< நீதிமொழிகள் 8 >

1 ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ?
知恵は呼ばわらないのか、悟りは声をあげないのか。
2 அது வழியருகே உள்ள மேடைகளிலும், நான்கு சந்திப்புகளிலும் நிற்கிறது.
これは道のほとりの高い所の頂、また、ちまたの中に立ち、
3 அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் வாசலிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு:
町の入口にあるもろもろの門のかたわら、正門の入口で呼ばわって言う、
4 மனிதர்களே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என்னுடைய சத்தம் மனுமக்களுக்குத் தொனிக்கும்.
「人々よ、わたしはあなたがたに呼ばわり、声をあげて人の子らを呼ぶ。
5 பேதைகளே, விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாக இருங்கள்.
思慮のない者よ、悟りを得よ、愚かな者よ、知恵を得よ。
6 கேளுங்கள், மேன்மையான காரியங்களைப் பேசுவேன்; என்னுடைய உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும்.
聞け、わたしは高貴な事を語り、わがくちびるは正しい事を語り出す。
7 என்னுடைய வாய் சத்தியத்தைச் சொல்லும், ஏளனம் என்னுடைய உதடுகளுக்கு அருவருப்பானது.
わが口は真実を述べ、わがくちびるは悪しき事を憎む。
8 என்னுடைய வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை.
わが口の言葉はみな正しい、そのうちに偽りと、よこしまはない。
9 அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு எதார்த்தமாகவும் இருக்கும்.
これはみな、さとき者の明らかにするところ、知識を得る者の正しとするところである。
10 ௧0 வெள்ளியைவிட என்னுடைய புத்திமதியையும், சுத்தபொன்னைவிட ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.
あなたがたは銀を受けるよりも、わたしの教を受けよ、精金よりも、むしろ知識を得よ。
11 ௧௧ முத்துக்களைவிட ஞானமே நல்லது; ஆசைப்படத்தக்கவைகள் எல்லாம் அதற்கு நிகரல்ல.
知恵は宝石にまさり、あなたがたの望むすべての物は、これと比べるにたりない。
12 ௧௨ ஞானமாகிய நான் விவேகத்தோடு தங்கி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.
知恵であるわたしは悟りをすみかとし、知識と慎みとをもつ。
13 ௧௩ தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், மாறுபாடுள்ள வாயையும் நான் வெறுக்கிறேன்.
主を恐れるとは悪を憎むことである。わたしは高ぶりと、おごりと、悪しき道と、偽りの言葉とを憎む。
14 ௧௪ ஆலோசனையும் மெய்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது.
計りごとと、確かな知恵とは、わたしにある、わたしには悟りがあり、わたしには力がある。
15 ௧௫ என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள்.
わたしによって、王たる者は世を治め、君たる者は正しい定めを立てる。
16 ௧௬ என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளும் ஆளுகை செய்துவருகிறார்கள்.
わたしによって、主たる者は支配し、つかさたる者は地を治める。
17 ௧௭ என்னை நேசிக்கிறவர்களை நான் நேசிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.
わたしは、わたしを愛する者を愛する、わたしをせつに求める者は、わたしに出会う。
18 ௧௮ செல்வமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு.
富と誉とはわたしにあり、すぐれた宝と繁栄もまたそうである。
19 ௧௯ பொன்னையும் தங்கத்தையும்விட என்னுடைய பலன் நல்லது; சுத்த வெள்ளியைவிட என்னுடைய வருமானம் நல்லது.
わたしの実は金よりも精金よりも良く、わたしの産物は精銀にまさる。
20 ௨0 என்னை நேசிக்கிறவர்கள் மெய்ப்பொருளை பெற்றுக்கொள்ளும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும்,
わたしは正義の道、公正な道筋の中を歩み、
21 ௨௧ அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்.
わたしを愛する者に宝を得させ、またその倉を満ちさせる。
22 ௨௨ யெகோவா தமது செயல்களுக்குமுன் ஆரம்பமுதல் என்னைத் தமது வழியின் துவக்கமாகக்கொண்டிருந்தார்.
主が昔そのわざをなし始められるとき、そのわざの初めとして、わたしを造られた。
23 ௨௩ பூமி உண்டாவதற்குமுன்னும், ஆரம்பம்முதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்செய்யப்பட்டேன்.
いにしえ、地のなかった時、初めに、わたしは立てられた。
24 ௨௪ ஆழங்களும், தண்ணீர் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்பே நான் உருவாக்கப்பட்டேன்.
まだ海もなく、また大いなる水の泉もなかった時、わたしはすでに生れ、
25 ௨௫ மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
山もまだ定められず、丘もまだなかった時、わたしはすでに生れた。
26 ௨௬ அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் உருவாக்கப்பட்டேன்.
すなわち神がまだ地をも野をも、地のちりのもとをも造られなかった時である。
27 ௨௭ அவர் வானங்களைப் படைக்கும்போது நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை குறிக்கும்போதும்,
彼が天を造り、海のおもてに、大空を張られたとき、わたしはそこにあった。
28 ௨௮ உயரத்தில் மேகங்களை அமைத்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்துவைக்கும்போதும்,
彼が上に空を堅く立たせ、淵の泉をつよく定め、
29 ௨௯ சமுத்திரத் தண்ணீர் தன்னுடைய கரையைவிட்டு மீறாதபடி அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்தும்போதும்,
海にその限界をたて、水にその岸を越えないようにし、また地の基を定められたとき、
30 ௩0 நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாக இருந்தேன்; எப்பொழுதும் அவருடைய மனமகிழ்ச்சியாக இருந்து, எப்பொழுதும் அவருடைய சமுகத்தில் களிகூர்ந்தேன்.
わたしは、そのかたわらにあって、名匠となり、日々に喜び、常にその前に楽しみ、
31 ௩௧ அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
その地で楽しみ、また世の人を喜んだ。
32 ௩௨ ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.
それゆえ、子供らよ、今わたしの言うことを聞け、わたしの道を守る者はさいわいである。
33 ௩௩ நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதைவிட்டு விலகாமல் இருங்கள்.
教訓を聞いて、知恵を得よ、これを捨ててはならない。
34 ௩௪ என்னுடைய வாசற்படியில் எப்பொழுதும் விழித்திருந்து, என்னுடைய கதவு நிலை அருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனிதன் பாக்கியவான்.
わたしの言うことを聞き、日々わたしの門のかたわらでうかがい、わたしの戸口の柱のわきで待つ人はさいわいである。
35 ௩௫ என்னைக் கண்டடைகிறவன் வாழ்வைக் கண்டடைகிறான்; யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான்.
それは、わたしを得る者は命を得、主から恵みを得るからである。
36 ௩௬ எனக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனோ, தன்னுடைய ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்; என்னை வெறுக்கிறவர்கள் எல்லோரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.
わたしを失う者は自分の命をそこなう、すべてわたしを憎む者は死を愛する者である」。

< நீதிமொழிகள் 8 >