< சங்கீதம் 28 >

1 தாவீதின் பாடல். என் கன்மலையாகிய யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேட்காதவர்போல மவுனமாக இருக்கவேண்டாம்; நீர் மவுனமாக இருந்தால் நான் கல்லறையில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
Ihe, ry Iehovà ro kanjieko, ry Lamilamiko, ko mañovok’ ahy, kera, hianjiñe, le hanahake o mizotso mb’an-tsikeokeok’aoo iraho.
2 நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராகக் கையெடுக்கும்போது, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.
Janjiño ty feon-kalaliko naho itoreovako, ie añonjonako sirañe mb’amy anjomba’o miavakey.
3 அருகில் உள்ளவனுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்களுடைய இருதயங்களில் தீமைகளை வைத்திருக்கிற துன்மார்க்கர்களோடும் அக்கிரமக்காரர்களோடும் என்னை வாரிக்கொள்ளாமலிரும்.
Ko kororohe’o hitraok’ amo lo-tserekeo, amo mpanao raty mivolan-kanitsiñe an-drañe’eo, te mone fikinian-­draty ty am-po’e ao.
4 அவர்களுடைய செயல்களுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் தீங்கிற்கும் சரியானதாக அவர்களுக்குச் செய்யும்; அவர்கள் கைகளின் செய்கைக்கு சரியானதாக அவர்களுக்குக் கொடும், அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும்.
Ondroho mira amo sata’eo, naho hambañe ami’ty haratia’ o fitoloña’eo; eka, avaho mira amo satan-taña’eo; valeo ama’e ty mañeva.
5 அவர்கள் யெகோவாவுடைய செய்கைகளையும் அவர் கைகளின் செயல்களையும் உணராதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.
Amy te tsy haoñe’ iareo o tolon-draha’ Iehovào, ndra o fitoloñam-pità’eo. ho rotsahe’e iereo, le tsy hatroa’e ka.
6 யெகோவாவுக்கு வாழ்த்துதல் உண்டாகட்டும்; அவர் என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.
Andriañeñe t’Iehovà, fa jinanji’e ty feon-kalaliko!
7 யெகோவா என் பெலனும் என் கேடகமுமாக இருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பி இருந்தது; நான் உதவி பெற்றேன்; ஆகையால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படுகிறது; என் பாடலினால் அவரைத் துதிப்பேன்.
Iehovà ro haozarako naho fikalako, ty fiatoa’ ty troko, toe fa nimbaen-draho, aa le irebeha’ ty troko vaho rengèko an-tsabo.
8 யெகோவா அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம் செய்தவனுக்கு பாதுகாப்பான அடைக்கலமானவர்.
Haozara’iareo t’Iehovà, kijolim-pandrombahañe i noriza’ey.
9 தேவனே நீர் உமது மக்களைப் பாதுகாத்து, உமது உரிமை சொத்தை ஆசீர்வதியும்; அவர்களுக்கு உணவளித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.
Rombaho ondati’oo, naho ampanintsiño o lova’oo; Araho iereo vaho otroño nainai’e.

< சங்கீதம் 28 >