< சங்கீதம் 82 >
1 ௧ ஆசாபின் பாடல். தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தெய்வங்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
亞薩的詩。 上帝站在有權力者的會中, 在諸神中行審判,
2 ௨ எதுவரைக்கும் நீங்கள் அநியாயத் தீர்ப்புச்செய்து, துன்மார்க்கர்களுக்கு முகதாட்சிணியம் செய்வீர்கள். (சேலா)
說:你們審判不秉公義, 徇惡人的情面,要到幾時呢? (細拉)
3 ௩ ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.
你們當為貧寒的人和孤兒伸冤; 當為困苦和窮乏的人施行公義。
4 ௪ பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
當保護貧寒和窮乏的人, 救他們脫離惡人的手。
5 ௫ அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், இருளிலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.
你們仍不知道,也不明白, 在黑暗中走來走去; 地的根基都搖動了。
6 ௬ நீங்கள் தெய்வங்கள் என்றும், நீங்களெல்லோரும் உன்னதமான தேவனுடைய மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
我曾說:你們是神, 都是至高者的兒子。
7 ௭ ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து, உலகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள்.
然而,你們要死,與世人一樣, 要仆倒,像王子中的一位。
8 ௮ தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே எல்லா தேசங்களையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.
上帝啊,求你起來審判世界, 因為你要得萬邦為業。