< சங்கீதம் 118 >

1 யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.
主に感謝せよ、主は恵みふかく、そのいつくしみはとこしえに絶えることがない。
2 அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வார்களாக.
イスラエルは言え、「そのいつくしみはとこしえに絶えることがない」と。
3 அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.
アロンの家は言え、「そのいつくしみはとこしえに絶えることがない」と。
4 அவர் கிருபை என்றுமுள்ளதென்று, யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக.
主をおそれる者は言え、「そのいつくしみはとこしえに絶えることがない」と。
5 நெருக்கத்திலிருந்து யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், யெகோவா என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
わたしが悩みのなかから主を呼ぶと、主は答えて、わたしを広い所に置かれた。
6 யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்வான்?
主がわたしに味方されるので、恐れることはない。人はわたしに何をなし得ようか。
7 எனக்கு உதவி செய்கிறவர்கள் நடுவில் யெகோவா என்னோடு இருக்கிறார்; என்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.
主はわたしに味方し、わたしを助けられるので、わたしを憎む者についての願いを見るであろう。
8 மனிதனை நம்புவதைவிட, யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.
主に寄り頼むは人にたよるよりも良い。
9 பிரபுக்களை நம்புவதைவிட யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.
主に寄り頼むはもろもろの君にたよるよりも良い。
10 ௧0 எல்லா தேசத்தாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.
もろもろの国民はわたしを囲んだ。わたしは主のみ名によって彼らを滅ぼす。
11 ௧௧ என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.
彼らはわたしを囲んだ、わたしを囲んだ。わたしは主のみ名によって彼らを滅ぼす。
12 ௧௨ தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.
彼らは蜂のようにわたしを囲み、いばらの火のように燃えたった。わたしは主のみ名によって彼らを滅ぼす。
13 ௧௩ நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; யெகோவாவோ எனக்கு உதவி செய்தார்.
わたしはひどく押されて倒れようとしたが、主はわたしを助けられた。
14 ௧௪ யெகோவா என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.
主はわが力、わが歌であって、わが救となられた。
15 ௧௫ நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
聞け、勝利の喜ばしい歌が正しい者の天幕にある。「主の右の手は勇ましいはたらきをなし、
16 ௧௬ யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
主の右の手は高くあがり、主の右の手は勇ましいはたらきをなす」。
17 ௧௭ நான் சாகாமல், பிழைத்திருந்து, யெகோவாவுடைய செய்கைகளை விவரிப்பேன்.
わたしは死ぬことなく、生きながらえて、主のみわざを物語るであろう。
18 ௧௮ யெகோவா என்னைக் கடினமாகத் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.
主はいたくわたしを懲らされたが、死にはわたされなかった。
19 ௧௯ நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் நுழைந்து யெகோவாவை துதிப்பேன்.
わたしのために義の門を開け、わたしはその内にはいって、主に感謝しよう。
20 ௨0 யெகோவாவின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் நுழைவார்கள்.
これは主の門である。正しい者はその内にはいるであろう。
21 ௨௧ நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாக இருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன்.
わたしはあなたに感謝します。あなたがわたしに答えて、わが救となられたことを。
22 ௨௨ வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லானது.
家造りらの捨てた石は隅のかしら石となった。
23 ௨௩ அது யெகோவாவாலே ஆனது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
これは主のなされた事でわれらの目には驚くべき事である。
24 ௨௪ இது யெகோவா உண்டாக்கின நாள்; இதிலே சந்தோஷப்பட்டு மகிழ்வோம்.
これは主が設けられた日であって、われらはこの日に喜び楽しむであろう。
25 ௨௫ யெகோவாவே, இரட்சியும்; யெகோவாவே, காரியத்தை வாய்க்கச்செய்யும்.
主よ、どうぞわれらをお救いください。主よ、どうぞわれらを栄えさせてください。
26 ௨௬ யெகோவாவுடைய பெயராலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
主のみ名によってはいる者はさいわいである。われらは主の家からあなたをたたえます。
27 ௨௭ யெகோவா நம்மைப் பிரகாசிக்கச்செய்கிற தேவனாக இருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.
主は神であって、われらを照された。枝を携えて祭の行列を祭壇の角にまで進ませよ。
28 ௨௮ நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.
あなたはわが神、わたしはあなたに感謝します。あなたはわが神、わたしはあなたをあがめます。
29 ௨௯ யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.
主に感謝せよ、主は恵みふかく、そのいつくしみはとこしえに絶えることがない。

< சங்கீதம் 118 >