< சங்கீதம் 28 >
1 ௧ தாவீதின் பாடல். என் கன்மலையாகிய யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேட்காதவர்போல மவுனமாக இருக்கவேண்டாம்; நீர் மவுனமாக இருந்தால் நான் கல்லறையில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
大衛的詩。 耶和華啊,我要求告你! 我的磐石啊,不要向我緘默! 倘若你向我閉口, 我就如將死的人一樣。
2 ௨ நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராகக் கையெடுக்கும்போது, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.
我呼求你,向你至聖所舉手的時候, 求你垂聽我懇求的聲音!
3 ௩ அருகில் உள்ளவனுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்களுடைய இருதயங்களில் தீமைகளை வைத்திருக்கிற துன்மார்க்கர்களோடும் அக்கிரமக்காரர்களோடும் என்னை வாரிக்கொள்ளாமலிரும்.
不要把我和惡人並作孽的一同除掉; 他們與鄰舍說和平話,心裏卻是奸惡。
4 ௪ அவர்களுடைய செயல்களுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் தீங்கிற்கும் சரியானதாக அவர்களுக்குச் செய்யும்; அவர்கள் கைகளின் செய்கைக்கு சரியானதாக அவர்களுக்குக் கொடும், அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும்.
願你按着他們所做的, 並他們所行的惡事待他們。 願你照着他們手所做的待他們, 將他們所應得的報應加給他們。
5 ௫ அவர்கள் யெகோவாவுடைய செய்கைகளையும் அவர் கைகளின் செயல்களையும் உணராதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.
他們既然不留心耶和華所行的和他手所做的, 他就必毀壞他們,不建立他們。
6 ௬ யெகோவாவுக்கு வாழ்த்துதல் உண்டாகட்டும்; அவர் என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.
耶和華是應當稱頌的, 因為他聽了我懇求的聲音。
7 ௭ யெகோவா என் பெலனும் என் கேடகமுமாக இருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பி இருந்தது; நான் உதவி பெற்றேன்; ஆகையால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படுகிறது; என் பாடலினால் அவரைத் துதிப்பேன்.
耶和華是我的力量,是我的盾牌; 我心裏倚靠他就得幫助。 所以我心中歡樂, 我必用詩歌頌讚他。
8 ௮ யெகோவா அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம் செய்தவனுக்கு பாதுகாப்பான அடைக்கலமானவர்.
耶和華是他百姓的力量, 又是他受膏者得救的保障。
9 ௯ தேவனே நீர் உமது மக்களைப் பாதுகாத்து, உமது உரிமை சொத்தை ஆசீர்வதியும்; அவர்களுக்கு உணவளித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.
求你拯救你的百姓,賜福給你的產業, 牧養他們,扶持他們,直到永遠。