< பிலிப்பியர் 1 >
1 ௧ இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களாகிய பவுலும், தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவிற்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரர்களுக்கும் எழுதுகிறதாவது:
పౌలతీమథినామానౌ యీశుఖ్రీష్టస్య దాసౌ ఫిలిపినగరస్థాన్ ఖ్రీష్టయీశోః సర్వ్వాన్ పవిత్రలోకాన్ సమితేరధ్యక్షాన్ పరిచారకాంశ్చ ప్రతి పత్రం లిఖతః|
2 ௨ நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
అస్మాకం తాత ఈశ్వరః ప్రభు ర్యీశుఖ్రీష్టశ్చ యుష్మభ్యం ప్రసాదస్య శాన్తేశ్చ భోగం దేయాస్తాం|
3 ௩ நற்செய்தி உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் எங்களோடு ஊழியத்தில் ஐக்கியப்பட்டிருப்பதால்,
అహం నిరన్తరం నిజసర్వ్వప్రార్థనాసు యుష్మాకం సర్వ్వేషాం కృతే సానన్దం ప్రార్థనాం కుర్వ్వన్
4 ௪ நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் சந்தோஷத்தோடு ஜெபம்பண்ணி,
యతి వారాన్ యుష్మాకం స్మరామి తతి వారాన్ ఆ ప్రథమాద్ అద్య యావద్
5 ௫ உங்களில் நல்லசெயல்களைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்வரை நடத்திவருவார் என்று நம்பி,
యుష్మాకం సుసంవాదభాగిత్వకారణాద్ ఈశ్వరం ధన్యం వదామి|
6 ௬ நான் உங்களை நினைக்கும்போதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
యుష్మన్మధ్యే యేనోత్తమం కర్మ్మ కర్త్తుమ్ ఆరమ్భి తేనైవ యీశుఖ్రీష్టస్య దినం యావత్ తత్ సాధయిష్యత ఇత్యస్మిన్ దృఢవిశ్వాసో మమాస్తే|
7 ௭ என் சிறைச்சாலையின் கட்டுகளிலும், நான் நற்செய்தியைப் போதித்து அதைத் உறுதிப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் வைத்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்கள் எல்லோரையும்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாக இருக்கிறது.
యుష్మాన్ సర్వ్వాన్ అధి మమ తాదృశో భావో యథార్థో యతోఽహం కారావస్థాయాం ప్రత్యుత్తరకరణే సుసంవాదస్య ప్రామాణ్యకరణే చ యుష్మాన్ సర్వ్వాన్ మయా సార్ద్ధమ్ ఏకానుగ్రహస్య భాగినో మత్వా స్వహృదయే ధారయామి|
8 ௮ இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பினாலே உங்களெல்லோரையும் காண எவ்வளவோ ஆவலாக இருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி.
అపరమ్ అహం ఖ్రీష్టయీశోః స్నేహవత్ స్నేహేన యుష్మాన్ కీదృశం కాఙ్క్షామి తదధీశ్వరో మమ సాక్షీ విద్యతే|
9 ௯ மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்களுடைய அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாகப் பெருகவும்,
మయా యత్ ప్రార్థ్యతే తద్ ఇదం యుష్మాకం ప్రేమ నిత్యం వృద్ధిం గత్వా
10 ௧0 தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,
జ్ఞానస్య విశిష్టానాం పరీక్షికాయాశ్చ సర్వ్వవిధబుద్ధే ర్బాహుల్యం ఫలతు,
11 ௧௧ நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று நேர்மையானவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.
ఖ్రీష్టస్య దినం యావద్ యుష్మాకం సారల్యం నిర్విఘ్నత్వఞ్చ భవతు, ఈశ్వరస్య గౌరవాయ ప్రశంసాయై చ యీశునా ఖ్రీష్టేన పుణ్యఫలానాం పూర్ణతా యుష్మభ్యం దీయతామ్ ఇతి|
12 ௧௨ சகோதரர்களே, எனக்கு சம்பவித்தவைகள் நற்செய்தி பரவுவதற்கு ஏதுவானது என்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.
హే భ్రాతరః, మాం ప్రతి యద్ యద్ ఘటితం తేన సుసంవాదప్రచారస్య బాధా నహి కిన్తు వృద్ధిరేవ జాతా తద్ యుష్మాన్ జ్ఞాపయితుం కామయేఽహం|
13 ௧௩ அரண்மனையில் உள்ளவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவிற்குள்ளான கட்டுகள் என்று தெரிந்து,
అపరమ్ అహం ఖ్రీష్టస్య కృతే బద్ధోఽస్మీతి రాజపుర్య్యామ్ అన్యస్థానేషు చ సర్వ్వేషాం నికటే సుస్పష్టమ్ అభవత్,
14 ௧௪ சகோதரர்களில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் தைரியம்கொண்டு பயம் இல்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாகத் துணிந்திருக்கிறார்கள்.
ప్రభుసమ్బన్ధీయా అనేకే భ్రాతరశ్చ మమ బన్ధనాద్ ఆశ్వాసం ప్రాప్య వర్ద్ధమానేనోత్సాహేన నిఃక్షోభం కథాం ప్రచారయన్తి|
15 ௧௫ சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்ல மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.
కేచిద్ ద్వేషాద్ విరోధాచ్చాపరే కేచిచ్చ సద్భావాత్ ఖ్రీష్టం ఘోషయన్తి;
16 ௧௬ சிலர் என் கட்டுகளோடு உபத்திரவத்தையும் சேர்க்க நினைத்து, சுத்த மனதோடு கிறிஸ்துவை அறிவிக்காமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.
యే విరోధాత్ ఖ్రీష్టం ఘోషయన్తి తే పవిత్రభావాత్ తన్న కుర్వ్వన్తో మమ బన్ధనాని బహుతరక్లోశదాయీని కర్త్తుమ్ ఇచ్ఛన్తి|
17 ௧௭ நற்செய்திக்காக நான் உத்தரவுசொல்ல நியமிக்கப்பட்டவன் என்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.
యే చ ప్రేమ్నా ఘోషయన్తి తే సుసంవాదస్య ప్రామాణ్యకరణేఽహం నియుక్తోఽస్మీతి జ్ఞాత్వా తత్ కుర్వ్వన్తి|
18 ௧௮ இதனால் என்ன? ஏமாற்றுவதினாலோ, உண்மையினாலோ, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இனிமேலும் சந்தோஷப்படுவேன்.
కిం బహునా? కాపట్యాత్ సరలభావాద్ వా భవేత్, యేన కేనచిత్ ప్రకారేణ ఖ్రీష్టస్య ఘోషణా భవతీత్యస్మిన్ అహమ్ ఆనన్దామ్యానన్దిష్యామి చ|
19 ௧௯ அது உங்களுடைய வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியும் என்று அறிவேன்.
యుష్మాకం ప్రార్థనయా యీశుఖ్రీష్టస్యాత్మనశ్చోపకారేణ తత్ మన్నిస్తారజనకం భవిష్యతీతి జానామి|
20 ௨0 நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடு ஜீவனாலாவது, மரணத்தினாலாவது, கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவார் என்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தகுந்ததாக அப்படி முடியும்.
తత్ర చ మమాకాఙ్క్షా ప్రత్యాశా చ సిద్ధిం గమిష్యతి ఫలతోఽహం కేనాపి ప్రకారేణ న లజ్జిష్యే కిన్తు గతే సర్వ్వస్మిన్ కాలే యద్వత్ తద్వద్ ఇదానీమపి సమ్పూర్ణోత్సాహద్వారా మమ శరీరేణ ఖ్రీష్టస్య మహిమా జీవనే మరణే వా ప్రకాశిష్యతే|
21 ௨௧ கிறிஸ்து எனக்கு ஜீவன், மரணம் எனக்கு ஆதாயம்.
యతో మమ జీవనం ఖ్రీష్టాయ మరణఞ్చ లాభాయ|
22 ௨௨ ஆனாலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் செய்கைக்குப் பலன் கிடைத்திருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்று தெரியாது.
కిన్తు యది శరీరే మయా జీవితవ్యం తర్హి తత్ కర్మ్మఫలం ఫలిష్యతి తస్మాత్ కిం వరితవ్యం తన్మయా న జ్ఞాయతే|
23 ௨௩ ஏனென்றால், இந்த இரண்டிற்கும் இடையே நான் நெருக்கப்படுகிறேன்; சரீரத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவோடு இருக்க எனக்கு ஆசை உண்டு, அது அதிக நன்மையாக இருக்கும்;
ద్వాభ్యామ్ అహం సమ్పీడ్యే, దేహవాసత్యజనాయ ఖ్రీష్టేన సహవాసాయ చ మమాభిలాషో భవతి యతస్తత్ సర్వ్వోత్తమం|
24 ௨௪ அப்படியிருந்தும், நான் சரீரத்தில் வாழ்ந்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.
కిన్తు దేహే మమావస్థిత్యా యుష్మాకమ్ అధికప్రయోజనం|
25 ௨௫ இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மீண்டும் உங்களிடம் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவிற்குள் பெருகுவதற்காக,
అహమ్ అవస్థాస్యే యుష్మాభిః సర్వ్వైః సార్ద్ధమ్ అవస్థితిం కరిష్యే చ తయా చ విశ్వాసే యుష్మాకం వృద్ధ్యానన్దౌ జనిష్యేతే తదహం నిశ్చితం జానామి|
26 ௨௬ உங்களுடைய விசுவாசத்தின் வளர்ச்சிக்காகவும் சந்தோஷத்திற்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடும் இருப்பேன் என்று அறிந்திருக்கிறேன்.
తేన చ మత్తోఽర్థతో యుష్మత్సమీపే మమ పునరుపస్థితత్వాత్ యూయం ఖ్రీష్టేన యీశునా బహుతరమ్ ఆహ్లాదం లప్స్యధ్వే|
27 ௨௭ நான் வந்து உங்களைப் பார்த்தாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாக நின்று, ஒரே ஆத்துமாவினாலே நற்செய்தியின் விசுவாசத்திற்காகப் போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றுக்கும் பயப்படாமல் இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எந்தவிதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்திற்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள்.
యూయం సావధానా భూత్వా ఖ్రీష్టస్య సుసంవాదస్యోపయుక్తమ్ ఆచారం కురుధ్వం యతోఽహం యుష్మాన్ ఉపాగత్య సాక్షాత్ కుర్వ్వన్ కిం వా దూరే తిష్ఠన్ యుష్మాకం యాం వార్త్తాం శ్రోతుమ్ ఇచ్ఛామి సేయం యూయమ్ ఏకాత్మానస్తిష్ఠథ, ఏకమనసా సుసంవాదసమ్బన్ధీయవిశ్వాసస్య పక్షే యతధ్వే, విపక్షైశ్చ కేనాపి ప్రకారేణ న వ్యాకులీక్రియధ్వ ఇతి|
28 ௨௮ நீங்கள் பயப்படாமலிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அடையாளமாக இருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.
తత్ తేషాం వినాశస్య లక్షణం యుష్మాకఞ్చేశ్వరదత్తం పరిత్రాణస్య లక్షణం భవిష్యతి|
29 ௨௯ ஏனென்றால், கிறிஸ்துவை விசுவாசிக்கிறதற்குமட்டும் இல்லை, அவருக்காகப் பாடுகள்படுகிறதற்கும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
యతో యేన యుష్మాభిః ఖ్రీష్టే కేవలవిశ్వాసః క్రియతే తన్నహి కిన్తు తస్య కృతే క్లేశోఽపి సహ్యతే తాదృశో వరః ఖ్రీష్టస్యానురోధాద్ యుష్మాభిః ప్రాపి,
30 ௩0 நீங்கள் என்னிடம் பார்த்ததும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.
తస్మాత్ మమ యాదృశం యుద్ధం యుష్మాభిరదర్శి సామ్ప్రతం శ్రూయతే చ తాదృశం యుద్ధం యుష్మాకమ్ అపి భవతి|