< சங்கீதம் 53 >

1 தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவன் இல்லை என்று அறிவில்லாதவன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
達味訓誨歌,交與樂官,悲調。 愚妄的人心中說:「沒有天主,」他們都喪盡天良,恣意作惡。行善的人實在找不到一個。
2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனிதர்களைக் கண்ணோக்கினார்.
天主由高天俯視世人的子孫,察看有無尋覓天主的明智人,
3 அவர்கள் எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.
人人都離棄了正道,趨向邪惡,沒有一人行善,實在沒有一個。
4 அக்கிரமக்காரர்களுக்கு அறிவு இல்லையா? அப்பத்தை சாப்பிடுகிறதுபோல் என்னுடைய மக்களைச் சாப்பிடுகிறார்களே; அவர்கள் தேவனைக் கூப்பிடுகிறதில்லை.
那些作姦犯科的人,吞我民如食饅頭;總不呼求天主的人,豈不是愚蠢糊塗?
5 உனக்கு விரோதமாக முகாமிடுகிறவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறடித்ததால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.
在不應驚慌之處,他們反倒驚惶發呆;因為天主分散了那圍攻你者的骨骸,他們必將蒙羞,因天主已把他們捨棄。
6 சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; தேவன் தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குச் சந்தோஷமும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
唯願以色列人的救援來自熙雍!天主若將自己的民族命運變更,雅各伯必將喜慶,以色列必將歡騰。

< சங்கீதம் 53 >