< சங்கீதம் 140 >

1 இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல். யெகோவாவே, பொல்லாத மனிதனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்.
Dawid dwom. Awurade, gye me fi nnebɔneyɛfo nsam; bɔ me ho ban fi basabasayɛfo nsam,
2 அவர்கள் தங்களுடைய இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள்.
wɔn a wodwen bɔne wɔ wɔn koma mu na wɔhwanyan ɔko mu da biara.
3 பாம்பைப்போல் தங்களுடைய நாவை கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. (சேலா)
Wɔsew wɔn tɛkrɛma ano te sɛ ɔwɔ de; nhurutoa bɔre wɔ wɔn ano.
4 யெகோவாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி கொடியவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்; அவர்கள் என்னுடைய நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.
Awurade, yi me fi amumɔyɛfo nsam; bɔ me ho ban fi basabasayɛfo a wodwen sɛ wobetwintwan mʼanan mu no ho.
5 பெருமைக்காரர்கள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாக வைக்கிறார்கள்; வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா)
Ahantanfo asum me afiri; wɔatrɛtrɛw wɔn asau ahama mu wɔasunsum me mfiri wɔ me kwan so.
6 நான் யெகோவாவை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; யெகோவாவே, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்குச் செவிகொடும்.
Awurade, meka kyerɛ wo se, “Wone me Nyankopɔn.” Awurade, tie me mmɔborɔsu.
7 ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என்னுடைய தலையை மூடினீர்.
Otumfo Awurade, me gyefo hoɔdenfo, wokata me ti so wɔ ɔko da,
8 யெகோவாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் நிறைவேறாதபடிசெய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேற விடாமலிரும். (சேலா)
nyɛ amumɔyɛfo abisade mma wɔn, Awurade; mma wɔn nhyehyɛe nnyɛ yiye.
9 என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக.
Wɔatwa me ho ahyia, nanso, ma amumɔyɛsɛm a efi wɔn anom no nsɛe wɔn.
10 ௧0 நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; நெருப்பிலும், அவர்கள் எழுந்திருக்கமுடியாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.
Ma nnyansramma ngu wɔn so; ma wɔntow wɔn ngu ogya mu, ngu dontori amoa mu a wɔrensɔre bio.
11 ௧௧ பொல்லாத நாக்குள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனிதனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
Mma dinsɛefo ase ntim asase no so; ma amanehunu ntaataa kitikitiyɛfo.
12 ௧௨ சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் யெகோவா விசாரிப்பாரென்று அறிவேன்.
Minim sɛ Awurade bu ahiafo atɛntrenee na odi onnibi asɛm ma no.
13 ௧௩ நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் செய்வார்கள்.
Ampa ara, atreneefo bɛkamfo wo din na wɔn a wɔnam tee no bɛtena nkwa mu wɔ wʼanim.

< சங்கீதம் 140 >