< சங்கீதம் 147 >

1 யெகோவாவை துதியுங்கள்; நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது.
הללו יה כי טוב זמרה אלהינו כי נעים נאוה תהלה׃
2 யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்; துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார்.
בונה ירושלם יהוה נדחי ישראל יכנס׃
3 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
הרפא לשבורי לב ומחבש לעצבותם׃
4 அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார்.
מונה מספר לכוכבים לכלם שמות יקרא׃
5 நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.
גדול אדונינו ורב כח לתבונתו אין מספר׃
6 யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார்.
מעודד ענוים יהוה משפיל רשעים עדי ארץ׃
7 யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள்.
ענו ליהוה בתודה זמרו לאלהינו בכנור׃
8 அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார்.
המכסה שמים בעבים המכין לארץ מטר המצמיח הרים חציר׃
9 அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
נותן לבהמה לחמה לבני ערב אשר יקראו׃
10 ௧0 அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்; வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார்.
לא בגבורת הסוס יחפץ לא בשוקי האיש ירצה׃
11 ௧௧ தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் யெகோவா பிரியமாக இருக்கிறார்.
רוצה יהוה את יראיו את המיחלים לחסדו׃
12 ௧௨ எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்; சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி.
שבחי ירושלם את יהוה הללי אלהיך ציון׃
13 ௧௩ அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
כי חזק בריחי שעריך ברך בניך בקרבך׃
14 ௧௪ அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி, செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
השם גבולך שלום חלב חטים ישביעך׃
15 ௧௫ அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது.
השלח אמרתו ארץ עד מהרה ירוץ דברו׃
16 ௧௬ பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.
הנתן שלג כצמר כפור כאפר יפזר׃
17 ௧௭ அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?
משליך קרחו כפתים לפני קרתו מי יעמד׃
18 ௧௮ அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.
ישלח דברו וימסם ישב רוחו יזלו מים׃
19 ௧௯ யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
מגיד דברו ליעקב חקיו ומשפטיו לישראל׃
20 ௨0 அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள். அல்லேலூயா.
לא עשה כן לכל גוי ומשפטים בל ידעום הללו יה׃

< சங்கீதம் 147 >