जो जुगो-जुगो तक जिऊँदा ए और जिने स्वर्ग और जो कुछ तिदे ए, तरती और जो कुछ तिदे ए और समुद्रो खे और जो कुछ तिदे ए, बणाया, तेसरी ई कसम खाई कि बोलेया, “एबे तो ओर देर नि ऊणी। (aiōn g165)
7 ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளுக்கு நற்செய்தியாக அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவ இரகசியம் நிறைவேறும் என்று,
तेस बखते जेबे सातुए स्वर्गदूतो तुरहिया रे फूकर देणी, परमेशरो आपणी गुप्त योजना पूरी करनी जेतेरा संदेश तिने आपणे दास भविष्यबक्तेया खे दित्तेया था।”
8 நான் வானத்தில் இருந்து கேட்ட சத்தம் மீண்டும் என்னோடு பேசி: கடலின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையில் இருக்கும் திறக்கப்பட்ட சிறிய புத்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,
जो आवाज मैं स्वर्गो ते बोलदे ऊए सुणी थी, से फेर मां साथे गल्ला करने लगेया, “जा, जो स्वर्गदूत समुद्र और तरतिया पाँदे खड़ी रा, तेसरे आथो री खुली री कताब लयी लो।”
9 நான் தூதனிடம்போய்: அந்தச் சிறிய புத்தகத்தை எனக்குத் தரவேண்டும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிச் சாப்பிடு; இது உன் வயிற்றுக்குக் கசப்பாக இருக்கும். ஆனால் உன் வாய்க்கு இது தேனைப்போலச் சுவையாக இருக்கும் என்றான்.
तेबे मैं स्वर्गदूतो गे जाई की बोलेया, “ये छोटी जी कताब माखे दे।” और तिने माखे बोलेया, “लओ, इजी खे खाई दे और एसा तेरा पेट कड़ुआ तो करना, पर तेरे मुंओ रे सईतो जेड़ी मीठी लगणी।”
10 ௧0 நான் அந்தச் சிறிய புத்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைச் சாப்பிட்டேன்; என் வாய்க்கு அது தேனைப்போல இனிமையாக இருந்தது; நான் அதைச் சாப்பிட்டவுடனே என் வயிறு கசப்பானது.
तेबे आऊँ से छोटी कताब स्वर्गदूतो रे आथो ते लयी की खाई गा। से मेरे मुंओ रे सईतो जेड़ी मीठी तो लगी, पर जेबे आऊँ तेसा खे खाई चुकेया, तो मेरा पेट कड़ुआ ऊईगा।
11 ௧௧ அப்பொழுது அவன் என்னைப் பார்த்து: நீ மீண்டும் அநேக மக்களையும், தேசங்களையும், பல மொழிக்காரர்களையும், ராஜாக்களையும்குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்றான்.
तेबे माखे ये बोलेया गया, “ताखे बऊत सारे लोका, जातिया, पाषा और राजेया रे बारे रे फेर भविष्यबाणी करनी ऊगी।”

< வெளிப்படுத்தின விசேஷம் 10 >