< சங்கீதம் 119 >
1 ௧ ஆலெப். யெகோவாவுடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம வழியில் நடப்பவர்கள் பாக்கியவான்கள்.
Nhyira nka wɔn a wɔn akwan yɛ pɛ, na wɔnantew sɛnea Awurade mmara kyerɛ.
2 ௨ அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
Nhyira nka wɔn a wɔkora nʼahyɛde, na wofi wɔn koma nyinaa mu hwehwɛ no.
3 ௩ அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
Wɔnyɛ mfomso biara; na wɔnam nʼakwan so.
4 ௪ உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாகக் கைக்கொள்ளும்படி நீர் கற்றுக்கொடுத்தீர்.
Woayɛ nkyerɛkyerɛ pa ato hɔ a ɛsɛ sɛ wodi so pɛpɛɛpɛ.
5 ௫ உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என்னுடைய நடைகள் நிலைத்திருந்தால் நலமாக இருக்கும்.
Ao, sɛ anka mʼakwan besi pi, ayɛ osetie wɔ wo hyɛ nsɛm ho ɛ!
6 ௬ நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் நினைக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை.
Sɛ midwen wo mmaransɛm no nyinaa ho a, ɛno de, anka mʼanim rengu ase.
7 ௭ உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.
Mede koma a mu tew bɛkamfo wo bere a meresua wo mmara a ɛteɛ no.
8 ௮ உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாமலிரும். பேத்.
Medi wo hyɛ nsɛm so; na nnyaw me korakora.
9 ௯ வாலிபன் தன்னுடைய வழியை எதினால் சுத்தம்செய்வான்? உமது வசனத்திற்குக் கீழ்படிகிறதினால்தானே.
Aberante bɛyɛ dɛn na nʼakwan ho atew? Ɛsɛ sɛ odi wʼasɛm so.
10 ௧0 என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதவறிச் செல்ல விடாமலிரும்.
Mede me koma nyinaa hwehwɛ wo; mma me mman mfi wo mmara nsɛm ho.
11 ௧௧ நான் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வசனத்தை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்.
Mede wʼasɛm asie me koma mu sɛnea merenyɛ bɔne ntia wo.
12 ௧௨ யெகோவாவே, நீர் வாழ்த்திற்குரியவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Awurade, ayeyi nka wo; kyerɛkyerɛ me wo hyɛ nsɛm.
13 ௧௩ உம்முடைய வசனத்தின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என்னுடைய உதடுகளால் விவரித்திருக்கிறேன்.
Mede mʼano ka mmara a efi wʼanom nyinaa.
14 ௧௪ திரளான செல்வத்தில் சந்தோஷப்படுவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் சந்தோஷப்படுகிறேன்.
Mʼani gye sɛ midi wʼahyɛde so, sɛnea obi ani gye ahonya bebree ho no.
15 ௧௫ உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளை மனதில் வைக்கிறேன்.
Midwinnwen wo nkyerɛkyerɛ ho na mehwehwɛ wʼakwan mu.
16 ௧௬ உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். கிமெல்.
Mʼani gye wo hyɛ nsɛm ho; na merentoto wʼasɛm ase.
17 ௧௭ உமது அடியேனுக்கு அனுகூலமாக இரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.
Yɛ wo somfo yiye; na matena ase adi wʼasɛm so.
18 ௧௮ உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என்னுடைய கண்களைத் திறந்தருளும்.
Bue mʼani na minhu anwonwade a ɛwɔ wo mmara no mu.
19 ௧௯ பூமியிலே நான் அந்நியன்; உமது கற்பனைகளை எனக்கு மறையாமலிரும்.
Meyɛ ɔnanani wɔ asase so; mfa wo mmaransɛm no nhintaw me.
20 ௨0 உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எந்தநேரமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் சோர்ந்துபோகிறது.
Me kra tɔ beraw bere biara, wo mmara ho anigyina nti.
21 ௨௧ உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட பெருமையுள்ளவர்களை நீர் கடிந்துகொள்ளுகிறீர்.
Woka ahantanfo anim, wɔn a wɔadome wɔn, na wɔman fi wo mmaransɛm ho no.
22 ௨௨ நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டு அகற்றும்; நான் உம்முடைய சாட்சிகளுக்குக் கீழ்படிகிறேன்.
Yi wɔn animka ne animtiaabu fi me mu, efisɛ midi wʼahyɛde so.
23 ௨௩ அதிகாரிகளும் உட்கார்ந்து எனக்கு விரோதமாகப் பேசிக்கொள்ளுகிறார்கள்; உமது ஊழியனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன்.
Ɛwɔ mu sɛ sodifo hyia di me ho nseku, nanso wo somfo bedwinnwen wʼahyɛde ho.
24 ௨௪ உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், எனக்கு ஆலோசனை தருபவையாக இருக்கிறது. டாலெத்.
Wʼahyɛde yɛ mʼanigyede na ɛyɛ me fotufo.
25 ௨௫ என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.
Woabrɛ me ase ma meda mfutuma mu; kyɛe me nkwa so sɛnea wʼasɛm no te.
26 ௨௬ என்னுடைய வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Mesesee mʼakwan na wugyee me so; kyerɛkyerɛ me wʼahyɛde.
27 ௨௭ உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.
Ma mente nea ɛwɔ wo nkyerɛkyerɛ mu ase; na mesusuw wʼanwonwade ho.
28 ௨௮ துயரத்தால் என்னுடைய ஆத்துமா கரைந்து போகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.
Awerɛhow ama me kra atɔ beraw; hyɛ me den sɛnea wʼasɛm no kyerɛ.
29 ௨௯ பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்.
Yi me fi nnaadaa akwan so; na fa wo mmara so dom me.
30 ௩0 மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன்.
Mafa nokware kwan no so; mede me koma abata wo mmara ho.
31 ௩௧ உமது சாட்சிகள்மேல் பற்றுதலாக இருக்கிறேன்; யெகோவாவே, என்னை வெட்கமடைய விடாமலிரும்.
Awurade, mikura wo nkyerɛkyerɛ mu dennen, mma mʼanim ngu ase.
32 ௩௨ நீர் என்னுடைய இருதயத்தை விரிவாக்கும்போது, நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன். எ.
Mitu mmirika wɔ wo mmaransɛm kwan no so, efisɛ woama mʼadwene mu adɔ.
33 ௩௩ யெகோவாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுவரை நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.
Kyerɛkyerɛ me, Awurade, na minni wo hyɛ nsɛm so, na medi so akosi awiei.
34 ௩௪ எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என்னுடைய முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.
Ma me ntease, na medi wo mmara so, na mede me koma nyinaa bedi so.
35 ௩௫ உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாக இருக்கிறேன்.
Kyerɛ me wo mmaransɛm kwan no na hɔ na minya anigye.
36 ௩௬ என்னுடைய இருதயம் பொருளாசையைச் சார்ந்து இருக்காமல், உமது சாட்சிகளைச் சார்ந்து இருக்கும்படி செய்யும்.
Dan me koma kɔ wʼahyɛde ho na ɛnyɛ pɛsɛmenkominya so mfaso ho.
37 ௩௭ மாயையைப் பார்க்காதபடி நீர் என்னுடைய கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.
Yi mʼani fi nneɛma hunu so; na kyɛe me nkwa so sɛnea wʼasɛm te.
38 ௩௮ உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்குத்தத்தத்தை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும்.
Di bɔ a woahyɛ wo somfo no so, na wasuro wo.
39 ௩௯ நான் பயப்படுகிற அவமானத்தை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.
Yi animguase a ɛbɔ me hu no fi hɔ, efisɛ wo mmara yɛ papa.
40 ௪0 இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாக இருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும். வௌ.
Mʼani agyina wo nkyerɛkyerɛ no! Kyɛe me nkwa so wɔ wo trenee mu.
41 ௪௧ யெகோவாவே, உம்முடைய வாக்குத்தத்ததின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.
Awurade, ma wo dɔ a ɛnsa da no mmra me so, wo nkwagye no, sɛnea wo bɔhyɛ no te.
42 ௪௨ அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு பதில் சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.
Afei mebua nea oyi me ahi no, efisɛ mewɔ wʼasɛm mu ahotoso.
43 ௪௩ சத்திய வசனம் முற்றிலும் என்னுடைய வாயிலிருந்து நீங்கவிடாமலிரும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.
Nyi nokwasɛm no mfi mʼanom, efisɛ mʼanidaso wɔ wo mmara mu.
44 ௪௪ நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
Medi wo mmara so bere biara akosi daa apem.
45 ௪௫ நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், அகலமான பாதையில் நடப்பேன்.
Mede ahofadi bɛnantew, efisɛ mahwehwɛ wo nkyerɛkyerɛ.
46 ௪௬ நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.
Mɛka wʼahyɛde ho asɛm wɔ ahemfo anim na wɔrengu mʼanim ase,
47 ௪௭ நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளில் மனமகிழ்ச்சியாக இருப்பேன்.
efisɛ mʼani gye wo mmaransɛm ho, na medɔ no.
48 ௪௮ நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையை உயர்த்துவேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன். சாயீன்.
Mede nidi ma wo mmaransɛm a medɔ no, na midwinnwen wo hyɛ nsɛm ho.
49 ௪௯ நீர் என்னை நம்பச்செய்த வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்.
Kae asɛm a woaka akyerɛ wo somfo, efisɛ woama me anidaso.
50 ௫0 அதுவே என்னுடைய துன்பத்தில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்குத்தத்தம் என்னை உயிர்ப்பித்தது.
Mʼawerɛkyekye wɔ mʼamanehunu mu ne sɛ: Wo bɔhyɛ kyɛe me nkwa so.
51 ௫௧ பெருமைக்காரர்கள் என்னை மிகவும் பரியாசம்செய்தும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.
Ahantanfo bu me animtiaa bebree, nanso mennan mfi wo mmara ho.
52 ௫௨ யெகோவாவே, ஆரம்பமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.
Awurade mekae wo tete mmara no, na minya awerɛkyekye wɔ mu.
53 ௫௩ உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்களின் நடுக்கம் என்னைப் பிடித்தது.
Abufuw hyɛ me ma, esiane amumɔyɛfo a wɔapo wo mmara nti.
54 ௫௪ நான் நிலையில்லாத குடியிருக்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்கு பாடல்களானது.
Wo hyɛ nsɛm yɛ me dwom tiban wɔ baabiara a mesoɛ.
55 ௫௫ யெகோவாவே, இரவுநேரத்தில் உமது பெயரை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.
Awurade, anadwo mekae wo din, na medi wo mmara so.
56 ௫௬ நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டதால், இது எனக்குக் கிடைத்தது. ஹெத்.
Eyi ne ade a meyɛ da biara, midi wo nkyerɛkyerɛ so.
57 ௫௭ யெகோவாவே, நீரே என்னுடைய பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
Awurade, wo ne me kyɛfa; mahyɛ bɔ sɛ medi wo nsɛm so.
58 ௫௮ முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்குத்தத்தத்தின்படி எனக்கு இரங்கும்.
Mede me koma nyinaa ahwehwɛ wo; hu me mmɔbɔ sɛnea wo bɔhyɛ no te.
59 ௫௯ என்னுடைய வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என்னுடைய கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.
Madwene mʼakwan ho na madan mʼanammɔntu akyerɛ wʼahyɛde.
60 ௬0 உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதிக்காமல் விரைந்தேன்.
Mɛyɛ ntɛm, merentwentwɛn sɛ medi wo mmara nsɛm so.
61 ௬௧ துன்மார்க்கர்களின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை.
Ɛwɔ mu, amumɔyɛfo de hama kyekyere me, nanso me werɛ remfi wo mmara.
62 ௬௨ உமது நீதியான நியாயத்தீர்ப்புகளுக்காக, உம்மைத் துதிக்கும்படி பாதி இரவில் எழுந்திருப்பேன்.
Ɔdasu mu, mesɔre de wʼaseda ma wo, wo mmara a ɛteɛ nti.
63 ௬௩ உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் நண்பன்.
Meyɛ wɔn a wosuro wo nyinaa adamfo, wɔn a wodi wo nkyerɛkyerɛ so nyinaa.
64 ௬௪ யெகோவாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். தேத்.
Awurade, wʼadɔe ahyɛ asase so ma; kyerɛkyerɛ me wo hyɛ nsɛm.
65 ௬௫ யெகோவாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாக நடத்தினீர்.
Wo ne wo somfo nni no yiye sɛnea wʼasɛm te, Awurade.
66 ௬௬ உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளில் நம்பிக்கையாக இருக்கிறேன்.
Kyerɛkyerɛ me nimdeɛ ne atemmu pa, efisɛ migye wo mmara nsɛm no di.
67 ௬௭ நான் உபத்திரவப்படுவதற்கு முன்பு வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.
Mefom ɔkwan ansa na mihuu amane, na mprempren de midi wʼasɛm so.
68 ௬௮ தேவனே நீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாக இருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Wuye, na nea woyɛ nso ye; kyerɛkyerɛ me wo hyɛ nsɛm.
69 ௬௯ பெருமைக்காரர்கள் எனக்கு விரோதமாகப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்.
Ahantanfo de atoro asra me ho de, nanso mede me koma nyinaa di wo nkyerɛkyerɛ so.
70 ௭0 அவர்களுடைய இருதயம் கொழுத்திருக்கிறது; நானோ, உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்.
Wɔn koma yɛ den na wonni ɔtema, nanso mʼani gye wo mmara ho.
71 ௭௧ நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
Eye sɛ mihuu amane sɛnea mesua wo hyɛ nsɛm.
72 ௭௨ அநேக ஆயிரம் பொன் வெள்ளியைவிட, நீர் கொடுத்த வேதமே எனக்கு நலம். யோட்.
Mmara a efi wʼanom no som bo ma me sen dwetɛ ne sikakɔkɔɔ mpem mpem.
73 ௭௩ உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கினது; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.
Wo nsa na ɛbɔɔ me na ɛnwenee me; ma me ntease a mede besua wo mmara nsɛm.
74 ௭௪ நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்.
Sɛ wɔn a wosuro wo no hu me a, ma wɔn ani nnye, efisɛ mede mʼanidaso ahyɛ wʼasɛm mu.
75 ௭௫ யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.
Awurade, minim sɛnea wo mmara te, na nokwaredi mu na woatwe mʼaso.
76 ௭௬ நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி, உமது கிருபை என்னைத் தேற்றட்டும்.
Ma wʼadɔe a ɛnsa da no nkyekye me werɛ sɛnea bɔ a woahyɛ wo somfo no te no.
77 ௭௭ நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைக்கட்டும்; உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி.
Ma wʼayamhyehye mmra me so, na minnya nkwa, efisɛ mʼani ka wo mmara ho.
78 ௭௮ பெருமைக்காரர்கள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போகட்டும்; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.
Ma ahantanfo ani nwu sɛ wɔfom me kwa nti nanso mesusuw wo nkyerɛkyerɛ ho.
79 ௭௯ உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னிடம் திரும்பட்டும்.
Ma wɔn a wosuro wo no mmra me nkyɛn, wɔn a wɔte wo mmara ase no.
80 ௮0 நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என்னுடைய இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாக இருக்கட்டும். கப்.
Ma me koma nnya bembu wɔ wo hyɛ nsɛm ho, na mʼanim angu ase.
81 ௮௧ உம்முடைய இரட்சிப்புக்கு என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.
Wo nkwagye ho anigyina ama me kra atɔ piti, nanso mede mʼanidaso ahyɛ wʼasɛm mu.
82 ௮௨ எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்குத்தத்தத்தின்மேல் நோக்கமாக என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது.
Mahwɛ wo bɔhyɛ anim ama mʼani abu; meka se, “Da bɛn na wobɛkyekye me werɛ?”
83 ௮௩ புகையிலுள்ள தோல்பை போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.
Ɛwɔ mu sɛ mete sɛ nsa kotoku a ɛsɛn wusiw ano de, nanso me werɛ mfi wo hyɛ nsɛm no.
84 ௮௪ உமது அடியேனுடைய நாட்கள் எவ்வளவு? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர்?
Wo somfo ntwɛn nkosi da bɛn? Da bɛn na wobɛtwe wɔn a wɔtaa me no aso?
85 ௮௫ உம்முடைய வேதத்திற்கு விரோதமாக பெருமைக்காரர்கள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்.
Ahantanfo atu amoa de asum me afiri, a ɛne wo mmara bɔ abira.
86 ௮௬ உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாக இருக்கிறது; அநியாயமாக என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்கு உதவி செய்யும்.
Wo mmara nsɛm nyinaa mu wɔ ahotoso; boa me, efisɛ nnipa taa me kwa.
87 ௮௭ அவர்கள் என்னைப் பூமியில் இல்லாமல் நீக்கிவிடச் சற்றே தப்பினது; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை.
Ɛkaa kakraa bi a anka woyii me fii asase so, nanso minnyaee wo nkyerɛkyerɛ sodi.
88 ௮௮ உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்குத்தத்தத்தின் சாட்சியைக் காத்து நடப்பேன். லாமேட்.
Kyɛe me nkwa so sɛnea wʼadɔe te, na medi nkyerɛkyerɛ a efi wʼanom no so.
89 ௮௯ யெகோவாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.
Awurade, wʼasɛm no wɔ hɔ daa; egyina hɔ pintinn wɔ ɔsorosoro.
90 ௯0 உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது.
Wo nokwaredi kɔ so wɔ awo ntoatoaso nyinaa mu; wode asase sii hɔ, na etim hɔ.
91 ௯௧ உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்த நாள்வரைக்கும் நிற்கிறது; அனைத்தும் உம்மைச் சேவிக்கும்.
Wo mmara wɔ hɔ besi nnɛ, na nneɛma nyinaa som wo.
92 ௯௨ உமது வேதம் என்னுடைய மனமகிழ்ச்சியாக இல்லாமலிருந்தால், என்னுடைய துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.
Sɛ mʼani anka wo mmara no ho a, anka mʼamanehunu akum me.
93 ௯௩ நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்.
Me werɛ remfi wo nkyerɛkyerɛ no, efisɛ ɛno so na wonam akyɛe me nkwa so.
94 ௯௪ நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்.
Gye me nkwa, na meyɛ wo de; na mahwehwɛ wo nkyerɛkyerɛ no.
95 ௯௫ துன்மார்க்கர்கள் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.
Amumɔyɛfo retwɛn sɛ wɔbɛsɛe me, nanso, misusuw wʼahyɛde ho.
96 ௯௬ நிறைவான அனைத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா பெரிது. மேம்.
Mahu sɛ pɛyɛ nyinaa wɔ nea ɛkɔpem; nanso wo mmara nsɛm no nni ɔhye.
97 ௯௭ உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாக இருக்கிறேன்! நாள் முழுவதும் அது என்னுடைய தியானம்.
Ao, medɔ wo mmara no yiye! Midwinnwen ho da mu nyinaa.
98 ௯௮ நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என்னுடைய எதிரிகளிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.
Wo mmara nsɛm ma mihu nyansa sen mʼatamfo, efisɛ ɛwɔ me nkyɛn daa.
99 ௯௯ உம்முடைய சாட்சிகள் என்னுடைய தியானமாக இருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்கள் எல்லோரிலும் அறிவுள்ளவனாக இருக்கிறேன்.
Mewɔ nhumu sen mʼakyerɛkyerɛfo nyinaa, efisɛ midwinnwen wʼahyɛde ho.
100 ௧00 உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைவிட ஞானமுள்ளவனாக இருக்கிறேன்.
Mewɔ ntease sen mpanyimfo, efisɛ midi wo nkyerɛkyerɛ so.
101 ௧0௧ உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, எல்லா பொல்லாத வழிகளுக்கும் என்னுடைய கால்களை விலக்குகிறேன்.
Memfaa mʼanan nsii ɔkwan bɔne biara so sɛnea metumi ayɛ osetie ama wʼasɛm.
102 ௧0௨ நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகமாட்டேன்.
Memman mfii wo mmara ho, efisɛ wʼankasa na woakyerɛkyerɛ me.
103 ௧0௩ உம்முடைய வார்த்தைகள் என்னுடைய நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என்னுடைய வாய்க்கு அவைகள் தேனிலும் இனிமையானதாக இருக்கும்.
Wo nsɛm yɛ me dɛ, ɛyɛ dɛ sen ɛwo wɔ mʼanom.
104 ௧0௪ உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன். நூன்.
Minya ntease fi wo nkyerɛkyerɛ mu; enti mikyi ɔkwan bɔne biara.
105 ௧0௫ உம்முடைய வசனம் என்னுடைய கால்களுக்குத் தீபமும், என்னுடைய பாதைக்கு வெளிச்சமுமாக இருக்கிறது.
Wʼasɛm yɛ mʼanan ase kanea ne me kwan so hann.
106 ௧0௬ உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.
Maka ntam ahyɛ mu kena se medi wo trenee mmara no so.
107 ௧0௭ நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; யெகோவாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.
Mahu amane bebree; kyɛe me nkwa so, Awurade, sɛnea wʼasɛm te.
108 ௧0௮ யெகோவாவே, என்னுடைய வாயின் உற்சாகபலிகளை நீர் ஏற்றுக்கொண்டு, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.
Awurade, ma wʼani nsɔ mʼanom nkamfo a efi me pɛ mu, na kyerɛkyerɛ me wo mmara.
109 ௧0௯ என்னுடைய உயிர் எப்பொழுதும் என்னுடைய கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறக்கமாட்டேன்.
Ɛwɔ mu sɛ daa metoto me nkwa ase de, nanso me werɛ remfi wo mmara.
110 ௧௧0 துன்மார்க்கர்கள் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறிப் போகமாட்டேன்.
Amumɔyɛfo asum me afiri, nanso memfom mfii wo nkyerɛkyerɛ ho.
111 ௧௧௧ உம்முடைய சாட்சிகளை நிரந்தர சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என்னுடைய இருதயத்தின் மகிழ்ச்சி.
Wʼahyɛde yɛ mʼagyapade afebɔɔ; ɛma me koma ani gye.
112 ௧௧௨ முடிவுவரை இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என்னுடைய இருதயத்தைச் சாய்த்தேன். சாமெக்.
Me koma ayɛ krado sɛ ɛbɛhwɛ wo hyɛ nsɛm so akosi awiei.
113 ௧௧௩ வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.
Mikyi nnipa a wɔn adwene yɛ wɔn ntanta, na medɔ wo mmara.
114 ௧௧௪ என்னுடைய மறைவிடமும் என்னுடைய கேடகமும் நீரே; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.
Wone me guankɔbea ne me kyɛm; mede mʼanidaso ahyɛ wʼasɛm mu.
115 ௧௧௫ பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.
Mumfi me so nkɔ, mo nnebɔneyɛfo, na minni me Nyankopɔn mmara nsɛm so!
116 ௧௧௬ நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என்னுடைய நம்பிக்கை வீணாகிப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாமல் இரும்.
Wowaw me sɛnea wo bɔhyɛ no te, na mɛtena nkwa mu; mma mʼanidaso nyɛ ɔkwa.
117 ௧௧௭ என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, எந்தநாளும் உம்முடைய பிரமாணங்களில் தியானமாக இருப்பேன்.
So me mu, na menya ogye; na bere biara mɛhwɛ wo hyɛ nsɛm no.
118 ௧௧௮ உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற அனைவரையும் மிதித்துப் போடுகிறீர்; அவர்களுடைய சிந்தனை வஞ்சனையானது.
Wopo wɔn a wɔfom wo hyɛ nsɛm nyinaa, na wɔn nnaadaa no yɛ ɔkwa.
119 ௧௧௯ பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரையும் துருவைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்.
Wotow amumɔyɛfo nyinaa gu sɛ afide; enti medɔ wʼahyɛde.
120 ௧௨0 உமக்குப் பயப்படும் பயத்தால் என்னுடைய உடல் சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். ஆயின்.
Wo ho suro ma me ho popo; wo mmara abɔ me hu.
121 ௧௨௧ நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாமல் இரும்.
Mayɛ nea ɛteɛ na ɛyɛ pɛ. Nnyaa me mma wɔn a wɔhyɛ me so!
122 ௧௨௨ உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; பெருமைக்காரர்கள் என்னை ஒடுக்கச்செய்யாதிரும்.
Hwɛ ma wo somfo nni yiye; mma ahantanfo nhyɛ me so.
123 ௧௨௩ உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைகளுக்கும் காத்திருக்கிறதினால் என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது.
Mahwɛ wo nkwagye anim ama mʼani abu, ɛrehwehwɛ wo bɔhyɛ a ɛteɛ no.
124 ௧௨௪ உமது ஊழியனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Wo ne wo somfo nni no sɛnea wʼadɔe te, na kyerɛkyerɛ me wo hyɛ nsɛm.
125 ௧௨௫ நான் உமது ஊழியன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.
Meyɛ wo somfo; ma me nhumu na mate wʼahyɛde ase.
126 ௧௨௬ நீதியைச்செய்யக் யெகோவாவுக்கு வேளை வந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிராணத்தை மீறினார்கள்.
Awurade, bere aso sɛ woyɛ biribi; wɔrebu wo mmara so.
127 ௧௨௭ ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாக உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.
Esiane sɛ medɔ wo mmara nsɛm sen sikakɔkɔɔ, anaa sikakɔkɔɔ ankasa,
128 ௧௨௮ எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, அனைத்து பொய்வழிகளையும் வெறுக்கிறேன். பே.
na midwen sɛ wo nkyerɛkyerɛ nyinaa ye nti, mikyi ɔkwan bɔne biara.
129 ௧௨௯ உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என்னுடைய ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்.
Wʼahyɛde yɛ nwonwa; enti midi so.
130 ௧௩0 உம்முடைய வசனத்தின் விளக்கம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.
Wo nsɛm asete ma hann; na ɛma ntetekwaa nya ntease.
131 ௧௩௧ உம்முடைய கற்பனைகளை நான் விரும்புகிறபடியால், என்னுடைய வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்.
Mibue mʼanom na migu ahome, na mʼani gyina wo mmara nsɛm.
132 ௧௩௨ உம்முடைய பெயரை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும்.
Dan wʼani hwɛ me na hu me mmɔbɔ sɛnea woyɛ daa ma wɔn a wɔdɔ wo din no.
133 ௧௩௩ உம்முடைய வார்த்தையிலே என்னுடைய காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆட்கொள்ளச்செய்யாமல் இரும்.
Tutu mʼanammɔn sɛnea wʼasɛm no te; mma bɔne biara nni me so.
134 ௧௩௪ மனிதர்கள் செய்யும் அநீதிகளுக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன்.
Gye me fi nnipa nhyɛso mu, na madi wo nkyerɛkyerɛ so.
135 ௧௩௫ உமது ஊழியன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்து, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Ma wʼanim nhyerɛn wo somfo so na kyerɛkyerɛ me wo hyɛ nsɛm.
136 ௧௩௬ உம்முடைய வேதத்தை மனிதர்கள் காத்து நடக்காதபடியால், என்னுடைய கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. த்சாடே.
Nsuten nisu aguare me, efisɛ nnipa nni wo mmara so.
137 ௧௩௭ யெகோவாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
Ɔtreneeni ne wo, Awurade, na wo mmara nso yɛ pɛ.
138 ௧௩௮ நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.
Ahyɛde a woayɛ no yɛ trenee; ɛyɛ nea wonya mu ahotoso pa ara.
139 ௧௩௯ என்னுடைய எதிரிகள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், என்னுடைய பக்திவைராக்கியம் என்னை அழிக்கிறது.
Abufuw ahyɛ me ma, efisɛ mʼatamfo bu wɔn ani gu wo nsɛm so.
140 ௧௪0 உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.
Wɔasɔ wo bɔhyɛ ahorow no ahwɛ pa ara, na wo somfo dɔ wɔn.
141 ௧௪௧ நான் சிறியவனும் அசட்டை செய்யப்பட்டவனுமாக இருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.
Ɛwɔ mu sɛ menka hwee na memfra de, nanso me werɛ mfi wo nkyerɛkyerɛ.
142 ௧௪௨ உம்முடைய நீதி நிரந்தர நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.
Wo trenee wɔ hɔ daa, na wo mmara no yɛ nokware.
143 ௧௪௩ துயரமும் வேதனையும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என்னுடைய மனமகிழ்ச்சி.
Ɔhaw ne awerɛhow aba me so, nanso wo mmara nsɛm ma me ahosɛpɛw.
144 ௧௪௪ உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன். கோப்.
Wʼahyɛde yɛ nokware daa; ma me ntease na manya nkwa.
145 ௧௪௫ முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.
Awurade, mede me koma nyinaa mefrɛ wo, gye me so, na medi wo hyɛ nsɛm no so.
146 ௧௪௬ உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னைக் காப்பாற்றும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.
Misu mefrɛ wo, gye me nkwa na midi wʼahyɛde so.
147 ௧௪௭ அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.
Mesɔre anɔpahema, na misu pɛ mmoa; mede me werɛ ahyɛ wo nsɛm mu.
148 ௧௪௮ உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த இரவு நேரங்களுக்கு முன்னே என்னுடைய கண்கள் விழித்துக்கொள்ளும்.
Mʼani gu so anadwo nyinaa, na misusuw wo bɔhyɛ ho.
149 ௧௪௯ உம்முடைய கிருபையின்படி என்னுடைய சத்தத்தைக் கேளும்; யெகோவாவே, உம்முடைய நியாயத்தீர்ப்பின்படி என்னை உயிர்ப்பியும்.
Tie me nne sɛnea wʼadɔe no te; Awurade, kyɛe me nkwa so sɛnea wo mmara te.
150 ௧௫0 தீமையைப் பின்பற்றுகிறவர்கள் நெருங்கி இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்திற்குத் தூரமாக இருக்கிறார்கள்.
Wɔn a wɔhyehyɛ atirimɔdensɛm no abɛn, nanso wɔne wo mmara ntam ware.
151 ௧௫௧ யெகோவாவே, நீர் அருகில் இருக்கிறீர்; உமது கற்பனைகளெல்லாம் உண்மை.
Awurade, wo de, wobɛn me, na wo mmara nsɛm nyinaa yɛ nokware.
152 ௧௫௨ நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க நிறுவினீர் என்பதை, அவைகளால் நான் நெடுநாளாக அறிந்திருக்கிறேன். ரேஷ்.
Mmere bi a atwa mu no, misuaa wʼahyɛde a wode tim hɔ sɛ ɛntena hɔ daa no.
153 ௧௫௩ என்னுடைய உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; உமது வேதத்தை மறக்கமாட்டேன்.
Hwɛ mʼamanehunu na gye me nkwa efisɛ me werɛ mfii wo mmara no.
154 ௧௫௪ எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.
Di mʼasɛm ma me na gye me; kyɛe me nkwa so sɛnea wo bɔhyɛ no te.
155 ௧௫௫ இரட்சிப்பு துன்மார்க்கர்களுக்குத் தூரமாக இருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடமாட்டார்கள்.
Nkwagye ne atirimɔdenfo ntam kwan ware, efisɛ wɔnhwehwɛ wo hyɛ nsɛm no.
156 ௧௫௬ யெகோவாவே, உம்முடைய இரக்கங்கள் பெரியவைகளாக இருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.
Awurade, wʼayamhyehye yɛ kɛse; kyɛe me nkwa so sɛnea wo mmara no te.
157 ௧௫௭ என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டுவிலகமாட்டேன்.
Atamfo a wɔteetee me dɔɔso, nanso memman mfii wo nhyehyɛe ho.
158 ௧௫௮ உமது வசனத்தைக் கைக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாக இருந்தது.
Mehwɛ wɔn a wonni gyidi no a wɔn ho yɛ me nwini, efisɛ wonni wʼasɛm so.
159 ௧௫௯ இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; யெகோவாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.
Hwɛ sɛnea mʼani gye wo nkyerɛkyerɛ ho; Awurade, kyɛe me nkwa so sɛnea wʼadɔe te.
160 ௧௬0 உம்முடைய வசனம் முழுவதும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். ஷீன்.
Wo nsɛm nyinaa yɛ nokware; na wo mmara a ɛteɛ no to rentwa da.
161 ௧௬௧ அதிகாரிகளும் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், ஆனாலும் என்னுடைய இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது.
Sodifo taataa me kwa, nanso ɛyɛ wʼasɛm nko ara na misuro.
162 ௧௬௨ மிகுந்த கொள்ளைப்பொருட்களைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின் பெயரில் மகிழுகிறேன்.
Mʼani gye wo bɔhyɛ ho te sɛ obi a wanya asade kɛse.
163 ௧௬௩ பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.
Mikyi nkontompo na medɔ wo mmara.
164 ௧௬௪ உமது நீதிநியாயங்களுக்காக, ஒருநாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.
Mekamfo wo mpɛn ason da biara, wo mmara a ɛteɛ no nti.
165 ௧௬௫ உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு தடைகள் இல்லை.
Wɔn a wɔdɔ wo mmara no wɔ asomdwoe mmoroso, na biribiara rentumi mma wonhintiw.
166 ௧௬௬ யெகோவாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்.
Awurade, metwɛn wo nkwagye, na midi wo mmara nsɛm so.
167 ௧௬௭ என்னுடைய ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.
Midi wʼahyɛde so na medɔ no yiye.
168 ௧௬௮ உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என்னுடைய வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது. தெள.
Midi wo nkyerɛkyerɛ ne wʼahyɛde so, na wunim mʼakwan nyinaa.
169 ௧௬௯ யெகோவாவே, என்னுடைய கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.
Awurade, ma me sufrɛ nnu wʼanim; ma me ntease sɛnea wʼasɛm no te.
170 ௧௭0 என்னுடைய விண்ணப்பம் உமது சந்நிதியில் வரட்டும்; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும்.
Ma me nkotosrɛ nnu wʼanim; na gye me sɛnea wo bɔhyɛ no te.
171 ௧௭௧ உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என்னுடைய உதடுகள் உமது துதியைப் பிரபலப்படுத்தும்.
Ma nkamfo nhyɛ mʼanom ma; efisɛ wokyerɛkyerɛ me wo hyɛ nsɛm.
172 ௧௭௨ உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என்னுடைய நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.
Ma me tɛkrɛma nto wʼasɛm ho dwom, efisɛ wo mmara nsɛm nyinaa yɛ trenee.
173 ௧௭௩ நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாக இருக்கட்டும்.
Ma wo nsa nyɛ krado mmɛboa me, efisɛ maso wo nkyerɛkyerɛ no mu.
174 ௧௭௪ யெகோவாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாக இருக்கிறேன்; உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி.
Awurade, mʼani agyina wo nkwagye, na wo mmara yɛ mʼanigyede.
175 ௧௭௫ என்னுடைய ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கட்டும்; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாக இருக்கட்டும்.
Ma mentena nkwa mu na matumi akamfo wo, na wo mmara nso awowaw me.
176 ௧௭௬ காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடும்; உமது கற்பனைகளை நான் மறக்கமாட்டேன்.
Mafom kwan sɛ oguan a wayera. Hwehwɛ wo somfo, efisɛ me werɛ mfii wo mmara nsɛm no ɛ.