< வெளிப்படுத்தின விசேஷம் 10 >

1 பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்; மேகம் அவனைச் சுற்றியிருந்தது, அவனுடைய தலையின்மேல் வானவில் இருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினித் தூண்களைப்போலவும் இருந்தது.
फिर मय न स्वर्ग सी खल्लो उतरतो हुयो एक अऊर सामर्थी स्वर्गदूत ख देख्यो। ओन बादर ख ओढ़्यो हुयो होतो, ओको मुंड को आजु बाजू एक इंद्रधनुष होतो। ओको मुंह सूरज को जसो होतो, अऊर ओको पाय आगी को खम्बा को जसो होतो।
2 திறக்கப்பட்ட ஒரு சிறிய புத்தகம் அவனுடைய கையில் இருந்தது; தன் வலது பாதத்தைக் கடலின்மேலும், தன் இடதுபாதத்தை பூமியின்மேலும் வைத்து,
ओको हाथ म एक छोटी सी खुली हुयी किताब होती। ओन अपनो दायो पाय समुन्दर पर अऊर बायो पाय धरती पर रख दियो,
3 சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல அதிக சத்தமாக ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.
फिर ऊ सिंह को जसो गरजतो हुयो ऊचो आवाज म चिल्लायो, त सात गर्जन को संग आवाज सुनायी दियो।
4 அந்த ஏழு இடிகளும் தங்களுடைய சத்தங்களை முழங்கினபோது நான் எழுதவேண்டுமென்று இருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் அவைகள் இரகசியமாக இருக்க முத்திரைபோடு என்று வானத்திலிருந்து சொன்ன ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
जब सातों गर्जन को आवाज सुनायी दे दियो, त मय लिखन ख होतो, पर मय न स्वर्ग सी यो आवाज सुन्यो, “जो बाते गर्जन को उन सात शब्दों सी सुनी हंय उन्ख गुप्त रखो, येख लिखो मत!”
5 கடலின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் பார்த்த அந்த தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி:
जो स्वर्गदूत ख मय न समुन्दर अऊर धरती पर खड़ो देख्यो होतो, ओन अपनो दायो हाथ स्वर्ग को तरफ उठायो,
6 வானத்தையும் அதில் இருப்பவைகளையும், பூமியையும் அதில் இருப்பவைகளையும், கடலையும் அதில் இருப்பவைகளையும் உண்டாக்கினவரும் எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். இனி காலம் தாமதம் ஆகாது; (aiōn g165)
अऊर जो हमेशा जीन्दो रह्य हय, अऊर जेन स्वर्ग ख, धरती ख, अऊर समुन्दर ख, अऊर जो कुछ उन म हय उन्ख बनायो हय। स्वर्गदूत न कह्यो, “अब कोयी देर नहीं होयेंन! (aiōn g165)
7 ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளுக்கு நற்செய்தியாக அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவ இரகசியம் நிறைவேறும் என்று,
पर जब सातवों स्वर्गदूत ख सुनन म आयेंन मतलब जब ऊ अपनी तुरही फूकन पर होना तब भी परमेश्वर की वा गुप्त योजना पूरी होय जायेंन, जेक ओन अपनो सेवकों अऊर भविष्यवक्तावों पर घोषित करयो।”
8 நான் வானத்தில் இருந்து கேட்ட சத்தம் மீண்டும் என்னோடு பேசி: கடலின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையில் இருக்கும் திறக்கப்பட்ட சிறிய புத்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,
जो आवाज ख मय न स्वर्ग सी बोलतो सुन्यो होतो, ऊ फिर मोरो संग बाते करन लग्यो, “जा, जो स्वर्गदूत समुन्दर अऊर धरती पर खड़ो हय, ओको हाथ म की खुली हुयी किताब ले ले।”
9 நான் தூதனிடம்போய்: அந்தச் சிறிய புத்தகத்தை எனக்குத் தரவேண்டும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிச் சாப்பிடு; இது உன் வயிற்றுக்குக் கசப்பாக இருக்கும். ஆனால் உன் வாய்க்கு இது தேனைப்போலச் சுவையாக இருக்கும் என்றான்.
मय न स्वर्गदूत को जवर जाय क कह्यो, “या छोटी किताब मोख दे।” ओन मोरो सी कह्यो, “ले, येख खाय ले; येको सी त तोरो पेट खट्टो होय जायेंन, पर तोरो मुंह म यो शहेद को जसो मीठो होय जायेंन।”
10 ௧0 நான் அந்தச் சிறிய புத்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைச் சாப்பிட்டேன்; என் வாய்க்கு அது தேனைப்போல இனிமையாக இருந்தது; நான் அதைச் சாப்பிட்டவுடனே என் வயிறு கசப்பானது.
येकोलायी मय वा छोटी किताब ऊ स्वर्गदूत को हाथ सी ले क खाय गयो। ऊ मोरो मुंह म शहेद जसो मीठो त लग्यो, पर जब मय ओख गिटक गयो, त मोरो पेट खट्टो भय गयो।
11 ௧௧ அப்பொழுது அவன் என்னைப் பார்த்து: நீ மீண்டும் அநேக மக்களையும், தேசங்களையும், பல மொழிக்காரர்களையும், ராஜாக்களையும்குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்றான்.
तब मोरो सी यो कह्यो गयो, “तोख बहुत सो लोगों, जातियों, भाषावों, अऊर राजावों को बारे म फिर भविष्यवानी करनो पड़ेंन।”

< வெளிப்படுத்தின விசேஷம் 10 >