< சங்கீதம் 108 >

1 தாவீது பாடிய பாடல். தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் இன்னிசையால் புகழ்ந்து பாடுவேன்; என்னுடைய மகிமையும் பாடும்.
שיר מזמור לדוד נכון לבי אלהים אשירה ואזמרה אף כבודי׃
2 வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன்.
עורה הנבל וכנור אעירה שחר׃
3 யெகோவாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
אודך בעמים יהוה ואזמרך בל אמים׃
4 உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் வரையிலும் எட்டுகிறது.
כי גדול מעל שמים חסדך ועד שחקים אמתך׃
5 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
רומה על שמים אלהים ועל כל הארץ כבודך׃
6 உமது பிரியர்கள் விடுவிக்கப்படுவதற்காக, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்களுடைய ஜெபத்தைக் கேட்டருளும்.
למען יחלצון ידידיך הושיעה ימינך וענני׃
7 தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு சொன்னார், ஆகையால் சந்தோஷப்படுவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.
אלהים דבר בקדשו אעלזה אחלקה שכם ועמק סכות אמדד׃
8 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன், யூதா என்னுடைய செங்கோல்.
לי גלעד לי מנשה ואפרים מעוז ראשי יהודה מחקקי׃
9 மோவாப் என்னுடைய பாதம் கழுவும் பாத்திரம்; ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிவேன்; பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன்.
מואב סיר רחצי על אדום אשליך נעלי עלי פלשת אתרועע׃
10 ௧0 வலுவான நகரத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்வரை எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?
מי יבלני עיר מבצר מי נחני עד אדום׃
11 ௧௧ எங்களுடைய சேனைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீரல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீரல்லவோ?
הלא אלהים זנחתנו ולא תצא אלהים בצבאתינו׃
12 ௧௨ இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனிதனுடைய உதவி வீண்.
הבה לנו עזרת מצר ושוא תשועת אדם׃
13 ௧௩ தேவனாலே வெற்றி பெறுவோம்; அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார்.
באלהים נעשה חיל והוא יבוס צרינו׃

< சங்கீதம் 108 >