< சங்கீதம் 115 >

1 தாவீதின் பாடல். எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும் உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய பெயருக்கே மகிமை வரச்செய்யும்.
Не нам, Господи, не нам, але Йменню Своє́му дай славу за милість Твою, за правду Твою!
2 அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று தேசங்கள் ஏன் சொல்லவேண்டும்?
Пощо мають казати наро́ди: „Де́ ж то їхній Бог?“
3 நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார்.
А Бог наш на небі, — усе, що хотів, учинив
4 அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.
Їхні божки́ — срібло й золото, ді́ло рук лю́дських:
5 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
вони мають уста́ — й не гово́рять, очі мають вони — і не бачать,
6 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
мають уші — й не чують, мають носа — й без ню́ху,
7 அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது; தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
мають руки — та не дотика́ються, мають ноги — й не ходять, своїм го́рлом вони не говорять!
8 அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
Нехай стануть такі, як вони, ті, хто їх виробля́є, усі, хто наді́ю на них поклада́є!
9 இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
Ізраїлю, — наді́ю складай лиш на Господа: Він їм поміч та щит їм!
10 ௧0 ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
Ааро́новий доме, — наді́йтесь на Господа: Він їм поміч та щит їм!
11 ௧௧ யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
Ті, що Господа боїте́ся, — наді́йтесь на Господа: Він їм поміч та щит їм!
12 ௧௨ யெகோவா நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார்.
Господь пам'ятає про нас, — нехай поблагосло́вить! Нехай поблагосло́вить Ізраїлів дім, нехай поблагосло́вить Він дім Ааро́нів!
13 ௧௩ யெகோவாவுக்குப் பயப்படுகிற பெரியோர்களையும், சிறியோர்களையும் ஆசீர்வதிப்பார்.
Нехай поблагосло́вить Він тих, хто має до Господа страх, мали́х та великих!
14 ௧௪ யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார்.
Нехай вас розмножить Госпо́дь, — вас і ваших діте́й!
15 ௧௫ வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
Благословенні ви в Господа, що вчинив небо й землю!
16 ௧௬ வானங்கள் யெகோவாவுடையவைகள்; பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார்.
Небо, — небо для Господа, а землю віддав синам лю́дським!
17 ௧௭ இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் யெகோவாவை துதிக்கமாட்டார்கள்.
Не мертві хвалитимуть Господа, ані ті всі, хто сходить у місце мовча́ння, —
18 ௧௮ நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுக்கு நன்றிசொல்லுவோம். அல்லேலூயா.
а ми благословля́тимемо Господа — відтепе́р й аж навіки! Алілуя!

< சங்கீதம் 115 >