< சங்கீதம் 78 >

1 ஆசாபின் மஸ்கீல் என்னும் போதகப் பாடல். என் மக்களே, என்னுடைய உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வார்த்தைகளுக்கு உங்களுடைய செவிகளைச் சாயுங்கள்.
Asaf dwom. Me nkurɔfo, muntie me nkyerɛkyerɛ; monyɛ aso mma mʼanom nsɛm.
2 என்னுடைய வாயை உவமைகளால் திறப்பேன்; ஆரம்ப காலத்தின் மறைபொருட்களை வெளிப்படுத்துவேன்.
Mɛkasa wɔ abebu mu, mɛka ahintasɛm, teteete nneɛma no,
3 அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்களுடைய முன்னோர்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.
nneɛma a yɛate na yɛahu; nneɛma a yɛn agyanom aka ho asɛm akyerɛ yɛn.
4 பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், யெகோவாவின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.
Yɛremfa nkame wɔn mma; yɛbɛka akyerɛ nkyirimma Awurade nneyɛe a ɛfata nkamfo no, ne tumi ne anwonwade a wayɛ no.
5 அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை நிறுவி, அவைகளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.
Ɔyɛɛ ahyɛde maa Yakob na ɔyɛɛ mmara wɔ Israel, nea ɔhyɛɛ yɛn nenanom sɛ wɔnkyerɛ wɔn mma,
6 இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, அவர்கள் எழும்பித் தங்களுடைய பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்;
sɛnea ɛbɛyɛ a nkyirimma besua, mpo mmofra a wonnya nwoo wɔn, na wɔn nso akyerɛkyerɛ wɔn mma.
7 தேவன்மேல் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறக்காமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்;
Afei wɔde wɔn ho bɛto Onyankopɔn so, na wɔn werɛ remfi ne nneyɛe, na wobedi nʼahyɛde so.
8 இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாகப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்களுடைய பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.
Wɔrenyɛ sɛ wɔn nenanom, a na wɔyɛ asoɔdenfo ne atuatewfo, wɔn a wonni Onyankopɔn nokware wɔ wɔn koma mu na woyɛ honhom mu atorofo ma no no.
9 ஆயுதமணிந்த வில்வீரர்களான எப்பிராயீமீர்கள் யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள்.
Ɛwɔ mu sɛ na Efraim mmarima kurakura agyan, nanso ɔko da no woguanee;
10 ௧0 அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதிக்காமலும்,
Wɔanni Onyankopɔn apam no so, wɔampɛ sɛ wodi ne mmara no so.
11 ௧௧ அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
Wɔn werɛ fii nea wayɛ, anwonwade a wayɛ akyerɛ wɔn no.
12 ௧௨ அவர்களுடைய முன்னோர்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.
Ɔyɛɛ anwonwade wɔ wɔn nenanom anim, wɔ Soan mantam a ɛwɔ Misraim asase so.
13 ௧௩ கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கச்செய்து, தண்ணீரைக் குவியலாக நிற்கும்படிச் செய்தார்.
Ɔkyɛɛ po mu na ɔde wɔn faa mu. Ɔmaa nsu no gyinaa sɛ afasu.
14 ௧௪ பகலிலே மேகத்தினாலும், இரவுமுழுவதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.
Ɔde omununkum dii wɔn anim awia na ɔde ogyatɛn dii wɔn anim anadwo nyinaa.
15 ௧௫ பாலைவனத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.
Ɔpaee ɔbotan mu wɔ sare so, na ɔmaa wɔn nsu a ɛdɔɔso sɛ po;
16 ௧௬ கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படச்செய்து, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.
Ɔmaa asuti fii abotan mu na ɔmaa nsu sen sɛ nsubɔnten.
17 ௧௭ என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, பாலைவனத்திலே உன்னதமான தேவனுக்குக் கோபம் மூட்டினார்கள்.
Nanso wɔkɔɔ so yɛɛ bɔne tiaa no, wɔsɔre tiaa Ɔsorosoroni no wɔ sare no so.
18 ௧௮ தங்களுடைய ஆசைக்கேற்ற உணவைக்கேட்டு, தங்களுடைய இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
Wɔhyɛɛ da kaa aduan a wɔpɛ, de sɔɔ Onyankopɔn hwɛe.
19 ௧௯ அவர்கள் தேவனுக்கு விரோதமாகப் பேசி: தேவன் பாலைவனத்திலே உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ?
Wɔkasa tiaa Onyankopɔn se, “Onyankopɔn betumi ato pon wɔ sare so ana?
20 ௨0 இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாகப் புரண்டுவந்தது; அவர் அப்பத்தையும் கொடுக்கமுடியுமோ? தம்முடைய மக்களுக்கு இறைச்சியையும் ஆயத்தப்படுத்துவாரோ என்றார்கள்.
Ɔde ade bɔɔ ɔbotan mu no, nsu tue fii mu, na nsuwa sen buu so. Na obetumi ama yɛn aduan nso? Obetumi ama ne nkurɔfo nam ana?”
21 ௨௧ ஆகையால் யெகோவா அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்; அவர்கள் தேவனை விசுவாசிக்காமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால்,
Bere a Awurade tee nea wɔreka no, ne bo fuw yiye; ne gya beguu Yakob so, na nʼabufuwhyew sɔre tiaa Israel,
22 ௨௨ யாக்கோபுக்கு விரோதமாக நெருப்பு பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கோபம் மூண்டது.
efisɛ na wonni Onyankopɔn mu gyidi anaasɛ ne nkwagye mu ahotoso.
23 ௨௩ அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து,
Nanso ɔkasa kyerɛɛ ɔsoro wɔ ɔhyɛ so; na obuee ɔsorosoro apon.
24 ௨௪ மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாகப் பெய்யச்செய்து, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.
Ɔtɔɔ mana guu fam maa nnipa no sɛ wunni, ɔmaa wɔn ɔsoro aduan.
25 ௨௫ தூதர்களின் அப்பத்தை மனிதன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாக அனுப்பினார்.
Nnipa dii abɔfo aduan; ɔmaa wɔn aduan a wobetumi adi nyinaa.
26 ௨௬ வானத்திலே கிழக்கு காற்றை வீசச்செய்து, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,
Ogyaa apuei mframa fi ɔsoro, na ofi ne tumi mu bɔɔ atɔe mframa.
27 ௨௭ இறைச்சியை தூளைப்போலவும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலளவாகவும் பெய்யச்செய்து,
Ɔtɔɔ nam sɛ mfutuma guu wɔn so, nnomaa a wotu bebree sɛ mpoano nwea.
28 ௨௮ அவைகளை அவர்கள் முகாமின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கச்செய்தார்.
Ɔma wɔbaa fam kɔɔ wɔn atenae, ne wɔn ntamadan ho nyinaa.
29 ௨௯ அவர்கள் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள்; அவர்கள் ஆசைப்பட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்.
Wodidi maa aduan no boroo wɔn so efisɛ ɔmaa wɔn nea wɔhwehwɛ.
30 ௩0 அவர்கள் தங்களுடைய ஆசையை வெறுக்கவில்லை; அவர்களுடைய உணவு அவர்களுடைய வாயில் இருக்கும்போதே.
Nanso ansa na wobefi aduan a wɔhwehwɛ no ho, bere a ɛhyehyɛ wɔn anom mpo no,
31 ௩௧ தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களை அழித்து, இஸ்ரவேலில் வாலிபர்களை விழச்செய்தார்.
Onyankopɔn abufuw sɔree wɔn so; okum ahoɔdenfo a wɔwɔ wɔn mu twitwaa Israel mmerante gui.
32 ௩௨ இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள்.
Eyinom nyinaa akyi, wɔkɔɔ so yɛɛ bɔne; nʼanwonwade akyi no, wɔannye anni.
33 ௩௩ ஆதலால் அவர்கள் நாட்களை வீணாகவும், அவர்கள் வருடங்களைப் பயங்கரத்திலும் கழியச்செய்தார்.
Enti otwaa wɔn nna so te sɛ ahuru yɛɛ wɔn mfe awiei huhuuhu.
34 ௩௪ அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;
Bere biara a Onyankopɔn bekum wɔn no, wɔhwehwɛ no na wɔpere wɔn ho san ba ne nkyɛn.
35 ௩௫ தேவன் தங்களுடைய கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்களுடைய மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள்.
Wɔkaee sɛ Onyankopɔn yɛ wɔn botan, sɛ Ɔsorosoro Nyankopɔn no yɛ wɔn Gyefo.
36 ௩௬ ஆனாலும் அவர்கள் தங்களுடைய வாயினால் அவருக்கு வஞ்சகம் பேசி, தங்களுடைய நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள்.
Nanso wɔde wɔn ano bɛdaadaa no, na wɔde wɔn tɛkrɛma atwa atoro akyerɛ no;
37 ௩௭ அவர்களுடைய இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாக இருக்கவில்லை.
wɔn koma nni no nokware, na wonni nʼapam no so.
38 ௩௮ அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராக அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது கடுங்கோபம் முழுவதையும் எழுப்பாமல், அநேகமுறை தமது கோபத்தை விலக்கிவிட்டார்.
Nanso na ɔyɛ ahummɔbɔ; ɔde wɔn amumɔyɛ kyɛɛ wɔn a wansɛe wɔn. Mpɛn pii, ɔtwentwɛn nʼabufuw so na wanhwie nʼabufuwhyew nyinaa.
39 ௩௯ அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.
Ɔkaee sɛ wɔyɛ ɔhonam ara kwa, mframa bi a ɛbɔ twa mu na ɛnsan nʼakyi.
40 ௪0 எத்தனைமுறையோ பாலைவனத்திலே அவருக்குக் கோபமூட்டி, பாலைவனத்திலே அவரை வேதனைப்படுத்தினார்கள்.
Mpɛn ahe na wɔansɔre antia no wɔ sare no so hɔ, na mpɛn ahe na wɔamma ne werɛ anhow wɔ asase wosee no so!
41 ௪௧ அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்த தேவனை எரிச்சலூட்டினார்கள்.
Wɔsɔɔ Onyankopɔn hwɛɛ bere biara; na woyii Israel Ɔkronkronni no abufuw.
42 ௪௨ அவருடைய கரத்தையும், அவர் தங்களை எதிரிகளுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினைக்காமல் போனார்கள்.
Wɔn werɛ fii ne tumi no, da a ogyee wɔn fii wɔn nhyɛsofo nsam no,
43 ௪௩ அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.
da a ɔyɛɛ nsɛnkyerɛnne nwonwaso wɔ Misraim no ne nʼanwonwade wɔ Soan mantam mu no.
44 ௪௪ அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய ஆறுகளிலுள்ள தண்ணீரைக் குடிக்கமுடியாதபடி செய்தார்.
Ɔmaa wɔn nsubɔnten dan mogya; wɔantumi annom wɔn nsuten mu nsu.
45 ௪௫ அவர்களை அழிக்கும்படி வண்டு வகைகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
Ɔmaa nwansenadɔm baa wɔn so bɛhaw wɔn na mpɔtorɔ nso bɛsɛee wɔn asase.
46 ௪௬ அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், அவர்களுடைய உழைப்பின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார்.
Ɔmaa tɛwtɛw bedii wɔn mfuw so aduan na ɔde wɔn nnɔbae nso maa mmoadabi.
47 ௪௭ கல்மழையினால் அவர்களுடைய திராட்சைச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,
Ɔde mparuwbo sɛee wɔn bobe na ɔde sukyerɛmma sɛee wɔn ankye nnua.
48 ௪௮ அவர்களுடைய மிருகங்களைக் கல்மழைக்கும், அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.
Ɔde sukyerɛmma kum wɔn anantwi ɔde anyinam kum wɔn nyɛmmoa.
49 ௪௯ தமது கடுமையான கோபத்தையும், மூர்க்கத்தையும், பிரச்சனையையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
Ohwiee nʼabufuwhyew guu wɔn so, abufuw, anibere ne ɔtan; abɔfo asɛefo kuw no.
50 ௫0 அவர் தம்முடைய கோபத்திற்கு வழிதிறந்து, அவர்களுடைய ஆத்துமாவை மரணத்திற்கு விலக்கிக் காக்காமல், அவர்கள் உயிரைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.
Ɔbɔɔ kwan maa nʼabufuw; na wamfa wɔn nkwa ankyɛ wɔn, mmom, ɔde wɔn maa ɔyaredɔm.
51 ௫௧ எகிப்திலே முதற்பிறந்த பிள்ளைகள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பிறந்த எல்லோரையும் அழித்து;
Okunkum Misraimfo mmakan nyinaa, Ham ntamadan mu nnipa mu abakan.
52 ௫௨ தம்முடைய மக்களை ஆடுகளைப்போல் புறப்படச்செய்து, அவர்களை வனாந்திரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;
Nanso oyii ne nkurɔfo fii mu sɛ nguankuw; odii wɔn anim sɛ nguan wɔ sare no so.
53 ௫௩ அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாக வழிநடத்தினார்; அவர்கள் எதிரிகளைக் கடல் மூடிப்போட்டது.
Odii wɔn anim dwoodwoo, enti wɔansuro; nanso wɔn atamfo de, po asorɔkye bu faa wɔn so.
54 ௫௪ அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், தமது வலதுகரம் சம்பாதித்த இந்த மலைவரைக்கும் அழைத்துக்கொண்டுவந்து,
Sɛɛ na ɔyɛ de wɔn baa nʼasase kronkron no ahye so, bepɔw asase a ɔde ne nsa nifa gyee no.
55 ௫௫ அவர்கள் முகத்திற்கு முன்பாக தேசங்களைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.
Ɔpam amanaman a wɔwɔ wɔn anim no na ɔkyekyɛɛ wɔn nsase no mu maa wɔn sɛ wɔn agyapade; ɔbɔɔ Israel mmusuakuw no atenase wɔ wɔn afi mu.
56 ௫௬ ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமல்போய்,
Nanso wɔsɔɔ Onyankopɔn hwɛe, na wɔsɔre tiaa Ɔsorosoroni no; na wɔanni ne mmara so.
57 ௫௭ தங்களுடைய முன்னோர்களைப்போல வழிவிலகி, துரோகம்செய்து, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,
Wɔyɛɛ sɛ wɔn agyanom, wɔanni nokware na wɔannya gyidi, ahotoso nni wɔn mu na wɔte sɛ agyan a asɛe.
58 ௫௮ தங்களுடைய மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, தங்களுடைய விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள்.
Wɔde wɔn sorɔnsorɔmmea hyɛɛ no abufuw na wɔn ahoni maa ne ninkutwe mu yɛɛ den.
59 ௫௯ தேவன் அதைக் கேட்டு கடுங்கோபமடைந்து, இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,
Onyankopɔn tee wɔn nka no, ne bo fuwii; na ɔpoo Israel korakora.
60 ௬0 தாம் மனிதர்களுக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி,
Ogyaw nʼatenae a ɛwɔ Silo no, ntamadan a wasi wɔ nnipa mu no.
61 ௬௧ தமது பலமாகிய இஸ்ரவேலர்களை சிறையிருப்புக்கும், தமது மகிமையான தம் ஜனத்தை எதிரியின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,
Ɔde Apam Adaka a ɛyɛ ne tumi no kɔɔ nnommum mu, nʼanuonyam kɔɔ atamfo nsam.
62 ௬௨ தமது மக்களை வாளுக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார்.
Ɔde ne nkurɔfo maa afoa; ne bo fuw nʼagyapade yiye.
63 ௬௩ அவர்கள் வாலிபர்களை நெருப்பு எரித்தது, அவர்களுடைய கன்னிப்பெண்கள் வாழ்க்கைப்படாமலிருந்தார்கள்.
Ogya hyew wɔn mmerante kum wɔn, na wɔn mmabaa annya ayeforohyia dwom anto;
64 ௬௪ அவர்களுடைய ஆசாரியர்கள் வாளால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.
Wɔn asɔfo wuwuu afoa ano, na wɔn akunafo antumi ansu.
65 ௬௫ அப்பொழுது ஆண்டவர் தூக்கம் தெளிந்தவனைப்போலவும், திராட்சைரசத்தால் கெம்பீரிக்கிற பலசாலியைப்போலவும் விழித்து,
Afei Awurade sɔree sɛnea ofi nna mu no, sɛnea ɔbarima a wabow nsa nyan fi nnahɔɔ mu no.
66 ௬௬ தம்முடைய எதிரிகளைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரச்செய்தார்.
Ɔbobɔɔ nʼatamfo ma woguan kɔɔ wɔn akyi; ɔhyɛɛ wɔn aniwu afebɔɔ.
67 ௬௭ அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,
Afei ɔpoo Yosef ntamadan no, na wamfa Efraim abusuakuw no nso;
68 ௬௮ யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார்.
Na mmom, ɔfaa Yuda abusuakuw no, Bepɔw Sion a ɔdɔ no no.
69 ௬௯ தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும், என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார்.
Osii ne kronkronbea te sɛ sorɔnsorɔmmea, te sɛ asase a etim hɔ daa.
70 ௭0 தம்முடைய ஊழியனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்.
Oyii ne somfo Dawid, ɔfrɛɛ no fii nguannan mu;
71 ௭௧ கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய மக்களாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார்.
fii nguan akyi na ɔde no bae se ɔmmɛyɛ oguanhwɛfo mma ne nkurɔfo Yakob, mma Israel a wɔyɛ nʼagyapade.
72 ௭௨ இவன் அவர்களைத் தன்னுடைய இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன்னுடைய கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்.
Na Dawid de koma pa hwɛɛ wɔn so na ɔde ne nimdeɛ dii wɔn anim.

< சங்கீதம் 78 >