< சங்கீதம் 47 >
1 ௧ கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல். எல்லா மக்களே, கைகொட்டி, தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாக ஆர்ப்பரியுங்கள்.
Načelniku gódbe; med nasledniki Koretovimi, psalm. Vsa ljudstva ploskajte z roko, ukajte Bogu z donečim glasom.
2 ௨ உன்னதமான தேவனாகிய யெகோவா பயங்கரமானவரும், பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாக இருக்கிறார்.
Ker Gospod najvišji, čestiti, kralj velik je nad vso zemljo.
3 ௩ மக்களை நமக்கு கீழ்படுத்தி, தேசங்களை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.
V hlev goni ljudstva, v naš kraj, in narode v kraj naših nóg.
4 ௪ தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் உரிமைச்சொத்தாக தெரிந்தளிப்பார். (சேலா)
Odbira nam posestvo naše, diko Jakoba, katerega ljubi nad vse.
5 ௫ தேவன் ஆர்ப்பரிப்போடும், யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.
Gor gré Bog z veselim glasom, Gospod s trombe bučanjem.
6 ௬ தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.
Prepevajte Bogu, prepevajte; prepevajte kralju našemu, prepevajte!
7 ௭ தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.
Ker vse zemlje kralj je Bog, prepevajte s pesmijo ukovito!
8 ௮ தேவன் தேசங்களின்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.
Bog kraljuje nad narodi; Bog sedí na prestolu svetosti svoje.
9 ௯ மக்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய மக்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமான தேவன்.
Radovoljni se zbirajo iz ljudstev, ljudstvo Boga Abrahamovega, ker Božje so hrambe dežele; silno je vzvišen.